Headlines

ஞானசாரவை குற்றவாளி கூண்டில் ஏறும்படி நீதவான் கடுமையான உத்தரவு

கொழும்பு, கொம்பனி வீதி நிப்போன் ஹோட்டலினுள் அத்துமீறி நுழைந்து ஊடக மாநாடொன்றுக்கு ஊறு விளைவித்தமை மற்றும் புனித குர்ஆனை அவமதித்தமை தொடர்பில் பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கங்கொடத்தே ஞானசார தேரர் உட்பட்ட ஐந்து பிக்குகளுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிவான் பிரியந்த லியனகே இன்று (27) இவ் உத்தரவினைப் பிறப்பித்தார். வழக்கு விசாரணகள் எதிர்வரும் ஜூன் மாதம் 15ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இன்றைய வழக்கின் போது வழமையாக குற்றவாளி கூண்டில்…

Read More

கல்முனை பிரதேச செயலக விவகாரம்; அமைச்சர் றிஷாட்டை ஹரீஸ் எம்.பி  மற்றும் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சந்தித்து பேச்சு!

கல்முனை பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனை பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ், கல்முனை ஜூம்ஆ பள்ளிவாசல்,வர்த்தக சங்கம் மற்றும் சிவில் அமைப்புக்களின்  பிரதிநிதிகள்   சந்தித்து பேசினர். நேற்று இரவு (05) கொழும்பில் நடந்த இந்த சந்திப்பில் கல்முனை ஜூம்ஆ பள்ளி தலைவர் டாக்டர் அஸீஸ் , வர்த்தக சங்க தலைவர் சித்தீக் ஹாஜியார்,ஆகியோர் உட்பட கல்முனை முக்கியஸ்தர்களும்  கலந்து கொண்டனர்.இந்த சந்திப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின்…

Read More

சிரியா மக்களை உலகம் கைவிட்டு விட்டது: பான் கி-மூன் வேதனை

உள்நாட்டு போரினால் சிரியா மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மக்களை மொத்த உலகமும் கைவிட்டு விட்டதாக ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி-மூன் வேதனை தெரிவித்துள்ளார். 2011-ல் சிரியாவில் அமைதியான வழியில் அந்நாட்டு அரசுக்கு எதிராக ஆரம்பித்த மக்கள் போராட்டம் பெரும் உள்நாட்டு போராக வெடித்தது. இதன் காரணமாக இன்று வரை அந்நாட்டு அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். நான்கு ஆண்டுகளையும் கடந்து ஐந்தாவது ஆண்டில் நுழையவிருக்கம் இப்போரில் இதுவரை 2 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாகவும், 4 மில்லியனுக்கு…

Read More

என்னால் செய்யப்பட்ட அனைத்து அபிவிருத்தி திட்டங்களின் பின்னணியில் அமைச்சர் றிஷாத் பதியுதீனின் பங்களிப்பு உள்ளது

இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ்- என்னால் செய்யப்பட்ட அனைத்து அபிவிருத்தி திட்டங்களின் பின்னணியில் அமைச்சர் றிசாத் பதியுதீனின் பங்களிப்பு உள்ளது என தெரிவித்துள்ள வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.எச்.எம்..றியாஸ் நான் மாகாண சபையின் உறுப்பினராக தெரிவாவதற்கும் காரணமாக இருந்தவரும் அவரே என்றும் கூறினார். மதுரங்குளி கஜூவத்தை பாடசாலையின் நிகழ்வு நேற்று மாலை இடம் பெற்றது அதில் கௌரவ அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் அவர் தமதுரையில் – அமைச்சர் றிசாத் பதியுதீன்…

Read More

சவூதியில் வருகிறது தடை!

துபாயை தொடர்ந்து சவூதியிலும் இலவச சேவைகளான whatsapp , imo, Line , Messenger , Tango உள்ளிடவற்றை ஒரு சில வாரங்களில் தடை செய்ய போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற இலவச சேவைகளால் சவூதியில் உள்ள மொபைல் கம்பெனிகள் நஷ்டத்தை சந்திப்பதாலும் அவற்றின் லாபத்தை அதிகரிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சேவை ஒரு சில வாரங்களில் அமலுக்கு வரும் என சவூதி அரேபிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

கிராம உத்தியோகத்தர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை

கிராம உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் எதிர்வரும் 3 ஆம் திகதி நடைபெறவுள்ளது. பரீட்சைக்கான அனுமதி அட்டை எதிர்வரும் திங்கட்கிழமை தபாலில் சேர்க்கப்படுமென்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார தெரிவித்துள்ளார். இந்தப் பரீட்சை நாடு முழுவதிலும் 856 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளது. 01 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். இந்தப் போட்டிப் பரீட்சையில் பெறப்படும் புள்ளிகளின் அடிப்படையில் கிராம உத்தியோகத்தர்கள் இரண்டாயிரம் பேர் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்று அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார். இந்த வருட…

Read More

புத்தளம் மாவட்ட அ. இ. ம. காங்கிரஸ் அமைப்பாளர் அலி சப்ரியை சந்தித்த நாத்தாண்டிய – கொட்டராமுள்ள மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள்

நாத்தாண்டிய – கொட்டராமுள்ள பகுதியைச் சேர்ந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் இன்று புத்தளம் மாவட்ட பிரதான அமைப்பாளர் அலி சப்ரி ரஹீமை அவரது அலுவலகத்தில் சந்தித்தனர்… எதிர் வரப்போகும் உள்ளூராட்சி சபை தேர்தலில் கட்சியின் பங்களிப்பு, முகம் கொடுக்க கூடிய பிரச்சினைகள் போன்றவை இச்சந்திப்பில் ஆராயப்பட்டன… இம்முறை தேர்தலில் புதிய பலத்தோடு அ.இ.மக்கள் காங்கிரஸ் நாத்தாண்டிய பிரதேசத்தில் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது…

Read More

“இலங்கை – குவைத் பொருளாதார மீள் உறவு இலங்கைக்கு பாரிய நன்மைகளை தரும்” குவைத் வாழ் இலங்கையர்கள் மத்தியில் அமைச்சர் ரிஷாட் நம்பிக்கை!!

இலங்கைக்கும் குவைத்துக்கும் இடையிலான பொருளாதார மீள் உறவு இலங்கைக்கு பாரிய நன்மைகளை ஏற்படுத்தும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். குவைத்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், நேற்று மாலை (10) குவைத் வாழ் இலங்கை சமூகத்தை சந்தித்தபோதே இத்தகவலை வெளியிட்டார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குவைத் கிளை ஏற்பாட்டில், குவைத்துக்கான இலங்கை தூதரகத்தில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலின் போது,…

Read More

அகதி முகாமிலிருந்து அலரி மாளிகை வரை; சோதனகளை சாதனைகளாக்கி வரும் யுக புருஷர்!

(அகில இலங்கை மக்கள் கான்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீனின் 46வது பிறந்ததினத்தையொட்டி வெளியிடப்பட்டும் கட்டுரை 27.11.2018) இலங்கையில் திடீரென ஏற்பட்ட எதிர்பாராத அரசியல் நெருக்கடி காரணமாக நாடும் அரச இயந்திரங்களும் முடங்கிக் கிடக்கின்றது. பிரதமர் பதவி நீக்கத்தில் ஆரம்பித்து பாராளுமன்ற ஒத்திவைப்பு, திடீரெனக் கலைப்பு மற்றும் நீதிமன்றம் வரை சென்றுள்ள விவகாரங்களால் இலங்கை அரசியலில் மாத்திரமன்றி உலக நாடுகளிலும் இதன் தாக்கம் விரவி, அன்றாட நிர்வாகம் சீர்குலைந்து, பொருளாதார நீதியிலும் பல்வேறு பின்னடைவுகளை சந்திக்க வேண்டி நேரிட்டுள்ளது….

Read More

இலங்கையில் சிறு தொழில்நுட்ப உற்பத்திகள் தொடர்பில் உதவிகளை ஜப்பான் வழங்கவுள்ளது – அமைச்சர் றிஷாத்

ஊடகப் பிரிவு இலங்கையில் சிறு தொழில் நுட்ப உற்பத்திகள் தொடர்பில் உதவிகளை ஜப்பான் வழங்கவுள்ளதாக இலங்கைக்கான் ஜப்பான் நாட்டு தூதுவர் நொபிஹிட்டோ ஹேயோ கைத்தொழல்,வணிகத் துறை அமைச்சர் றிஷாத் பதியுதீனிடத்தில் இன்று தெரிவித்தார். புதிய அரசாங்கத்தில் மீண்டும் கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்ற அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு ஜப்பான் றாட்டின் சார்பில் நன்றி தெரிவிப்பதுடன்,எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும இடையில் காணப்படும் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடும் வகையில் இந்த சந்திப்பு இடம் பெற்றது….

Read More

இலங்கைக்கு அமெரிக்கா பாராட்டு

இலங்கையில் மீண்டும் ஜனநாயக கட்டமைப்புகளை ஏற்படுத்தியதற்காகவும், ஊழலிற்கு எதிரான போராட்டத்திற்காகவும் இலங்கை மக்களுக்கு அமெரிக்கா தனது பாராட்டை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 29 அமர்வு நேற்று ஆரம்பமாகியது. அந்த அமர்வில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே அமெரிக்கா இதனை குறிப்பிட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தை, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான அதன் பாதையில் தொடர்ந்தும் பயணிக்குமாறும் அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்தினால் ஆகஸ்டில் வெளியிடப்படவுள்ள அறிக்கையை எதிர்பார்த்திருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. செப்டம்பரில் அறிக்கையை…

Read More

தீய சக்திகளின் சூழ்ச்சிகளுக்குள் சிக்க வேண்டாம்” – அமைச்சர் றிஷாத் 

இனங்களுக்கிடையிலான நல்லுறவையும், ஐக்கியத்தையும் சீர்குலைக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் எத்தகைய நடவடிக்கைகளுக்கும் இடமளிக்க வேண்டாமென அமைச்சர் றிசாத் பதியுதீன் உருக்கமான வேண்டுகோள் விடுத்தார். அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தேசிய இணைப்புப் பணிப்பாளரும், அமைச்சர் றிசாத் பதியுதீனின் குருநாகல் மாவட்ட பிரதம இணைப்பாளருமான அசார்தீன் மொய்னுதீன் தலைமையில் இடம்பெற்ற தேசிய நல்லிணக்கத்துக்கான ஹஜ் விளையாட்டுப் போட்டி மற்றும் சிறுவர்வர்தின நிகழ்வுகளில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு அமைச்சர் றிசாத் உரையாற்றினார். அவர் மேலும் கூறியதாவது; கடந்த 30 ஆண்டு காலமாக இந்நாட்டை…

Read More