Headlines

திருட்டை தடுத்து திருடனை பிடிக்க உதவும் ஆரஞ்சு பந்து! வீடியோ இணைப்பு!

ஜப்பானில் திருடிவிட்டு தப்பிச் செல்ல முயலும் திருடர்களை பிடிக்க வினோதமான முறை ஒன்றை கையாளுகின்றனர். ஜப்பானில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகள், நகைக் கடைகள், துணிக்கடைகள் போன்ற வர்த்தக நிறுவனங்களில் பணம் செலுத்தும் நபர்களுக்கு அருகில் 2 ஆரஞ்சு வண்ணப் பந்துகளைப் பார்க்க முடியும். மேலும், ஆரஞ்சு வண்ண பந்துகள் உள்ள கடைகளில், ”ஜாக்கிரதை! இங்கு ஆரஞ்சு பந்துகள் உள்ளன”, என்ற எச்சரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் பந்துகள் நிச்சயமாக விற்பனை செய்வதற்காக அந்த இடத்தில் வைக்கப்படுவது இல்லை….

Read More

மக்கள் காங்கிரஸின் அக்குரனை குருகொட கிளை அங்குரார்ப்பணம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அக்குரனை, குருகொட கிளை நேற்று (20) ஆரம்பித்து வைக்கப்பட்டது. குருகொட வட்டார வேட்பாளரும், பிரபல சமூக சேவையாளருமான நலீஸ் ஹாஜியார் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில்,மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட அமைப்பாளரும்,முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஹம்ஜாட் , கண்டி மாவட்ட இணைப்பாளர் றியாஸ் இஸ்ஸதீன், அக்குரனை மத்திய குழுத் தலைவர் இல்யாஸ் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், ஊர்ப்பிரமுகர்கள் உட்பட மக்கள் காங்கிரஸின்  முக்கியஸ்தர்களும் பங்கேற்றிருந்தனர். (ன)  

Read More

எதிர்கால கட்டட நிர்மாணம் அனுமதி பெறப்படுவது கட்டாயம்

இனிவரும் காலங்களில் இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் வீடுகள் மற்றும் கட்டிடங்களைஅமைக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலைய அனுமதி கட்டாயம் பெறப்படவேண்டும் என்றுகொள்கை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இயற்கை அனர்த்தங்களின்போது அதிக பாதிப்புக்கான ஏதுக்களை குறைக்கும் நோக்கிலேயேஇந்த கொள்கை அமுல்செய்யப்படவுள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. தற்போதைக்கு 10 மாவட்டங்களில் இந்த நடைமுறை செயற்படுத்தப்படவுள்ளது. எனினும் அதனை நாடளாவிய ரீதியில் செயற்படுத்தவும் கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன. நாடாளாவிய ரீதியில் தற்போது வருடம் ஒன்றுக்கு ஒருலட்சம் வீடுகள் வரை தேசிய கட்டிl ஆராய்ச்சி…

Read More

தென்கொரியாவுடன் பேசத் தயாராக இருப்பதாக வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன் அறிவிப்பு!

வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன் தென் கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடாத்த தேவைப் பட்டால் மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்யவும் தான் தயாராக இருப்பதாக வியாழக்கிழமை நிகழ்த்திய புது வருட சிறப்புரையில் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள சியோல் நிர்வாகம் இது வடகொரியாவுடனான உறவினை சுமுகமாக்குவதில் முக்கிய படிக்கட்டு என்றும் அறிவித்துள்ளது. சமீபத்தில் வடகொரிய அரசு மீது சர்வதேசம் முக்கிய மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள முன் வைத்திருந்ததுடன் ‘தி இன்டர்வியூ’ என்ற சர்ச்சைக்குரிய திரைப்பட விவகாரத்தில்…

Read More

விமல் வீரவன்ச ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜர்!

பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச நிதி முறைகேடுகள் குறித்த வாக்குமூலமொன்றினை வழங்குவதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சற்றுமுன்னர் (04.08.2016) ஆஜராகியுள்ளார். வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் அரசாங்க வளங்களை சட்டவிரோதமாக பயன்படுத்தியமை தொடர்பில் விமல் வீரவன்ச மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

குழந்தையை விற்க முயன்ற தாய் நாடு கடத்தப்பட்டார்

ஐக்கிய அரபு இராச்சியத்தில் தனது இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தையை விற்க முயன்ற இலங்கை பிரஜையான பெண் ஒருவர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குழைந்தையை வாங்கும் நபராக சென்று பொலிஸார்  குறித்த பெண்ணை கைதுசெய்துள்ளனர். வாழ்க்கைச் செலவிற்கு பணம் இல்லாமையினால் குழந்தையை விற்க முயன்றதாக குறித்த பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். குறித்த பெண் சார்ஜா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நீதிமன்றம் பெண்ணை நாடுகடத்த உத்தரவிட்டுள்ளது.

Read More

துறை முகங்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு துறை முகங்கள் அபிவிருத்தி செய்யப்படும் பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப்.

துறை முகங்களை அபிவிருத்தி செய்வதன் ஊடாக அதிக அந்நிய செலவாணிகளை ஈட்டிக் கொள்வது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (08)  கொழும்பில் உள்ள துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அலுவலகத்தில் இடம் பெற்றது. குறித்த கலந்துரையாடலானது துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளருமான அப்துல்லா மஹரூப் மற்றும் வர்த்தக வாணிப கைத்தொழில், கூட்டுறவுத் துறை நீண்ட காலம் இடம் பெயர்ந்தோரை மீளக்குடியேற்றல் அமைச்சரும் அகில…

Read More

ஜனாதிபதி – இந்திய பிரதமர் சந்திப்பு

உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று (13) இந்தியா சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடினார். ஐதராபாத்தில் இல்லத்தில் இராப்போஷனத்துடன் இடம்பெற்ற இச்சந்திப்பில், இந்திய மீனவர்கள் பிரச்சினை, பொருளாதார திட்டங்கள், முதலீடுகள் போன்ற விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. இன்று (14) உஜ்ஜைன் செல்லவுள்ள ஜனாதிபதி இந்திய பிரதமருடன் சிம்ஹஷ்த்த மகாகும்பா விழாவில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

புறக்கோட்டை தங்க ஆபரண கடைத்தொகுதி இன்று திறப்பு; அமைச்சர் பசில் பிரதம அதிதி

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள புறக்கோட்டை இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண கடைத் தொகுதி இன்று மாலை 4.30 மணிக்கு உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ள இந் நிகழ்வில் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உட்பட முக்கியஸ்தர்கள் பலர் பங்குபற்றவுள்ளனர். 1894 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் காலம் முதல் சென். ஜோன்ஸ் மீன் சந்தையாகவும் 1983 ஆம் ஆண்டு முதல் மீன்…

Read More

பிரித்தானிய பிரதமரின் 100 நாட்கள் வேலைத்திட்டம்

கொன்சவேற்றிவ் கட்சி எதிர்வரும் பிரிட்டிஷ் தேர்தலில் வெற்றி பெற்றால் தாம் 100 நாள் காலப்பகுதியினுள் மக்களுக்கு பல திட்டங்களை வழங்கவுள்ளதாக டேவிட் கமரோன் உறுதியளித்துள்ளார். குறிப்பாக தொழிலாளர்களின் கொடுப்பனவுகள், சேமலாபங்கள், வீடமைப்பு மற்றும் சிறார்களுக்கான மேம்பாட்டு திட்டங்களை 100 நாள் காலப்பகுதியினுள், வாக்காளரின் திருப்திக்கு அமைய நிறைவேற்றப் போவதற்காக குறிப்பிட்டுள்ளார். கொன்சவேற்றிவ் கட்சி முழு அளவிலான வெற்றியை பெற்றதும், மகாராணியாரின் உரையின் போது தெரிவிக்கப்பட்ட குறைந்த வருவாயை பெறுபவர்களின் வரி முறைகள் உரிய முறையில் பின்பற்றப்படும் எனவும்…

Read More

நீதிமன்றம் செல்லும் தேர்தல்கள் ஆணையாளர்!

நாடாளுமன்றத் தேர்தலின்போது தேர்தல் சட்டவிதிகளை மீறியது தொடர்பான முறைப்பாடுகளுக்கெதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சார காலத்தில் தேர்தல் சட்டவிதிகளை மீறியது தொடர்பாக சுமார் 1156 முறைப்பாடுகளுக்கெதிராக தேர்தல்கள் ஆணையாளர் நீதிமன்றம் செல்லவுள்ளார். இலங்கையின் தேர்தல் வரலாற்றில் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய சம்பவங்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் நீதிமன்றம் செல்வது இதுதான் முதற் தடவையாகுமென மேலதிக தேர்தல் ஆணையாளர் எம். மொஹமட் கூறினார். இதன்படி தேர்தல்கள் திணைக்களத்திற்கு கிடைத்துள்ள அனைத்து முறைப்பாடுகளையும் பரிசீலனை…

Read More

உலகின் முதல் `செல்பி’

`செல்பி’ புகைப்படம் 175 ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகமாகியுள்ளது. தன்னைத் தானே புகைப்படம் எடுத்து கொள்ளும் ‘செல்பி’ முறை தற்போது பிரபலமாகி விட்டது. தொலைபேசி- கமெரா மூலம் அவரவர் தங்களை பலவித கோணத்தில் புடகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். ஆனால், இந்த ‘செல்பி’ புகைப்படம் எடுக்கும் முறை கடந்த 175 ஆண்டுக்கு முன்பே அறிமுகமாகி விட்டது. அமெரிக்காவின் பிலாடெல்பியர் நகரில் ராபர்ட் கார்னெலியஸ் என்பவர் கடந்த 1839ஆம் ஆண்டில் முதல் ‘செல்பி’ புகைப்படத்தை எடுத்துள்ளார். இவர் தனது தந்தையின் கடையை…

Read More