Headlines

2020 இல் புதிய அரசாங்கம் அமைக்க திட்டம்

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து முன்னெடுக்கும் ஆட்சியில் சவால்கள் பல உள்ளன. எனவே  2020 ஆம் ஆண்டில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைமையிலான அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான திட்டங்களை முன்னெடுத்து வருவதாக மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்தார். மேல்மாகாண சபை முதலமைச்சரின் உத்தியோபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடுகளும் உரையும் இன்று பல விமர்சனங்களுக்கு உள்ளானவண்ணமுள்ளன. தற்போது…

Read More

பாதணிகள் என்னுடையதுதான் ஆனால் பழையது

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகிய இருவரின் முன்னிலையில் நடைபெற்ற விழாவுக்கு நான், அணிந்து சென்ற பாதணிகள் என்னுடையது தான். ஆனால் பழையது என்று கலை மற்றும் கலாசார அமைச்சர் டி.பீ.ஏக்கநாயக்க தெரிவித்தார். இருநாடுகளுக்கும் இடையில் 20 ஒப்பந்தங்களில் கைச்சாத்திடும் நிகழ்வு, காலி முகத்திடலில் கடந்த 16ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தான் அணிந்து சென்ற பாதணிகள் தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், வீட்டிலிருந்த பாதணிகளில் இரண்டை அணிந்து சென்றேன். அந்த பாதணிகளில்…

Read More

ஓட்டமாவடி கோட்டத்தில் கல்வி மட்டத்தை அதிகரிக்க செயற்றிட்டம்

-முர்ஷிட் கல்குடா- மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துக்குட்பட்ட ஓட்டமாவடி கோட்டத்தில், க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் அடைவு மட்டத்தை அதிகரிப்பதற்கான வேலைத் திட்டத்தில், 9 ஏ(A) செயற்றிட்ட தொனிப்பொருளிலான அங்குரார்பண நிகழ்வு நேற்று மாலை (29) பிரதியமைச்சர் அமீர் அலியின் இல்லத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளர், பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.கே.றகுமான், அமீர் அலி பவுண்டேசன் அமைப்பின் பிரதித் தவிசாளர் வைத்தியர் எஸ்.ஏ.ஏ.அல்தாப் அலி மற்றும்…

Read More

இலங்கையில் புது வைரஸ் பரவல் இதுவரை 9 கர்ப்பிணி தாய்மார் பலி!

இலங்கையின் பல பகுதிகளில் பரவிவரும் புதுவகையான வைரஸ் காய்ச்சல் காரணமாக கடந்த சில வாரங்களில் ஒன்பது கர்ப்பிணிப் பெண்கள் உட்பட பலர் மரணமடைந்திருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இன்புளுயென்சா ´ஏ´யில் எச்1 என்1 எனப்படும் வைரஸ் காய்ச்சல் என இது அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. வடக்கில் வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் இந்தக் காய்ச்சல் பரவியிருப்பதாக வவுனியா அரச பொது மருத்துவமனையின் பதில் மருத்துவ பணிப்பாளர் சுதர்சினி விக்னேஸ்வரன் தெரிவித்தார். கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், மற்றும் 65 வயதுக்கும்…

Read More

மண்சரிவால் 10 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளது

ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் தொடர்ந்து நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக பண்டாரவளை கல்வி வலயத்துக்குட்பட்ட 10 பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை ( 03) வரை மூடப்படும். தற்போது இடம்பெற்றுள்ள மண்சரிவு அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைப்பதற்காகவே பாடசாலைகள் மூடப்படுமென பண்டாரவளை வலய கல்வி பணிப்பாளர் அரியதாஸ ரட்ணநாயக்க தெரிவித்துள்ளார். மேலும் முதலமைச்சர் சசீந்திர ராஜபக்சவினால் வழங்கப்பட்ட பணிப்புரையின் கீழ் ப+ நாகல பாடசாலைகள், மீறியாபெரா வித்தியாலயம், ஆனோல்ட் வித்தியாலயம், நகேடிய வித்தியாலயம், சிறி…

Read More

2030-ல் உலகம் 40 சதவிகித தண்ணீர் பற்றாக்குறையை எதிர்நோக்கும் – ஐ.நா.

பாவனையாளர்கள் நீர்வளத்தின் பாவனையில் வியத்தகு முறையில் மாற்றங்களை ஏற்படுத்தாவிடில் 2030-ம் ஆண்டளவில் உலகம் பூராகவும் 40-சதவிகித தண்ணீர் பற்றாக்குறையினால் துன்புற வேண்டிய நிலை ஏற்படுமென ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் எச்சரித்துள்ளது. காலநிலை மாற்றத்துடன் மழைவீழ்ச்சி படிவங்கள் ஒழுங்கு முறையற்றதாக காணக்கூடியதாக இருப்பதால் நிலத்தடி நீர் இருப்புக்கள் ஏற்கனவே குறைந்து கொண்டு செல்கின்றன. 2050 அளவில் உலகத்தின் சனத்தொகை 9-பில்லியன்களாக உயரலாம் என எதிர்பார்க்கப்படுவதும், விவசாயம், தொழில் மற்றும் தனிப்பட்ட நுகர்வு போன்ற தேவைகளிற்கு அதிக நிலத்தடிநீர் பாவிக்கப்படுவதும்…

Read More

வட்டக்கண்டல் வீதி புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாந்தை பிரதேச சபை உறுப்பினர் நைசர் அவர்களினால்,  நீண்டகாலமாகப்  புனரமைக்கப்படாமல் இருந்த மன்னார், மாந்தை, வட்டக்கண்டல், காத்தங்குள வீதியின் புனரமைப்பு வேலைத்திட்டம் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கடந்த தேர்தல் காலத்தில் இந்த பிரதேசத்தில் வாழும் மக்கள், நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் உள்ள இந்த வீதியை புனரமைத்து தருமாறு வேண்டியிருந்தனர். அந்த மக்களின் நீண்டகாலத் தேவையை நிறைவுசெய்யும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.          

Read More

ஒவைசியின் தலையை எடுப்பவருக்கு, ஒரு கோடி ரூபாய் பரிசு

பாரத் மாதாகி ஜே சொல்ல மறுக்கும் ஒவைசியின் தலையை எடுப்பவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு – உ.பி.பாஜக தலைவர் ஷ்யாம் பிரகாஷ் திவேதி-

Read More

பொத்துவில் ஆசிரியர்களின் அவலங்கள் தொடர்பில் அமைச்சர் ரிஷாட்டுடன் பேச்சுவார்த்தை!

-ஊடகப்பிரிவு- கைவிரல் அடையாளப் பதிவு இயந்திரத்தின் பயன்பாட்டை, பொத்துவில் கோட்டப் பாடசாலைகளில் இரத்துச் செய்யுமாறு கோரி, தென்கிழக்கு ஆசிரியர் ஒன்றியம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனிடம், மகஜர் ஒன்றைக் கையளித்துள்ளது. இவ்வாசிரியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், தென்கிழக்கு ஆசிரியர் ஒன்றியத்துக்கும், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும் இடையிலான சந்திப்பொன்று, பாலமுனையில், தென்கிழக்கு ஆசிரியர் ஒன்றியத்தின் தலைவர் எம்.எஸ்.எம். அன்வர் தலைமையில் கடந்த சனிக்கிழமை  (20) இடம்பெற்றது. இதன்போதே, இந்த…

Read More

இலங்கையில் நடைபெறும் சர்வதேச பொலிஸ் மாநாடு

சர்வதேச பொலிஸ் மாநாடு எதிர்வரும் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 4ம் 5ம் மற்றும் 6ம் திகதிகளில் இலங்கையில் இந்த மாநாடு நடத்தப்பட உள்ளது. கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் இந்த மாநாடு நடத்தப்பட உள்ளது. ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளின் 40 உயர் பொலிஸ் அதிகாரிகள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். சர்வதேச போதைப்பொருள் வர்த்தகம், ஊழல் மோசடி தவிர்ப்பு, குற்றச் செயல்களை தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இந்த மாநாட்டில் அவதானம் செலுத்தப்பட உள்ளது.

Read More