Headlines

கடத்தப்பட்ட வர்த்தகர் தொடர்பில் தகவலளித்தால் 5 மில்லியன்!

கடத்தப்பட்ட வர்த்தகர் மொஹமட் சாகீப் சுலைமான் தொடர்பில் தகவல் வழங்குவோருக்கு 5 மில்லியன் வழங்குவதாக அவரது தந்தை அறிவித்துள்ளார். பம்பலப்பிட்டியில் நேற்று முன்தினம் வர்த்தகர் மொஹமட் சாகீப் சுலைமான் கடத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில் இவரின் தந்தை சுலைமான் ஈசா இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தால் அறிவிக்குமாறும் வேண்டுகோள்விடுத்துள்ளார். மேலும், இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் 0770101971 என்ற இலக்கத்தக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

Read More

கம்பளை நகரில் ஆர்பாட்டம்

-எம்.எம்.எம். ரம்ஸீன் – கம்பளை நகரில் வர்த்தக நிலையங்களிலும் வீடுகளிலும் கொட்டப்படும் குப்பைகூழங்கள் கடந்த ஒரு வார காலமாக  அகற்றப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று 18.05.2016 கம்பளை நகரில் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இடம்பெற்றது. கம்பளை நகரில் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமான ஆர்ப்பாட்டப் பேரணி கம்பளை நகர சபையை சென்றடைந்தது.இதில் கம்பளை பகுதி சமயத் தலைவர்கள் நகர வர்த்தகர்கள் குடியிருப்பாளர்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டனர். இந்தஎதிர்ப்பு ஆரப்பாட்டத்திற்று ஒததுழைப்பு வழங்கும்…

Read More

நோய் பரவும் அபாயம்

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் தற்போது நீர் வடிந்தோட ஆரம்பித்ததை அடுத்து பலவிதமான நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.   டெங்குநோய் பாதிப்புகள் ஏற்படுவதற்கு அதிகளவிலான சாத்தியகூறுகள்  உள்ளன. எனினும் அவ்வாறான பாதிப்புகளை தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம். மேலும் இருமல் , தடுமல் மற்றும் வயிற்றோட்டம் போன்ற நோய்களும் பரவும் அபாயம் காணப்படுவதாக  சுகாதார  கல்வி பணியகம் தெரிவித்துளளது. எனினும் இதுவரைக்கும் பாராதூரமான நோய்கள் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. இந்நிலையில் தமது சுற்று சூழலை முழுமையாக மக்கள்…

Read More

தோப்பூருக்கான தனி பிரதேச செயலகத்தை தடுப்பது இரா.சம்மந்தனே

இன்றைய காலத்தில் பேசுபொருளாக மாறிவருகிறது தோப்பூர் பிரதேச செயலகத்துக்கான தனியான செயலகம் இதனை தடுப்பதற்கும் மூக்கை நுழைத்து செயற்படுவது அநியாயமாகும் இதற்கான தடைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்  இரா.சம்மந்தன் அவர்களே மேற்கொண்டு வருகிறார் என துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதி அமைச்சரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார். தோப்பூரில் இன்று (20) இடம் பெற்ற பள்ளிவாயல் நிருவாகிகளுடனான விசேட சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்….

Read More

அத்தியாவசியப் பொருட்களுக்கு வெற் கிடையாது -அமைச்சர் றிஷாத்

சுஐப் எம் காசிம் அத்தியாவசியப் பொருட்களுக்கு வெற்(vat)கிடையாது. அமைச்சரவை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கூடி முக்கிய முடிவுகளை எடுக்கும். -அமைச்சர் றிஷாத் பாராளுமன்றத்தில் அறிவிப்பு அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தொடர்பான தீர்மானத்தை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 12ம் திகதி அமைச்சரவையில் அமைச்சர்கள் கூடி முடிவு எடுக்கவுள்ளதாகவும் இந்தப் பொருட்களுக்கு வெற்(VAT) பெறுமதி சேர்வரி சேர்க்கப்படமாட்டாதெனவும் கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் றிஷாத் பதியூதீன் பாராளுமன்றத்தில் அறிவித்தார். “ஆயினும் வெற் பெறுமதி சேர்க்கை குறிப்பிட்ட சில பண்டங்களுக்கே அமுல்படுத்தப்படும் எனவும் அவர்…

Read More

குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலில்லிருந்து விலகத் தயார் – விமலுக்கு ரிஷாத் பகிரங்க சவால்…

தன்னைப்பற்றி தொடர்ச்சியாக கூறி வரும் குற்றச்சாட்டுக்களை பாராளுமன்ற உறுப்பினர் விமல்வீரவன்ஸ நிரூபித்தால் அரசியலிருந்தும்  பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் தான் விலகதயார் எனவும் அவ்வாறு நிரூபிக்க தவறும் பட்சத்தில் விமல் வீரவன்ஸ அரசியலிருந்து விலகுவாரா?என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத்பதியுதீன் பகிரங்க சவால் விடுத்தார். இன்று (21) பாராளுமன்றத்தில் உரையாற்றிய் அவர் மேலும் கூறியதாவது, ”இந்த சபையின் கருத்து சுதந்திரத்தை பயன்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவசன்ஸஇனங்களுக்கு இடையே குரோத உணர்வுகளையும் வைராக்கிய சிந்தனைகளையும் தொடர்ந்துஏற்படுத்தி வருகின்றார். என்னைப்பற்றி பொய்யான அபாண்டமான குற்றச்சாட்டுக்களை சுமத்திஎனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி வருகின்றார். ” ”தெமட்டகொட குண்டுவெடிப்பு சம்பவத்தின் தற்கொலைதாரியான பெண் ஒருவர் எனது தாயின்சகோதரரின் மகள் என திரும்ப திரும்ப அவர் கூறி எனக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தி வருகின்றார்.எனது தாய்க்கு சகோதர்கள் எவரும் இல்லையெனவும் விமல் வீரவன்ஸ கூறுவது சுத்தமான பொய்எனவும் நான் பொறுப்புடன் இந்த சபையில் கூறுகின்றேன். ” இனங்களுக்கிடையே ஒற்றுமையை சீர்குலைத்து நல்லுறவை இல்லாமலாக்கும் விமல்வீரவன்ஸவின் கீழ்த் தரமான செயலை வண்மையாக கண்டிக்கின்றேன். வாக்குகளைஅதிகரிப்பதற்காகவே விமல் இந்த பொய்களை பரப்புகின்றார். தற்போதைய சூழ்நிலையில்இனங்களுககிடையே நல்லெண்ணத்தை வளர்ப்பதே பொறுப்புள்ள அரசியல்வாதியின் பன்பாகும்ஆகும். ”நான் மூன்று பிள்ளைகளின் தந்தை, எனக்கென்று குடும்பம் உள்ளது, கட்சி ஒன்று உள்ளது . எனதுகட்சியில் பெரும்பாலான ஆதரவாளர்கள் உள்ளனர். இவ்வாறான பொய்யான பிரசாரங்கள் மூலம்என்மீதும் எனது சமூகத்தின் மீதும் விமல் களங்கம் கற்பிக்கின்றார். மக்களை நிம்மதியா வாழவைப்பதும் அவர்களுக்கான பணிகளை முன்னெடுத்து இனங்களுக்கிடையே நல்லெண்ணத்தைவளர்த்தெடுப்பதே எனது வேலைத்திட்டங்களாக இருக்கின்றன.” பயங்கரவாத்திற்கு முஸ்லிம்கள் எந்தக் காலத்திலும் ஆதரவளித்தவர்கள் அல்ல. இந்த சிறிய நாட்டில்இன உறவு தளைத்தோங்குவதற்கு முஸ்லிம்களாகிய நாம் பாடுபட்டு வருகின்றோம். உண்மைஎன்றொரு நாள் வெல்லும் என்பதை அனைத்து மதங்களினதும் போதனையாகும்.  என்றும் ரிஷாத்பதியுதீன் எம்.பி தெரிவித்தார்.

Read More

லண்டனின் நகர மேயராக முதல் இஸ்லாமியர்

இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டன் நகர மேயராக பாகிஸ்தானைச் சேர்ந்த பஸ் சாரதி ஒருவரின் மகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.லண்டனில் முஸ்லிம் ஒருவர் மேயராக தெரிவு செய்யப்படுகின்றனமை இதுவே முதல் முறையாகும். பிரதிநிதிகள் தேர்தல் மற்றும் சில நகரங்களுக்கான மேயர் பதவிகளுக்கான தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில் லண்டன் நகர மேயர் பதவிக்கான தேர்தலில் பிரபல கோடீஸ்வரரும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான இம்ரான் கானின் முன்னாள் மனைவி ஜெசிமாவின் சகோதரருமான ஸக் கோல்ட் ஸ்மித் போட்டியிட்டார்….

Read More

கடமையைப் பொறுப்பேற்றார் அமைச்சர் ஹக்கீம்

அஸ்ரப் ஏ சமத் நகர அபிவிருத்தி மற்று நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சராகப் பதவியேற்றுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தனது கடமையைப் பொறுப்பேற்றார். இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் அதியுயர் பீட உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

Read More

‘அலைபேசிக் கட்டணங்களுக்கான வரி நீக்கப்படும்’

-வி.நிரோஷினி – தொலைபேசிக் கட்டணங்களுக்காக விதிக்கப்பட்டுள்ள வரியை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திறன்பேசி (smartphone) வழியாக மேற்கொள்ளப்படும் அழைப்புகளுக்கான கட்டண வரியை, முழுமையாக நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார். இணையம் மூலமாக அழைப்புக்களை மேற்கொள்வதற்கான வசதி வாய்ப்புக்களை அதிகரித்துக் கொடுக்கவுள்ளதாகவும் இதற்கான கட்டண அறவீடு, நிதி ஒதுக்கீடு தொடர்பான யோசனையை, எதிர்வரும் 2017ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்திலும் உள்ளவாங்க முயற்சித்து வருவதாகவும் குறிப்பிட்டார்….

Read More

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2ஆக உயர்ந்தது

கொட்டாஞ்சேனை புளூமென்டல் வீதியில் ஐ.தே.கவின் ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளதாக, கொழும்பு தேசிய மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவத்தில், பெண் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மற்றொருவர் மரணமாகியுள்ளார்.அதேவேளை, மேலும் 13 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், கொழும்பு தேசிய மருத்துவமனை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Read More

கடந்த அரசாங்கம் நச்சுப் பொருட்கள் கலந்த உரத்தையே வழங்கியது!– அதுரலிய தேரர்

கடந்த அரசாங்கம் நச்சுப் பொருட்கள் கலந்த இரசாயன உரத்தையே மானியமாக வழங்கியது என அதுரலிய ரதன தேரர் நேற்று நாடாளுமன்றில் குற்றம் சுமத்தியுள்ளார். எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உர மானியம் குறைக்கப்பட்டதாக குற்றம் சுமத்துகின்றனர். எனினும் கடந்த அரசாங்கம் இரசாயனக் கலவைகள் அடங்கிய உரத்தையே வழங்கியது. இவ்வாறு வழங்கிய உரத்தின் பாரியளவு வருமானம் வெளிநாடுகளுக்கே சென்றது. இந்த வகை உரங்களில் அதிகளவில் கெட்மியம் மற்றும் ஆசனிக் போன்ற நச்சு இரசாயன பதார்த்தங்கள் காணப்பட்டன. இவை மண்ணின் வளத்தை…

Read More

இளைஞர்களுக்கான Tshirt வழங்கும் நிகழ்வு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்குடா இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில், இளைஞர்களுக்கான Tshirt வழங்கும் நிகழ்வு, நேற்று மாலை (16) ஓட்டமாவடியில் இடம்பெற்றது. அமைப்பாளர் ஜெளபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான அமீர் அலி கலந்துகொண்டு Tshirt களை வழங்கிவைத்து உரையாற்றினார். பெருந்திரளான இளைஞர் பட்டாளம் ஒன்றுகூடிய குறித்த நிகழ்வில், பிரதேச சபை உறுப்பினர்களான அமீர் ஆசிரியர், நெளபர், சட்டத்தரணி ராசிக், வட்டாரக் குழு…

Read More