Headlines

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் இரண்டாம்கட்ட அபிவிருத்தி பணிகள் பிரதமர் தலைமையில் ஆரம்பம்.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் இரண்டாம் கட்ட அபிவிருத்தி பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு மற்றும் வைத்திய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் பிரதமர் தலைமையில் இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனும் முஸ்லிம் காங்கிரசின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமும் கலந்துகொண்டனர் இதில் அமைச்சர்களான ராஜித, வஜிர அபேவர்த்தன, ஹரிசன் பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் தமிழ் தேசியகூட்டமைப்பு எம் பி க்களான சுமந்திரன், சிறீதரன் உட்பட…

Read More

அமெரிக்காவிற்கு அடுத்த தலைவலி – ரஷ்யா பக்கம் சாயும் ஈராக்

சிரிய அதிபர் அசாத்தின் படைகளுக்கு ஆதரவாக ஐ.எஸ் போராளிகள் மற்றும் கிளர்ச்சி படைகள் மீது ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்திவருகிறது. ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ். போராளிகளை ஒழித்துக்கட்டும் நோக்கத்தில் அமெரிக்க கூட்டுப் படைகள், விமானப்படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த பிரச்சனையில் முக்கிய திருப்பமாக சிரிய அதிபர் அசாத்தின் படைகளுக்கு ஆதரவாக ரஷ்யாவும் வான்வழி தாக்குதலை தொடங்கியுள்ளது. இதற்கு அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. இந்நிலையில் ஐ.எஸ். தீவிரவாதத்தால் கடுமையான பாதிப்புகளை சந்தித்துவரும் ஈராக்கின் பிரதம மந்திரி…

Read More

குரங்குக்கு புகைப்படத்துக்கான பதிப்புரிமை கிடையாது – அமெரிக்க நீதிமன்றம்

குரங்­குக்கு புகைப்­ப­டத்­துக்­கான பதிப்­பு­ரிமை வழங்க முடி­யாது என அமெ­ரிகக் நீதி­ப­தி­யொ­ருவர் தீர்ப்­ப­ளித்­துள்ளார். குரங்கு ஒன்­றினால் பிடிக்­கப்­பட்ட செல்பீ புகைப்­படங்­க­ளுக்­கான பதிப்­பு­ரிமை அக்­கு­ரங்­குக்கே உரி­யது எனவும் அதன் கையில் கெமரா கிடைப்­ப­தற்கு வழி­வ­குத்த மனி­த­ருக்கு உரி­ய­தல்ல எனவும் பிர­க­ட­னப்­படுத்தக் கோரி, அமெ­ரிக்­காவின் சான்­பி­ரான்­சிஸ்கோ நக­ரி­லுள்ள  நீதி­மன்­ற­மொன்றில் வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­தது. மிரு­கங்கள், பிரா­ணி­களின் நலன்­க­ளுக்­காக செயற்­படும் PETA அமைப்­பினால் இந்த வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது. பிரித்­தா­னிய புகைப்­ப­டப்­பி­டிப்­பாளர் டேவிட் ஸ்லேட்டர் 2011 ஆம் ஆண்டில் இந்­தோ­னே­ஷி­யாவின் சுலா­வெஸி தீவுக்குச்…

Read More

ஏறாவூர் ஹிதாயத் நகரில் தையல் பயிற்சி நிலையம் திறந்து வைப்பு

நேற்று முன்தினம் 14.01.2017 ஆம் திகதி கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஏறாவூர் ஹிதாயத் நகர் யுவதிகளுக்கு தையல் பயிற்சி நிலைய திறப்பு விழா பிரதி அமைச்சர் அமீர் அலியின்  இணைப்பாளர் லத்தீப் ஹாஜியாரின் தலைமையில் இடம்பெற்றது. கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டார். ஏறாவூர் பிரதேச செயலக உதவித் செயலாளர் திருமதி நபிஷா , பிரதி அமைச்சரின் இணைப்பாளர் லோகநாதன் (ஜோன் பாஸ்டர் )…

Read More

மக்களுக்காகவே கட்சியே தவிர கட்சிக்காக மக்கள் அல்ல – றிஷாத் பதியுதீன்

அம்பாறை மாவட்ட மக்களின் அரசியல் பிரதி நிதித்துவம் அநாதையாக மாறிவிடக் கூடாது என்பதற்காகவே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தமது தனிச்சின்னத்தில் இங்கு களம் இறங்கி இருப்பதாக அ.இ.மு.கா.தேசிய தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் மருதமுனையில் தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பில் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடும் தொழிலதிபர் சித்தீக் நதீரின் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றும் போது அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று இங்கு வந்து புலம்புவதாக அறிகின்றேன்.ஏன்…

Read More

17 ஆயிரத்து 457 பேர் போதை பொருள்களுக்கு அடிமைகள்

இலங்கையில் 17 ஆயிரத்து 457 பேர் ஹொரொயின் உள்ளிட்ட போதைப் பொருள்களுக்கு அடிமையாகியுள்ளதாக  சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை,  வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது  ஐக்கிய தேசியக்கட்சியின் மாத்தறை  மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஹெரோயின் உள்ளிட்ட ஏனைய போதைப்பொருள்களுக்கு அடிமையாகியுள்ளவர்கள் தொடர்பாக தொகை மதிப்பீடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதா? அவ்வாறாயின் அந்த எண்ணிக்கை எவ்வளவு? மேற்படி நபர்களில் எத்தனை பேர் எச்.ஐ.வி.தொற்றுக்கு…

Read More

மரண தண்டனையை ரத்து செய்ய முடியாது!- நீதி அமைச்சர்

wrவின் கோரிக்கைக்கு அமைய மரண தண்டனையை ரத்து செய்ய முடியாது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். யார் யாராவது கோருவதற்காகவோ அல்லது யார் யாராவது தீர்மானம் நிறைவேற்றுவதற்காகவே நாட்டின் சட்டங்களில் மாற்றம் செய்யப்பட முடியாது. சட்டங்களை இயற்றும் பூரண அதிகாரம் நாடாளுமன்றிற்கு காணப்படுகின்றது. மரண தண்டனை தொடர்பில் ஜனாதிபதி நாடாளுமன்றின் கருத்தை கோரியிருந்தார். இது தொடர்பில் நாடாளுமன்றில் ஒரு நாள் விவாதம் நடத்தப்பட்டிருந்தது. எனினும், மரண தண்டனை குறித்து இந்த விவாதங்களின் போது தீர்மானம்…

Read More

வகுப்பு தடையை நீக்கக் கோரி கிழக்கு பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

– ஏ.எம். றிகாஸ் – கிழக்குப் பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த 27 மாண­வர்­க­ளுக்கு விதிக்­கப்­பட்­டுள்ள வகுப்­புத்­த­டையை உட­ன­டி­யாக நீக்­கு­மாறு கோரி கிழக்குப் பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் நேற்று ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர். மட்­டக்­க­ளப்பு -வந்­தா­று­மூலை வளா­கத்­துக்கு முன்­பாக இந்த ஆர்ப்­பாட்டம் இடம்பெற்றது.

Read More

றிஷாத் நாளை அம்பாறை விஜயம் அ.இ.ம.கா வில் இணைய பலர் முஸ்தீபு

– ஏ.எச்.எம் பூமுதீன் – பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தனித்து போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து சூராவளி பிரச்சாரத்தை மேற்கொள்ளும் பொருட்டு தேசியத் தலைவர் ரிசாத் பதியுதீன் நாளை அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்கிறார். நாளை சனிக்கிழமையும் நாளை மறுதினம் ஞாயிற்றுக் கிழமையும் அம்பாறை மாவட்டத்தில் முகாமிட்டிருக்கும் தலைவர் ரிசாத் பதியுதீன் தனது தீவிரப் பிரச்சாரங்களை மேற்கொள்ளவுள்ளார். நாளை மருதமுனையிலிருந்து தனது சூராவளி பிரச்சாரத்தை ஆரம்பிக்கும் ரிசாத் பதியுதீன் நிந்தவூர், பொத்துவில்…

Read More

அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் ஒன்பதாவது கிளை பொலன்னறுவையில் திறந்து வைப்பு.

மருதூர் ஜஹான்) கெளரவ அதிமேகு ஜனாதிபதியினதும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத்தலைவரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான கெளரவ ரிஷாட் பதியுத்தீன் அவர்களினதும் ஆலோசனைக்கமைவாக இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் ஒன்பதாவது (09) வது பொலன்னறுவை கிளை கூட்டுத்தாபனத்தின் தலைவரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித்தலைவரும், கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளருமான கலாநிதி ஏ. எம். ஜெமீல் அவர்களால் நேற்று 07.08.2017ம் திகதி திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது. இது…

Read More

இலங்கை ஆசிரியர் சங்கம் : உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல்

தென் மாகாணத்தில் ஒழுங்கற்ற விதத்தில் ஆசிரியர்களை சேர்த்து கொள்வதற்கு எதிராக இலங்கை ஆசிரியர் சங்கம்  உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளது. இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இது குறித்து புகார் அளிக்கவுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க  தெரிவித்தார். இவ்வாறு ஒழுங்கற்ற முறையில் ஆசிரியர்களை உள்வாங்குதல் பட்டதாரிகளுக்கு இழைக்கப்படும் அநீதி யாகும் என தெரிவித்த அவர், இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்  இன்று (13) பிற்பகல் கொழும்பு, புதுகடை நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கப்படவுள்ளதாக,…

Read More

புத்தளம் நுரைச்சோலையில் பிராந்திய பொலிஸ் நிலையம்

இலங்கை பொலிஸ் துறையின் 150 தினத்தை முன்னிட்டு புத்தளம் நுரைச்சோலை நகரில் (அனல் மின்சார நிலையத்துக்கு அருகாமையில்) பிராந்திய பொலிஸ் நிலையம், பொலிஸ்மா அதிபர் பூஜித வெயசுந்தர அவர்களின் தலைமையில் நேற்று (18) மாலை 4 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது. மேற்படி நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி அவர்களும், அமைச்சர் பலித்த ரங்க்கே அவர்களும், புத்தளம் மாவட்ட அதிபர் உட்பட இன்னும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.  

Read More