Headlines

மியான்மாருக்கு சவூதி அமைச்சரவை கடும் எச்சரிக்கை!

சவூதி நிருபர் நேற்று லுஹர் தொழுகைக்கு பிறகு சவூதி அரேபியாவின் அமைச்சரவை; மன்னர் சல்மானின் தலைமையில் ஜித்தாவில் அமைந்துள்ள சலாமா மாளிகையில் நடை பெற்றது. முஸ்லிம்களை படுகொலை செய்து வரும் மியன்மர் அரசுக்கு கடுமையான கண்டனங்களை இந்த அமைச்சரவை பதிவு செய்தது. முஸ்லிம் இன படுகொலையை மியான்மர் அரசு தடுத்து நிறுத்தி விட்டு பாதிக்கபட்ட முஸ்லிம்களுக்கான நிவாரண பணிகளில் உடனே கவனம் செலுத்த வேண்டும் என்று வேண்டு கோள் விடுத்த சவுதி அரேபியாவின் அமைச்சரவை; இதை மியான்மர்…

Read More

இனி குறட்டை பிரச்னை இனி இல்லை…! Dr.வாசிம் கான்!

குறட்டை பிரச்னை இனி இல்லை…! ”என் கணவர் இரவில் விடும் குறட்டையால், நான் தூக்கத்தை தொலைத்து நிற்கிறேன்” என்று விவாகரத்து கேட்டு கோர்ட் படி ஏறிய பெண்களும் உண்டு. இரவில் தூக்கமின்றி தவிப்பவர்கள் பலர் என்றால், அருகில் படுப்பவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடும் அளவுக்கு, சத்தமாக குறட்டை விட்டு தூங்குபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. வயதில் மூத்தவர்களுக்கு மட்டும் குறட்டைப் பிரச்னை இருந்தது. ஆனால், தற்போது வயது வரம்பு இல்லாமல் எல்லோருக்கும் வர…

Read More

சிறந்த சூழலை ஏற்படுத்துவதற்காக தொழிற்சாலைகளுக்கு பாரிய நிதியுதவி.. அமைச்சர் ரிஷாட் புதிய திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்துவைத்தார்..

தயாரிப்பு மற்றும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்துறைகளில் ஈடுபடும் 5000 க்கு மேற்பட்ட  கைத்தொழிற்சாலைகளுக்கு பாரியளவிலான நிதியுதவி வழங்கும் திட்டத்தை கைத்தொழில், வர்த்தக அமைச்சு நடைமுறைப்படுத்துகின்றது.  09 வர்த்தக வங்கிகள் அடங்கலான 11 முன்னணி நிதி நிறுவனங்களின் ஊடாகவே இந்த நிதியுதவி வழங்கப்படுகின்றது. “சிறிய மற்றும் நுண் கைத்தொழிற்சாலைகளை உள்ளடக்கிய பல உற்பத்தி நிறுவனங்கள் போதுமான அளவு நிதியைப் பெறுவதில்லை. இதனாலேயே அந்த தொழிற்சாலைகளின் கழிவுப் பொருட்களால் சூழல் அதிகளவில் மாசடைகின்றது. இதனைத் தடுப்பதற்கான ஏற்பாடுகள்…

Read More

நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பம் 20 அணுகுண்டு வெடித்ததற்கு சமம்: அதிர்ச்சி தகவல்

நேபாளத்தில் கடந்த 25–ஆம் திகதி (சனிக்கிழமை) 7.9 ரிக்டரில் பூகம்பம் ஏற்பட்டது. அதில் காத்மாண்டு, போக்ரா, தீர்த்திநகர் உள்ளிட்ட பெரும் பாலான இடங்களில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள், ஓட்டல்கள் இடிந்து தரை மட்டமாயின. இடிபாடுகளுக்குள் சிக்கி ஏராளமானவர்கள் பலியாகினர். இதுவரை 4,310 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இடிபாடுகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. இடிபாடுகளுக்குள் இன்னும் பிணங்கள் கிடக்கின்றன. எனவே பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டும் என அஞ்சப்படுகிறது. மேலும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம்…

Read More

சிரிப்பு வரவழைக்கும் GASஐ சுவாசித்த வாலிபர் பலி

இங்கிலாந்தில் லாப்பிங் GAS (சிரிப்பை வரழைக்கும் GAS எனப்படும்) நைட்ரஸ் ஆசிட் மோகம் அதிகமாக உள்ளது. டீன் ஏஜ் முதல் பெரியவர்கள் வரை இதை சுவாசித்து மிக மகிழ்ச்சியாகவும், பேரானந்தமாகவும் இருக்க விரும்புகின்றனர். அதுவே அவர்களுக்கு எமனாக மாறி விடுகிறது. நைட்ரஸ் ஆசிட் உடலில் இருக்கும் ஆக்சிஜனை செயல் இழக்க செய்து உயிரை இழக்க செய்கிறது. அது போன்ற சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. லண்டனை சேர்ந்த 18 வயது வாலிபர் ஒருவர் நண்பரின் விருந்து நிகழ்ச்சிக்கு சென்றார்,….

Read More

2020 ஒலிம்பிக்ஸில் புதிய விளையாட்டுகள்?

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு டோக்யோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கூடுதல் விளையாட்டுகளாக, புதிதாக சேர்க்கப்படும் வாய்ப்பு உள்ள விளையாட்டுகள் பட்டியல் வெளியாகியுள்ளது. அடுத்தகட்ட தேர்வுகள் நடைபெற்ற பிறகு எந்தெந்த விளையாட்டு அந்த ஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெறும் என்பது மேலும் தெளிவாகும். அவ்வகையில் தற்போது எட்டு விளையாட்டுகள் முதல்கட்டப் பரிசீலனையில் தேர்வாகியுள்ளன. முதல்கட்ட பரிசீலனையில் பேஸ்பால்/சாஃப்ட்பால், பௌலிங், கராத்தே, ரோலர் ஸ்போர்ட்ஸ், ஸ்போர்ட் க்ளைம்பிங், ஸ்குவாஷ், சர்ஃபிங், வூஷூ ஆகிவை தேர்வாகியுள்ளன. ஸ்னூக்கருக்கு இடமில்லை அதேவேளை ஸ்னுக்கர்…

Read More

மனித உரிமை ஆணைக்குழுவிற்கு செல்லும் கொண்டயா

சிறுமி சேயா கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதான கொண்டயா என அழைக்கப்படும் துனேஷ் பிரியசாந்த மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார். பொலிஸார், தன்னை அடித்து துன்புறுத்தி, பலாத்காரமாக பொய்யான வாக்குமூலமொன்றை பெற்றதாக குறித்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த முறைப்பாட்டின் பிரதிவாதியாக, குற்றப் புலனாய்வு திணைக்களம் குறிப்பிடப்பட்டுள்ளது.  சேயாவின் உடலிலிருந்து பெறப்பட்ட மரபணு மற்றும் ஏனைய சாட்சிகளுடன் ஒப்பிடுகையில் கொண்டயா குற்றமற்றவர் என நேற்றைய தினம்  விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  இதேவேளை, குறித்த…

Read More

பெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்படாது; சம்பிக்க ரணவக்க

நாட்டில் பெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என தெரிவித்துள்ள மின்சக்தி மற்றும் எரிபொருள் வளத்துறை அமைச்சரான பாட்டலி சம்பிக்க ரணவக்க நாடு முழுவதும் உள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான 1186 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எவ்விதப் பிரச்சினையுமின்றி பெற்றோல் விநியோகிக்கப்படுமெனவும் தெரிவித்தார். இலங்கையில் பெற்றோல் தட்டுப்பாடு ஏற்படவுள்ளதாக வெளிவந்த செய்திகளையடுத்து அது தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே அமைச்சர் சம்பிக்க ரணவக்க இவ்வாறு தெரிவித்தார். -Thinakkural-

Read More

அதிக வேகத்தினால் ஏற்பட்ட விணை

மட்டக்களப்பு-கல்முனை காத்தான்குடி பிரதான வீதியில் காத்தான்குடி ஜூஸ்லா பாமசிக்கு அருகாமையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் மரணித்துள்ளார். குறித்த சம்பவத்தில் ஏறாவூர் ஐயங்கேனி ஜின்னா வீதியைச் சேர்ந்த 24 வயது அபுல் ஹசன் முஹம்மட் ஒஸாமா மரணமடைந்துள்ளார்.

Read More

களுத்துறை அஹதியா பாடசாலை வருடாந்த பரிசளிப்பு விழா!

களுத்துறை அஹதியா பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா, செவ்வாய்க்கிழமை (14) காலை, களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் இடம்பெற்றது. அஹதியா பாடசாலையின் அதிபர் அல்ஹாஜ் சிராப் முபஸ்சிர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தார். இதன்போது, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தவிசாளர் உவைஸ் முஹம்மட், ஹைதராபாத் KIMS வைத்தியசாலையின் பொதுமுகாமையாளர் சுனில் தெஹ்ரி, களுத்துறை நகரசபையின் முன்னாள் தவிசாளர் ஆமிர் நாசிர், களுத்துறை உதவி…

Read More

பஸ் குடை சாய்ந்து விபத்து

மட்டக்களப்பு – பொலன்னறுவை கொழும்பு பிராதான வீதியின் வெலிகந்த பிரதேசத்திற்கு அருகாமையில் தனியார் பஸ் ஒன்று குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 40 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேற்படி விபத்துக்குள்ளான பஸ் வண்டி கதுறுவெலையிலிருந்து மட்டக்களப்பு பக்கமாக கல்முனை நோக்கி பயணித்த வேளையிலே குடை சாய்ந்துள்ளது. இதனால் குறித்த பஸ் வண்டியில் பயணித்த சுமார் 40பேர் காயமடைந்த நிலையில் பொலன்னறுவை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குறித்த விபத்துச் சம்பவம்…

Read More

பரந்தன் இரசாயனத் தொழிற்சாலைக்கு அமைச்சர் றிஷாத் விஜயம்

பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதற்கென ஆரம்ப கட்டத்தில் 525 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் றிஷாத் பதியுதீன் நேற்று (24/04/2016) மாலை தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் அழைப்பின் பேரில், பரந்தன் இரசாயனத் தொழிற்சாலைக்கு விஜயம் செய்த அமைச்சர், அங்கு இடிபாடுகளுக்கு மத்தியில் கிடக்கும் தொழிற்சாலை கட்டிடங்களையும், அழிந்து போயிருக்கும் இயந்திரங்களையும் பார்வையிட்டார். யுத்தத்தின் காரணமாக சுமார் 16 வருட காலமாக மூடிக் கிடக்கும் இந்தத் தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பதற்காக,…

Read More