அதிகார பகிர்வுக்கு செல்வதற்கு தடையில்லை : விஜேதாச
ஒற்றையாட்சி மற்றும் சமஷ்டி என்று வெறும் வார்த்தைகளை பற்றிப் பிடித்துக்கொண்டிருக்காமல் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்கும் வகையிலும் தேசியஒற்றுமையை ஏற்படுத்தும் வகையிலுமான அரசியலமைப்பு ஒன்றுக்கே செல்லவேண்டியுள்ளது என்று நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார். மேலும் ஒற்றையாட்சி முறைமையின் ஊடாக முழுமையான அதிகாரப் பகிர்வுக்கு செல்வதற்கு எவ்விதமான தடைகளும் இல்லை. ஆனால் எவ்வாறான முறைமைக்கு செல்லவேண்டும் என்பதனை மக்களே தீர்மானிக்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஒற்றையாட்சி முறைமையில் மாற்றம் ஏற்படாது என்று தேசிய அரசாங்கம் தெரிவித்துவருகின்ற நிலையில் ஐக்கிய இலங்கைக்குள்ளேயே தீர்வு…
