Headlines

எனக்கு ஞாபகமே இல்லை: துமிந்த

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர கொலையோ, 2011ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 08ஆம் திகதியன்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலோ, தனக்கு எதுவுமே ஞாபகத்தில் இல்லை என்று தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, இந்த வழக்கிலிருந்த தன்னை முழுமையாக விடுதலை செய்யுமாறும் கோரிநின்றார். பிரதிவாதிக் கூண்டிலிருந்து வாய்வழியான சமர்ப்புகளை முன்வைக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Read More

சீபா உடன்படிக்கை கைச்சாத்திடப்படாது

இந்­தி­யா­வுடன் சீபா உடன்படிக்கை கைச்சாத்திடப்பட மாட்டாது, அதற்குப் பதி­லாக வர்த்தக தொழில்­நுட்ப உடன்­ப­டிக்கை  கைச்சாத்திடப்படவுள்­ள­தாக அர­சாங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்­பாக சபை முதல்­வரும், அமைச்­ச­ரு­மான லக்ஷ்மன் கிரி­யெல்ல தெரி­விக்கையில், இந்­தி­யா­வுடன் சீபா உடன்­ப­டிக்கை கைச்சாத்திடப்படப்  போவ­தா­கவும் இதனால் இலங்கையை இந்­தியா ஆக்­கி­ர­மித்­து­விடும் என்றும் பிர­சா­ரங்கள் செய்­யப்­ப­டு­கின்­றன. இதில் உண்­மை­யெ­து­வு­மில்லை. இது தொடர்­பாக பிர­தமர் ரணில்­ விக்­கி­ரமசிங்க நாடாளுமன்றத்தில் தெளி­வான அறிக்­கை­யொன்றை விடுத்தார்.தனது இந்­திய விஜ­யத்தின் போது சீபா உடன்­ப­டிக்கை தொடர்­பாக பேசப்­ப­ட­வில்லை. அவ் உடன்­ப­டிக்கை  கைச்சாத்திடப்படாது என்றும் தெரி­வித்தார். தேசப்­பற்று தொடர்­பாக பேசும்…

Read More

வவுனியா மாவட்ட கலை, பண்பாட்டுப் பெருவிழா!

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் அனுசரணையில், வவுனியா மாவட்ட பிரதேச செயலகம் இணைந்து நடாத்தும் கலை, பண்பாட்டுப் பெருவிழா-2017 நிகழ்வு வவுனியா, நகரசபை கலாச்சார மண்டபத்தில் அண்மையில் (04) நடைபெற்றது. வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சோமரத்ன விதான பத்திரவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பிரதிநிதியாக அமைச்சரின் இணைப்புச் செயலாளர் முத்து முஹம்மத் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்….

Read More

புகையிரத சேவைகள் ரத்து..!

புத்தளம் புகையிரத பாதையின் சீதுவ மற்றும் கட்டுநாயக்க நிலையங்களுக்கு இடையில் பாலம் ஒன்றை அமைக்கும் நோக்கில் எதிர்வரும் 20 ஆம் திகதி பிற்பகல் 2 மணி தொடக்கம் 6 மணிவரை புகையிரத பாதை தற்காலிகமாக மூடப்படும் என புகையிரத கட்டுப்பாட்டு மையம் அறிவித்துள்ளது. இந்த காலப்பகுதியில் புகையிரத சேவையிலும் மாற்றம் மேற்கொள்ளப்படும் அதேவேளை, சில சேவைகள் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More

தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் பிரத்தியேக வகுப்பு நிலைய ஒழுங்கமைப்பு தொடர்பான கலந்துரையாடல்!

நிந்தவூர் பிரதேசத்தில் காணப்படும் தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் பிரத்தியேக வகுப்பு நிலையங்களை ஒழுங்கமைப்புக்குள் கொண்டுவரும் நோக்குடனான சந்திப்பொன்று அண்மையில், நிந்தவூர் பிரதேச சபையில், தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் தலைமையில் நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது, தனியார் மற்றும் பிரத்தியேக கல்வி நிறுவனங்களில் காணப்பட வேண்டிய சுற்றுச்சூழல், பெளதீக கட்டமைப்பு, நேர அட்டவணை மற்றும் மாணவ மாணவிகளின் ஒழுக்க செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக, விரிவாக கலந்தாலோசனை செய்யப்பட்டன. இதன்போது, ஏற்கனவே பிரதேச சபையால் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு…

Read More

தொழிலாளர்களின் லயன் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஜனாதிபதியும் பிரதமரும் உத்தரவாதம்

இந்த நாட்டின் பொருளாதாரத்துக்கு முதுகெலும்பாக உள்ள தோட்டத் தொழிலாளர்களின் இரு நூறு ஆண்டு கால பழைமை வாய்ந்த லயன் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் உத்தரவாதம் அளித்துள்ளார்கள் என துறைமுகம் மற்றும் கப்பல் துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். தொழிலாளர் தேசிய சங்கம் நேற்று அட்டனில் ஏற்பாடு செய்திருந்த தைப்பொங்கல் விழாவில் கலந்து கொண்டு பேசும்போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து பேசுகையில், நாட்டில் கடந்த காலங்களில் நிலவிய…

Read More

 மூவரின் கணக்குகளை அறிக்கையிட உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரிகளாகக் கடமையாற்றிய இராணுவத்தைச் சேர்ந்த உயரதிகாரிகள் மூவரின் வங்கிக் கணக்குகள் மற்றும் நிதி நிறுவனங்களில் பேணப்படும் கணக்குகள் தொடர்பிலான அறிக்கையை, இரகசியப் பொலிஸாரிடம் கையளிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் உத்தரவிட்டுள்ளார். இந்த மூவரும் நிதி மோசடிகளில் ஈடுபட்டிருந்தனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நிலையிலேயே அம்மூவரினால் பேணப்பட்ட கணக்குகள் தொடர்பில் அறிக்கையிடுமாறு வங்கிகள் மற்றும் 72 நிதிநிறுவனங்களின் முகாமையாளர்களுக்கு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார். பணம் தூய்மையாக்கல் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும்…

Read More

நாட்டில் அரசியல் ரீதியாக பல மாற்றங்கள் வரும் அதில் எந்த தேர்தல் முதலில் நடக்கும் என்று தெரியாது ஆனால் அரசியலில் மாற்றம் நிகழும் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி!!!

நாட்டில் அரசியல் ரீதியாக பல மாற்றங்கள் வரும் அதில் மாகாண சபை தேர்தலா, ஜனாதிபதி தேர்தலா அல்லது பொதுத் தேர்தலா நடைபெறும் என்று தெரியாது ஆனால் அரசியலில் மாற்றம் நிகழும் என்று விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வட்டார ரீதியாக தெரிவு செய்யப்பட்ட இளைஞர் அமைப்பாளர்களுக்கு கட்சியின் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு நேற்று இரவு 918.02.2019) மீராவோடை அந் நூர்…

Read More

பிறந்த குழந்தைகளுக்கு முதல் உணவாக இனிப்பை வழங்குவது அவர்களை மூளை சிதைவில் இருந்து பாதுக்கும் என்ற ஆய்வு முடிவு நபிகள் நாயகம் இறைவனின் உண்மைதூதர் என்பதை உறுதி செய்கிறது!

பிறந்த குழந்தைகளுக்கு முதல் உணவாக இனிப்பான வற்றை கொடுப்பது நபி வழியாகும் நபிகள் நாயகம் பேரித்தம் பழத்தை மென்மையாக பிசைந்து பிறந்த குழந்தைகளுக்கு முதல் உணவாக கொடுத்துள்ளார்கள் அப்படி கொடுக்கவும் கர்பித்துர்ள்ளார்கள் பேரித்தம் பழத்தை பெற்று கொள்ளதவர்கள் சீனி தேன் போன்ற இனிப்பான பொருள்களை தொட்டு பிறந்த குழந்தையின் நாவில் தடவுவதை வழக்கமாக கொண்டுள்ளனர் இது நபி வழியில் இருந்து பெறப்பட்ட அறிவாகும் நபிகள் நாயகம் சர்வசாதரணமாக இந்த அறிவை நமக்கு கற்று தந்து சென்றிருக்கிறார்கள் ஆனால்…

Read More

சர்வதேச தரத்துடன் போட்டியிடும் வகையில் டிப்ளோமா வடிவமைப்பு பாடநெறி அமைச்சர் ரிஷாட்டின் வழிகாட்டலில் முன்னேற்றகரமான செயற்பாடுகள்

சர்வதேச தரத்துடன் போட்டியிடும் வகையிலான டிப்ளோமா வடிவமைப்பு பாடநெறிகளை தேசிய வடிவமைப்பு நிலையம், இலங்கை தேசிய வடிவமைப்பு நிறுவனத்தின் மூலம் வழங்கிவருவதாகவும், இந்தப் பாடநெறியில் தேர்ச்சிபெற்றோர் வெளிநாடுகளிலும், உள்நாடுகளிலும் நல்ல சம்பளத்துடன் இலகுவான தொழில் வாய்ப்பை பெற வழி ஏற்பட்டுள்ளதாகவும், நிலையத்தின் தலைவர் சட்டத்தரணி மில்ஹான் லத்தீப் தெரிவித்தார். கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான தேசிய வடிவமைப்பு நிலையத்தின் ஏற்பாட்டில் டிப்ளோமா மற்றும் உயர் தேசிய டிப்ளோமா பயிற்சிபெற்ற 96பேருக்கு விருது வழங்கும் நிகழ்வு இன்று காலை…

Read More

கொழும்பு முன்னாள் மேலதிக நீதவான் திலின கமகே நீதிமன்றில் ஆஜர்

சட்டவிரோதமான முறையில் யானைக்குட்டியொன்றினை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் முன்னாள் கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகே சற்றுமுன்னர் கொழும்பு புதுகடை மேல் நீதிமன்றில் ஆஜராகியுள்ளார்.

Read More

‘மன்னார் மாவட்ட அபிவிருத்தியில் அமைச்சர் ரிஷாட் திறம்படச் செயற்படுகின்றார்’ மன்னாரில் பிரதமர் புகழாரம்!

–ஊடகப்பிரிவு- நாட்டின் ஆட்சியை நாங்கள் வென்றெடுத்ததைப் போன்று, கிராமங்களின் ஆட்சியையும் கைப்பற்றுவதற்கு உதவுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்தார். மன்னார் மாவட்ட உள்ளூராட்சி சபைகளில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, மன்னார் பஸ்தரிப்பு நிலையத்தில் நேற்று (31) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன், மாகாணசபை உறுப்பினர் அலிக்கான் சரீப், முன்னாள் மாகாணசபை…

Read More