Headlines

கல்வி அதிகாரிகள் கூஜா தூக்கிகளாக இருக்ககூடாது – அமீரலி

– அபூ செய்னப் – கல்வி அதிகாரிகள் அரசியல்வாதிகளின் கூஜா தூக்கிகளாக இருக்ககூடாது ஆனால் அப்படிப்பட்ட அதிகாரிகள் எமது மாவட்டத்தில் அதிகம்  காணப்படுகிறார்கள்.   இதனை நினைக்கும் போது மிகுந்த கவலையாக இருக்கிறது இவ்வாறான அதிகாரிகளின் மோசமான பக்கச் சார்பான நடவடிக்கைகளினால் எதிர்கால கல்விப்பரம்பரையினரான நமது மாணவ செல்வங்கள் மிகப் பிழையான முன்னுதாரணங்களை கற்றுக்கொளவார்கள் இது தொடர்பில் இனியும் பாராமுகமாக இருக்க முடியாது என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீரலி மிகுந்த விசனத்துடன் கவலை தெரிவித்தார்.  …

Read More

இலங்கையில் காய்த்திருக்கும் அதிசய மாங்காய்

இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில், கிண்ணியா பிரதேசத்தில் உள்ள குறிஞ்சாக்கேணி இரண்டாம் வட்டார பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டுத் தோட்டத்தில் மனிதமுகத்தின் அமைப்பிலான அதிசய மாங்காய் ஒன்று காய்த்துள்ளது. தோற்றத்தில் மனிதர்களின் முகத்தை போலவே உள்ள இந்த அதிசய மாங்காயில் மனிதமுகத்தில் உள்ளது போலவே கண்கள், மூக்கு, வாய் போன்றவையும் காணப்படுகின்றன. இதுதொடர்பான செய்திகள் இலங்கையில் உள்ள சில ஊடகங்களில் வெளியானபின்னர்  சமூகவலைத்தளங்கள் மூலமாக இந்த தகவல் படுவேகமாக பரவி வருகிறது. இதேபோல், நைஜீரியா நாட்டிலும் ஒரு மாங்காய்…

Read More

பணிக்கு திரும்­பாத ஊழி­யர்­கள் பணியில் இருந்து நீங்­கி­ய­வர்­க­ளாக கரு­தப்­ப­டு­வார்கள் : மொஹான்

வேலை நிறுத்தப் போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்ள பல்­க­லைக்­க­ழக கல்வி சாரா ஊழி­யர்கள் இன்று (5) முதல் கட­மைக்குத் திரும்ப வேண்டும் என அர­சாங்கம் அறி­வு­றுத்­தி­யுள்­ளது. அவ்­வாறு இன்று பணிக்கு திரும்­பாத ஊழி­யர்­கள் பணியில் இருந்து நீங்­கி­ய­வர்­க­ளாக கரு­தப்­ப­டு­வார்கள் எனவும் பல்­க­லைக்­க­ழக மானி­யங்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மொஹான் டீ சில்வா குறிப்­பிட்­டுள்ளார். பல்­க­லைக்­க­ழக மானி­யங்கள் ஆணைக்­கு­ழுவின் தலை­வ­ரினால் வெளியி­டப்­பட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே மேற்­கு­றிப்­பிட்ட விட­யங்கள் தெளிவு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.இந்­நி­லையில் அர­சாங்­கத்தின் இந்த செயற்­பா­டு­களால் தமது தொழிற்­சங்க நட­வ­டிக்­கையை நிறுத்தப் போவ­தில்லை என, பல்­க­லைக்­க­ழக தொழிற்­சங்க…

Read More

தலைவர் ரிஷாட்டின் நத்தார் தின வாழ்த்து செய்தி!

சமாதானம், புரிந்துணர்வு என்பனவற்றைத் தோற்றுவிக்கும் தினமாக, இன்றைய கிறிஸ்மஸ் பண்டிகை அமைய வாழ்த்துவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் கிறிஸ்மஸ் பண்டிகையைக் கொண்டாடும் மக்களுக்கு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மானிட சமூகமானது ஒவ்வொருவர் மீதும் அன்புடனும் இரக்க குணத்துடனும் வாழ்தல் என்ற பிரதான கட்டமைப்பினைக்கொண்டதாகும். இதனை, அனைத்து மதங்களும் வலியுறுத்தி நிற்கும் வேளையில், கிறிஸ்தவ சகோதர சமூகமும் இந்த…

Read More

மஹிந்தவின் கூட்டத்தில் புதிய தேசிய கோடி

கண்டி மாவட்டத்தில் யட்டிநுவர பகுதியில் இன்று மகிந்த ராஜபக்ஷ பங்கு பெறும் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் சர்ச்சைக்குரிய தேசியக்கொடியை பறக்க விட்டுள்ளதை சிங்கள மொழி முன்னணி ஊடகம் ஒன்று அம்பலப்படுத்தி உள்ளது. ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்னர் உதய கம்மன்பில உள்ளிட்ட சிலர் சிறுபான்மையினரை பிரநிதிதித்துவம் செய்யும் நிறங்களை அகற்றிய கொடிகளை ஏந்தி சர்ச்சை ஏற்பட்ட நிலையில் இன்று குறிப்பிட்ட மகிந்த ராஜபக்ச பங்குபெறும் அரசியல் கூட்டத்தில் இந்த கொடிகள் பறக்கவிட்டபட்டற்கு எந்த நடவடிக்கை எடுக்கப்படும்…

Read More

நீர்த்தேக்கத்தில் குதித்த மாணவனும் மாணவியும் மாயம்

நீர்த்தேக்கத்தில் குதித்த மாணவனும் மாணவியும் மாயம் பாடப் புத்தகங்கள், சீருடைகளை வைத்துவிட்டு பாய்ந்ததாக தகவல் கே. அசோக்குமார் தெதுரு ஓயா நீர்த் தேக்கம் அருகே பாட புத்தகங்கள். பாடசாலை சீருடை என்ப வற்றை வைத்துவிட்டு ஒரு மாணவனும், மாணவியும் காணாமற்போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவர்கள் இருவரும் நீர்த் தேக்கத்தினுள் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.குருணாகல் காமினி வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 11 ஆம் ஆண்டு மாணவியும் குளியாப்பிட்டி கும்புக்கெட்டே மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும்…

Read More

புத்தளம் குவைத் வைத்தியசாலையில் இலவச கண் சிகி்ச்சை முகாம்

– இர்ஷாத் றஹ்மத்துல்லா – ஜமிய்யத்துஸ் சபாப் நிறுவனம் 18 வது முறையாக ஏற்பாடு செய்த இலவச கண் சிகி்ச்சை முகாம் புத்தளம் குவைத் வைத்தியசாலையில் 3 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரை இடம் பெறுகின்றது. இம்முறை 500 பேருக்கு இலவசமாக கண் சிகிச்சை மற்றும் கண்ணில் வெள்ளை படலத் திரையினை அகற்றுதல் என்பன இடம் பெறுகின்றது.நாடு தழுவிய முறையில் இந்த கண் சிகிச்சை முகாம் இடம் பெறுவதாக ஜமிய்யத் சபாப் நிறுவனத்தின் உதவி…

Read More

அரபு மொழி பலகை அகற்ற வேண்டுமென்பது பொலிஸாருடைய அடாவடி நடவடிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பள்ளிவாயல்கள், பாடசாலைகள், அரபு கலாசாலைகளில் அரபு மொழி பலகை அகற்ற வேண்டுமென்பது பொலிஸாருடைய அடாவடி நடவடிக்கை என முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். கல்குடா பிரதேசத்தின் காணப்படும் அரபு வாசகங்களை அகற்றுமாறு பொலிஸாரால் அறிவுறுத்தப்பட்டுள்ளமை தொடர்பாக வெள்ளிக்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்- மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை, ஓட்டமாவடி, நாவலடி, ஏறாவூர், காத்தான்குடி போன்ற பிரதேசத்தில் காணப்படும் பள்ளிவாயல்கள், மதரசாக்களில் உள்ள அரபு மொழியிலான பெயர்…

Read More

எரிபொருளுக்கான கேள்வி அதிகரிப்பு

புத்தாண்டு நிகழ்வுகள் இடம்பெற்ற கடந்த சில தினங்களில் வரலாற்றில் முதல் முறையாக அதிகமான எரிபொருள் கேள்வி நிலவியதாக பெற்றோலிய வள அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களாக அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் இருந்தமையை குறிப்பிடத்தக்கது.

Read More

துருக்கியின் உதவியுடன் இரண்டு கிராமங்களுக்கு குடிநீர் வசதி!

துருக்கி நிறுவனம் ஒன்றின் உதவியுடன் குளியாப்பிடிய பிரதேசசபைக்குட்பட்ட மிகநீண்ட நாட்களாக நீருக்காக கஷ்டப்பட்ட குருநாகல் மாவட்டத்தின் மாராப்பிடிய, பகமுனே ஆகிய இரண்டு கிராமங்களுக்கு குழாய் கிணறு மூலம் நீரை பெற்றுக்கொள்ளும் வசதிகளை பெற்றுக்கொடுத்ததுடன், நேற்று முன்தினம் (27) துருக்கி நாட்டு நிறுவன சகோதரர்களுடன் இணைந்து  மக்கள் பாவனைக்காக முன்னாள் மாகாணசபை உறுப்பினரும், மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட அமைப்பாளருமான என்.எம்.நஸீர் திறந்து வைத்தார். இத்திட்டத்தின் மூலம் 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடைவதுடன், பெரும்பான்மை இன சகோதரர்களுக்கும்…

Read More

பதுளை பள்ளிக்கு ரிசாத் விரைவு பொலிசாருக்கு கடும் கண்டனம்

(எ.எச்.எம்.பூமுதீன்) பதுளை பள்ளிவாசல், பாடசாலை மற்றும் வர்த்தக நிலையங்கள் மீதான தாக்குதல்களை வன்மையாக கண்டித்துள்ள அமைச்சர் ரிசாத் பதியுதீன் உடன் ஸ்தலத்துக்கு விரைந்து சம்பந்த பட்டவர்களை  கைது செய்வதிலும்  துரித கவனம் செலுத்தினார். இதற்கமைய . ஒருவர்  கைது செய்யபட்டதுடன்  மூவரைத்தேடி பொலிஸார் வலைவீசியுள்ளனர். பொலிசாரின் அசமந்தப் போக்கே இவ்வாறான தாக்குதல்கள் தொடர்வதற்கு காரணம் என அமைச்சர் அதன்போது பகிரங்கமாக குற்றம் சுமத்தினார். பதுளை ஜூம்ஆ பள்ளிவாசல், அல்-அதான் பாடசாலை மற்றும்  மூன்று முஸ்லிம் வரத்தக நிலையங்கள்…

Read More