பாரம்பரியத் தொண்டுப் பணியை ஊக்குவிக்கும் வகையில் பொது இடங்களில் மக்கள் சிரமதானம்!
(அப்துல்லாஹ்) தமது கிராமத்தின் பல்வேறு பொது அலுவலங்களை மக்களின் பங்களிப்புடன் சிரமதானம் செய்து வருவதாக திருகோணமலை அலஸ் தோட்டம் மாதர் சங்கத் தலைவி எஸ். சாந்தா தெரிவித்தார். இன்று (28) வியாழக்கிழமை உப்புவெளி கிராம சேவையாளர் அலுவலகமும் அதன் சுற்றாடலும் கிராம மாதர் சங்க உறுப்பினர்களால் சிரமதானம் துப்புரவு செய்யப்பட்டது. உப்புவெளி கிராம சேவகர் பிரிவிலடங்கும் செம்பியன் தோட்டம், சோலையடி மற்றும் அலஸ் தோட்டம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மாதர் சங்க உறுப்பினர்கள் இன்றைய சிரமதானத்தில் பங்கேற்றனர்….
