Headlines

போதைப் பொருள் கடத்தலை தடுக்க பாகிஸ்தானின் உதவியை நாடிய இலங்கை




இலங்கைக்கும் இந்தியாவுக்கும் கடத்தப்படுவதற்காக கொழும்பு துறைமுகத்துக்கு ஹெரோயின் மறைத்து கொண்டு வரப்படுகிறது.

இந்தநிலையில் புதுடில்லியிலும் கடந்த வாரம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டது.

இதனையடுத்து இலங்கை, இந்திய அதிகாரிகளுக்கு இடையில் போதைவஸ்தை கட்டுப்படுத்துவதற்கான பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளதாக அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதன்போது போதைவஸ்து கடத்தலை தடுக்க பாகிஸ்தானிடமும் உதவி கோரப்பட்டுள்ளதாக அஜித ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சீதுவையிலும் கண்டி கட்டுகஸ்தோட்டையிலும் அண்மையில் கைப்பற்றப்பட்ட போதைவஸ்துக்கள் தொடர்பில் பாகிஸ்தானிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *