Headlines

தனியார் மருத்துவ கல்வி நிறுவனங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

நாட்டில் உள்ள தனியார் மருத்துவ கல்வி நிறுவனங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க தீ்ர்மானித்துள்ளதாக மருத்துவ பீட மாணவர்கள் குழு குறிப்பிட்டுள்ளது. 13 மாவட்டங்களில் உள்ள பல்கலைக்கழக மாணவர்களுடன் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும் என மருத்துவ பீட மாணவர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் ரயான் ஜயலத் தெரிவித்துள்ளார். இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று பிற்பகல் ஆரம்பிக்கப்படும் எனவும் மருத்துவ பீட மாணவர்கள் குழு தெரிவித்துள்ளது.

Read More

பௌத்த மதத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது

புதிய அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் போது பௌத்த மதத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது என அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்காராம விகாரையில்  நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இன, ஜாதி,மத பேதங்களை புறந்தள்ளி விட்டு ஒத்துழைப்புடன் நல்லிணக்கமாக செயற்படும் காலம் வந்துள்ளது. இலங்கை தற்போது உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாடாக மாறியுள்ளது. நான் பாடசாலை செல்லும் போது நான் விளையாடிய அணியில் உப தலைவர் ஒருவர் இருந்தார். அவர்…

Read More

வன்னி மாவட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சிக் கருத்தரங்கு!

மன்னார், வவுனியா மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சிக் கருத்தரங்கு இன்று (15) வவுனியா ஓவியா ஹோட்டலில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முசலி, மன்னார், மாந்தை, மற்றும் நானாட்டான் உட்பட வவுனியா நகரசபை மற்றும் செட்டிகுளம் பிரதேசபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். (ஐ)  

Read More

கல்பிட்டி, கண்டக்குழி, குறிஞ்சிப்பிட்டி மக்களுடனான சந்திப்பு

கல்பிட்டி, கண்டக்குழி, குறிஞ்சிப்பிட்டி வரையான இடம்பெயர்ந்த மக்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் சந்தித்த போது…

Read More

சிலவத்துறை சிறுக்குளம் கிராமத்திற்கான குடிநீர் இணைப்பு மக்கள் பாவனைக்கு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின்  வேண்டுகோளின் பேரில் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீனினால் மன்னார் சிலாவத்துறை சிறுக்குளம் கிராமத்திற்கான 2000 லீட்டர் கொள்வனவு கொண்ட குடிநீர் தாங்கி மக்கள் பாவனைக்காக இன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்,  பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். மேலும் இந்த நிகழ்வில் முன்னாள் முசலி பிரதேச சபை உறுப்பினர் பைரூஸ் மற்றும் பள்ளி…

Read More

ஹிலாரியைவிட தகுதியானவர் யாரும் இல்லை: ஒபாமா ஆதரவு

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் களம்காண உள்ள குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான பிரைமரி தேர்தல்கள் பல்வேறு மாகாணங்களில் நடந்து வந்தன. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக, முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவியும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான ஹிலாரி கிளிண்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது குடியரசு கட்சியை சேர்ந்த…

Read More

முப்படைகள் சகிதம் மஹ்ரூப் எம்.பி. களத்தில்.

இன்று கிண்ணியாவில் டெங்கு நுளம்பு பெருக்கத்துக்கு எதிரான பாரிய வேலைத்திட்டம் மஹ்ரூப் எம்.பி தலைமையில் கிண்ணியா பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்பில் டெங்கு ஒழிப்பு நிகழ்வில் 4000 மேட்பட்ட முப்படையினரும் பொலிசாரும் , இவர்களுடன் இணைந்து அரச ஊழியர்கள் , இளைஞர்கள் என பலரும் இந்த பனியில் ஈடுபட்டுள்ளனர்.

Read More

முல்லைத்தீவு முறிப்பு கொத்தியாகும்பம் மக்களின் காணிப்பிரச்சினை தொடர்பான கவனயீர்ப்பு போராட்டம் தொடர்கின்றது.

முல்லைத்தீவு முறிப்பு கொத்தியாகும்பம் மக்களின் காணிப்பிரச்சினை தொடர்பான கவனயீர்ப்பு போராட்டம் 12வது நாளாக தொடர்கின்றது. அமைச்சர் றிஷாட் பதியுதீன், பா.உ Dr  சிவமோகன், தேசிய ஐக்கிய முண்ணனி  தலைவர் அசாத் சாலி மற்றும், சிரேஷ்ட சட்டத்தரணி என். எம் சஹீட், மாகாண சபை உறுப்பினர் ஜனூபர், மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தனர். தந்தை றஹீம் முல்லைத்தீவு முஸ்லிம்களுக்கு அதிகாரிகளாலும்,ஒரு சில அரசியல்வாதிகளாலும் இழைக்கப்பட்ட அநீதிகளை விபரித்தார்.    பல முறை காணி கச்சேரிகள் வைக்கப்பட்டும் இற்றைவரை அவர்களுக்கு உரிய…

Read More

பரிதாபமாக திட்டமிட்டுக் கொல்லப்படும் மியன்மார் ரோஹிங்கிய முஸ்லிம்கள். ஹிஜ்ரி முதல் நூற்றாண்டிலேயே இஸ்லாம் பரவிய வரலாறு..

ஹபீஸ் அப்துல் முத்தலிப் (பாதிஹ்) மியன்மாரைப் பொறுத்தவரை ஹிஜ்ரி முதல் நூற்றாண்டிலேயே இஸ்லாம் பரவியுள்ளதை வரலாறு உறுதிப்படுத்துகின்றது . ஆனால் குடியுரிமையை மறுக்கும் இராணுவச் சரவதிகாரம் 1824 இல் ஊடுருவிய பிர்தானிய ஆக்கிரமிப்பாளர்களின் வருகையுடனே இஸ்லாம் பாரவியதாகச் சொல்லுகின்றார்கள் . மியன்மாரில் 4 மில்லியன் முஸ்லிம்கள் இருப்பதாக சில இணையங்கள் கூறுகின்றது . அங்கு பிரதான மூன்று முஸ்லிம் பிரிவினர்கள் இருக்கின்றார்கள் . 01) பான்தாய்கள் ( பர்மிய பூர்வீகக் குடிகள் ) 02) பஷுஷ் (…

Read More

தொற்று நோய்கள் பரவக்கூடிய அபாயம்

மழை வெள்ளம் காரணமாக தொற்று நோய்கள் பரவக்கூடிய அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய்த் தடுப்புப் பிரிவு பணிப்பாளர் நிபுணத்துவ மருத்துவர் பபா பலிஹவடன மக்களிடம் கோரியுள்ளார். கொழும்பு ஊடகங்களின் ஊடாக அவர் பொதுமக்களிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

Read More

வங்காலை மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல்.

வங்காலை மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் வங்காலை மீனவர் சங்க கட்டிடத்தில் (26) இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் அழைப்பின் பேரில் மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் செய்த கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசன, மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் பி ஹரிசன் தலைமையில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது. இராஜாங்க அமைச்சர் அமீர் அலி, மன்னார் பிரதேசசபை தலைவர் முஜாஹிர், மாந்தை மேற்கு பிரதேச சபை தவிசாளர்…

Read More

மஹிந்த நன்றிகெட்ட அரசியல் சந்தர்ப்பவாதி: எஸ்.பி

மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினரும் சேர்ந்தே தன்னைத் தோற்கடித்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்றைய  திவயின ஞாயிறு வார இதழுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி குறித்த கேள்விக்குப் பதிலளித்துள்ள அவர், தான்திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். “இதுவரை நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் நான் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளேன். ஆனால், இந்தத் தடவை தேர்தல் ஆரம்பித்தவுடன் மஹிந்த ராஜபக்ஷ, பசில் மற்றும் கோத்தபாய…

Read More