Headlines

அதிவேக வீதியில் இலவசமாக பயணிக்க அனுமதி கோரும் சாரதிகள்!

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு நோயாளர்களை கொண்டு செல்லும் போது தங்களுக்கு அதிவேக வீதியை இலவசமாக பயன்படுத்த அனுமதிக்குமாறு அம்பியூளன்ஸ் சாரதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு மற்றும் குளியாபிட்டி பகுதிகளில் இருந்து அடிக்கடி நோயாளர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அழைத்து வரப்படுகின்றனர். ஆபாய கட்டத்தில் உள்ள நோயாளர்களை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றவென சில அம்பியூளன்ஸ் சாரதிகள் கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியை பயன்படுத்துகின்றனர். இதன்போது அதிவேக வீதிக்கு செலுத்த வேண்டிய அனுமதிக் கட்டணத்தை…

Read More

‘ஜனாதிபதி மைத்திரியின் இதயம் பலமானது’

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு, அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சரவைப் பேச்சாளரும் , அமைச்சருமான ராஜித்த சேனாரத்ன பதிலளிக்கும் போது, கேள்வி: அப்படி என்றால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இடமில்லையா? பதில்: ஏன், இல்லை. அவரும் அவரது குழுவும் நல்லாட்சியின் பின்னால் வரமுடியும். எஸ்.டப்ளியு. ஆர். டி. பண்டாரநாயக்க சாகும் வரை முன்னோக்கி சென்றார். எங்கள் குடும்பமே நாசமாகிவிடும் என்று தெரிந்துகொண்டுதான் நாங்கள் அரசாங்கத்திலிருந்து…

Read More

இலங்கையில் இப்படியும் ஒரு சாரதி..!

க.கிஷாந்தன் பஸ்ஸில் விட்டுச்சென்ற பணப்பையை, நேர்மையாக நடந்துகொண்ட அந்த பஸ் சாரதியின் உதவியுடன் மாணவியொருவர் மீளப்பெற்றுக்கொண்ட சம்பவமொன்று அட்டன் நோர்வூட் பகுதியில் 18.03.2015 அன்று புதன்கிழமை இடம்பெற்றது. பொகவந்தலாவை – கொட்டியாகலை தோட்டத்தைச் சேர்ந்த எஸ்.சதாநந்தனி என்ற பாடசாலை மாணவி ஒருவர், மஸ்கெலியாவில் உள்ள தனியார் வகுப்புக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போது 7,200 ரூபாய் பணம், அடையாள அட்டை ஆகியன அடங்கிய பணப்பையை பஸ்ஸிலேயே மறந்து விட்டு சென்றுள்ளார். பணப்பையை பஸ்ஸில் வைத்துவிட்டு இறங்கியதை உணர்ந்த அம்மாணவி,…

Read More

உலகிலேயே மிகச்சிறிய பறக்கும் கேமரா

ஆக்சிஸ் விடியஸ் என்ற நிறுவனம் உலகிலேயே மிகச்சிறிய பறக்கும் கேமிராவை தயாரித்துள்ளது. 1.5 இன்ச் அளவுக்கும் குறைவான மிகச்சிறிய குவாட்காப்டர் விமானத்தில் இந்த கேமிராவானது பொருத்தப்பட்டுள்ளது. 2.4 ஜிகாஹெர்ட்ஸ் கன்ட்ரோலருடன் வெளிவரும் இந்த கேமிராவை ஆன்ட்ராய்டு, ஆப்பிள் ஸ்மார்ட்போன் அல்லது டேப்லட்டை பயன்படுத்தி நாம் இயக்கலாம். 360 டிகிரியிரும் சுழலக்கூடிய இந்த கேமிரா 100 அடி உயரம் வரை பறக்கும். வை-பை இண்டர்நெட் இணைப்பு வழியாக இந்த கேமிராவில் வானில் இருந்து பதிவு செய்யப்படும் வீடியோ நேரடியாக…

Read More

அப்துல் கலாம் காலமானார்

மேகாலய மாநில தலைநகர் ஷில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் (ஐ.ஐ.எம்.) இன்று நடைபெற்ற கருத்தரங்கில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கலந்து கொண்டார். அப்போது மேடையில் பேசிக் கொண்டிருந்த அப்துல் கலாமுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. மயங்கி சரிந்த அவரை அங்குள்ள பெத்தானி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதையடுத்து ராணுவ மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் குழு…

Read More

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச அடையாள அட்டை

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு உடமைகளை இழந்து முகாம்களில் வாழ்பவர்களுக்கு இலவச அடையாள அட்டை மற்றும் பிறப்பு அத்தாட்சி பத்திரங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை முன்னெடுத்துள்ளது. மண்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டு தங்களது அடையாள ஆவணங்களை இழந்தவர்களுக்கே இலவசமாக இந்த ஆவணங்கள் வழங்கப்பட உள்ளன. கொழும்பில் இன்று (26) இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன இதனை குறிப்பிட்டுள்ளார். அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் அடையாள அட்டை மற்றும் பிறப்பு…

Read More

வக்பு சொத்துகள் அனைத்தையும் பதிவுசெய்ய நடவடிக்கை எடுக்குக

அமைச்சர் ஹலீமிடம் கோரிக்கை வக்பு சொத்­துகள் சட்­டத்­திற்கு முர­ணாக கையா­ளப்­பட்­டு ­வ­ரு­வதைத் தடை­செய்­வ­தற்­காக சொத்­துகளை வக்பு சட்­டத்தின் கீழ் பதிவு செய்­வ­தற்­கான சட்­ட­ரீ­தி­யான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளும்­படி வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி எஸ்.எம்.எம். யாசீன் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் மற்றும் முஸ்லிம் பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ள பணிப்பாளர் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்­துள்ளார். குறிப்­பாக அரபு மத்­ர­ஸாக்­களும் அவற்­றுக்­கு­ரிய வக்பு சொத்­துக்­களும் வக்பு சபையில் பதிவு செய்­யப்­ப­டா­ததால் மத்­ரஸா வக்பு சொத்­துக்கள் பல­வற்றில் முறை­யீ­னங்கள் இடம்­பெ­று­வ­தா­கவும்…

Read More

ரோஹிங்க்யா முஸ்லிம்கள் பர்மா பிரஜைகள் – மலேசியா முன்னால் பிரதமர் மகாதீர் முஹம்மத் அதிரடி!

– அபுசெய்க் முஹம்மத் – 1.பர்மா அரசு ரோஹிங்க்யா குறித்து விலகி இருப்பதை நாங்கள் விரும்பவில்லை ..அதேவேளையில் ரோஹிங்கியா முஸ்லிம்களை வெளியேற்ற பர்மா அரசு நடவடிக்கை எடுக்கின்றது.. 2.ரோஹிங்க்யா முஸ்லிம்கள் பர்மிய நாட்டின் ஒரு அங்கத்தினராக 800 வருடங்களுக்கும் மேலாக இருந்து இருக்கின்றார்கள். 3.முன்னர் மியான்மாரின் போதும் பின்னர் பர்மாவாக மாறிய போதும் அவர்கள் பிரஜைகளாக கருதப்பட்டார்கள். 4.பர்மா அரசு ரோஹிங்க்யா முஸ்லிம் மக்களை தன் சக பிரஜைகளாக ஏற்றுகொள்ள வேண்டும் . 5.பௌத்தர்கள் ஆதிக்கம் மிகுந்த…

Read More

இருளில் மூழ்கும் பூமி கற்பனையானது : நாசா

சமுக வலைத்தளங்களில் வெளியானது போன்று டிசம்பர் மாதம் ஆறு நாட்கள் பூமி இருளாக காணப்படும் என்ற செய்தி வதந்தியென நாசா அறிவித்துள்ளது. அண்மையில் சமுக வலைத்தளங்களில் நாசா விண்வெளி ஆய்வு மையம் அறிவித்துள்ளதாக வெளியாகிய வதந்திச் செய்தியில் :- “சூரியனில் புயல் வீசப் போவதால் டிசம்பரில், 6 நாட்கள் உலகம் இருளில்மூழ்கும்.  சூரிய மண்டலத்தில் அடிக்கடி புயல்வீசுவது உண்டு. சுட்டெரித்து சாம்பலாக்கி விடும் இந்த பயங்கர புயல்களால், மற்ற கிரகங்களில் பாதிப்பு ஏற்படும்  பெரும்பாலான சூரிய புயல்களால்,…

Read More

ஜனாதிபதியின் அறிவிப்புக்காக காத்திருக்கிறேன்!- தேர்தல்கள் ஆணையாளர்

தேர்தல் நிச்சயமாக ஜனவரி 2ம் திகதி நடைபெறாது. ஏனெனில் அது ஒரு வெள்ளிக்கிழமை அத்துடன் பௌர்ணமி தினம் என்று ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் தேர்தல் ஜனவரி 3ம், 7ம்  அல்லது 10ம் திகதிகளில் நடைபெறுமா? என்று கேட்ட போது அது கடவுளுக்கே தெரியும் என்று தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார். எல்லாமே, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ அறிவிப்பிலேயே தங்கியுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Read More

பறக்கும் தட்டு குறித்து, உண்மையை உலகுக்கு வெளிப்படுத்துவேன் – ஹிலாரி

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளருக்கு போட்டியிட்டுள்ள ஹிலாரி கிளிண்டன், பறக்கும் தட்டு குறித்த மர்மத்தின் உண்மையை உலகுக்கு வெளிப்படுத்துவேன் என்று உறுதியளித்துள்ளார். அமெரிக்காவில் வரவிருக்கின்ற ஜனபாதிபதி தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பாக ஹிலாரி கிளிண்டன் வேட்பாளராக போட்டியிடுகிறார். தேர்தல் குறித்த பிரசாரங்களில் ஈடுபட்டு வரும் இவர், பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறார். இதில் ஒரு வாக்குறுதியாக, நான் அமெரிக்காவின் ஜனாதிபதியானால், பறக்கும் தட்டும் குறித்த உண்மையை வெளிப்படுத்துவேன் என்று கூறியுள்ளார். அமெரிக்காவில் 77 சதவீதம் மக்கள், வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு…

Read More

அவன்ட் கார்ட் பற்றிய உண்மைகளை ஊடகங்கள் வெளியிடுவதில்லை!– அனுரகுமார

அவன்ட் கார்ட் நிறுவனம் பற்றிய உண்மைகளை சில ஊடகங்கள் வெளியிடுவதில்லை என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். அவன்ட் கார்ட் பற்றி நான் வெளியிடும் உண்மைகளை சில ஊடகங்களும் இணைய ஊடகங்களும் வெளியிடுவதில்லை. அவன்ட் கார்ட் நிறுவனம் சில ஊடகங்களுக்கும் இணைய ஊடகங்களுக்கும் பணம் வழங்கியுள்ளது. நிறுவனம் பற்றி நான் வெளியிட்ட கருத்து சில பிரதான ஊடகங்களில் பிரதான செய்தியாக வெளியிடப்பட்டதுடன், சில ஊடகங்களில் மிகச் சிறிய செய்தியாகவேனும் வெளியாகவில்லை. இதற்கு ஏதேனும் காரணங்கள் இருக்க…

Read More