Headlines

கரும்பு உற்பத்தியாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்

-சுஐப் எம் காசிம் அம்பாறை மாவட்ட கரும்பு உற்பத்தியாளர்கள் நீண்டகாலமாக தமது தொழிலில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மீண்டும் இன்று நிதியமைச்சர் ரவி கருனாநாயக்கா தலைமையில் நிதியமைச்சுக் கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் ஆராயப்பட்ட போது, கரும்பு உற்பத்தியாளர்களின் நலன்களுக்குக் குந்தகமாக கல்லோயா பிளான்டேசன் கம்பனி செயற்படுவதற்கு தாங்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என்று அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம் ஆகியோர் மீண்டும் வலியுறுத்தி பேசினர். இந்தக் கூட்டத்தில் அமைச்சர் தயாகமகேயும் கலந்து கொண்டு தமது கருத்துக்களை தெரிவித்தார்….

Read More

ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு 6ஆவது நிபுணர் நியமனம்

சந்துன் ஜயசேகர காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுவுக்கு, மற்றுமொரு சர்வதேச நிபுணரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்துள்ளார் என ஆணைக்குழுவின் தலைவரும் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியுமான மெக்ஸ்வல் பராக்கிரம பரணகம தெரிவித்தார். முன்னாள் சர்வதேச நீதிபதியும் ஜப்பானைச் சேர்ந்தவருமான மொடூ நோகுச்சி என்பவரே ஆறாவது நிபுணராக நியமிக்கப்பட்டவர் ஆவார். குறித்த ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்காக மேலைத்தேய மற்றும் ஆசிய நாடுகளிலிருந்து இதுவரை 6 நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். டெஸ்மென்ட் டி சில்வா,…

Read More

வாக்குகளை கொள்ளையடிக்கும் தந்திரோபாயம் எம்மிடம் இல்லை-என அமைச்சர் றிசாத் பதியுத்தீன்

தேர்தல் காலங்களில் மட்டும் வந்து வீரவசனங்களைப் பேசிவிட்டு வாக்குகளை கொள்ளையடிக்கும் தந்திரோபாயம் எம்மிடம் இல்லையென்றும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கே அரசியல் நடத்துகின்றோம். என அமைச்சர் றிசாத்பதியுத்தீன் தெரிவித்தார்.  அமைச்சர் ரிசாத்பதியுத்தீன் உத்தியோக பூர்வ வாசஸ்தலத்தில் (2014-03-18) மு.பகல் ஊடகவியலாளர்கள் சந்திப்பும், கட்சியின் வெப்தளமும் றிசாத் பதியுத்தீன் வெப்தளமும் ஆரம்பிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந் நிகழ்வில் பெருந்தொகையான ஊடகவியாளர்கள் கலந்துகொண்டனர். கட்சியின் செயலாளர் வை.எல்.எஸ் ஹமீட், ஏற்றுமதி இறக்குமதி அபிவிருத்தி திணைக்களத்தின் உப தலைவர் கலாநிதி மரிக்காரும் கலந்து…

Read More

இஸ்மாயில் எம்.பியினால் வறிய குடும்பங்களுக்கான உதவித் தொகை வழங்கி வைப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் அவர்களினால், புனித நோன்புப் பொருநாளை முன்னிட்டு, ஏழைகளுக்கு இலவச சேலைகள் மற்றும் உதவித் தொகை வழங்கி வைக்கும் நிகழ்வு, சம்மாந்துறை அல்மர்ஜான் மகளிர் கல்லூரியில் இன்று (14) இடம்பெற்றது. வறுமைக் கோட்டின் கீழ் வாழும் விதவை தாய்மார்கள், வயோதிபப் பெண்கள், விசேட தேவையுடையவர்கள் மற்றும் மாணவர்களுக்கு இந்த உதவித் தொகை இஸ்மாயில் எம்.பியினால்  வழங்கி வைக்கப்பட்டது.

Read More

பல்கலைக்கழகங்களுக்கு மேலும் 2500 மாணவர்களை இணைக்க நடவடிக்கை

நாடளாவிய ரீதியில்  இம்முறை பல்கலைகழகங்களுக்கு 2000 முதல்  2,500 வரையான மாணவர்கள் மேலதிகமாகச் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழகக் கல்வி மற்றும், நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. 2,000 மாணவர்கள் தொழில்நுட்பவியல் கற்கைநெறிக்கு ஈடுபடுத்தப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் டீ.சீ. திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார். 5 பல்கலைகழகங்களில் தொழில்நுட்பவியல் கற்கை நெறியை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read More

க.பொ. த. சாதரண தர பரிட்சை மாணவர்களுக்கான கருத்தரங்குகளுக்கு தடை

க.பொ.த. சாதரண தரப் பரிட்சை மாணவர்களுக்கான கருத்தரங்குகள் மற்றும் வகுப்புக்களுக்கு நாளை மறுதினம் நள்ளிரவுடன் தடை விதிக்கப்படுவதாக பரீட்சை ஆணையாளர் ஜயந்த புஸ்பகுமார தெரிவித்துள்ளார். எதிர்வரும் 10 ஆம் திகதி க.பொ.த. சாதரண தரப் பரிட்சை ஆரம்பமாகவுள்ள நிலையிலேயே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Read More

கட்டுநாயக்கா விமானநிலையம் செல்பவர்களுக்கு எச்சரிக்கை

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனம் தமது விமானங்களில் சாம்சுங் நோட் 7 தொலைபேசிகளின் பாவனைக்கு முற்றாகத் தடை விதித்துள்ளது. இந்த தடை இன்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விதிக்கப்பட்டுள்ளதுடன், மக்களுக்கு தெளிவூட்டும் வகையில் அறிவித்தல் பலகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மின் வலுவேற்றும் போது கைபேசிகள் வெடித்துள்ளதாக 10 இற்கும் மேற்பட்ட பாவனையாளர்கள் முறைப்பாடு செய்ததை அடுத்து, சாம்சுங் நிறுவனம் தனது தற்போதைய வெளியீடான சம்சுங் நோட் 7 தொலைபேசிகளின் விற்பனையை தடைசெய்துள்ளது. எனினும் குறித்த தொலைபேசியை பயணத்தின்…

Read More

முள்ளியாவலையில் அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் கணகரத்தினம் என்பவர்கள் காடழிப்பு செய்கின்றார்கள் என்பதில் உண்மையில்லை- ஹூனைஸ் எம்.பி

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள காடுகளை அமைச்சர் றிசாத் அழிப்பதாகவும்,அதற்கு துனையாக கணகரத்தினம் இருப்பதாக அதிரடி இணையத்தில் வெளியான செய்தி தொடர்பில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,புதுக்குடியிறுப்பு அபிவிருத்தி குழுவின் தலைவருமான சட்டத்தரணி ஹூனைஸ் பாருக்  விளக்கமொன்றை   ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார். வடக்கில் பயங்கரவாதிகளினால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் 1990 ஆம் ஆண்டு முதல் புத்தளம் உள்ளிட்ட பல பாகங்களிலும் அகதி முகாம்களில் வாழ்ந்து வந்தனர்.அதே போல் தான் முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழ்ந்த  முஸ்லிம்களும் வெளியேற்றப்பட்டனர்.அதன் பிற்பாடு இற்றைக்கு 3 வருடங்களுக்கு…

Read More

1300 ஆண்டுகளுக்கு முன்பே பர்மா மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர் சான்று!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்குச் சென்ற ஒரு சில தினங்களில் சாசனம் ஒன்றை வெளியிட்டார்கள். அது மதீனாச் சாசனம் என்று அழைக்கப்படுகிறது. அதில் கூறப்பட்டிருக்கும் பல செய்திகளில் ஒரு செய்தி என்னவென்றால் “யாரெல்லாம் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அழிக்க நினைக்கவில்லையோ அவர்களும் முஸ்லிம்களும் ஒரே சமூகமாகும்”. இதன் அடிப்படையில் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களிடம் பகைமை கொள்ளாத மக்களுடன் முஸ்லிம்கள் சகோதரப் பாசத்துடன் நடந்து கொள்ள வேண்டும். அவர்கள் பாதிக்கப்பட்டால் இவர்களும் இவர்கள் பாதிக்கப்பட்டால் அவர்களும் ஒன்றாக…

Read More

நேபாளத்துக்கு உதவ மற்றுமொரு விமானம் நாளை பயணம்

நேபாளத்தில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்குவதற்காக இலங்கையில் இருந்து மற்றுமொரு விமானம் அந்த நாட்டுக்கு புறப்பட்டுச் செல்லவுள்ளது. நாளை காலை 09.00 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து குறித்த விமானம் தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது. நேபாளத்திற்கு உதவிக் கரம் நீட்டும் நோக்கோடு இலங்கையில் இருந்து புறப்பட்டுச் செல்லும் நான்காவது விமானம் இதுவாகும். இதில் 18 டன் நிறையுடைய உதவிப் பொருட்கள் ஏற்றிச் செல்லப்படவுள்ளதுடன், இந்தப் பொருட்கள் இன்று அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்…

Read More

பர்மாவில் நடப்பது என்ன?…

=Ihsan Mohamed Salideen= யா அல்லாஹ் …..! இரக்கமுள்ள றஹ்மானே….. அகிலத்தின் அதிபதியே…! பர்மாவில் எமது உம்மத்துக்கு நடக்கின்ற கொடுமைகளுக்கு தக்க தன்டனை கொடுக்கக் கூடிய றப்பே ……! உன் அளிவை பர்மாவுக்கு காட்டு றஹ்மானே ….! கண்கள் தத ததக்கின்றது றஹ்மானே….! இரத்தம் கொதிக்கின்றது றஹ்மானே…! பச்சிளம் பாலகன் செய்த பாவம் என்ன றஹ்மானே..? கற்பமுற்ற தாயின் வயிற்றைக் கிளிக்கின்றான் றஹமானே…! பச்சிளம் பாலகனை கொல்லுகிறான் றஹ்மானே ….! அகிலம் காப்பவனே….. அண்ட சராசரத்தின் அதிபதியே……..

Read More

பாரவூர்தி இறுகியதில் கொழும்பில் போக்குவரத்து ஸ்தம்பிதம்

பேலியகொட  கலு பாலத்தின் அருகில் பாரவூர்தியொன்று இறுகியமையினால் அப்பகுதி வழியேயான போக்குவரத்து பெரும் பாதிப்பபுக்குள்ளாகியுள்ளதாக செய்திகள்தெரிவித்தார். மேலும், குறித்த பாரவூர்தி விபத்து காரணமாக ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதன்காரணமாக ரயில சேவைகளும் தாமதமடையலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் பொதுமக்கள் பாரிய இன்னல்களுக்கு முகங்கொடுத்துவருவதுடன் சாரதிகளும் தங்களது வாகனங்களை சீராக ஓரங்கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதனடிப்படையில், அவ்விடத்திற்கு சென்ற பொலிஸார் லொறியை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

Read More