ஜப்பான் வங்கிக்கும் இலங்கை முதலீட்டு சபைக்கும் இடையில் உடன்படிக்கை
இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்ட ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இன்று பிற்பகல் விசேட விமானம் மூலம் இலங்கையை வந்தடைந்தாhர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த வருடம் மார்ச் மாதம் ஜப்பானுக்கு சென்றிருந்த போது விடுத்த அழைப்பிற்கு அமைய ஜப்பான் பிரதமர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் இலங்கை வந்தனர். கட்டுநாயக்க வானூர்தி தளத்தின் இரண்டாவது பயணிகளுக்கான கட்டமைப்பை திறந்து வைக்கும் நிகழ்விலும் அவர் கலந்து கொண்டார். இதனிடையே, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இடையில்…
