Headlines

கே.கே. பியசேன கைது!

அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.கே. பியசேன இன்று  (29)காலை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அரச வாகனத்தை திருப்பி கையளிக்கவில்லை என்றக் குற்றச்சாட்டில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த அரச வாகனம் பொலிஸாரல் நேற்று கைப்பற்றப்பட்டதுடன் சாரதி கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

மஹிந்தவிற்கு முடியும் என நீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது: நாமல் ராஜபக்ச

குருணாகல் வதுராகல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 30 ஆண்டு கால போரை நிறைவுக்குக் கொண்டு வந்த ஜனாதிபதிக்கு மூன்றாம் தடவை போட்டியிட முடியாது என எதிர்க்கட்சியினர் பிரச்சாரம் செய்கின்றனர். எனினும் உச்ச நீதிமன்றம் ஜனாதிபதி மஹிந்த மூன்றாம் தவணைக்காக போட்டியிட முடியும் என தீர்ப்பளித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஓர் கட்டமாக குருணாகல் வந்துராகல பிரதேசத்தில் நேற்று…

Read More

சீருடை வவுச்சர்! ஆசிரியர், அதிபர் சங்கங்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

பாடசாலை சீருடைக்குப் பதிலாக வழங்கப்பட்டுள்ள பண வவுச்சர் முறைமையை நீக்கிவிடுமாறு தெரிவித்து ஆசிரியர், அதிபர் ஆகியோரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏழு முன்னணி தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளன. இதில், இலங்கை ஆசிரியர் சங்கம், அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கம், சுயாதீன கல்வி சேவை சங்கம், பொது ஆசிரியர் தொழிலாளர் சங்கம், இலங்கை தேசிய அதிபர் சங்கம், அகில இலங்கை அதிபர் சேவை சங்கம், முதலாம் தர அதிபர்களின் சங்கம் மற்றும் அதிபர் சேவை…

Read More

கேகாலை-தம்புள்ள ஊடாக பொலன்னறுவைக்கு அதிவேகப் பாதை

கேகாலை-தம்புள்ள ஊடாக பொலன்னறுவைக்கு அதிவேகப் பாதை அமைக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் மத்தல விமானநிலையம் மூலம் வருடத்திற்கு மில்லியன் கணக்கான பயணிகளின் வருகையை அதிகரிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வத்தளையில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொண்ட பேதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார். மேலும் கண்டி,கொழும்பு,அம்பாந்தோட்டை நகரங்களை மையப்படுத்தி அபிவிருத்தி வலயம் ஒன்றும் உருவாக்கப்படவுள்ளதாகவும் பிரமதர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மேல்மாகாணம் ழுமுவதும் பெரிய நகரங்களாக அபிவிருத்தி செய்யவுள்ளதோடு, ஹம்பாந்தோட்டை பிரதேசத்தையும் சீனாவின் உதவியுடன் பல்வேறு அபிவிருத்தி…

Read More

‘வெற்றியின் பங்காளர்களாக கல்முனை மக்களும் மாற வேண்டும்’ டாக்டர் ஹஸ்மியா!

  -ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் எழுச்சியும் அதன் எதிர்கால வெற்றியும் வடக்கில் மாத்திரமின்றி கிழக்கின் எல்லாப் பிரதேசங்களிலும் உறுதியாகி விட்டன. அந்த வெற்றியின் பங்காளர்களாக கல்முனை மக்களும் மாறிக்கொள்ள வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய மகளிர் அணித்தலைவி டாக்டர் ஹஸ்மியா உதுமாலெப்பை தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அமைப்புக்களுக்கான கூட்டங்கள் கல்முனை, மாவடிப்பள்ளி, இறக்காமம், மற்றும் அக்கரைப்பற்று ஆகிய பிரதேசங்களில் அண்மையில்  இடம்பெற்றன. இறுதியாக கல்முனை மகளிர்களுக்கான கூட்டத்தில் கலந்து…

Read More

மாட்டிறைச்சி கடைகளுக்கு அனுமதி வழங்க வேண்டாம் – மேர்வின்

மாட்டிறைச்சி விற்கும் கடைகளுக்கு அனுமதிப் பத்திரம் வழங்க வேண்டாமென முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, உள்ளூராட்சி சபைகளிடம் நேற்று கோரிக்கை விடுத்துள்ளார். மேர்வின் சில்வா தலைமையில், பசு வதையை தடை செய்யும் பொருட்டு மில்லியன் கையழுத்துகளை பெறும் நிகழ்ச்சித் திட்டம், மாத்தறையில் நேற்று ஆரம்பமாகிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மிருகவதைக்கு எதிராக பல செயற்பாடுகளைச் செய்து கடந்த காலங்களில் மேர்வின் சில்வா பிரபல்யமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

“பெரும்பான்மை சமூகத்தை திருப்திப்படுத்தவே ஜனாஸாக்களை எரிக்கின்றனர்” – முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி!

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்வைத்து, முஸ்லிம்களுக்கு நாங்கள் முடிந்தளவு அநியாயங்களை செய்துள்ளோம் என்று பெரும்பான்மை சமூகத்தை திருப்திப்படுத்தவே, முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரியூட்டப்படுகின்றன என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பெரும்பான்மை சமூகத்தின் ஆதரவைப் பெற்றுக்கொள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், டொக்டர் ஷாபி ஆகியோர்களை இலக்குவைத்து தேர்தல் செய்யப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். அதன் தொடரில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை முன்வைத்து, முஸ்லிம்…

Read More

நெல்லுத்தீவு வாழ் மக்களுடனான கலந்துரையாடல்!

நிந்தவூரின் நெல்லுத்தீவு பிரதேச சமூக, பெளதீக மற்றும் உள்கட்டுமான அபிவிருத்திகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக, நெல்லுத்தீவு வாழ் மக்களுக்கும் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிருக்கும் இடையே கலந்துரையாடலொன்று இன்று(26) நிந்தவூர் பிரதேச சபையில் இடம்பெற்றது. குறித்த பிரதேசத்தில் காணப்படும் பாதை விஸ்தரிப்பு தொடர்பான நடவடிக்கைகளை துரிதகதியில் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு, தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிரினால் ஆலோசனை வழங்கப்பட்டது. இதன்போது நிந்தவூர் பிரதேச சபையின் செயலாளர் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

வில்பத்து விவகாரத்தைக் கையாள அமைச்சரவை உபகுழு அமைச்சர் றிஷாத் உடபட பலர் நியமனம்!

ஏ.எச்.சித்தீக் காரியப்பர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வில்பத்து விவகாரம் தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது. வடபுல முஸ்லிம்களின் எதிர்நோக்கும் இன்றைய மீள்குடியேற்ற பிரச்சினை என்பது தனிநபர் பிரச்சினையல்ல. இந்த விடயத்துக்கு உடனடியாக தீர்வு கண்டு அந்த மக்களுக்கு விமோசனம் வழங்கப்பட வேண்டுமென அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் வலியுறுத்தினார். இதனையடுத்தே இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவை உப குழுவொன்றினை நியமித்து அதன் ஊடாக ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இணக்கம் காணப்பட்டது….

Read More

உயர்நீதிமன்றம் சுயாதீனமாக செயற்படுகின்றது – மரிக்கார்

கடந்த ஆட்சியின் பொன்சேகாவை சிறைக்கு இழுத்துக்கொண்டு சென்றது போல நாமல் சிறைக்கு இழுத்துக்கொண்டு செல்லபடவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார் தெரிவித்துள்ளார். கொத்தடுவையில் நேற்று (17) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் ஒரே நாளில் இலங்கையின் உயர்நீதிமன்றில் இரண்டு தீர்ப்புக்கள் வழங்கப்பட்டதாகவும், அதில் ஒரு தீர்ப்பு சரி என்றும்,மற்றைய தீர்ப்பு பிழைஎன்றும் கூட்டு எதிர்கட்சி கும்பல்கள் கோசமிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, மஹிந்தவின் ஆட்சியின் போது 2009ஆம் ஆண்டு எரிபொருள்…

Read More

சோபிததேரர் இன்று சிங்கப்பூர் பயணம்

நீதியான சமூகத்திற்கான தேசிய அமைப்பின் அழைப்பாளர் சோபித தேரர் இன்று புதன்கிழமை மருத்துவ சிகிச்சைகளுக்காக சிங்கப்பூருக்குச் செல்கின்றார்.   சோபிததேரர் கடந்த மாதம் பய்பாஸ் சத்திர சிகிச்சை ஒன்றுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சத்திர சிகிச்சை வெற்றியளித்தாலும் சில உபாதைகளுக்கு சிகிச்சை பெற்றுக்கொள்ளும் நோக்கில் சோபிததேரர் இன்று சிங்கப்பூருக்குச் செல்கின்றார் என்று கூறப்படுகின்றது.

Read More