Headlines

தாடி வைத்ததால் முஸ்லிம் இளைஞர்கள் பணி நீக்கம்

இந்திய ராணுவத்தில் பணிப்புரிந்த மக்தூம் ஹுசைன் தாடி வைத்திருந்த காரணத்தால் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவரது வழக்கு தொடர்பாக விசாரணை செய்த நீதிமன்றமும் அவரை பணியிலிருந்து நீக்கியது சரியே என்று தீர்ப்பு கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்தியா ஓர் மதச்சார்பற்ற நாடாக இருந்தும் 2 சதவீதம் உள்ள சீக்கியர்களால் தாடி வைத்து அனைத்து அரசு பதவிகளிலும் பணியாற்றும்போது 20 சதவீதம் உள்ள முஸ்லிம்களால் தாடி வைக்க முடியவில்லை என்றால் இந்திய சட்டம் அதிகாரிகளால் கேள்விக்கூத்தாக்கபடுகிறது என்பது ஒருபுறம்…

Read More

கரையோரப் பாதுகாப்புப் பிரதிப்பணிப்பாளர் ஒலுவில் விரைவு

ஒலுவில் கடலரிப்புப் பிரதேசத்துக்கு றிசாத் பதியுதீனின் வேண்டுகோளை ஏற்று இன்று காலை (07/08/2016) விஜயம் செய்திருந்த கரையோரப் பாதுகாப்புத் திணைக்கள பிரதிப்பணிப்பாளர் பிரபாத், பாதிக்கப்பட்ட இடங்களைச் சுற்றிப் பார்வையிட்ட பின்னர். ஒலுவில் ஜும்ஆ பள்ளியில் பள்ளிவாசல் தலைவர் மற்றும் தர்மகர்த்தாக்கள், ஊர் பொதுமக்களை சந்தித்து அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தார். ஒலுவில் கடலரிப்பு தொடர்பில் றிசாத் பதியுதீன் பலமுறை தன்னை சந்தித்துப் பேச்சு நடத்தியதாகவும், இந்தக் கடலரிப்புப் பிரதேசத்துக்கு தற்காலிக பாதுகாப்புச் சுவர் ஒன்றை அவசரமாக அமைக்கும் நோக்கிலேயே…

Read More

பறிபோகிறது 48 தூதுவர்களின் பதவி

அரசியல் ரீதியாக நியமனம் பெற்ற 48 வெளிநாட்டு தூதுவர்களை பதவி நீக்கம் செய்ய புதிய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசியல் நியமனம் பெற்ற இந்த தூதுவர்கள் டயஸ்போரா அமைப்புக்களுக்கு எதிராக எதுவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அரசியல் நியமனம் பெற்றவர்கள் டயஸ்போரா செயற்பாட்டாளர்களை இனங்காண முடியாதவர்களாகவும் இருக்கின்றனர். இவ்வாறு நியமனம் பெற்றவர்களில் அமைச்சர்களின் புதல்வர்கள் அல்லது புதல்விகளும் உள்ளடங்குகிறார்கள். இதனால் இவர்கள் அனைவரையும் உடனடியாக பதவி நீக்கம் செய்ய நடவடிக்கையில்…

Read More

பாகிஸ்தானிடமிருந்து அணு ஆயுதங்களை தயாரிக்க விரும்பும் சவுதி அரேபியா..?

ஈரானின், அணு ஆயுத தயாரிப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அணு ஆயுதங்களை தயாரிக்க விரும்பும் சவுதி அரேபியாவுக்கு, தேவையான தொழில்நுட்பத்தை பாகிஸ்தான் வழங்க உள்ளது. இதுதொடர்பாக, பிரிட்டனில் இருந்து வெளியாகும், ‘சண்டே டைம்ஸ்’ பத்திரிகையில், அமெரிக்க பாதுகாப்பு நிபுணர் ஒருவர் கூறியுள்ளதாவது: அரசியல் ரீதியான விஷயங்களில், பாகிஸ்தானுக்கும், சவுதி அரேபியாவுக்கும் இடையே நீண்ட கால ஒப்பந்தம் உள்ளது. இதுகுறித்து, அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும், அணு ஆயுத தயாரிப்பில், சவுதிக்கு தேவையான உதவிகளை செய்ய, பாக்., முடிவு செய்துள்ளது. அதேநேரத்தில்,…

Read More

கரடிக்குளி வட்டார தேர்தல் காரியாலய திறப்புவிழா! பிரதம அதிதியாக அமைச்சர் ரிஷாட் பங்கேற்பு!

-ஊடகப்பிரிவு- வன்னி மாவட்டத்தில் முசலி பிரதேச சபைத் தேர்தலில்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் கரடிக்குளி, கொண்டச்சி வட்டார வேட்பாளர் சுபியான் ஆசிரியரின் தேர்தல் காரியாலயத் திறப்பு விழா நாளை (17/ 01/ 2018) புதன்கிழமை இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார். விஷேட அதிதியாக  வடமாகாண சபை உறுப்பினர் அலிகான் சரீப் மற்றும் முசலி பிரதேச சபைத்…

Read More

வரி வசூலில் அரசாங்கத்திற்கு வெற்றி!

அரசாங்கத்தின் வரி வசூலிக்கும் செயல்முறை வெற்றிக் கண்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. உள்ளூர் வருமான வரி,காலால் வருமானம் மற்றும் சுங்கத்துறையிடம் இருந்து வருமானம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று அமைப்புக்கள் மூலம் கடந்த ஏழு மாதங்களில் ரூபா 769.75 பில்லியன்இலாபம் பெறப்பட்டதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூபா 625,867 பில்லியன் வருமானம் இந்த மூன்று அமைப்புக்கள் மூலம்கிடைக்கப் பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத மதுபான தொழிற்சாலைகள் மூலமும் வருவாய் அதிகரித்து வருவதாக நிதிஅமைச்சர் ரவி கருணாநாயக்க…

Read More

தமிழ் மொழி மூல அதிபர் நியமனங்களை வழங்குமாறு கல்வி அமைச்சர் அகிலவிடம் பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் எடுத்துரைப்பு.

அண்மையில் நடாத்தப்பட்ட அதிபர் சேவை தரம் iii க்கான போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்து நேர்முகத் தேர்விலும் சித்தியடைந்த அனைத்து தமிழ் மொழி மூல தகுதியுடையவர்களுக்கு அதிபர் நியமனங்களை வழங்குமாறு  துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசமிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கல்வி அமைச்சரிடத்தில் இன்று (25) விடுத்துள்ள கோரிக்கை அடங்கிய மஹஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. அதிபர் சேவை ஆட்சேர்ப்பு பிரமாணக்குறிப்பு மூலமாக உரிய நடைமுறைகளைப் பின்பற்றி தெரிவான 160…

Read More

சலாவ இராணுவ முகாமிற்கு அருகில் மீண்டும் வெடிப்பு!

கொஸ்கம, சலாவ இராணுவ முகாமின் ஆயுத கிடங்கு அண்மையில் வெடித்து சிதறியதன் மூலம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் குறித்த இராணுவ முகாமிற்கு அருகில் உள்ள வீட்டு தோட்டத்தில் மேலும் ஒரு வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வீட்டு தோட்டத்தை துப்பரவு செய்துக் கொண்டிருக்கும் போது நிலத்துக்கு கீழ் புதைந்து கிடந்த வெடி குண்டு ஒன்றே இவ்வாறு வெடித்துள்ளது. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குண்டு ஒன்றின் மேல் பகுதியே இவ்வாறு வெடித்துள்ளதாகவும், வெடிப்பு…

Read More

நாம் அவதானமாக செயற்பட வேண்டிய காலம் ஏற்பட்டுள்ளது – றிஷாத் பதியுதீன்

இர்ஷாத் றஹ்மத்துல்லா எமது மக்களிடத்தில் காணப்படும் ஒற்றுமையினை இன்று பிரிப்பதற்கு சிலர் செயற்படுவதாகவும் இது தொடர்பில் நாம் அவதானமாக செயற்பட வேண்டிய காலம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கைத்தொழில்.வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் எமக்குள் இருக்கம் கருத்து முரண்பாடுகளை களைந்து சமூகத்தின் விமோசனத்திற்காக செயற்படுவோம் என்றும் தெரிவித்தார். வடக்கிலிருந்து இடம் பெயர்ந்த நிலையில் புத்தளம் பள்ளிசாசல் துறை அல்-ஹம்றா மீள்குடியேற்றக் கிராமத்தில் வசிக்கும் மக்களின் தேவை தொடர்பில் அறிந்து கொள்ளும் வகையில் இன்று விஜயம் செய்த அமைச்சர்…

Read More

நல்லாட்சி அரசாங்கத்தின் முதலாவது நிறைவாண்டு விழா

நல்லாட்சி அரசாங்கத்தின் முதலாவது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையில் மாத்தறை சனத் ஜயசூரிய மைதானத்தில் நடைபெறவுள்ளது. வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இதனை ஒழுங்கு செய்துள்ளார். 2015 ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடத்திய பொதுத் தேர்தல் மூலம் உருவான தேசிய அரசாங்கத்தின் மூலம் நாட்டிற்கும் மக்களுக்கும் கிடைக்கப்பெற்ற நன்மைகளை புலப்படுத்தும் வகையில் இந்த விழா ஏற்பாடு செய்யப்படுகிறது. அனைத்து அரசியல் கட்சிகளையும் சேர்ந்த…

Read More

யார் இந்த Dr.சாகீர் நாயக்?

– வை.எம்.பைரூஸ்  வாழைச்சேனை – உலகத்தின் சனத்தொகை அடிப்படையில் இரண்டாவது இடத்திலிருக்கும் மிகப்பெரும் ஜனநாயக நாடான இந்தியாவிலே பல்சார் துறைகளில் அதிகமான பிரபலங்கள் மக்களின் மனதில் நீ்ங்காத இடம் பிடித்துள்ளார்கள். அது அரசியல் சார்ந்த துறையோ அல்லது சினிமா, விளையாட்டு, பொருளாதாரம் போன்ற எத்துறையாகவும் இருக்கலாம். இவ்வாறான பிரபலங்களுக்கு மத்தியில் இந்திய சமூகத்தால் மறந்து போய் விட்டாலும், அனைத்துலக நாடுகளாலும் கௌரவிக்கப்பட்ட ஓர் இஸ்லாமிய அழைப்பாளர் தான் டாக்டர் சாகீர் நாயக் ஆவார். இவருடைய ஆரம்ப கால…

Read More