Headlines

“வில்பத்து பிரதேசத்தில் ஓர் அங்குலக் காணியிலேனும், மீள்குடியேற்றம் இடம்பெறவில்லை”

-ஊடகப் பிரிவு – வில்பத்து பிரதேசத்தில் ஓர் அங்குலக் காணியிலேனும் மீள்குடியேற்றம் இடம்பெறவில்லை எனவும், கடும்போக்காளர்கள் வேண்டுமன்றே திட்டமிட்டு, அமைச்சர் றிசாத் பதியுதீன் மீது இவ்வாறான பொய்யான பரப்புரைகளையும், உண்மைக்குப் புறம்பான செய்திகளையும் வெளியிட்டு, நாட்டு மக்களை தவறாக வழி நடத்துகின்றனர் என்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தேசப்பிரிய தெரிவித்தார். அமைச்சர் றிசாத் பதியுதீனின் அழைப்பின் பேரில் நேற்று (03/09/2016) மன்னாருக்கு விஜயம் செய்த, நிலையான அபிவிருத்தி மற்றும் வனவிலங்கு அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா மன்னார் கச்சேரியில்…

Read More

மன்னார் மாவட்ட நகர நிர்மாணப்பணிகளுக்கு நிதி எவ்வாறு கிடைக்கப்பெற்றது? அமைச்சர் சம்பிக்க மன்னாரில் விளக்கம்

  ஊடகப்பிரிவு கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் விடுத்த கோரிக்கையை ஏற்று நிதியமைச்சர் மங்கள சமவீரவினால் வரவு செலவுத் திட்டத்தில் கைத்தொழில் வர்த்தக அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து  250 மில்லியன் ரூபாவையும் பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் நிதியையும் கொண்டே மன்னார் மாவட்டத்தின்  தற்போதைய அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். றிஷாட் பதியுதீனின் கோரிக்கைக்கிணங்க வரவு செலவுத் திட்டத்தில் 2500 மில்லியன் ரூபாவை நிதியமைச்சர் ஒதுக்கியமைக்கும்  அமைச்சருக்கு தனது நன்றிகளை…

Read More

அரசியல் கைதிகளை விடுதலை செய்: ஜே.வி.பி

கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு, அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) கோரிக்கையொன்றை முன்வைத்தது. வெவ்வேறான இனக்குழுமங்கள் பங்குபெறும் ஒவ்வொரு விழாவிலும், தேசிய கீதத்தை சிங்களத்திலும் தமிழிலும் பாடுவதைக் கட்டாயமாக்கும் சட்டமொன்றைக் கொண்டுவருமாறும் அம்முன்னணி கோரியுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் இளைஞரணியான சோசலிஷ இளைஞர் ஒன்றியத்தின் 3ஆவது தேசிய மாநாடு கொழும்பு, சுகததாஸ உள்ளக அரங்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. அங்கு வெளியிடப்பட்ட தேசிய இளைஞர் கொள்கையூடாகவே, இந்தக்…

Read More

கொஸ்லந்தை – மிரியபெத்த பகுதியின் தற்போதைய நிலவரம்…!

கொஸ்லந்தை மீரிய பெத்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரையில் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், 192 பேர் காணாமற் போயிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரி வித்தது. சீரற்ற காலநிலைக்கு மத்தியி லும் நேற்று முன்தினம் சடலங்கள் மீட்கப்பட்டிருந்த போதும் நேற்றைய தினம் 30-10-2014 சடலங்கள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை என களத்திலிருந்த பாதுகாப்பு தரப்பினர் கூறினர். எனினும் பெண்கள் அணியக்கூடிய பலவகையான ஆபரணங்கள் மீட்கப் பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. மழையுடன் கூடிய காலநிலை தொடருவதனால் மீட்புப் பணிகளை…

Read More

சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த கட்சிகள் ஒன்றினைந்து பொதுத் தேர்தலின் பின் பலமிக்க நாடாளுமன்றத்தை அமைப்பார்கள்

எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலின் பின் சிறுபான்மை சமூகத்தை உள்ளடக்கிய கட்சிகள் ஒன்றினைந்து பலமிக்க நாடாளுமன்றத்தை சஜீத் பிரேமதாசவின் தலைமையில் உருவாக்குவார்கள் என்ற நம்பிக்கை இப்போது எமக்கு ஏற்பட்டிருக்கிறது என தம்பலகாம பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் எச்.தாலிப் அலி ஹாஜியார் தெரிவித்தார். தம்பலகாமத்தில்  (23) இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் தொடரந்தும் அங்கு உரையாற்றுகையில் மக்களே அதிகாரங்களை தெரிவு செய்கிறார்கள் மக்களுடைய…

Read More

சீனா பொருளாதாரத்தில் அமெரிக்காவைப் பின்தள்ளி விடும்!:IHS

இன்னும் ஓர் தசாப்தத்துக்குள் தற்போதைய உலகில் 2 ஆவது பெரிய பொருளாதார சக்தியான சீனா முதாலாவது பெரிய பொருளாதார சக்தியாக விளங்கும் அமெரிக்காவைப் பின் தள்ளி நம்பர் 1 இடத்துக்கு வந்து விடும் என IHS என்ற அமைப்பின் அறிக்கை தெரிவித்துள்ளது. சுமார் ஒரு நூற்றாண்டுக்கும் அதிகமாக பொருளாதாரத்தில் நம்பர் 1 இடத்தில் இருந்து வரும் அமெரிக்கா இன்னும் 10 வருடங்களில் 2 ஆவது இடத்துக்கு வந்து விடும் என்பதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. முக்கியமாக சீனாவில்…

Read More

10%மான ஆயுதங்களே இருந்தன

கொஸ்கம, சாலாவ இராணுவ முகாமின் ஆயுதக் களஞ்சியசாலையை இவ்வருட இறுதிக்குள் அவ்விடத்திலிருந்து முழுமையாகவே அகற்றுவதற்கு திட்டமிடப்பட்டிருந்து என்று தெரிவித்த மேற்கு கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க, பெருந்தொகையான ஆயுதங்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுவிட்டன. தீ விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் அங்கு, 10 சதவீதமான ஆயுதங்களே இருந்தன என்றும் கூறினார். ‘அங்கு களஞ்சியப் படுத்தப்பட்டிருந்த ஆயுதங்கள், வெடிபொருட்கள் யாவும், தரப்படுத்தப்பட்டே நிலத்துக்கு கீழ் மற்றும் நிலக்கீழ் சுரங்கத்தில் வைக்கப்பட்டிருந்தன’ என்றும் அவர் தெரிவித்தார். ‘இங்கு களஞ்சியப்படுத்தப் பட்டிருந்த ஆயுதங்கள்,…

Read More

நோன்பு நோற்றவர்களாக சமுக விடுதலைக்கு வாக்களிக்க வேண்டும்- றிஷாத் பதியுதீன்

இர்ஷாத் றஹ்மத்துல்லா எப்போது ஜனாதிபதிக்கு பெரும்பான்மை அதிகாரம் கிடைத்ததோ அன்றிலிருந்து அவரது சிந்தனையும் செயற்பாடுகளும் மாற்றம் கண்டுவிட்டது.இதனால் சட்டமும் ஒழுங்கும் ஒருசாராரின் தேவைகளை நிறைவேற்றுபவைாயகவே இருந்தது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,முன்னால் அமைச்சருமான றிசாத் பதியுதீன் புல்மோட்டையில் இன்று இடம் பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு கூறினார். பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து இடம் பெற்ற இந்த கூட்டத்தில் புல்மோட்டையில் வரலாறு காணாத அளவுக்கு மக்கள் திரண்டு ந்த…

Read More

சானுக ரத்துவத்த உட்பட ஐவரின் விளக்கமறியல் நீடிப்பு

நிதிமோசடி குற்றம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட  சானுக ரத்துவத்த உட்பட ஐவரையும் எதிர்வரும் ஒக்டோபர் 07 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த உத்தரவினை கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. 2.4 பில்லியன் அரச பணத்தை மோசடி செய்தமை தொடர்பில் குறித்த ஐவரையும் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர்  கடந்த 14 ஆம் திகதி கைதுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Read More

சுதந்திர கட்சி மாநாட்டில் மஹிந்த கலந்துக்கொள்ளமாட்டார்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 65 வருட பூர்த்தி மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துக்கொள்ள மாட்டார் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார். இன்று (18) ஒன்றிணைந்த எதிர்கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  வெளிநாட்டு பயணம் ஒன்றை மேற்கொள்ள உள்ளதால் குறித்த மாநாட்டில் கலந்துக்கொள்ள முடியாதென அவர் தெரிவித்தார். எவ்வாறாயினும் முன்னாள் ஜனாதிபதி சுதந்திர கட்சியின் 65 வருட பூர்த்தி மாநாட்டில் கலந்துக்கொள்வார்…

Read More

கஹட்டகஸ்திகிலிய பாடசாலை சுற்றுமதில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா!

பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் 100 நாளில் 110 விசேட வேலைத்திட்டம் மற்றும் 100 நாளில் 115 அதிரடி வேலைத்திட்டம் என இந்த ஆண்டுக்குள் நிறைவு செய்வதற்காய் மிக வேகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் 225 வேலைத்திட்டங்களில் ஒன்றாக, கஹட்டகஸ்திகிலிய பிரதேச செயலகத்துக்குட்பட்ட, கஹட்டகஸ்திகிலிய முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு சுற்றுமதில் அமைப்பதற்கான அடிக்கல் 2018.10.23 பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானினால் நடப்பட்டது. (ன) 

Read More

எபோலாவின் தாக்கம் இன்னும் அதிகரிக்கலாம்!

-உலக சுகாதார நிறுவனம்- மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியாவில் எபோலா வைரஸ் மிக வேகமாகபரவுவதால் அடுத்த சில வாரங்களில் மேலும் ஆயிரக்கணக்கானோர் வைரஸால் தாக்கப்படலாம் என்று உலக சுகாதார அமைப்பு நேற்று (08) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா, லைபீரியா, கினியா, சியர்ரா லியோனில் எபோலா வைரஸ் பரவியுள்ளது. அதில் லைபீரியாவில் தான் எபோலாவின் தாக்கம் அதிகம் உள்ளது. இதுவரையில் எபோலா வைரஸ் தாக்கி கினியா, சியர்ரா லியோன், லைபீரியா மற்றும் நைஜீரியாவில்…

Read More