Headlines

நாட்டில் உள்ள பாதசாரிக்கடவை வெள்ளை நிறமாக மாற்றம் பெறவுள்ளது

நாட்டில் அனைத்து இடங்களிலும் உள்ள பாதசாரிக்கடவை வெள்ளை நிறமாக மாற்றம் பெறவுள்ளதாக ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ்மா அதிபர் பேரிம்பநாதன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் இதன்கான வேலைகள் அனைத்தும் பூர்த்தியாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  நாட்டில் அதிகரித்து வரும் வாகன விபத்துக்களை தடுக்கும் நோக்கில் வீதிப் போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பாக சாரதிகள் மற்றும் பொதுமக்களிடையேயான கலந்துரையாடல் ஒன்று நேற்று  யாழ்.வணிகர் கழகத்தில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Read More

அசின் விராது பௌத்த தேரர் இலங்கை விஜயம் செய்வதற்கு முஸ்லிம் அமைப்புக்கள் எதிர்ப்பு

மியன்மாரின் கடும்போக்கு பௌத்த அமைப்பின் தலைவராக கருதப்படும் அசின் விராது பௌத்த தேரர் இலங்கை விஜயம் செய்வதனை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை முஸ்லிம் பேரவை தெரிவித்துள்ளது. 969 என்ற பௌத்த கடும்போக்கு அமைப்பின் தலைவரான விராது தேரரை டைம்ஸ் சஞ்சிகை பௌத்த பயங்கரவாதி என அடையாளப்படுத்தி அட்டைப்படத்தில் புகைப்படமொன்றை வெளியிட்டிருந்தது. எதிர்வரும் 28ம் திகதி பொதுபல சேனா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாநாட்டில் விராது தேரர் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது. பொதுபல சேனா அமைப்பின் அழைப்பிற்குஅமைய…

Read More

”அசின் விராதுவின் இலங்கை விஜயம்” – ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

மியன்மாரின் சர்ச்சைக்குரிய மதகுருவான விராதுவிற்க்கு ஞாயிற்றுக்கிழமை, நடைபெறவுள்ள பொதுபல சேனாவின் மாநாட்டில் கலந்துகொள்வதற்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் குறித்து முஸ்லீம் கவுன்சில் கவலை வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிaற்க்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்ட அமைப்பு இதனை தெரிவித்துள்ளது. மியன்மாரில் முஸ்லீம்களுக்கு பெரும் வன்முறைகளை தூண்டிவிட்ட குறிப்பிட்ட மதகுரு இலங்கை வருவது இலங்கையின் சமாதான சகவாழ்விற்க்கு ஆபத்தாக அமையும் என குறிப்பிட்ட கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இஸ்லாமின் வளர்ச்சி பௌத்தத்திற்க்கும் மியன்மார் கலாச்சாரத்திற்க்கும் ஆபத்தான விடயம் என்ற தீவிர…

Read More

ஐ.நா விசாரணைகள் அரசியல் ரீதியிலான நோக்கங்களை கொண்டது – ஜனாதிபதி

ஐ.நா பொதுச்சபைக்கான தனது உரையின்போது  ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவை கடுமையாக சாடியுள்ளார். இடம்பெற்ற உரையில் ஐநா மனித உரிமைகள் ஆணைக் குழுவின் விசாரணைகள் அரசியல் ரீதீயிலான நோக்கங்களை கொண்டது  அளவுக்கதிகமானது என குறிப்பிட்டுள்ளார். யுத்தத்திற்க்கு பிந்திய இலங்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் உள்ள சிலரின் தீய நோக்கத்துடனா நிகழ்ச்சிநிரலிற்கு துரதிஸ்டவசமாக பலியாகியுள்ளது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பொதுச்சபை முன் உரையாற்றுகையில் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் முடிவடைந்த பின்னர்…

Read More

ஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவாக ரஷ்யா, கியூபா, வெனிசூலா நாடுகள் களத்தில் குதிப்பு

இலங்கையின் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் ஐ.நா விசாரணைகளை சில நாடுகள் ஆதரித்துடன் ஏனைய நாடுகள் எதிர்த்துள்ளன. இதனால், ஐ.நா மனித உரிமை பேரவையில் இன்று பிளவு ஏற்பட்டுள்ளது. ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் நடத்தும் விசாரணைகளுக்கு தமது ஆதரவை நீடிப்பதாகவும் விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. அதேவேளை விசாரணைகள் மூலமாக இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்கும் முயற்சிகளை எதிர்ப்பதாகவும் இந்த விசாரணைக்கு ஐ.நா மனித…

Read More

முஸ்லிம்களை என் சொந்த சகோதரர் போல நடத்துவேன் – நியூயோர்கில் மஹிந்த ராஜபக்ஸ

முஸ்லிம் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தடுக்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இஸ்லாமிய கூட்டுறவு அமைப்பின் பொதுச் செயலாளர் ஐயாட் அமீன் மதானியை இன்று 25-09-2014  சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நியூயோர்க்கில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்திற்கு இடைநடுவில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. இஸ்லாமிய கூட்டுறவு அமைப்பின் பொதுச் செயலாளராக மதானி நியமிக்கப்பட்டமையின் ஊடாக, இஸ்லாமிய நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள முடியும். இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு எதிரான…

Read More

இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானம் தோல்வி

அரபு நாடுகள் அனைத்தும் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் மூலம் மத்திய கிழக்குப் பகுதியில் அணு ஆயுதம் இல்லாத மண்டலம் உருவாக்கப்படவேண்டும் என்று உலக நாடுகள் முயற்சித்துவருகின்றன. இஸ்ரேலில் செயல்பட்டுவரும் யூத அரசு பெருமளவில் அணு சக்தி ஆயுதங்களை வைத்திருப்பதாகக் கருதப்படும்போது இந்தத் தகவலை ஊர்ஜிதப்படுத்த அந்த நாடு மறுத்துவருகின்றது.  சென்ற ஆண்டு நடைபெற்ற ஐ.நா அணுசக்தி வருடாந்திர மாநாட்டில் இஸ்ரேலின் அணு ஆயுதக் குவிப்பு பற்றிய ஒரு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டபோது அது தோல்வியில்…

Read More

தெஹிவளை மிருககாட்சிசாலை + பின்னவல யானைகள் சரணாலயத்திற்கு இலவசமாக போகலாம்..!

ஒக்டோபர் 01ம் திகதி வரும் உலக சிறுவர் தினம், முதியோர் தினத்தை முன்னிட்டு தெஹிவளை விலங்குகள் சரணாலயம் மற்றும் பின்னவல யானைகள் சரணாலயம் என்பவற்றில் விசேட செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. 12 வயதிற்கும் குறைந்த சிறுவர்கள் மற்றும் 60 வயதிற்கும் அதிகமான முதியவர்களுக்காக இந்த விசேட செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக விலங்குகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அன்றைய தினம் மேற்கூறிய வயதுடையோர் தெஹிவளை விலங்குகள் சரணாலயம் மற்றும் பின்னவல யானைகள் சரணாலயத்திற்கு இலவசமாக உள்நுழைய முடியும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Read More

இஸ்ரேலை எதிர்த்துப் போரிட்ட ஹமாஸ் வீரர்கள் புகழின் உச்சத்தில்..!

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மூன்று இஸ்ரேலிய இளைஞர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து காசா பகுதியின் மீதான தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியது. ஏராளமான உயிர்ப்பலியுடன் 50 நாட்கள் நடைபெற்ற இந்தத் தாக்குதல் அந்தப்பகுதியையே மிகவும் சீரழித்துள்ளது. இஸ்ரேலை எதிர்த்துப் போரிட்ட ஹமாஸ் வீரர்கள் தற்போது புகழின் உச்சத்தில் இருக்க, அந்நாட்டின் அதிபர் மஹ்மூத் அப்பாசின் அரசியல் செல்வாக்கோ மிகவும் சரிந்துள்ளது. அமெரிக்காவை மத்தியஸ்தராகக் கொண்டு இஸ்ரேலுடன் நடத்தும் பேச்சுவார்த்தைகள் மூலம் ஒரு புதிய பாலஸ்தீன அரசை…

Read More

ISIS விவகாரத்தில் வெற்றியை விட, அமைதியை தான் அமெரிக்கா விரும்புகிறது – ஒபாமா

ஈராக்கிலும்,சிரியாவிலும் ஐ.எஸ்.வாதிகளின் கொடூர செயல் கவலையளிப்பதாக அமெரிக்க அதிபர் ஒபாமா கூறினார். ஐ.நா. பொதுச்சபை கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. கூட்டத்தினை துவக்கி வைத்து அதிபர் ஒபாமா பேசினார். அவர் பேசியதாவது, ஈராக்கிலும்,சிரியாவிலும் ஐ.எஸ்.ஐ.எஸ்.,மற்றும் அல்குவைதா போன்ற வாதிகளின் கொடூர செயல் மனதிற்கு கவலையளிக்கிறது. புற்றுநோய் போன்றது பயங்கரவாத செயல்களும், பயங்கரவாத அமைப்புகளும் தான் . இவை உலகத்திற்கு பேரழிவை தரக்கூடியது. இவர்களால் பல உலக நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இவர்களை ஒழித்துக்கட்ட சர்வதேச நாடுகளின்…

Read More

இலங்கையில் துல்ஹிஜ்ஜாஹ் தலைப்பிறை மாநாடு

ஹிஜ்ரி 1435 துல்ஹிஜ்ஜாஹ் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு 25ம் திகதி வியாழக்கிழமை மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவு ள்ளது. கொழும்பு பெரிய பள்ளிவாசல் ஹமீதியா மண்டபத்தில் நடைபெறும் பிறையைத் தீர்மானிக்கும் மாநாட்டில் உலமாக்கள், கதீப்மார்கள், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பிரதிநிதிகள், சரீஆ கவுன்சில், மேமன் ஹனபி பள்ளி வாசல்கள், ஜும்ஆப் பள்ளிவாசல்கள் தக்கியா, ஸாவியாக்களின் நிர்வாகிகள் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

Read More

தமிழ் பேசும் மக்களுக்கான பொதுச் சபை – முஸ்லிம்களின் ஒத்துழைப்பு கோரும் சம்பந்தன்

தமிழ் பேசும் மக்களுக்கான பொதுச் உருவாக்குவது தொடர்பில் நடைபெற்ற கட்சியின் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் ஆராயப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவிக்கின்றார். இதற்கு முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பையும் பெற்றுக் கொள்ளவுள்ளதாக அவர் கூறினார்.

Read More