Headlines

விமான சேவைக்கு பாதிப்பை ஏற்படுத்தினால் மரண தண்டனை

தாய்லாந்து நாட்டின் தற்காலிக பிரதமராக இருந்த யிங்லக் ஷினவாத்ராவின் குடும்ப அரசியலை எதிர்த்து, அந்நாட்டு எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில், ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். 2008ல் அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தால், அந்நாட்டின் இரு முக்கிய விமான நிலையங்கள் மூடப்பட்டன. கடந்த 2011ல் நடந்த தேர்தலில், யிங்லிக் பெற்ற வெற்றி செல்லாது என்று அறிவிக்கக் கோரி, எதிர்க்கட்சியினர் வழக்கு  தொடர்ந்தனர். இறுதியில், கடந்த மே மாதம், யிங்லக், பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவரது ஆதரவாளர்களுக்கும், எதிர்கட்சியினருக்கும்…

Read More

ஈரான், அமெரிக்க நாடுகளிடையே பேச்சு

ஈரான் மற்றும் வல்லரசு நாடுகளுக்கிடையில் அணுசக்தி ஒப்பந்தத்தை எட்டுவதற்கான நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து அமெரிக்க, ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் நியூயார்க்கில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.இப்பேச்சுவார்த்தையின்போது, ஐ.எஸ். வாதிகளால் எழுந்துள்ள அச்சுறுத்தல் குறித்தும் ஜான் கெர்ரியும், ஜாவத் ஜரீபும் விவதித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Read More

சிரியாவில் ISIS இலக்குகள் மீது அமெரிக்கா விமான தாக்குதல்

ஐ.எஸ்., வாதிகள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. இது ஐ.எஸ். தடுப்பு நடவடிக்கை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Read More

ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இலங்கை வருகிறார்..!

ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். எதிர்வரும் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை அரசாங்கம் விடுத்த அழைப்பினை ரஸ்ய ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார். ஜனாதிபதி புட்டின் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக இலங்கைக்கான அந்நாட்டு தூதரகம் தெரிவித்துள்ளது. மிக நீண்ட இடைவெளியின் பின்னர் ரஸ்ய தலைவர் ஒருவர் இலங்கை;கு விஜயம் செய்ய உள்ளார். புட்டினின் இலங்கை விஜயத்தின் போது பல்வேறு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Read More

தேர்தல் முடிவுகள் முழு முஸ்லிம் சமூகத்தின் முகத்தின் மீது சேறைவாரி வீசியுள்ளது z

ஏ.எச்.சித்தீக் காரியப்பர் ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கூட்டு எதிர்பாராத தோல்வியை தழுவியமை வேதனைக்குரியது. இந்த இரு கட்சிகள் மீதான தனிப்பட்ட ஆதரவுத் தளம் என்பதற்கு அப்பால் இந்தத் தோல்வியை நோக்கும் போது அது முழு முஸ்லிம் சமூகத்தின் மீதும் முகத்தில் சேறைவாரி வீசியுள்ளது என்றே நான் கூறுவேன். இந்த இரு கட்சிகளும் ஐக்கியப்பட்டது போன்று முஸ்லிம் மக்களின் ஐக்கியமும் தேவையென்ற நிலைப்பாட்டில் இருந்தவன் நான்….

Read More

அருண் செல்வராஜின் ஆவணங்கள் போலியானவை

இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழரான அருண் செல்வராஜாவுக்கு போலி கடவுச் சீட்டு தயாரிப்பாளர்களுடன் தொடர்பிருப்பதாக இந்தியச் செய்திகள் தெரிவித்துள்ளன. அருண், கடந்த 10 ஆம் திகதி தமிழக பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இதன்போது இவர் 5 ஆண்டுகளாக சென்னையில் தங்கியிருந்து நாசவேலைக்கு சதிதிட்டம் தீட்டியதும் அம்பலமானது. அருண்செல்வராசனை, பாகிஸ்தான் உளவாளியாக மாற்றியதில் அதிகாரிகள் 2 பேர் முக்கிய பங்கு வகித்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதன் பின்னணி பற்றி முழுமையாக விசாரணை நடத்துவதற்காக கடந்த 18ஆம் திகதி…

Read More

வட அமெரிக்காவில் முதல் இஸ்லாமிய அருங்காட்சியகம்

கனடாவின் டொரொண்டோ நகரில், இஸ்மாயிலி முஸ்லிம்கள் புதிய இஸ்லாமிய அருங்காட்சியகம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். முழுக்க இஸ்லாமிய கலைப்படைப்புகளுக்கென வட அமெரிக்காவில் உருவாக்கப்படும் முதல் அருங்காட்சியகம் இதுதான்.

Read More

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக மஹிந்த ராஜபக்ஷ நியூயோர்க் பயணம்!

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 69வது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவின் நியூயோர்க் பயணமானார். ஜனாதிபதியுடன் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான சஜின் வாஸ் குணவர்தன. ஏ. எச். எம். அஸ்வர், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரேணுகா செனவிரத்ன உட்பட முக்கிய பிரமுகர்கள் பலரும் சென்றுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டின் பொது அமர்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 25ஆம்…

Read More

5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பம்

நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதரண தரப் பரீட்சையில் தோற்றுவதற்காக  5 இலட்சத்து 78,135 பேர்  விண்ணப்பித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.இவர்களில் 3 இலட்சத்து 70,030 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எம்.என்.ஜே.புஷ்பகுமார தெரிவிக்கின்றார்.பரீட்சை நிலையங்களை ஒழுங்குபடுத்தும்  நடவடிக்கைகள் உள்ளிட்ட மேலும் சில விடயங்களின் முதற் கட்ட நடவடிக்கைகளை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி  கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை ஆரம்பமாகவுள்ளது.

Read More

ஜனாதிபதிக்கு விசேட இணையதளம்

ஐக்கிய நாடுகள் அமைப்புடன் இலங்கை ஜனாதிபதி கொண்டுள்ள தொடர்புகள், நடவடிக்கைகள் குறித்துக் கவனம் செலுத்தும் வகையில் விசேட இணையத்தளமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் நியூயோர்க்கில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 69 ஆவது கூட்டத் தொடருக்கு முன்னதாக ஜனாதிபதி இந்த இணையதளத்தை அங்குரார்ப்பணம் செய்துவைத்தார். பின்வரும் முகவரியினூடாக http://unga.president.gov.lk இந்த புதிய இணையதளத்தை அணுகமுடியும். ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் பங்குபற்றுதலுடன் தொடர்பான, நியூயோர்க்கில் இடம்பெறும் ஏனைய உத்தியோகபூர்வ நிகழ்வுகளும் மும்மொழிகளிலும் உரிய காலத்தில்…

Read More

யாழ்.தேவியின் பரிட்சார்த்த ஓட்டம் தொடர்கிறது

யாழ்ப்பாணத்திற்கான சேவையினை முழுமையாக வழங்கும் வகையில் யாழ்தேவியின் பரீட்சார்த்த ஓட்டம் இன்றும் தொடர்ந்தது.பளை புகையிரத நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தை இன்று பகல் 11 மணியளவில் வந்தடைந்தது. இன்றைய வெள்ளோட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா , மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், ஆளுநரின் செயலர் இளங்கோவன் மற்றும் புகையிரத திணைக்கள அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.இன்றும் ரயிலைப் பார்க்கும் ஆர்வத்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்ததைக் காணக்கூடியதாக…

Read More

நியூயோர்க்கில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதை கண்டித்து  நியூயோர்க்கில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இடம்பெறவுள்ளது.இந்த பேரணி நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்திற்கு வெளியில் எதிர்வரும் 24 ஆம் திகதி பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.அமெரிக்கா மற்றும் கனடாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொள்ள உள்ளனர்.

Read More