Headlines

வட்டக்கண்டல் படுகொலையின் 32 ஆவது ஆண்டு நிறைவினை நினைவுகூரும் நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்!!!

மன்னார் வட்டக்கண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் நடைபெற்ற வட்டக்கண்டல் படுகொலையின் 32வது ஆண்டு நிறைவு கூறும் நிகழ்வு மன்னார் வட்டக்கண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் அதிபர் அ.தேவதாஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினரும் பிரதம எதிர்க்கட்சி கொரடாவுமான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்கள் கலந்து சிறப்பித்தார் மாகாண சபை எதிர்க்கட்சித்தலைவர் சி.தவராசா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக…

Read More

ஜப்பான் வாகனங்களின் இறக்குமதிக்கு முற்றுப்புள்ளி

அரச நிறுவனங்களின் வரி அதிகளவில் உயர்வடைந்துள்ளதனால் இனிவரும் காலங்களில் ஜப்பான் வாகனங்களை எமது நாட்டுக்கு இறக்குமதி செய்வது முழுமையாக நிறுத்தப்படுமென வாகன இறக்குமதியாளர்களின் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரின்சிகே தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே சங்கத்தின் தலைவர் இதனைத் தெரிவித்தார். இதேவேளை இனிவரும் காலங்களில் குறைந்த தீர்வைகொண்ட இந்திய வாகனங்கள் எம் நாட்டுச் சந்தைகளில் அதிகப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read More

அரச உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கி வைக்கும் நிகழ்வு (photos)

ஏ.எச்.எம்.பூமுதீன் வாழ்வின் எழுச்சி திட்டத்தின் கீழ் அரச உத்தியோகத்தர்களுக்கு மாணிய அடிப்படையில் மோட்டார் சைக்கிள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (11) முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட அமைச்சர் றிஷாத் பதியுதீன் அரச உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்கி வைப்பதை படத்தில் காணலாம்.

Read More

மன்னார் மாவட்ட காணி கபளீகரப்பிரச்சினைக்கு கொழும்பில் உயர் மட்ட மாநாட்டுக்கு ஏற்பாடு மாவட்ட எம் பிக்களின் பங்கேற்புடன் தீர்வு காண முயற்சி

மன்னார் மாவட்டத்தில் நீண்டகாலமாக தீர்க்கப்படாதிருக்கும் காணிப்பிரச்சினை, குறிப்பாக வன பரிபாலனத் திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றின் நடவடிக்கையால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புக்கு   தீர்வு காணும் வகையில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரினதும் பங்குபற்றலுடன்  கொழும்பில் உயர் மட்ட கூட்டம் ஒன்ரை  ஏற்பாடு செய்வதாக தெரிவித்த அமைச்சர் ரிஷாத் பதியுதீன், இந்த கூட்டத்தில் அமைச்சர் ஜோன் அமரதுங்க மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொள்ள வகை செய்வதாக உறுதியளித்தார். மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் இன்று…

Read More

எதிர்க்கட்சித் தலைவரை சபாநாயகரே தெரிவுசெய்வார்

எதிர்க்­கட்சித் தலைவர் யாரென்­பதை சபா­நா­ய­கரே தீர்­மா­னிப்பார். சபா­நா­ய­கரின் முடிவே இறுதி முடி­வாகும். தேசிய அரசாங்கத்தின் அமைச்­ச­ர வைப் பட்­டியல் தயா­ரிக்­கப்­பட்­டு­விட்­டது என்று கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக் ஷ்மன் கிரி­யெல்ல தெரி­வித்தார். இது தொடர்­பாக லக்ஷ்மன் கிரி­யெல்ல மேலும் தெரி­விக்­கையில் எதிர்க்­கட்சித் தலை­வ­ராக எவ­ரது பெய­ரையும் அர­சியல் கட்­சிகள் பிரே­ரிக்­கலாம். இதற்கு எந்­த­வி­த­மான தடையும் இல்லை. ஆனால் பாரா­ளு­மன்­றத்தின் எதிர்க்­கட்­சித்­த­லை­வரை தேர்ந்­தெ­டுக்கும் அதி­காரம் சபா­நா­ய­க­ருக்கே உள்­ளது. எனவே எதிர்க்­கட்சித் தலை­வரை சபா­நா­ய­கரே தெரிவு செய்வார். அவரின் முடிவே இறுதி…

Read More

இராணுவ மாநாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டுப் பாதுகாப்புப் பிரதி நிதிகள் வடக்கு கிழக்கிற்கு விஜயம்

இன்றும் நாளையும் வெளிநாட்டுப் பாதுகாப்பு அதிகாரிகள் இவ்வாறு வடக்கு கிழக்கின் நிலைமைகளை பார்வையிட உள்ளனர். போரின் பின்னர் வடக்கு கிழக்கின் நிலைமைகளை இவர்கள் நேரில் பார்வைளயிட உள்ளனர். இன்று வியாழக்கிழமை கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு விஜயம் செய்யும் பிரதிநிதிகள் நாளை வெள்ளிக்கிழமை திருகோணமலைக்கு விஜயம் செய்ய உள்ளனர். வெளிநாட்டு தூதரகங்களின் பாதுகாப்பு பிரிவின் 20 அதிகாரிகள் இவ்வாறு வடக்கு கிழக்கிற்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.A

Read More

பிரியா விடைகொடுக்கும் பயணத்தின்போது!

– அபூ உமர் அன்வாறி, BA மதனி – கால மாற்றங்கள் ஒரு முஸ்லிமின் வாழ்வில் அதிகம் செல்வாக்கு செலுத்தக் கூடியதாக இருக்கிறது. ஒருவர் குளிருக்கும், வெப்பத்துக்கும் தகுதியான ஆடைகள், உணவுகளை தெரிவு செய்வது போல், தனது வாழ்வின் முடிவுக்கான ஆயத்தங்களை எப்போதும் சரிவர செய்து கொள்ள வேண்டும். மரணத்துக்கான காரணிகள் வேறுபடலாம், அதை அடைந்தே தீர வேண்டும் என்பது அல்லாஹவின் நியதி. ஆகவே இவ்வாறு செய்யும் போது, அவன் வெற்றியடைகின்றான். காலத்தின் மாற்றத்தை அவன் முன்…

Read More

சிறை செல்வதற்கும் தயார் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்!!!

-SLTJ ஊடகப் பிரிவு- ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்திற்கு எதிராக பொது பல சேனாவினால் தொடரப்பட்டுள்ள மத நிந்தனை வழக்கு இன்று மீண்டும் விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. தவ்ஹீத் ஜமாத்தின் பொதுச் செயலாளர் சகோ. அப்துர் ராசிக் அவர்கள் சிங்கள மொழியில் ஆற்றிய ஒரு உரையில் பௌத்த மதத்தை நிந்தனை செய்தார் என்ற குற்றச் சாட்டில் ஜமாத்தின் செயலாளர் உட்பட தலைமை நிர்வாகத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கு இன்று 11.06.2015 கொழும்பு நீதவான் நீதி மன்றத்தில் நீதிபதி…

Read More

முஸ்லிம்களை கௌரவித்த ஐக்கிய தேசிய கட்சி

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக கபீர் ஹாசீம் நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தேசியத் தலைவர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செலயாளராக கடமையாற்றி வந்த திஸ்ஸ அத்தநாயக்க அரசாங்கத்தில் இணைந்து கொண்டுள்ளார். இந்த வெற்றிடத்திற்காக கபீர் ஹாசீம் நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் வரலாற்றில் முதன்முறையாக அக்கட்சியின் செயலாளர் பதவிக்கு ஒரு முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்படுகின்றமை இதுவே முதற்தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

மாகாணசபைகளுக்கு நேரடியாக நிதி ஒதுக்கீடு செய்ய ஜனாதிபதி தீர்மானம்

மாகாணசபைகளுக்கு நேரடியாக நிதி ஒதுக்கீடு செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். கடந்த காலங்களைப் போன்றே எதிர்வம் 2016ம் ஆண்டிலும் மாகாணசபைகளுக்கு நேரடியாகவே நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. இதற்கு முன்னதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க சமர்ப்பித்த வரவு செலவுத்திட்டத்தில் மாகாணசபைகளுக்கு, உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சின் ஊடாக நிதி ஒதுக்கீடு செய்ய பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. எனினும் இந்த யோசனைத் திட்டத்தை மாகாண முதலமைச்சர்கள் கடுமையாக எதிர்த்திருந்தனர். ஜனாதிபதி, நிதி அமைச்சர், உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும்…

Read More

‘நல்லாட்சி அரசை தோற்றுவிப்பதற்கு அமைச்சர் ரிஷாட் வழங்கிய பங்களிப்பினை ஜ.தே.க ஒருபோதும் மறந்துவிடாது’ காவிந்த ஜயவர்தன எம்.பி!

-ஊடகப்பிரிவு- இந்த நல்லாட்ச்சி அரசாங்கத்தை தோற்றுவிப்பதற்கு அமைச்சர் றிசாத்  பதியுதீன் வழங்கிய பங்களிப்பினை ஒரு போதும் ஜக்கிய  தேசிய கட்சி  மறந்துவிடாது என தெரிவித்துள்ள கம்பஹா மாவட்ட ஜக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் காவின்த ஜயவர்தன, மறைந்த எனது தந்தை அமைச்சர் ஜயலத் ஜயவர்தன அவர்கள் மக்களுக்கு அபிவிருத்திகளை கொண்டுவர எண்ணிய கனவினை அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் இணைந்து நனவாக்குவதற்காக செயற்படப்போகின்றேன் என்றும் கூறினார். மன்னார் மாவட்டத்திற்கு கடந்த வியாழக்கிழமை  வருகைத்தந்த பாராளுமன்ற  உறுப்பினர், மாந்தை மேற்கு பிரதேச…

Read More

றிஷாத் பதியுதீனுக்கு எதிராக வழக்கு

அஸ்ரப் ஏ சமத் மன்னார் அண்டிய வில்பத்து காட்டில் முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுத்தீன், சட்டவிரோதமாக காடுகளை அழித்து கட்டடங்களையும் வீடுகளையும் அமைத்துள்ளதாகவும் அதற்கு எதிராக வனவளத் திணைக்களம் றிசாத் பதியுத்தீனுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகம் மேற்படி விடயமாக சகல தஸ்தவேஜிகளை சேகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன. இவ் விடயம் சம்பந்தமாக இன்று வெளிவந்த சிங்கள இதழான மவ்பிம பத்திரிகையில் முற்பக்கத்தில் அமைச்சர் றிசாத்தின் படத்தை பிரசுரித்து செய்தி வெளியிட்டுள்ளது. இவ் வீடமைப்புத்திட்டத்தினை அமைப்பதற்காக அமைச்சர் றிசாத் அதிகாரிகளுக்கு…

Read More