Headlines

பிரதியமைச்சர் அமீர் அலி முயற்சியால் அங்குராணை மக்களுக்கு பாலம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள அக்குறாணை, மினுமினுத்தவெளி பிரதேசத்திற்குச் செல்வதற்கான ஆற்றைக் கடப்பதற்கு ஒரு பாலம் இல்லாமல் பல சிரமங்களை எதிர்கொண்ட மக்களுக்கு நல்லாட்சி அரசாங்கத்தின் மூலம் பாலம் அமைக்கப்படவுள்ளதை முன்னிட்டு பிரதேச மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர். போக்குவரத்திற்கு ஏற்ற பாதைகள் இல்லாமல் அக்குறாணை மற்றும் மினுமினுத்தவெளி ஆகிய கிராமங்களை சேர்ந்த இரண்டு கிராம மக்கள் பல சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். இதனால் போக்குவரத்துப் பாதைகள் இல்லாததாலும் அக்கிராமங்களுக்குச் செல்லும் பிரதான பாதையூடாகச் செல்லும்…

Read More

மருதமுனையைச் சேர்ந்த சஞ்ஜித் சட்டக்கல்லூரிக்கு தெரிவு

ஏ.எச்.எம். பூமுதீன் 2015 சட்டக்கல்லூரி அனுமதிக்கான போட்டிப் பரீட்சையில் மருதமுனையைச் சேர்ந்த சஞ்ஜித் அகமட் சித்தியைடைந்துள்ளார். மருதமுனையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் மூத்த ஆசான்களில் ஒருவருமான எம்.எச் காதர் இப்ராஹிமின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்து. கல்முனை மாநாகர சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஏ.எம் ரகீபின் மைத்துனரும் ஆவார்

Read More

கிரிய விவகாரம்.. தமிழ் யுவதியின் விடுதலைக்காக களம் இறங்கிய பெளத்த அமைச்சர்

சீகிரியாவில் கண்ணாடிச் சுவரில் தனது பெயரை எழுதிய குற்றச்சாட்டில் இரண்டு வருட சிறைத்தண்டனை அனுபவித்துவரும் உதயசிறி (27) என்னும் யுவதிக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டுமென பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பி. பெரேரா ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார். உதயசிறியை விடுதலை செய்ய வேண்டுமென்ற பிரதி வெளிவிவகார அமைச்சரின் எழுத்துமூல கோரிக்கை ஏற்கனவே ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வாரம் அவர் இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதியை நேரில் சந்தித்தும் உரையாடவுள்ளார். அறியாமை காரணமாக உதயசிறி…

Read More

பின்தங்கிய பாடசாலைகளுக்கு புதிய கட்டிட வசதிகளை வழங்க இஷாக் ரஹுமான் எம்.பி முயற்சி!

-அஸீம் கிலாப்தீன்- அனுராதபுரம், நொச்சியாகம பிரதேச செயலகத்துக்குட்பட அ / நொச்சியாகம, அல்-ஹிக்மா பாடசாலையில் மிக நீண்டகாலமாக பாடசாலை சுற்றுமதில் சம்மந்தமாக காணப்பட்ட பிரச்சினைக்கு, அப்பிரதேச மக்களின் வேண்டுகோளுக்குகிணங்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் தீர்வினை பெற்றுக்கொடுத்தார். அனுராதபுர மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பாடசாலைகளில் ஒன்றாக விளங்குகின்ற இப்பாடாசாலைக்கும், அருகில் இருக்கின்ற சிங்கள மொழி மூலமான பாடசாலைக்குமிடையில் மிக நீண்டகாலமாகவே எல்லைப் பிரச்சனை காணப்பட்டது. இதனால் அல்-ஹிக்மா பாடசாலை…

Read More

இலங்கை முஸ்லிம்ககள் சர்வதேசத்தால் பிழையாக வழி நடத்தப்பட்டுள்ளனர். மஹிந்த ராஜபக்ச

“நான் தற்போது ஜோதிடத்தை நம்புவதில்லை” என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் ஊடகவியலாளர் ஒருவருடன் தங்காலை கார்ல்டன் வீட்டில் இடம்பெற்ற நேர்காணலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கைக்கு பாகிஸ்தான் எவ்விதம் உதவியது என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த மஹிந்த ராஜபக்ஷ, “அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் எமது நண்பர்கள் அல்ல. பாகிஸ்தான் எமக்கு அதிகம் உதவியது. விசேடமாக முஷாரப.எனது நாட்டுக்கும் உங்கள் நாட்டும் என்ன நடந்தது, இந்தியாவின் ´ரோ´…

Read More

அம்பாறை காணிப் பிரச்சினைகளில் ஆர்.ஆர்.ரி. தலையீடு

-ஐ.ஏ.ஸிறாஜ் – அம்­பாறை மாவட்­டத்தில் காணி­களை இழந்­த­வர்­களின் சிவில் சமூக அமைப்­பான காணி உரி­மைக்­கான அம்­பாறை மாவட்ட செய­ல­ணி­யா­னது பேரி­ன­வாத செயற்­பா­டு­க­ளினால் திட்­ட­மிட்டு ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்ள சிறு­பான்மை முஸ்லிம் மற்றும் தமிழ் மக்­க­ளது காணி­களை மீட்­டுத்­த­ரு­மாறு கோரியும் அது தொடர்­பான ஆவ­ணங்­களை கைய­ளிக்கும் நோக்­கிலும் கொழும்பில் முக்­கி­யஸ்­தர்­களை சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யது. இதன் ஓர் அங்­க­மாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் மற்றும் ஆர்.ஆர்.ரி. ஆகிய அமைப்­பு­க­ளு­ட­னான சந்­திப்பு சனிக்கிழமை மாலை கொழும்பில் நடை­பெற்­றது….

Read More

‘பல்துறை சார்ந்தவர்களை தனித்தனியாக வகைப்படுத்தும், தந்திரோபாய வேலைத்திட்டம் ஆரம்பம்’

சமூகத்தின் பல்துறை சார்ந்தவர்களை வேறுவேறாக வகைப்படுத்தி, மூளைச்சலவை செய்யும் தந்திரோபாய வேலைத்திட்டமொன்றை பேரினவாத தரகர்கள் மேற்கொண்டு வருவதாகவும், சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்தை வெகுவாக குறைத்தெடுப்பதே இவர்களின் உள்ளார்ந்த திட்டமெனவும் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.   “புத்தளம் மாவட்டத்தின் தம்பபண்ணி, கொய்யாவாடி மற்றும் ஆலங்குடா பிரதேசங்களில் இடம்பெயர்ந்து வாழும் வடக்கு மக்களுடன், நேற்று (23) இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.   அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,   “புத்திஜீவிகள்,  உலமாக்கள், கற்றவர்கள், தனவந்தர்கள் மற்றும் வர்த்தகர்கள் என்று வகைப்படுத்தி, அவர்களுடன்…

Read More

மூதூர் இளைஞர்கள் மற்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கிடையிலான சந்திப்பு

மூதூர் இளைஞர்கள் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கிடையிலான சந்திப்பொன்று மூதூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் (30) இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப், இராஜாங்க அமைச்சர் அமீர்அலி , அநுராதபுர பாராளுமன்ற உறுப்பினர் இஷ்ஹாக் றகுமான் , கட்சியின் பொதுச் செயலாளர் சுபைர்தீன், பிரதி தலைவர் ஜெமீல், கனியவள கூட்டுத் பணிப்பாளர் ரசாக் , ஆரம்ப கல்விப் பணிப்பாளர் தெளபீக் , முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜவாத்…

Read More

கலாவெவவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு!

அண்மையில் கலாவெவவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அநுராதபுர மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் சந்திப்பில் கலந்து  கொண்டதுடன்  அவர்களது பிரச்சினைகளுக்கான தீர்வும் வழங்கப்பட்டது.

Read More

புதிய அரசாங்கத்திற்கு போதியளவு நிதி கிடைக்கின்றது: ரவி கருணாநாயக்க

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கு போதியளவு நிதி கிடைப்பதாகவும், அந்த நிதியை ஊழலற்ற அபிவிருத்தித் திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்றும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். ஊழலற்ற புதிய நாடொன்றை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்த ரவி கருணாநாயக்க, வீதி ஒன்றை அமைப்பதற்கு 10 இலட்சம் ரூபா செலவாகும் என்றால் அதற்கு 100 இலட்சம் செலவிடுவது அபிவிருத்தியல்ல எனவும் ஊழலைக்…

Read More

ஐந்து மில்லியன் டொலரில் திருகோணமலை துறை முகம் அபிவிருத்தி -இளைஞர்களுக்கும் வாய்ப்பு நகர திட்டமிடல் கலந்துரையாடலில் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் திருகோணமலையில் தெரிவிப்பு!!!

திருகோணமலை துறை முகம் ஐந்து மில்லியன் ரூபா செலவில் ஜெய்க்காவின் நிதி உதவியூடாக அபிவிருத்தி செய்யப்பட்டு பாரிய நகராக்க திட்டத்துக்கும் வழி வகுக்கும் என துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான  அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார். நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாட்டில் திருகோணமலை நகர சபை மண்டபத்தில்  மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க கலந்து கொண்ட  நகராக்க அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலில் இன்று…

Read More

பாதிக்கப்பட்ட பிரதேசங்களில், பஸ் கட்டணம் இல்லை

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான போக்குவரத்து வசதிகளை இலவசமாக வழங்குவதற்கு தயார் என்று இலங்கை போக்குவரத்து சபை கூறியுள்ளது. போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் ஆலோசனைப்படி இச்சேவை முன்னெடுக்கப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை கூறியுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களின் பிரதேச செயலாளர்களின் வேண்டுகோள்படி உரிய டிப்போக்களின் ஊடாக போக்குவரத்து வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ராமல் சிறிவர்தன கூறினார். இதற்கிடையில் உடரட்ட மார்க்கத்தில் ரம்புக்கனையில் இருந்து கண்டி…

Read More