தாடி வைத்ததால் வேலையை இழந்து நிற்கும் முஸ்லிம் ஊழியர்
கொல்கத்தாவில் தாடி வைத்திருப்பதற்காக முஸ்லீம் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அதுனிக் குரூப் ஆப் இன்டஸ்ட்ரீஸின் சுரஙகப் பிரிவின் ஜெனரல் மேனேஜர்(பொது மேலாளர்) ஆக கடந்த 6 ஆண்டுகளாக பணியாற்றியவர் முகமது இஸ்மாயில். அவர் கடந்த ஆண்டு ஹஜ் புனித யாத்திரை செய்துவிட்டு மே மாதம் தாடியுடன் நாடு திரும்பினார். அதன் பிறகு அவரது சம்பளம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் வரை பாதி சம்பளத்தை பெற்று பணியாற்றியுள்ளார் இஸ்மாயில்….
கட்டார் மக்களுக்கும், அந்நாட்டு அரசுக்கும் எமது நன்றிகளைத் தெரிவிக்கின்றோம் – ஹமாஸ்
கட்டாருக்கும் ஹமாசுக்குமிடையிலான உறவு புதிதல்ல. ஹமாஸுக்கு விசாலமான ஒரு சர்வதேச தொடர்பு இருக்கின்றது. கட்டார் வாழ் மக்கள் , அந் நாட்டு அரசுக்கு நாம் எப்போதும் எமது நன்றிகளைத் தெரிவிக்கின்றோம். குறிப்பாக இயக்கம் என்ற வகையில் கட்டாரின் உதவிகள் ஹமாசுக்கு கிடைக்கின்றது என்பது கருத்தல்ல மாறாக, பலஸ்தீன் மக்களுக்கான உதவிகள் அவை இப்போது இருக்கும் அமீர், இவருக்கு முன்னாள் இருந்த அமீர் காசாவுக்கு விஜயம் செய்துள்ளனர்.காசாவின் கீழ்கட்டுமான அபிவிருத்திக்கு உதவியுள்ளனர். காலித் மிஷால் – பேச்சு
வேற்றுக் கிரகவாசிகளை தேடும் புதிய திட்டத்தை நாசா அதிகாரப்பூர்வமாக தொடங்கியது
வேற்று கிரகவாசிகளை தேடும் புதிய திட்டத்தை நாசா அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. இந்த புதிய திட்டம் மூலம் பூமியை தவிர மற்ற கிரகங்களில் உயிரினங்கள் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதா என்பது பற்றி திவீரமாக ஆய்வு செய்யபடும். இதற்காக அமைக்கபட்டுள்ள குழுவில் உலகம் முழுவதிலுமிருந்து 12 பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை சேர்ந்த விஞ்ஞானிகள் இடம் பெற்றுள்ளனர். நாசாவின் விண்வெளி தொலைநோக்கி கெப்லர் இதுவரை, 1,000 இற்கும் மேற்பட்ட வேற்றுக கிரகங்களை கண்டறிந்துள்ளது. இவற்றில் அளவில் பூமி போன்று உள்ள…
காத்தான்குடியில் இன்று ‘மஸ்ஜிதுர் ரஹ்மா’ புதிய பள்ளிவாசல் திறப்புவிழா
புவி எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் – காத்தான்குடி காத்தான்குடியில் இன்று ‘மஸ்ஜிதுர் ரஹ்மா’ புதிய பள்ளிவாசல் திறப்புவிழா காத்தான்குடி 6ம் குறிச்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ‘மஸ்ஜிதுர் றஹ்மா’ பள்ளிவாசல்இன்று (31.05.2015) ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணிக்கு திறந்து வைக்கப்படும் என அப்பள்ளிவாசல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்போது பிரதம அதிதியாக துருக்கி பின் ஜாபிர்அல் கிதாமி அல் உதைமி அவர்களும், விஷேட அதிதியாக அல்ஹாஜ் ஐ.எல்.எம். ஹாஷிம் அஷ்சூரி அவர்களும் கலந்து கொள்ள இருப்பதுடன் உள்ளுர் உலமாக்கள், பிரமுகர்களும் கலந்து…
திஸ்ஸவிற்கு எதிரான விசாரணை சட்டமா அதிபரிடம் ஒப்படைப்பு
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் சுகாதார அமைச்சருமான திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிரான விசாரணை சட்ட மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க இந்த தகவலை நாடாளுமன்றில் நேற்று (25) தெரிவித்துள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் போலி ஆவணம் தயாரித்ததாக திஸ்ஸ அத்தநாயக்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு குறித்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி அந்த அறிக்கையை சட்டமா அதிபரிடம் ஒப்படைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். போலி ஆவணம் தயாரிப்பு…
எனது தந்தை பிரதமராவதை தடுக்கமுடியாது – நாமல்
நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு அல்ல என்னை சிறைக்கு அனுப்பினாலும், எனது தந்தை இந்நாட்டின் பிரதமராவதனை தடுக்க முடியாதென ஹம்பாந்தோட்டை மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சுவிஸில் நண்பியை கொலை செய்த இலங்கையருக்கு நியூஸிலாந்தில் விளக்கமறியல் நீடிப்பு
குறித்த இலங்கையர் இன்று ஒக்லேன்ட் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டார். 42 வயதான இந்த இலங்கையர் கடந்த ஆகஸ்ட் மாதம் 26ஆம் திகதியன்று கைது செய்யப்பட்டார். சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கவே அவர் கைது செய்யப்பட்டார். முன்னாள் நண்பியான 23 வயதான கவிதா கந்தையா என்பவரை 2000 ஆம் ஆண்டு பாசெல் நகரில் வைத்து இந்த இலங்கையர் கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறித்த இலங்கையர் சார்பில் இன்று பிணை மனு எவையும் தாக்கல் செய்யப்படவில்லை. குறித்த…
எதிர்க் கட்சித் தலைவருக்கு ஜனாதிபதி வாழ்த்து
8 ஆவது பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் எதிர்க் கட்சித் தலைவருக்கான வாழ்த்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இளைஞர் சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற விழாவில் கலந்துகொண்ட பிரதி அமைச்சர் அமீர் அலி
இளைஞர் சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்ட பைசிக்கள் தரிப்பிட திறப்பு விழா கடந்த 30.01.2017 ஆம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் ஹலீம் இஷாக், இளைஞர் சேவை உத்தியோகத்தர் றியாத் மற்றும் ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்.
கூட்டு அரசாங்கமே சிறந்தது!
கூட்டு அரசாங்கத்தின் ஊடாக மக்களுக்கு சேவையாற்ற சிறந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக மல்வத்து பீடாதிபதி திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா நேற்றைய தினம் மல்வத்து பீடாதிபதியை சந்தித்த போது அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்… இன்று கூட்டாக இணைந்து ஆட்சி நடத்தும் தரப்பினர், நாட்டை அபிவிருத்தி செய்ததன் பின்னர் பிரிந்து சென்றால் பிரச்சினையில்லை. ஏழு கூட்டுக்கள் என்ற அடிப்படையில் அரசாங்கம் அமைத்த காலங்களும்…
கைதிகளுக்கு பொதுமன்னிப்பு!
வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர். பௌத்தர்களின் பிரதான சமய விழாக்களில் ஒன்றான வெசாக் பௌர்ணமி தினத்தை ஒட்டி, பொது மன்னிப்பு அடிப்படையில் கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர். சுமார் 500 கைதிகள் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. சிறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு அபராதம் செலுத்த முடியாது தண்டனை அனுபவிப்போர் வயது முதிர்ந்த கைதிகள் உள்ளிட்டவர்கள் இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளனர்.
