Headlines

குளியாப்பிட்டிய பிரதேச சபை வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வில் மஹ்ரூப் எம்.பி பங்கேற்பு!

-ஊடகப்பிரிவு- குருநாகல் மாவட்டத்தின் குளியாப்பிடிய பிரதேச சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு இன்று (14) விசினவ, மடலஸ்ஸ பிரதேசத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் கலந்துகொண்டதுடன், வேட்பாளர்களுக்கு எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான விளக்கங்களையும் அளித்தார். இந்நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், சதொச நிறுவனத்தின் பிரதித் தலைவருமான எம்.என்.நஸீர் மற்றும் குளியாப்பிட்டிய பிரதேச சபை வேட்பாளர்கள்…

Read More

பெண்களின் நலன்களைப்பேண பல திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம். மக்கள் காங்கிரஸின் மகளிர் அணி தேசிய ஒருங்கிணைப்பாளர்

பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை  நடைமுறைப்படுத்தும் வகையில் ஆக்கபூர்வமான முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மகளிர் அணிக்கான தேசிய ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஹஸ்மியா உதுமாலெப்பை தெரிவித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் நியமனக்கடிதத்தை பெற்றுக்கொண்ட பின்னர் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த நிகழ்வில் கட்சியின் முக்கியஸ்தரும், உளவள ஆலோசகருமான இல்ஹாம்  மரிக்கார், கொலஜ் ஒப் எல்த் கல்லூரியின் பணிப்பாளர் டாக்டர் எம்.எச்.எம். முனாசிக் ஆகியோரும்…

Read More

வெளியாகியது ஊவா தேர்தல் முடிவுகள்

வெளியாகியுள்ள ஊவா மாகாண சபைத் தேர்தல் முடிவுகளின் படி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 349906 வாக்குகளைப் பெற்று 19 ஆசனங்களை வசப்படுத்தியுள்ளது.இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி 274773 வாக்குகளைப் பெற்று 13 ஆசனங்களையும், மக்கள் விடுதலை முன்னணி 36580 வாக்குகளைப் பெற்று 02 ஆசனங்களையும் பெற்றுக் கொண்டுள்ளன.இதன்படி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 51.25 வீத வாக்குகளையும், ஐக்கிய தேசியக் கட்சி 40.24 வீத வாக்குகளையும், மக்கள் விடுதலை முன்னணி 05.36 வீத வாக்குகளையும் வசப்படுத்தியுள்ளன.இதேவேளை…

Read More

அமைச்சர் றிஷாத்தின் பிரேரணையை ஏற்று மாவட்ட அபிவிருத்திக்கு குழு நடவடிக்கை

வடமாகாணத்தில் அழிந்துபோய்க் கிடக்கும் தொழிற்சாலைகளை மீளக் கட்டியெழுப்பல் மற்றும் கைத்தொழில் பேட்டைகளையும், வலயங்களையும் உருவாக்கல் தொடர்பில் வடமாகாண சபையும் மத்திய அரசாங்கமும் இணைந்து பாரிய திட்டமொன்றை மேற்கொள்ளும் வகையிலான பிரேரணை ஒன்றை கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திச் சபை கூட்டத்தில் முன்வைத்த போது அதற்கு இணக்கம் தெரிவித்த மாவட்ட அபிவிருத்திச் சபை உறுப்பினர்கள் மேற்கொண்டு அந்த நடவடிக்கையை முன்னெடுக்குமாறு ஏகமனதாக வேண்டினர். முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்று காலை (19) முல்லைத்தீவுக்…

Read More

இபலோகம பொலிஸ் நிலையத் திறப்புவிழாவில் இஸ்ஹாக் ரஹுமான் MP

நாட்டில் புதிதாக 600 பொலிஸ் நிலையங்களை அமைக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட இபலோகம பொலிஸ் நிலையத் திறப்புவிழா நிகழ்வில் அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்கள் கலந்துகொண்ட போது.

Read More

மோடியை சந்திக்க ஒபாமா ஆர்வம்

நரேந்திரமோடி பிரதமராக பதவி ஏற்றதும் அவருக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா டெலிபோனில் வாழ்த்து தெரிவித்தார். அப்போது மோடியை அமெரிக்கா வருமாறு ஒபாமா அழைப்பு விடுத்தார். இதை மோடி ஏற்றுக்கொண்டார். வருகிற செப்டம்பர் மாதம் மோடி ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொள்ள நியூயார்க் செல்கிறார். ஐ.நா.சபையில் உரையாற்றிய பின்பு வாஷிங்டன் செல்கிறார். அங்கு வெள்ளை மாளிகையில் செப்டம்பர் 30–ந்தேதி அதிபர் ஒபாமாவை மோடி சந்தித்து பேச்சு நடத்துகிறார். மோடி– ஒபாமா சந்திப்புக்கான நிகழ்ச்சி நிரல் தயாராகி வருகிறது….

Read More

மாதம் 2 கோடி சம்பளம் பெறும் ஏழை முஸ்லிம் தொழிலாளியின் மகன்

ஆந்திர மாநிலம் கம்மம் மாவட்டம் போரூர் கிராமத்தை சேர்ந்தவர் சேக் ஜமாலுதீன். இவரது மனைவி ரகீமா பேகம். இவர்களுக்கு 2 மகள்களும், நசீர்பாபா என்ற மகனும் உள்ளனர். சேக் ஜமாலுதீன் கிரானைட் கம்பெனி ஒன்றில் கூலித்தொழிலாளியாக வேலை பார்க்கிறார். மாதம் ரூபாய் 5 ஆயிரம் தான் வருமானம் பெற்றார். குடும்பத்தை காப்பாற்ற இந்த வருமானம் பற்றாக்குறையாக இருந்ததால் மனைவி தையல் வேலையில் ஈடுபட்டு குடும்பத்தை நடத்தி வந்தார். இவர்களது மகன் நசீர்பாபாவுக்கு படிப்பு மீது மிகுந்த ஆர்வம்…

Read More

“இலங்கைக்கான ஏற்றுமதி சேவைகளை எவ்வாறு அதிகரிப்பது?”

“இலங்கைக்கான ஏற்றுமதி சேவைகளை எவ்வாறு அதிகரிப்பது?” என்ற கருப்பொருளில் செயலமர்வு ஒன்று கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான வணிகத்திணைக்களத்தினால் இன்று (27) பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு செயலமர்வை ஆரம்பித்து வைத்தார். இந்த செயலமர்வுக்கான ஒத்துழைப்பை பண்டாரநாயக்கா சர்வதேச கற்கைகள் மையம் வழங்கியுள்ளது.

Read More

அட்டாளைச்சேனை 15 ஆம் பிரிவைச் சேர்ந்த சரிபுதீன் ஷஹீர் சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம்

பர்ஸாத் அட்டாளைச்சேனை 15 ஆம் பிரிவைச் சேர்ந்த சரிபுதீன் ஷஹீர் கல்முனை மாவட்ட நீதி நிருவாக வலயத்திற்கான சமாதான நீதவானாக அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி யு.து.அலக்ஸ் ராஜா முன்னிலையில் அண்மையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இவர் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை  பழைய மாணவரும் இலங்கைதிறந்த பல்கலைக்கழக சட்ட பீட மாணவரும்இவிஸ்டம் இளைஞர்  கழகத்தின்  தலைவரும் ஆவார். தற்போது அக்கறைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை கூட  தாதி உத்தியோகத்தராக    கடமையாற்றும் இவர் அல்ஹாஜ்  எஸ்.எல்….

Read More

இராவணன் தொடர்பில் கிரமமான ஆய்வு நடத்தப்பட வேண்டும்!- புத்திக்க பத்திரண

இராவண மன்னன் தொடர்பில் கிரமமான ஆய்வு நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றில் இது தொடர்பில் புத்திக்க பத்திரண யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார். இராவண மன்னன் தொடர்பில் திடமான வரலாற்றுத் தகவல்கள் இல்லாத போதிலும், கிரமமான ஆய்வின் மூலம் இராவண மன்னன் தொடர்பிலான மக்களின் எண்ணக்கருக்களை மேம்படுத்த முடியும். இராவண மன்னனிடம் காணப்பட்ட அறிவினை நாட்டின் அபிவிருத்திக்காக பயன்படுத்திக் கொள்ள முடியும். இலங்கை வரலாற்றில்…

Read More

“வாழவைத்த புத்தளம் மண்ணை நாங்கள் ஒருபோதும் ஆள வரவில்லை” புத்தளம் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

  -சுஐப் எம்.காசிம் – அகதிகளாக ஓடோடி வந்து தஞ்சமடைந்த வடக்கு முஸ்லிம்களை வாழ வைத்த புத்தளம் மண்ணையும், அந்த மக்களையும் நாங்கள் ஒருபோதும் ஆள வரவில்லை என்றும், இந்த பிரதேசத்தை வளங்கொழிக்கும் பூமியாக மாற்ற அத்தனை நடவடிக்கைகளையும், உதவிகளையும் மேற்கொள்வோம் என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புத்தளம் நகரசபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, நேற்று மாலை…

Read More

ஆலங்குடா, மசூர் நகர் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு!

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆப்தீன் எஹியா தலைமையில், புத்தளம், ஆலங்குடா, மசூர் நகர் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பொன்று நேற்று (12) இடம்பெற்றது. இச் சந்திப்பில் பிரதேச சபை உறுப்பினர் அக்மல் மற்றும் மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி பிரதேச முக்கியஸ்தர் தௌபீக் உட்பட ஊர் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர். இதேவேளை, ஆண்டான்கனி பகுதிக்கும் நேற்று விஜயம் செய்த  முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆப்தீன் எஹியா, அங்குள்ள முக்கியஸ்தர்களையும் சந்தித்து, பொதுத்தேர்தல் தொடர்பில் கலந்துரையாடினார்.

Read More