Headlines

 யோஷிதவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி

மருத்துவ சிகிச்சையை பெற்றுக்கொள்வதற்காக, முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களில் ஒருவரான யோஷித ராஜபக்ஷவுக்கு, அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஒரு மாத கால அனுமதி வழங்கியுள்ளது.

Read More

ரஷ்ய நகர மக்களை அச்சமடையச் செய்த முகில்

ரஷ்ய நகரமொன்றில் பாரிய காளான் போன்ற உருவம் கொண்ட முகில் தோன்றியமை அந்நகர மக்களை அச்சமடையச் செய்தது. மேற்கு சைபீரிய பிராந்தியத்திலுள்ள கேமேரோவோ நகரில் கடும் இடிமின்னலுக்கு மத்தியில் இந்த முகில் தென்பட்டது. ஆனால், அணுகுண்டு வெடிப்புகளின் போது இத்தகைய பாரிய காளான் உருவிலான புகை ஏற்பட்டதை அறிந்திருந்த மக்கள், இந்த முகிலைக் கண்டு அச்சமடைந்தனராம். அந்நகருக்கு சற்று தொலைவிலுள்ள நிலக்கரி சுரங்கமொன்றில் ஏதேனும் வெடிப்பு ஏற்பட்டுவிட்டதோ எனவும் சிலர் அச்சம் கொண்டதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்….

Read More

வெள்ள அனர்த்தத்தில் பாதிப்புற்றோருக்கு சதொச மூலம் அத்தியாவசிய பொருட்கள் அரச அதிபர், பிரதேச செயலாளர்களுக்கு அமைச்சர் ரிஷாட் அறிவுறுத்தல்

ஊடகப்பிரிவு நாட்டின் பல பாகங்களிலும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சதொச கிளைகள் மூலமும், சதொச களஞ்சியச்சாலைகள் மூலமும் அத்தியாவசியப் பொருட்களையும், ஏனைய உலர் உணவுப் பொருட்களையும் விநியோகிப்பதற்கு கைத்தொழில், மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவசர நடவடிக்கை எடுத்துள்ளார். இது தொடபில் அந்தந்த பிரதேசங்களிலுள்ள அரசாங்க அதிபர்களுக்கும், பிரதேச செயலாளர்களுக்கும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆலோசனைகளையும், அறிவுறுத்தல்களையும் வழங்கி உள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்கவென அவர்களுக்கு தேவையான பொருட்களை அரசாங்க அதிபர்களும், பிரதேச செயலாளர்களும் சதொசவில்…

Read More

அரசியல்வாதிகளில் சிலர் மக்களை குழப்பி குளிர்காய நினைக்கிறார்கள் முசலியில் அமைச்சர் றிஷாட்

சமாதானம் ஏற்பட்ட பின்னர் வடக்கிலேயுள்ள தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் தத்தமது இடங்களில் மீண்டும் அமைதியாக இன நல்லுறவுடன் வாழத்தொடங்கும்போது, அரசியலில் குளிர்காய நினைக்கும் இனவாத சிந்தனையுள்ள அரசியவாதிகள் அவர்களைக் குழப்பி சுயலாபம் தேட முயற்சிக்சிக்கிறார்கள் என  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் முசலியில் விதாதா வளநிலையத்தை இன்று காலை (2017.03.16) திறந்து வைக்கும் நிகழ்வில் சிறப்பதிதியாக கலந்துகொண்டு அமைச்சர் உரையாற்றினார். விஞ்ஞான, தொழில்நுட்பவியல் மற்றும் ஆராய்ச்சிக்கான இராஜாங்க…

Read More

தட்டிக்கேட்டால் துரோகிகள்! ஜால்ரா போட்டால் போராளிகள்! கந்தளாயில் ரிஷாட்

-சுஐப் எம் காசிம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமின் தவறுகளை யாராவது தட்டிக் கேட்டால் அவர்களை துரோகிகளென பட்டம் சூட்டி கட்சியிலிருந்து வெளித்தள்ளும் துர்ப்பாக்கியம் இன்னும் தொடர்வதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். திருகோணமலை கந்தளாயில் மக்கள் காங்கிரஸின் காரியாலய திறப்பு விழாவின் பின்னர் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் அமைச்சர் உரையாற்றிய போது மேலும் கூறியதாவது, முஸ்லிம் காங்கிரஸின் தலைவரை நானும், அமீர் அலியும், நஜீப் ஏ மஜீதும் அன்று தட்டிக் கேட்ட போது எங்களைத் துரோகிகளென…

Read More

“சிறுபான்மை பிரதிநிதியை வென்றெடுக்க புத்தளம் மண் ஒன்றுபட வேண்டும்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் வேண்டுகோள்!

அரசியல் ரீதியாக பிரிந்திருந்ததனாலும் ஒற்றுமையீனத்தினாலுமே புத்தளத்தின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் நமக்கு எட்டாக்கனியாகியதாகவும், இம்முறை எப்படியாவது அது கிடைக்கப்பெறும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி தலைமையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக, முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின், தராசுச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களான அலி சப்ரி ரஹீம், ஆப்தீன் எஹியா, முஸம்மில் ஆகியோரை ஆதரித்து, புத்தளத்தில் நேற்று மாலை (30) நடைபெற்ற…

Read More

ஞானசார தேரர், சிறைச்சாலைக்கு சென்றார்

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பிவிதுரு ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான  உதய கம்மன்பிலவை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர், பார்வையிட்டனர். பொதுபல சேன அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரும், வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்று, உதய கம்மன்பில எம்.பியிடம் நலன்விசாரித்தார். நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில், கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள ஞானசார தேரர், நீண்டநாட்களுக்கு பின்னர் ஊடகங்களுக்கு இன்றுதான் (20) தலையை காண்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். நாடாளுமன்ற…

Read More

கொழும்பில் தொடரும் போராட்டம்: மக்கள் பெரும் அவதி!

தொட்டலங்க பகுதியில் நேற்று (16) மாலை மக்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் தற்போதும் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தொட்டலங்க ஜப்பான் நட்புறவு பாலத்தை மறித்து அப்பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார். தொட்டலங்க பிரதேசத்தில் அனுமதியற்று கட்டப்பட்ட வீடுகள் இடிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே அப்பிரதேச மக்கள் நேற்று முதல் இவ்வாறு ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக அந்தப் பகுதியில் நேற்று மாலை பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டிருந்ததுடன், இன்று…

Read More

இஸ்ரேலுக்கு அமெரிக்கா போன்று, இலங்கைக்கு சீனா..!

“சீன ஆட்டச்சீட்டை’ அதிகளவுக்கு விளையாடும் போக்கை இலங்கையின் கொள்கை வகுப்பாளர்கள் கொண்டிருப்பதாக ஜெனீவாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு சமனான எதிரிடையாக சீனா செயற்படுமென்ற   எண்ணப்பாட்டை இலங்கையின் பாதுகாப்பு நிர்வாகத்துறை கொண்டிருப்பதாக தோன்றுகிறது என்று அவர் கூறியுள்ளதாக “இந்து’ பத்திரிகை நேற்று புதன்கிழமை தெரிவித்திருக்கிறது. “அந்தப் புரிந்துணர்வில்  மிகைப்படுத்தல் இருக்கிறது’ என்று அவர் தெரிவித்திருக்கிறார். “கடந்த சில வருடங்களாக இந்திய  சீன உறவுகள் மேலெழுந்து வருகின்ற நிலைமையில், “சீன ஆட்டச்சீட்டின்’ பருமன்…

Read More

தனது பதவியை கிறிஸ்தவ சமூகத்துக்கு வழங்கிய சனூஸ்: வாய்மை தவறாத, மக்கள் பிரதிநிதி

அரசியலை சாக்கடை என்று பலரும் விமர்சிப்பார்கள். ஆனால், அவர்கள் சொல்லும் அந்த சாக்கடையை சுத்தம் செய்வதற்கு அதனை விமர்சிப்பவர்களில் பெரும்பாலானோர் முன்வருவதில்லை. இருந்த போதும், இவ்வாறு விமர்சிக்கப்படும் அரசியலுக்குள் வாய்மை தவறாத நல்ல மனிதர்களும் இல்லாமல் இல்லை. அண்மையில் அம்பாறை மாவட்டத்திலிருந்து 30க்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் வட மாகாணத்துக்கு பயணமொன்றினை மேற்கொண்ட போது, மன்னார் – மாந்தை மேற்கு பிரதேசத்தில் நேர்மை மிக்க ஓர் இளம் அரசியல்வாதியைச் சந்திக்கக் கிடைத்தது. அவர் பெயர் ஏ.எச். சனூஸ். இம்முறை…

Read More