Headlines

மாவடிப்பள்ளி அஸ்ரப் மகா வித்தியாலயத்திற்கு கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர் உதவி!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளரும் சிரேஸ்ட ஊடகவியலாளரும் சட்டத்தரணியுமான முஷர்ரப் முதுநபீன் கடந்த 2019.03.23 ம் திகதி மாவடிப்பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்ட இளைஞர் ஒன்று கூடலில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன், மாவடிப்பள்ளி கமு/ அல் – அஸ்ரப் மகா வித்தியாலயத்திற்கும் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு பாடசாலை அபிவிருத்திகள், பாடசாலையில் நிலவும் குறைபாடுகள், தேவைகள் சம்மந்தமாகவும் அதிபருடன் ஆலோசனை செய்தார். இதன் போது பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். சைபுடீன் பாடசாலையின்…

Read More

ஓய்வு பெற்ற நீதிபதி கபூர் அ.இ.ம.கா வில் இணைந்தார்

ஓய்வு பெற்ற நீதிபதியும், பிரபல சட்டத்தரணியுமான கபூர் நேற்று (04) அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டார். மாஷாஅல்லாஹ்!!!! பாலமுனையை பிறப்பிடமாகக் கொண்ட இவர், இன்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியத் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் முன்னிலையில் கட்சியில் இணைந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

சீன அபிவிருத்தி தொடர்பான மோசடி அம்பலப்படுத்தப்படும் -நவீன்

சீன அபிவிருத்தி தொடர்பான மோசடிகள் குறித்து அம்பலப்படுத்த உள்ளதாக முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். இலங்கை அரசு சீனாவுடன் இணைந்து அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் இதில் பாரியளவில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஊழல் மோசடிகளில் ஈடுபடாத ஒர் ஜனாதிபதியையே நாடு எதிர்பார்க்கின்றது எனவும், அதற்கு மைத்திரிபால சிறிசேன பொருத்தமானவர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். (O)

Read More

பாத்திமா அஸ்ராவின் மரணம் போன்று, வேறு யாருக்கும் வரக்கூடாது (படங்கள்)

-JM.Hafeez- கடந்த வியாழக்கிழமை (15.10.2015) கண்டி, கட்டுகாஸ்தோட்டை பிரதான வீதியில் நித்தவலை சந்தியில் மழைநீரால் அள்ளப்பட்டுச் சென்ற கண்டி பதியுதீன் மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவிய பாத்திமா அஸ்ராவின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமென அப்பிரதேச்தில் வாழும் மக்கள் இன மத பேதமின்றி பிராத்தித்து வருகின்றனர். இவ்வாறான ஒரு அவலம் மீண்டும் யாருக்கும் வரக் கூடாது என்று அவர்கள் இறைவனை வேண்டிக் கொண்டது மட்டும்லலாது அங்கு இயங்கி வரும் அறநெறிப்பாடசாலை மாணவ மாணவிகள் ஒன்றிணைந்து மெளுகுவர்தி ஏற்றி அவருக்காக…

Read More

இஸ்ரேலுக்கு ஹமாஸ் கடும் எச்சரிக்கை

பலஸ்தீனர்கள் மீது உயிர்ப்பலி கொள்ளும் பலப்பிரயோகம் மேற்கொண்டு வரும் இஸ்ரேல் படையினர் மீது புது வகையான போராட்டத்தை ஆரம்பிக்க திட்டமிட்டிருப்பதாக ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் போராட்ட அமைப்புகள் எச்சரித்துள்ளன. காசாவில் கடந்த செவ்வாயன்று பேரணி ஒன்றை ஏற்பாடு செய்திருந்த இஸ்லாமிய அமைப்பான ஹமாஸ், ஆக்கிரமிப்பாளர்கள் தொடர்ந்து பலஸ்தீனர்களை படுகொலை செய்தால் தமது அமைப்பு இன்திபாழா போராட்டத்தில் இணை வதாக எச்சரித்தது. கிழக்கு ஜரூசலம் மற்றும் மேற்குக் கரையில் பலஸ்தீனர்களின் எழுச்சி போராட்டத்திற்கு ஆதரவளிக்கு வகையிலேயே இந்த…

Read More

அமைச்சர் றிஷாட் பதியுதீன் நிதி ஒதுக்கீட்டில் வீதி புனர்நிர்மானம்.

கெளரவ அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் தம்பலகாமம் சிறாஜ் நகர் பிரதேச வீதியின் புனர்நிர்மான பணிகள் தம்பலகாம பிரதேச முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஹலீமுள்ளா அவர்களின் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய இளைஞர் அமைப்பாளரும், முன்னாள் நகரசபை தவிசாளருமாகிய கெளரவ டாக்டர் ஹில்மி மஹ்ரூப் சட்டத்தரனி அவர்கள்,அமைச்சர் அவர்களின் வேண்டு கோளிற்கினங்க சென்று பார்வையிட்டார்.

Read More

‘தேர்தல் களமென்பது அரசியல்வாதிகளால் ”ஜனநாயக தேர்தல்” என்ற நிலைமாறி, பணம் புரளுகின்ற ”பண நாயக தேர்தல்” நிலையை உருவாக்கியுள்ளது’ – முதன்மை வேட்பாளர் வை.எஸ்.எஸ். ஹமீட்!

தற்போதைய தேர்தல் களமென்பது அரசியல்வாதிகளால் ”ஜனநாயக தேர்தல்” என்ற நிலை மாறி, பணம் புரளுகின்ற ”பண நாயக தேர்தல்” நிலையை உருவாக்கியுள்ளமையால், நேர்மையான அரசியல் கலாச்சாரம் இன்று கேள்விக்குறியாகியுள்ளதாக திகாமடுல்ல மாவட்ட மக்கள் காங்கிரஸ் முதன்மை வேட்பாளர் சட்ட முதுமாணி வை.எல்.எஸ்.ஹமீட் தெரிவித்தார். கல்முனையில் தனது அலுவலகத்தில் நேற்று (02) நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, ஜனநாயக தேர்தலை விரும்புகின்ற மக்களின் மனங்களில் இன்று ‘பணம் இல்லையென்றால் தேர்தல் களம் இல்லை’ என்கின்ற…

Read More

குழந்தைகளின் கூச்சல் ஒலி மாசாகாது என்று ஜப்பானில் புதிய விதிமுறை

ஜப்பானிய தலைநகர் டோக்கியோ நகரில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய சட்டத்தின்படி சிறுவர்கள் விளையாடும் போது போடும் கூச்சல் சத்தம் , ஒலி மாசாக கருத்திற்கொள்ளப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் 45 டெசிபலுக்கும் அதிகமான ஒலி எழுப்பப்படுவதை தடுக்கும் நடவடிக்கை இது வரை அமுலில் இருந்த்து. இதனால் பாலர் பள்ளிகளில் சத்தக் கட்டுப்பாடு சாதனங்கள் நிறுவப்பட்டன. வெளியிடங்களில் சிறுவர்கள் விளையாடுவது கூட சில நேரங்களில் தடை செய்யப்பட்டது. புதிய விதிமுறையின் காரணமாக டோக்யோவில் சிறார் நல நிலையங்கள் பல…

Read More

ஊவாவில் இன்று தபால் மூல வாக்களிப்பு

ஊவா மாகாண சபை தேர்தலுக்கான தபால் வாக்களிப்பு இன்று 4ம் திகதி மற்றும் நாளை 5ம் திகதியும் இடம்பெறவுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி றோஹன கீர்த்தி திசாநாயக அறிவித்துள்ளார். இம் மாவட்டத்திலுள்ள அரச திணைக்களங்களிலும், காரியாலயங்களிலும் சேவை புரிகின்ற அரச ஊழியர்கள் தத்தமது தலைமைக்காரியாலயத் தலைவரின் சிபார்சுக்கமைய காலை 9 மணி முதல் 3 மணி வரை தபால் வாக்களிப்பில் கலந்துகொள்ள முடியும். ஏலவே கொடுக்கப்பட்டுள்ள தேர்தல் அறிவுரைக்கமைய இவ்வாக்களிப்புக்கு விண்ணப்பித்த அரச ஊழியர்களை வாக்களிக்குமாறு…

Read More

புறக்கோட்டை தங்க ஆபரண கடைத்தொகுதி இன்று திறப்பு; அமைச்சர் பசில் பிரதம அதிதி

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள புறக்கோட்டை இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண கடைத் தொகுதி இன்று மாலை 4.30 மணிக்கு உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ள இந் நிகழ்வில் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உட்பட முக்கியஸ்தர்கள் பலர் பங்குபற்றவுள்ளனர். 1894 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் காலம் முதல் சென். ஜோன்ஸ் மீன் சந்தையாகவும் 1983 ஆம் ஆண்டு முதல் மீன்…

Read More

துபாயில் பூங்கா மற்றும் கடற்கரையோரம் சோலார் சக்தியில் செயல்படும் இலவச இண்டெர்நெட் நிலையங்கள் !

துபாய் கடற்கரையோரம் முதல்முறையாக இலவச வயர்லெஸ் இண்டெர் நெட் வசதி துபாய் முனிசிபாலிட்டி சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பனைமரம் வடிவில் அமைக்கப்பட்டுள்ள 6 மீட்டர் உயரமுள்ள இந்த ஸ்மார்ட் பாம்\ நிலையங்களில் 53 மீட்டர் சுற்றளவில் 50 பயனாளிகளுக்கு உபயோகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரிய சக்தி மூல ம் செய்லபடும் இந்த நிலையத்தின் மூலம் கடற்கரை விதிகள், வழிகாட்டல்கள், குறிப்புகள், மற்றும் கடலின் சூழ்நிலை,பருவநிலை குறித்த அறிவிப்புகள் உள்ளிட்டவைகளை அறிந்து கொள்வதோடு மொபைன் போன் மற்றும் கணினிகளுக்கு…

Read More

இஸ்லாத்துக்கு மாறுங்கள், நேரடியாக சொர்க்கம்தான்”: டில்ஷானிடம் ஷேஜாத், பாக். கிரிக்கெட் சபை விசாரணை!

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது பாகிஸ்தான் வீரர் ஷேஜாத் இலங்கை வீரர் டில்ஷானிடம் இஸ்லாம் மதம் பற்றி கூறியது பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது பாகிஸ்தான் வீரர் அகமட் ஷேஜாத் இலங்கை வீரர் திலகரட்ண டில்ஷானிடன் இஸ்லாமிய மதம் பற்றிக் கூறியது என்ன என்பதை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை விசாரித்து வருகிறது. இது குறித்து செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள விவரம் வருமாறு, கடந்த சனிக்கிழமை நடந்த ஒருநாள் போட்டி முடிந்தவுடன்…

Read More