Headlines

சிறுபான்மையினரின் வாக்குகளை சின்னாபின்னமாக்க சதி’ ஏமாந்துவிட வேண்டாமென வவுனியாவில் அமைச்சர் ரிஷாட் கோரிக்கை!

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு துன்பத்தில் வாடும் மக்களின் தேவைகளையும் பிரச்சினைகளையும் தீர்க்கக் கூடிய நாட்டுத் தலைவராக சஜித் பிரேமதாசவை இனங்கண்டு கொண்டதாலேயே அவருக்கு ஆதரவளிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, வவுனியாவில் இன்று (30) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இந்த நிகழ்வில், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, அமைச்சர்களான ரவூப் ஹக்கீம்,…

Read More

நீதிமன்றுக்கு துப்பாக்கியுடன் நுழைவு

கொழும்பு – புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைய முற்பட்ட ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் கிரான்பாஸ் பகுதியைச் சேர்ந்த 41 வயதான ஒருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த துப்பாக்கிக்கு அனுமதிப் பத்தரம் உள்ளதாக தெரியவந்துள்ளது. எனினும் சந்தேகநபர் ஏன் துப்பாக்கியுடன் நீதிமன்ற வளாகத்திற்குள் வந்தார் என்பது தொடர்பில் வாழைத்தோட்ட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இதேவேளை அண்மையில் ஹல்ஸ்டப் நீதிமன்றத்தின் முன் இடம்பெற்ற கத்திக் குத்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு இருவர் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Read More

சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினம் – இன்று

உலகலாவிய ரீதியில் டிசம்பர் 3 ஆம் திகதி சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளின் பிரச்னைகளை புரிந்து கொண்டு, அவர்களுக்கான உரிமைகளை வழங்க வலியுறுத்தியும் ஐ.நா சார்பில் 1992 ஆம் ஆண்டு தொடக்கம் இந்தத் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

Read More

எவன்கார்ட் கப்பலின் உக்ரைன் நாட்டு கேப்டனுக்கு விளக்கமறியல் நீடிப்பு

எவன்கார்ட் கப்பலின் உக்ரைன் நாட்டு கேப்டனை ஜீலை 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க காலி நீதவான் நீதிமன்றம் இன்று (05) உத்தரவிட்டுள்ளது. இன்று (5) காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத ஆயுத கொள்வனவு குற்றத்தின் கீழ் குறித்த எவன்கார்ட் கப்பலின் உக்ரைன் நாட்டு கேப்டன் கடந்த மாதம் 23 ஆம் திகதி இரவு 8 மணியளவில் காலி துறைமுகத்தில் வைத்து குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

தொடரும்  புத்தளம் அபிவிருத்தி…..

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி அவர்களின் தலைமையில் புத்தளம் நூர் மஸ்ஜித் வீதி மற்றும் வான்வீதி தொடக்கம் மனல்குன்று வரை காப்பட் வீதியாக புனர்நிர்மாணம் செய்வதற்கான மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைகளை எம்.எச்.எம். நவவி  அவர்கள்  பார்வையிட்டார். புத்தளம் மக்களின் பிரச்சினைக்கான தீர்வாக குவைட் வைத்தியசாலை 1 கிலோ மீட்டர் காப்பட் வீதியாக புனர்நிர்மாணம் செய்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி அவர்களின் தலைமையில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read More

இரத்தினபுரி மாவட்ட அனர்த்த ஒருங்கிணைப்புக்கு பொறுப்பாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நியமனம்

அனர்த்தத்திற்கு உட்படாத பிரதேசங்களை சேர்ந்த அமைச்சர்களை அனர்த்தத்திற்குள்ளான தொகுதிகளின் ஒருங்கிணைப்பு செயற்பாடுகளுக்காக அமைப்பாளராக நியமிக்க ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அவர்கள் இன்று (01) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கெளரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடமிருந்து தங்களது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர். அந்த வகையில் இரத்தினபுரி மாவட்டத்திற்கான அனர்த்த ஒருங்கிணைப்பு அமைப்பாளராக அமைச்சர் றிசாட் பதியுதீன் நியமிக்கப்பட்டுள்ளார். அனர்த்தத்திற்குள்ளான தொகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் அவர்களுடைய வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் மேற்கொள்ளப்படும்…

Read More

வத்தளை நடைபாதை விவகாரம் – ஐவர் விளக்கமறியலில்

வத்தளை பகுதியில் இருந்த நடைபாதை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். வத்தளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட இவர்கள்; நேற்று (3) மஹர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனையடுத்து இவர்களை எதிர்வரும் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Read More

இலங்கையின் உணவு பதப்படுத்தும் துணைத் துறையின் வருமானமானது 100 மில்லியன் ரூபாவாக அதிகரிப்பு – அமைச்சர் ரிசாத் பதியுதீன்

உணவு பதணிடல் மற்றும் உணவு பொதியிடல் துறையானது இன்று இலங்கையிலையே தவிர்க்க முடியாத தலைசிறந்த துறையாக மாறியுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர்  ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.  பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னதாக ஆரம்பிக்கப்பட்டு அதன் பின்னர் இலங்கையின் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகத்தால் நிர்வகிக்கப்பட்டு வந்த உணவு பொதியிடலுக்கான சர்வ தேச எக்ஸ்போ தொடர்ந்து அதன் உற்பத்தித் துறைக்கான நாட்டின் மிகப்பெரிய கண்காட்சி நிகழ்வாக மாறியுள்ளது. உணவு பொதியிடலுக்கான சர்வதேச வர்த்தக கண்காட்சி  2001 ஆம் ஆண்டில  தொடங்கப்பட்டது….

Read More

உள்நாட்டு விவகாரங்களில் மோடி தலையிடக் கூடாது

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்யக் கூடாது என்று, முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியைத் தாக்கிய இலங்கைக் கடற்படைச் சிப்பாயான விஜித ரோஹண விஜேமுனி தெரிவித்துள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைப் பயணம் குறித்து, இந்தியன் “எக்ஸ்பிரஸ்’ நாளிதழுக்குக் கருத்துத் தெரிவித்துள்ள அவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நான் விரும்புகிறேன். அவர் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் ஒரு நல்ல மனிதர். ஆனால், அவர்…

Read More

ஹிக்கடுவ துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இருவரில் ஒருவருக்கு சத்திரசிகிச்சை!

ஹிக்கடுவ ஹோட்டலில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ரத்கம பிரதேச சபைத் தலைவர் கொல்லப்பட்ட நிலையில் காயமடைந்த இருவரில் ஒருவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று இரவு 11.45 அளவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ரத்கம பிரதேச சபைத் தலைவர் மனோஜ் மென்டிஸ் உயிரிழந்தார். அவருடன் இருந்த இருவர் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காயமடைந்தனர். அவர்கள் கராபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் மோப்ப நாய் கொண்டு பொலிஸார் சோதனை நடத்தியுள்ள நிலையில் சந்தேகநபர்கள் குறித்த எவ்வித…

Read More

அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது: ஜனாதிபதி

– ஏ.பி.மதன் – நல்லாட்சிக்கான தேசிய அரசாங்கத்தினைக் கவிழ்க்கும் மாற்றுச் சக்திகளின் கனவு, ஒருபோதும் நனவாகாது’ என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஊடக நிறுவனங்களின் தலைவர்களையும் ஊடகங்களின் பிரதானிகளையும் ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுப் (27) புதன்கிழமை சந்தித்து  நல்லாட்சி அரசாங்கத்தின் போக்குப் பற்றி விளக்கமளித்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Read More

2017க்கு முன்னர் அனைவருக்கும் புதிய அடையாள அட்டைகள்

2017ம் ஆண்டு முடிவடைவதற்கு முன்னர் நாட்டின் உள்ள அனைவருக்கும் புதிய தேசிய அடையாள அட்டைகளை விநியோகம் செய்யப்படவுள்ளன. இந்த அடையாள அட்டைகளுக்கு புதிய இலக்கங்களும் வழங்கப்படவுள்ளன. இந்தநிலையில் புதிய அடையாள அட்டை விநியோகிக்கப்பட்ட பின்னர் இரண்டு அடையாள அட்டைகளை வைத்திருக்கும் செயற்பாடுகளுக்கு முடிவு ஏற்படுத்தப்படும். புதிய அடையாள அட்டைகள் இலத்திரனியல் முறையில் தயாரிக்கப்படவுள்ளன.

Read More