Headlines

சவூதியில் தனது அன்றாட செலவுக்கு கிடைத்த பணத்தை சேமித்து இறந்து விட்ட தனது தந்தைக்கு நிரந்தர நண்மையை சேர்த்து வைப்பதர்காக ஏழைகளுக்கு கிணறு அமைத்து கொடுக்கும் சிறுவன்

படத்தில் நீங்கள் பார்க்கும் சிறுவன் சவுதி அரேபியாவை சார்ந்தவன் இவனது தந்தை மரணம் அடைந்து விட்டார் மரணடைந்த தனது தந்தைக்கு நிரந்தர நன்மைகளை சேர்த்து வைக்கும் விதத்தில் எதாவது நண்மைகளை செய்ய வேண்டும் என்று எண்ணிய அந்த சிறுவன் அவனுக்கு அவனது வீட்டில் செலவுக்காக வழங்கும் காசுகளை சேமிக்க துவங்கினான் சில மாதங்களாக தொடர்ந்து சேமித்த அந்த தொகையை ஒரு தொண்டு நிறுவனித்திடம் ஒப்படைத்து ஏழை முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் அவர்களின் தண்ணீர் தேவைகளை நிவர்த்தி செய்யும்…

Read More

கிணறு வெட்டும் போது வெளிவந்த மர்மப்பொருட்கள்!

யாழ்ப்பாணம் நல்லூர்ப் பகுதியில் கிணறு வெட்டும்போது மண்ணுக்குள் புதைந்திருந்த 2 மர்மப்பொருட்களை வெளியே எடுத்துள்ளதாகவும், மேலும் ஒரு மர்மப்பொருள் மண்ணிற்குள் புதைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த சம்பவம் நேற்று மாலை வேளையில் நடந்துள்ளது. மண்ணுக்குள் புதைந்திருந்த 2 மர்மப்பொருட்கள் வெளியேற்றப்பட்டுள்ளது எனவும் மேலும் ஒரு மர்மப்பொருள் இன்னமும் மண்ணிற்குள் புதைந்திருப்பதாகவும் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் குறித்த பகுதிக்குச் சென்ற யாழ் பொலிஸார் அதனை பார்வையிட்டதுடன், விசேட அதிரடிப்படையினரிடம் குறித்த…

Read More

விமல் வீரவன்ச ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜர்!

பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச நிதி முறைகேடுகள் குறித்த வாக்குமூலமொன்றினை வழங்குவதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சற்றுமுன்னர் (04.08.2016) ஆஜராகியுள்ளார். வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் அரசாங்க வளங்களை சட்டவிரோதமாக பயன்படுத்தியமை தொடர்பில் விமல் வீரவன்ச மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

உயர்தரப் பரீட்சை : 4 அதிகாரிகள் பணிநீக்கம்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மண்டபங்களில் பணியாற்றிய 4 கண்காணிப்பாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிரிஉல்ல, நுவரெலிய மற்றும் வெலிவேரிய ஆகிய கல்வி வலயங்களில் பணியாற்றிய கண்காணிப்பாளர்கள் நால்வரே இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, குறித்த நால்வருக்கும் பரீட்சை மண்டபங்களில் பணிபுரிய வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

Read More

மத வழிபாடுகளில் ஈடுபட்டு வரும் மஹிந்த

வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றார். முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸுடன் மஹிந்த தாய்லாந்துக்கு விஜயம் செய்துள்ளார். நேற்று தாய்லாந்தின் உடம் தானி விஹாரையில் நிர்மாணிக்கப்பட உள்ள கலச கோபுரமொன்றிற்கான புனித தாதுக்களை புதைக்கும் நிகழ்வில் மஹிந்த பங்கேற்றார். மஹிந்த ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் இந்த புனித தாதுக்கள் தாய்லாந்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் பங்கேற்கும் நோக்கில் நேற்று முன்தினம் மஹிந்த தாய்லாந்து விஜயம் செய்திருந்தார். இதேவேளை, லாவோஸ் எல்லைப் பகுதியின் மலை உச்சியில்…

Read More

சீகிரியா சுவரில் காதலனின் பெயரை கிறுக்கிய பெண்ணுக்கு 2 வருட சிறை

சீகிரியாவின் கண்ணாடி சுவரில் தனது காதலனின் பெயரை எழுதிய யுவதிக்கு 2 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பை சேர்ந்த உதேனி என்ற யுவதிக்கே இவ்வாறு 2 வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தனியார் கைத்தொழிற்சாலையொன்றில் பணியாற்றும் குறித்த யுவதி கடந்த பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி சீகிரியாவுக்கு சுற்றுலா சென்றிருந்தார். அப்போது தனது காதலனின் பெயரை கண்ணாடி சுவரில் எழுதி சேதப்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையிலேயே அவருக்கு தம்புள்ளை நீதிமன்றம் 2 வருட சிறைத்…

Read More

அமைதியைக் கட்டியெழுப்பும், நல்லிணக்க முயற்சிக்கு “நிதியம்”

சிறிலங்காவில் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கான பல பில்லியன் டொலர் நிதியத்தை உருவாக்குவது தொடர்பாக ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனுடன் சிறிலங்கா அரசாங்கம் பேச்சுக்களை நடத்தவுள்ளது. இன்று கொழும்பு வரும் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனுடன், ஐ.நாவின் அனுசரணையுடன், இந்த நிதியத்தை உருவாக்குவது குறித்து பேச்சுக்கள் நடத்தப்படும் என்று சிறிலங்காவின்  பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் மேற்கொள்ளப்படும் அமைதியைக் கட்டியெழுப்பும், நல்லிணக்க முயற்சிகள் பலவற்றுக்கும் ஆதரவை வழங்கும் வகையிலேயே இந்த நிதியத்தை…

Read More

அமெரிக்காவின் உதவிச் செயலாளர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர்களுக்கான அமெரிக்காவின் உதவிச் செயலாளர் திரு.டொம் மாலினோவ்ஸ்கிக்கும், பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சிக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று முந்தினம் (13) பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது. இச்சந்திப்பின் போது பாதுகாப்பு செயலாளர் ஹெட்டியாராச்சி மற்றும் திரு. மாலினோவ்ஸ்கி ஆகியோருக்கிடையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. அத்துடன் இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர்களுக்கான உதவிச் செயலாளருக்கு பாதுகாப்புச் செயலாளரினால் நினைவுச்சின்னமொன்றும்…

Read More

ஜனாதிபதி சட்டத்தரணிக்கு புதிய பதவி

ஜனாதிபதி சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதம் நேற்று (01) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இவர் இத்தாலி, மோல்டா, சைப்ரஸ், எல்பேனியா ஆகிய நாடுகளுக்கான தூதுவராக பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

சிவில் விமான சேவையை சர்வதேச தரத்திற்கு அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

நாட்டின் சிவில் விமான சேவையை சர்வதேச தரத்திற்கு ஏற்ப அபிவிருத்தி செய்து பேணிவருவதற்கு அரசாங்கம் அர்ப்பணத்தோடு உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்று (01) கொழும்பில் நடைபெற்ற ஆசிய பசுபிக் வலய சிவில் விமான சேவை பணிப்பாளர் நாயகங்களின் 53 ஆவது மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இலங்கை சிவில் விமான சேவை அதிகார சபையினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இம்மாநாடு இம்மாதம் முதலாம் திகதி முதல் 05 ஆம் திகதி…

Read More

இலங்கைக்கான கஸகஸ்தான் தூதுவர் – அமைச்சர் றிஷாத்

இலங்கைக்கான கஸகஸ்தான் தூதுவர் புல்லட் சார்சென்பயர் (Bulat Sarsenbayer) கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீனை அமைச்சின் அலுவலகத்தில் நேற்று (04/07/2016) சந்தித்து இரு நாடுகளின் பொருளாதார வர்த்தக உறவுகள் தொடர்பில் பேச்சு நடத்தினார். அடுத்த வருடம் 2017 இல் கஸகஸ்தானில் நடைபெறவுள்ள எக்ஸ்போ காண்காட்சிக்கான அழைப்பை அமைச்சர் றிசாத்திடம் அவர் விடுத்தார்.

Read More

உள்நாட்டுப் பொறிமுறைக்கு ஜப்பான் ஆதரவு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட, இலங்கையின் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைக்கு தாம் பூரண ஆதரவு வழங்குவதாக ஜப்பான் அறிவித்துள்ளது.

Read More