Headlines

ஷசி வீரவன்சவிடமும் விசாரணை

முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவங்சவின் மனைவியான ஷசி வீரவங்சவிடமும் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, நேற்று திங்கட்கிழமை ஆறு மணிநேரம்  விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இவர், இரண்டு கடவுச்சீட்டுகளை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்ட போது 15ஆயிரம் ரூபாய் ரொக்கப்பிணையிலும் கடும் நிபந்தனைகளுடன் கூடிய பிணையிலும் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Read More

பயிற்சியை பூர்த்தி செய்த 3225 பேருக்கு ஆசிரிய நியமனங்கள்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் கல்வியியல் கல்லூரிகளில் ஆசிரியர் பயிற்சியைப் பூர்த்தி செய்த 3225 பேருக்கு அடுத்த மாதம் 4ம் திகதி நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளன. 1046 தமிழ்மொழி ஆசிரியர்களும் இதில் இடம்பெற்றுள்ளனர். இது தொடர்பான வைபவம் அலரிமாளிகையில் அன்றைய தினம் காலை 10.00 மணிக்கு இடம் பெறவிருப்பதாக கல்வி அமைச்சின் கல்வி சேவைகள் உள்ளக மேலதிக செயலாளர் ஐ.எம்.கே.பி.இங்கசிங்ஹ தெரிவித்துள்ளார். இவர்களது நியமனம் அந்த மாதம் முதல் நடைமுறைக்கு வருமென்றும்  குறிப்பிட்ட அவர்  ஆசிரியர் வெற்றிடங்கள்…

Read More

முசலி, பூநொச்சிக்குளம் கிராமத்துடனான சந்திப்பு

முசலி, பூநொச்சிக்குளம் கிராமத்தினருடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துரையாடினார்.

Read More

பிரதான கட்சிகளை பலவீனப்படுத்தி நாட்டை குழப்பும் சூழ்ச்சிகளில் சர்வதேசம்

கே. அசோக்குமார் பிரதான அரசியல் கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளையும் பலவீனமடையச் செய்யும் முயற்சிகளில் சர்வதேச ரீதியில் சூழ்ச்சிகள் இடம்பெற்று வருவதாக அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று தெரிவித்தார். இது தொடர்பாக மக்கள் மிகவும் விளிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அமைச்சர் யாப்பா கேட்டுக்கொண்டார். ஐ.ம.சு. முன்னணியின் செய்தியாளர் மாநாடு நேற்று ஸ்ரீல.சு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பொது வேட்பாளர் ஒருவரை நியமித்து ஐ.தே.க.வினரை ஓரங்கட்டி ஐ.தே.க. முழுமையாக பலமிழக்கச்…

Read More

“கூட்டு எதிர்க்கட்சியில் பங்கேற்க SLFP க்கு அனுமதி கிடையாது”

கூட்டு எதிர்க்டக்சியின் கூட்டத்தில் பங்கேற்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு அனுமதி கிடையாது என கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். தேசிய அரசாங்கத்திற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினர் எதிர்வரும் 17ம் திகதி கொழும்பில் பாரிய பேரணி ஒன்றையும் கூட்டமொன்றையும் நடாத்த உள்ளனர். இது தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே துமிந்த திஸ்ஸாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இந்த கூட்டத்திலும்…

Read More

டெங்கினால் காத்தான்குடியில் இருவர் பலி

காத்தான்குடி நகர சபை பிரிவில் டெங்கு காய்ச்சலினால் கடந்த இரண்டு தினங்களில் சிறுமி உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். கடந்த சனிக்கிழமை காலை காத்தான்குடி ஆறாம் குறிச்சி அப்துல் ஜவாத் ஆலிம் வீதியைச் சேர்ந்த 7 வயதுடைய ஏ.ஸாயிதா ஸித்னா எனும் சிறுமியே காய்ச்சலினால் திடீரென உயிரிழந்துள்ளார். சில தினங்கள் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்த மேற்படி சிறுமி சனிக்கிழமை மிகவும் சோர்வடைந்த நிலையில் காணப்பட்ட போது காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்த நிலையில் குறித்த சிறுமி அங்கு…

Read More

நாடு முழுவதும் 1600 தபால் ஊழியர் பற்றாக்குறை

நாடு முழுவதும் 1600 தபால் ஊழியர் பற்றாக்குறை நிலவுவதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. தபால் ஊழியர்களின் பற்றாக்குறையினால் தபால் பகிர்ந்தளிப்பதில் பாரிய சிக்கல் கடந்த காலங்களில் நிலவியதாக தபால் அதிபர் ரோஹண அபேவர்தன தெரிவித்தார். சிரேஷ்ட உத்தியோகத்தர்களை கடமையில் இணைத்து கொள்வதற்கான பரீட்சை அண்மையில் நடைப்பெற்றதுடன் அந்தப்பரீட்சையில் சித்தியடைந்த 150 பேர் சேவைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இதேவேளை, 750 தபால் ஊழியர்களை கடமையில் இணைத்து கொள்ளவுள்ளதாகவும் 350 பேர் கடமையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் ரோஹண அபேவர்தன மேலும் தெரிவித்தார்.

Read More

லசந்த கொலை தொடர்பில் மேலும் 10 பேரிடம் விசாரணை

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க தொடர்பில் மேலும் பத்து பேரிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. புலனாய்வுப் பிரிவினர் இந்த விசாரணகைளை மேற்கொண்டு வருகின்றனர். நுவரெலியா பிரதேசத்தைச் சேர்ந்த கிராம சேவை உத்தியோகத்தர் ஒருவர் உள்ளிட்ட பத்து பேரிடம் வாக்கு மூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் உயிரிழந்த பிச்சை ஜேசுதாசன் வசித்து வந்த கிராம சேவைப் பிரிவில் கடமையாற்றிய கிராம உத்தியோகத்தரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஜேசுதாசனுடன் தொடர்புகளைப் பேணியவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது….

Read More

இஸ்லாமிய உலகுக்கு தலைமை வகிப்பது யார் என்பதில் ISIS க்கும், ஈரானுக்கும் போட்டி – இஸ்ரேல்

ஐ.எஸ்.ஸூக்கு எதிரான போரில் ஈரானின் உதவியைப் பெறுவதற்காக, அந்நாட்டின் மீதான தடைகளைத் தளர்த்துவது ஆபத்தானது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் ஜெருசலேமில் திங்கள்கிழமை கூறுகையில், “”தங்கள் சுய நலனுக்காகத்தான் ஐ.எஸ். அமைப்புக்கு எதிராக ஈரான் போரிடுகிறது. இஸ்லாமிய உலகுக்கு தலைமை வகிக்கப்போவது யார் என்பதில் ஐ.எஸ். அமைப்புக்கும், ஈரானுக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது” என்றார்.

Read More

மாகாண சபை உறுப்பினர் பாயிஸின் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு! அமைச்சர் ரிஷாட் பங்கேற்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மேல் மாகாண சபை உறுப்பினரும், கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளருமான பாயிஸின் ஏற்பாட்டில், இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். கொழும்பு ஹம்சா வித்தியாலயத்தில் நேற்று மாலை (30) இடம்பெற்ற இந்த இப்தார் நிகழ்வில், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, மக்கள் காங்கிரஸின் செயலாளர் எஸ்.சுபைர்தீன்,  மக்கள் காங்கிரஸின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ரம்ஸி உட்பட பலர் பங்கேற்றிருந்தனர்.    

Read More

மீண்டும் தேர்தலில் போட்டியிடமாட்டேன்- நிமால் ஸ்ரீபால

எதிர்வரும் காலங்களில் நடைபெறும் எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என சிவில் போக்குவரத்து மற்றும் விமானசேவைகள் அமைச்சர் நிமால் ஸ்ரீபால டிசில்வா தெரிவித்துள்ளார். அத்துடன், அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு தனது சட்டதரணி தொழிலையே செய்வதற்கு முடிவு எடுத்துள்ளதாகவும் அமைச்சர் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்திருப்பதாக சிங்கள இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், இந்த விடயம் தொடர்பில் தனக்கு மிகவும் நெருக்கமானவர்களிடம் அமைச்சர் தெரிவித்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

சு.கட்சிற்கு இன்றுடன் 65 வருடங்கள் பூர்த்தி

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன்(02) 65 வருடங்கள் பூர்த்தியடைகின்றன. எஸ்.டபிள்யு.ஆர்.டீ. பண்டாரநாயக்கவினால், ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து வந்து, புதிய அரசியல் கட்சியாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை 1951 ஆம் ஆண்டு செப்டம்பர் 02 ஆம் திகதி உருவாக்கப்பட்டது. உலகில் முதல் பெண் பிரதமரும், உலகில் முதல் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும் இக்கட்சியிலிருந்து உருவாகினர். இன்றைய நிறைவு தினத்தை கொண்டாடும் வகையில், ஸ்ரீ ல.சு.கட்சியினால் நாளை(04) குருணாகலையில் பெரும் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது….

Read More