கிண்ணியாவில் இயங்கும் இலங்கை மின்சார சபை பிரதேச காரியாலயம் எவ்வித வசதிகளுமின்றி பல குறைபாடுகளுடன் இயங்கி வருகிறது
திருகோணமலை மாவட்டத்துக்கு மின் சக்தி, எரிசக்தி மற்றும் தொழில் துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க, இராஜாங்க அமைச்சர் சம்பிக்க பிரேமதாச தலைமையிலான குழுவினர் விசேட விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். குறித்த விஜயத்தை (27) புதன் கிழமை மேற்கொண்டுள்ள அமைச்சர் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இலங்கை மின்சார சபை உயரதிகாரிகளுடனான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார தலைமையில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் உரையாற்றிய அமைச்சர் ரவி கருணாநாயக்க கொழும்பு மாத்திரம் அபிவிருத்தி அடைய வேண்டும்…
