யாழ். முஸ்லிம்களை மீள்குடியேற்றும் அமைச்சர் ரிஷாட்டின் முயற்சிக்கு பிரதமர் அங்கீகாரம்
யாழ்ப்பாண முஸ்லிம்களை மீள்குடியேற்றுவதில் இருந்துவரும் தடைகளை நீக்கி, அதனை வெற்றிகரமாக முன்டுப்பதற்கு இதுவரை காலமும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மேற்கொண்டு வந்த தீவிர முயற்சிகளுக்கு தற்போது உரிய பலன் கிடைத்துள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயத்தில் இதற்கான பச்சைக்கொடி காட்டப்பட்டிருப்பதாகவும் மௌலவி சுபியான் தெரிவித்தார். யாழ்ப்பாண கச்சேரியில் கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் தலைமையில் இடம்பெற்ற மீளாய்வுக்கூட்டத்தில், நீண்டகாலமாக இடம்பெயர்ந்து வாழும் இந்த மக்களின் மீள் குடியேற்ற தடைகள் குறித்தும், வீடுகளை அமைப்பதற்கு காணிகள் இல்லாத பிரச்சினைகள் தொடர்பிலும்…
