Headlines

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பங்களாதேஷ் அமைச்சர் டொஃபைல் அஹமட் பங்கேற்பு

பங்களாதேஷுக்கும் இலங்கைக்கும் இடையிலான கூட்டுப் பொருளாதார ஆணைக்குழுவின் ஐந்தாவது அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (8) காலை கொழும்பு சின்னமன் லேக்சைட் ஹோட்டலில் இடம்பெற்றது. கைத்தொழில் வர்த்தக திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் பங்களாதேஷ் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் டொஃபைல் அஹமட்டும் பங்கேற்று நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர். 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பங்களாதேஷ் தலைநகரான டாக்காவில் இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் ஒத்துழைப்பு கூட்டு ஆணைக்குழுவின் அமைச்சு மட்டத்திலான…

Read More

அல்ஹம்றா மத்திய கல்லூரி விளையாட்டு மைதான புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைப்பு

தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரி விளையாட்டு மைதான புனரமைப்பு பணிகள் நேற்று முன்தினம் (01.10.2016) பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திகுழு தலைவருமான அப்துல்லா மகரூப் அவர்களினால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

Read More

“புத்தாக்கமும் ஆய்வும் அபிவிருத்திச் செயற்பாடுகளில் ஒன்றித்துப் பயணிப்பவை” அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

புத்தாக்கமும், ஆய்வு நடவடிக்கைகளும் நாட்டின் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளில் பிரிக்க முடியாத பகுதியாகுமென்று கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றும் வரும் இன்கோ (INCO) கைத்தொழில் கண்காட்சியின் இரண்டாவது நாள் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.   இந்த நிகழ்வில் மாகா இஞ்சினீரிங் (MAGA Engneering) நிறுவனத்தின் தலைவர் கெப்டன் எம் டி குலரட்ண கௌரவ அதிதியாகக் கலந்து கொண்டார். இன்கோ 2018 தலைவர்…

Read More

‘புத்தளத்தில் உள்ளூர் முஸ்லிம்களையும், அகதி முஸ்லிம்களையும் மோதவிட்டு வாக்குகளைச் சூறையாட மு.கா முயற்சி’ அமைச்சர் ரிஷாட் குற்றச்சாட்டு!

-ஊடகப்பிரிவு- புத்தளத்தில் இடம்பெயர்ந்து வாழும் அகதி முஸ்லிம்களையும், உள்ளூர் மக்களையும் மோதவிட்டு, அதன்மூலம் வாக்குகளைச் சுவீகரித்து இழந்த செல்வாக்கையும், அரசியல் அதிகாரத்தையும் மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக, சதி வேலைகளில் மரக்கட்சிக்காரர்கள் தற்போது ஈடுபட்டுள்ளதாகவும், இவ்விரண்டு சாராரும் இதற்குப் பலியாகிவிடக் கூடாது என்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புத்தளத்தில், ஹுசைனியாபுரம் (உளுக்காப்பள்ளம்), ஹிதாயத் நகர் (கரிக்கட்டை), நான்காம் கட்டை, தில்லையடி சதாமியாபுரம், கரம்பை, ரத்மல்யாய ஆகிய இடங்களில், மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய தேசிய முன்னணியில் உள்ளூராட்சி சபைத்…

Read More

கடற் பிரதேசங்களில் பலத்த காற்று வீசும் சாத்தியம்!

புத்தளம் தொடக்கம் கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையுள்ள கடற் பிரதேசங்களில் இன்று பலத்த காற்று வீசும் சாத்தியங்கள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன் போது சில பகுதிகளில் 60 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் காற்று வீசக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில பிரதேசங்களில் மழை பொழியும் சாத்தியம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலைமை காரணமாக மீனவர்கள் மற்றும் கடற்படையினர் சற்று அவதானமாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு விடுத்துள்ளது.

Read More

12 மீனவர்கள் பொலிஸ் பிணையில் விடுதலை

-ரஸீன் ரஸ்மின் புத்தளம் மாவட்டத்தின் வன்னாத்தவில்லு பிரதேசத்திலுள்ள சிறுகடலில் தடை செய்யப்பட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட 12 மீனவர்களை இன்று புதன்கிழமை பொலிஸ் பிணையில் விடுதலை செய்துள்ளதாக வன்னாத்தவில்லு பொலிஸார் தெரிவித்தனர்.

Read More

அரசியல் கட்சிகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கரிப்பு?

அரசியல் கட்சிகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரசியல் கட்சிகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாக காணப்படுவதால் குறித்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அதன்படி அரசியல் கட்சியின் பிரதான உறுப்பினர்களில் ஐந்தில் ஒருவர் பெண் உறுப்பினராக இருக்க வேண்டும் என்பதே ஆணைக்குழுவின் நிலைப்பாடு எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை உள்ளுராட்சி மன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் 25 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

இலங்கை அதிகாரிகள் கனடாவருவதற்கு தடைவிதிக்க வேண்டும் ; பற்றிக் பிரவுன்

இலங்கையின் இராஜதந்திரிகளும், இராணுவ உயரதிகாரிகளும் கனடாவிற்கு வருவதிற்கு தடை விதிக்கவேண்டுமென ஆளும்கட்சிப் நாடாளுமன்ற உறுப்பினர் பற்றிக் பிரவுன் கடிதம் மூலம் கனடியப் பிரதமரைக் கேட்டுக்கொண்டுள்ளார். கனடிய மனிதவுரிமை மையத்தினால் நடாத்தப்பட்ட விசேட ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்து கொண்டபோது இந்த செய்தியினை தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் இலங்கை நிலவரம் பற்றித் தெரிவிக்கையில், இலங்கையில் மற்றயை இனங்களும் நீதியுடனும் சமாதானத்துடனும் வாழும் சூழ்நிலை இன்னமும் ஏற்படுத்தப்படவில்லை. எனவே கனடா இவ்வாறு தடைகளை விதிப்பதன் மூலம்…

Read More

தொலைபேசிக் கட்டணங்கள், திடீரென உயர்வு

சில தொலைபேசி இணைப்பு நிறுவனங்கள் செக்கனுக்கு 0.03 சத அதிகரிப்புடன் நிமிடத்துக்கு 1 ரூபா 80 சதமாக கட்டணத்தை அதிகரித்துள்ளது. சில தொலைபேசி இணைப்பு நிறுவனங்கள் 1 ரூபா 50 சதமாக ஒரு நிமிடத்துக்கான கட்டணத்தை அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்புடன் ஒரு தொலைபேசி பாவனையாளன் பல்வேறு வரிகளுடன் சேர்த்து 1 ரூபா 94 சதத்தை கட்டணமாக செலுத்த வேண்டும். இருப்பினும், ஏற்கனவே காணப்பட்ட பக்கேஜ் இணைப்புக்கான கட்டணம் இதுவரை அதிகரிக்கப்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், ஒரே தொலைபேசி இணைப்பு…

Read More

பொதுபல சேனாவின் நடவடிக்கையால்தான் மஹிந்த ஆட்சி கவிழ்ந்தது: யோகராஜன்

பொதுபல சேனாவின் நடவடிக்கைகளால்தான் சர்வதேசத்தின் ஆதரவை இழந்தோம் என்பது மட்டுமல்ல பொதுபல சேனாவின் நடவடிக்கைகள் காரணமாகவே மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியும் கவிழ்ந்தது என ஆர். யோகராஜன் எம்.பி. நேற்று சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபைச்சட்டத்தின் ஒழுங்கு விதிகள் தொடர்பான பிரேரணை விவாதத்தில் உரையாற்றும் போதே ஆர். யோகராஜான் எம்.பி இவ்வாறு தெரிவித்தார். சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் ஐ.நா.வில் இலங்கைக்கு ஆதரவு வழங்க உறுதியளித்து இறுதி நேரத்தில் பல நாடுகள்…

Read More

தமிழ் மொழி மூல பாடசாலைகளின் கல்வி மேம்பாடு குறித்து ஆராயும் கூட்டம்

கொழும்பு மாவட்டத்திலுள்ள தமிழ் மொழி மூலமான பாடசாலைகளின் கல்வித் தரத்தை மேம்படுத்துவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்ட தமிழ் மொழி மூல பாடசாலைகளின் கல்வி மேம்பாடு குறித்து ஆராயும் கூட்டம், 2015 /11 /27 கொழும்பு ஹமீட் அல்-ஹுசைனியா பாடசாலையில் நேற்று இடம்பெற்றபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான முஜீபுர் ரஹ்மான், மரிக்கார், இஷாக்…

Read More

சுவர்களில் எழுதப்பட்டு வரும் சிங்ஹ லே – பொலிஸார் விசாரணை

கொழும்பின் புறநகரான நுகேகொட பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான சில வீடுகளின் மதில் சுவர்களின் மீது ‘சிங்ஹ லே’ என்ற சிங்கள வாசகங்களை எழுதியவர்களை கண்டுபிடிப்பதற்காக விசாரணை நடந்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மிரிஹான பொலிஸாருக்கு கிடைத்துள்ள முறைப்பாடுகளை அடுத்தே இந்த விசாரணைகள் நடப்பதாக காவல்துறை பேச்சாளர் பிபிசியிடம் தெரிவித்தார். இனங்களுக்கு இடையில் பிரச்சனைகளை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டவர்களால் முன்னெடுக்கப்படும் விஷமத் தனமான நடவடிக்கை இது என்று அரசியல்வாதிகள் சிலரும் இந்த சம்பவத்தை கண்டித்துள்ளனர். தென்னிலங்கையில் அண்மைக்காலமாக ‘சிங்ஹ…

Read More