Headlines

மீண்டும் ஒரு அமெரிக்க பத்திரிகையாளரின் தலையை துண்டித்தது ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு

அமெரிக்காவை சேர்ந்த மற்றொரு பத்திரிகையாளரின் தலையை துண்டித்த காணொளியை ஐ.எஸ் வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 19ம் திகதி அமெரிக்க பத்திரிக்கையாளரான ஜேம்ஸ் போலே  தலையை துண்டித்து கொலை செய்து வெளியிட்ட காணொளியில் அடுத்ததாக மற்றொரு அமெரிக்க பத்திரிக்கையாளரான ஸ்டீவன் சாட்லாஃபை  கொலை செய்யப் போவதாக தெரிவித்திருந்தனர்.அதேபோல் தற்போது ஸ்டீவன் சாட்லாஃபை பத்திரிக்கையாளரை கொலை செய்து காணொளியை வெளியிட்டுள்ளனர். அதில்  காணொளியில் மண்டியிட்டு இருந்த ஸ்டீவன் கூறுகையில், ஒபாமா உங்களின் வெளியுறவுக் கொள்கை மூலம் ஈராக் விஷயத்தில்…

Read More

கூட்டு தொழுகையில் கலந்து கொள்ள உடல் ஊனமே தடைஇல்லை என்னும் போது அனைத்து உறுப்புகளிலும் ஆரோக்கியத்தை பெற்றவர்கள் ஜமாஅத் தொழுகையை அலட்சியம் செய்வது நியாயமா???

உடல் ஊனமுற்ற நிலையில் இருந்த போதும் கூட்டு தொழுகையை விட மனம் மின்றி இறைஇல்லத்திர்கு வந்து படுத்த நிலையில் ஊனமுற்ற ஒருவர் ஜமாத்துடன் தொழும் காட்சியை தான் படம் விளக்குகிறது சமூக வலை தளங்களில் மிக பெரிய வரவேர்ப்பை பெற்ற படம் இது இந்த படம் சொல்லும் செய்தி என்ன ஜமாத் தொழுகையின் முக்கியத்துவம் அந்த ஊனமுற்ற மனிதருக்கு தெரிந்திருக்கிறது அதனால் தனது ஊனத்தையும் பொர்படுத்தாமல் கூட்டு தொழுகைக்கு அவர் வந்து விடுகிறார்

Read More

இந்த வருடம் தேர்தல் இல்லை!

அடுத்த வருட ஆரம்பத்தில் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடைபெறலாம் என, உள்ளூராட்சிமன்ற மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (2) இடம்பெறும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். எல்லை நிர்ணயத்துக்கான, எல்லை நிர்ணய ஆணைக்குழுவால் வழங்கப்பட்டுள்ள காலஎல்லை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 31ம் திகதியுடன் நிறைவடைகின்றது. இந்தநிலையில் குறித்த காலஎல்லை, மேலும் ஒரு வருடங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, ஜனாதிபதி கூறியதற்கு இணங்க, அடுத்த வருடம் உள்ளூராட்சிமன்றத் தேர்தல்கள் நடைபெறும் என,…

Read More

சமூக சேவைக்கான அமைப்பை உருவாக்க கைகோர்க்குமாறு புத்தளம் அரசியல்வாதிகள், தனவந்தர்களுக்கு பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக் அழைப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக்கின் சொந்த நிதியோடு மேலும் அவரின் உறவினர்கள், நண்பர்களிடம் நிதி சேர்த்து ஒரு வீட்டினை அமைத்துக்கொடுக்கும் ஏற்பாட்டின் அடிப்படையில், அவ்வீட்டுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு வீட்டின் உரிமையாளரினால் (28) ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவிக்கையில், ஏழைகளுக்கான உதவிகளை மேற்கொள்ள ஓர் பொதுவான அமைப்பு ஒன்று அத்தியவசியமாகும். இவ்வாறான அமைப்புக்கள் எமது தொகுதியில் குறைவு. அதிலும் எம் சமூகத்திற்கு…

Read More

சம்மாந்துறை பிரதேச சபையின் தேசிய வாசிப்பு மாதத்தின் பரிசளிப்பு விழா!

சம்மாந்துறை பிரதேச சபைகுட்பட்ட நூலகங்கள் இணைந்து ஏற்பாடு செய்த, இனங்களுக்கிடையில் புரிந்துணர்வினை ஏற்படுத்துவதற்கான “வாசிப்பு” எனும் தொனிப்பொருளில், தேசிய வாசிப்பு மாதத்தின் பரிசளிப்பு விழாவும் கலை கலாச்சார நிகழ்வும் அண்மையில் சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் நடைபெற்றது. சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாட் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அம்பாரை மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஏ.ரீ.எம்.றாபி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ், இனங்களுக்கிடையில் புரிந்துணர்வினை ஏற்படுத்துவதற்கான…

Read More

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஆளும் கட்சி அமைச்சரா?

எதிர்க்கட்சிகளின் சில கட்சிகள் இது தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. ஆளும் கட்சியின் மிக முக்கியமான அமைச்சுப் பதவியை வகித்து வரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரான இவர், ஆளும் கட்சியின் நடவடிக்கைகள் குறத்து அதிருப்தியடைந்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவிற்கு நெருக்கமானவர்கள் பலரும் இவரை பொது வேட்பாளராக நியமிக்க ஆதரவினை வெளியிட்டுள்ளனர். ரணில் விக்ரமசிங்க பொது வேட்பாளராக போட்டியிடாது இந்த அமைச்சர் பொது வேட்பாளராக போட்டியிட்டால் எதிர்க்கட்சிகளில் பல ஆதரவளிக்கும் என தெரிவிக்கப்படுகிறது. ஆளும் கட்சிக்குள்…

Read More

வருங்கால கணவர்களைப் பற்றிய தகவல்களை அறியும் உரிமை வேண்டும்: சவுதியில் இளம்பெண்கள் போர்க்கொடி!

சவுதியில் திருமணத்திற்கு முன்னதாகவே ஆண்களைப் பற்றிய முழுவிவரங்களும் சொல்லப்பட வேண்டும் என்று பெண்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். திருமணத்துக்கு பின்னர் தங்களது கணவரின் இளமைக்கால வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களை கேள்விப்படும் சில பெண்கள் விவாகரத்துக்கு செல்வதால் சவுதியில் தற்போது விவாகரத்து வழக்குகள் பெருகி வருகின்றன. இதை தவிர்க்கும் வகையில் திருமணத்துக்கு முன்னதாகவே தாங்கள் திருமணம் செய்துகொள்ள இருக்கும் ஆண்களைப் பற்றிய விபரங்களை அறிந்து கொள்ளும் உரிமை வேண்டும் என சவுதியில் உள்ள இளம்பெண்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இதற்கு சவுதி…

Read More

மலேசியன் ஏர்லைன்ஸில் பணியாற்றிய 6000 பேருக்கு வேலை இழப்பு!

இவ்வருடம் அடுத்தடுத்து இரு மலேசியன் ஏர்லைன்ஸின் சர்வதேச பயண விமானங்கள் விபத்தில் சிக்கி அவற்றில் பயணித்த அனைவருமே உயிரிழந்து இருந்ததை அடுத்து மலேசியன் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனம் மிகவும் நட்டத்துடன் இயங்குவதால் சமீபத்தில் இந்நிறுவனத்தில் பணியாற்றிய 6000 பேரை வேலையை விட்டு நீக்கி வீட்டுக்கு அனுப்பியுள்ளது அந்நிறுவனம். மார்ச் 8 ஆம் திகதி கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்கு 239 பயணிகளுடன் சென்ற MH370 என்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் மாயமாகி இதுவரை ஒரு சிறிய…

Read More

விமல் வீரவன்ச பிணையில் விடுதலை

கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு போக்குவரத்திற்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உட்பட 7 பேரை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. விமல் வீரவன்ச, வீரகுமார திசாநாயக்க, ஜயந்த சமரவீர, மொஹமட் முசம்மில், ரோஜர் செனவிரத்ன, பியசிறி விஜேயநாயக்க உள்ளிட்ட 07 பேர்களை ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான்…

Read More

நேர்மைக்கு கிடைத்த வெற்றி!(குட்டிக்கதை)

ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் முதலாளி தனக்கு வயதாகி விட்டதால் அவர் நிறுவனத்தின் பொறுப்பை அவரிடம் வேலை செய்யும் ஒரு திறமையானவரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார். எல்லாரும் தன் அறைக்கு வருமாறு கட்டளை இட்டார். உங்களில் ஒருவர் தான் என் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்க வேண்டும், அதனால் உங்களுக்கு ஒரு போட்டி வைக்க போகிறேன். யார் வெற்றியடைகிறார்களோ அவர் தான் அடுத்த மேலாளர் என்றார். என் கையில் ஏராளமான விதைகள் இருக்கின்றன இதை ஆளுக்கு ஒன்று கொடுப்பேன். இதை…

Read More

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் கடந்த ஒன்பது மாதங்களில் அடையாளம் காணப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை விசேட பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த 9 மாதங்களில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 561 ஆக அதிகரித்துள்ளது. இதில் 51.44 வீதமான நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதவாகியுள்ளதாக விசேட பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

Read More

எதிர்­வரும் நூறு ஆண்­டு­களில் மனி­தர்­களை ரோபோக்கள் கட்­டுப்­ப­டுத்தும் அபாயம்

எதிர்­வரும் நூறு ஆண்­டு­க­ளுக்குள் மனி­தர்­களை ரோபோக்கள் கட்­டுப்­ப­டுத்தும் நிலை ஏற்­படும் வாய்ப்­புள்­ள­தாக உலகப் புகழ்­பெற்ற பிரித்­தா­னிய பௌதி­க­வி­ய­லா­ள­ரான ஸ்டீவன் ஹவ்கிங் எச்­ச­ரித்­துள்ளார். லண்­டனில் செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற நவீன மதி­நுட்பம் தொடர்­பான மாநா­டொன்றில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு எச்­ச­ரித்­துள்ளார். செயற்கை மதி­நுட்­ப­மா­னது மனி­தர்­களின் முடி­வுக்கு வழி­வகை செய்யக் கூடும் என அவர் தெரி­வித்தார். செயற்கை மதி­நுட்­பத்­துடன் கூடிய ரோபோக்­களின் உரு­வாக்­க­மா­னது அந்த செயற்கை மதி­நுட்­பத்தை யார் கட்­டுப்­ப­டுத்­து­வது என்­பதை விடவும் அந்த மதி­நுட்பம் அனைத்­தையும் கட்­டுப்­ப­டுத்தும்…

Read More