Headlines

ஆஸாத் சாலிக்கு தேசியப்பட்டியல் வழங்க கோரி பேரணி

-அனா- மேல் மாகாண சபை உறுப்பினரும் தேசிய ஐக்கிய முன்னனியின் தலைவருமான ஆஸாத் சாலிக்கு தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற பிரதி நிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்று வழியுறுத்தி நேற்று (திங்கள் கிழமை) மாலை ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் மீறாவோடையில் அமைதிப் பேரணி இடம் பெற்றது. நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலின் போது ஆஸாத் சாலி தேர்தலில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் கேட்ட போது தேர்தலில் போட்டியிட வேண்டாம் உங்களுக்கு தேசிப்பட்டடியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படும்…

Read More

கஹட்டகஸ்திகிலிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் மாணவர் விடுதி மற்றும் சுற்றுமதில் நிர்மானிப்பதற்கான அடிக்கல் நட்டும் நிகழ்வு

அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் நிதியொதுக்கீட்டின் கீழ் அ/கஹட்டகஸ்திகிலிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் மாணவர் விடுதி மற்றும் சுற்றுமதில் என்பனவற்றை நிர்மானிப்பதற்கான அடிக்கல் 2019.07.04 அன்று பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களினால் நடப்பட்டது. பாடசாலை அதிபர் சஹாப்தீன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் சமுக சேவையாளர் தேசமான்ய ARM.தாரிக், கஹட்டகஸ்திகிலிய பிரதேச சபையின் உப தலைவர் நஜீம், ஹொரொவ்பொத்தான பிரதேச சபை உறுப்பினர் டில்ஷான், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய…

Read More

அமைச்சர் ரிஷாட்டின் வாகனப் பாவனை தொடர்பான விளக்கம்

கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு ஒதுக்கப்பட்ட வாகனங்கள் தொடர்பில் இன்றைய (16) டெய்லி மிரர், லங்கா தீப பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகள் தொடர்பாக அமைச்சின் மேலதிகச் செயலாளர் T D S P பெரேரா திருத்தமொன்றை வெளியிட்டுள்ளார். தரிந்து ஜெயவர்தன என்பவரால் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கோரப்பட்ட அமைச்சர் ரிஷாட்டின் வாகனப் பாவனை தொடர்பில் வழங்கப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கையின் கணிப்பு தவறானதெனவும், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பாவனையில் 3 வாகனங்கள் மாத்திரமே …

Read More

மன்னார் புதுக்குடியிருப்பு விளையாட்டு மைதானத்தின் பார்வையாளர் அரங்கிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வின் பிரதம அதிதியாக றிப்கான் பதியுதீன்.

கௌரவ அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதிக்கீட்டில் சகல வசதிகளுடனான பார்வையளர் அரங்கிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று மன்னார் புதுக்குடியிருப்பு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது இந்த நிகழ்வில் அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளரும் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினருமான றிப்கான் பதியுதீன் மற்றும் மன்னார் பிரதேச சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் மற்றும் மீள்குடியேற்ற செயலணியின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் முஜீபுர் றஹ்மான் மற்றும் மன்னார் பிரதேசபை உறுப்பினர்கள் மேலும் மீள்குடியேற்ற செயலணியின் அதிகாரிகள் உட்பட…

Read More

சிறுமியின் கொலை: கம்பஹாவில் ஆர்ப்பாட்டம்

5வயதுச் சிறுமி கொட்டதெனியாவில் ஈவிரக்கமின்றி வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டு துணித் துண்டு ஒன்றினால்  கழுத்து இறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளமையை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுமியின் கொலைக்கான குற்றவாளியை கைது செய்து மரண தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று கம்பகாவில் இடம்பெற்றுள்ளது. இதேவேளை, சிறுமியின் சடலம் மீட்கப்பட்ட பகுதியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட தடயங்கள் மற்றும் சிறுமி உறங்கிய கட்டில் மெத்தையில் காணப்படும் கால் தடங்கள் தொடர்பாக பொலிஸார் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த கொலையுடன்…

Read More

இலங்கை தேசியக் கொடியை மாற்ற கோரிக்கை

இலங்கையின் தேசியக் கொடி மாற்றப்பட வேண்டும் என மகளிர் அமைப்பு ஒன்று கோரியுள்ளது. அக்கொடியில் சிங்கத்தின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது வன்முறையின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது எனும் கருத்து, மன்னாரில் நடைபெற்ற புதிய அரசியல் சாசனம் தொடர்பான கலந்தாய்வு கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. இலங்கையில் புதிய அரசியல் சாசனத்தை ஏற்படுத்துவது தொடர்பான மக்கள் கருத்தறியும் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அவ்வகையில் மன்னாரில் நடைபெற்ற கூட்டமொன்றில் பெண்கள் நலன்கள் மற்றும் மேம்பாட்டுக்கென சுயாதீனமாகவும் சுதந்திரமாகவும் செயல்படக் கூடிய ஆணைக்குழுவொன்றை ஏற்படுத்த புதிய அரசியல்…

Read More

விமானப் பணிப்பெண் நித்தியா கைது!

– எம்.எப்.எம்.பஸீர் – பணச் சலவை விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் நாமல் ராஜபக்க்ஷவின் கவர்ஸ் கோப்ரேஷன், என்.ஆர். கன்சல்டன் நிறுவன பணிப்பாளரும் விமானப் பணிப் பெண்ணுமான நித்திய சேனாதி சமரநாயக்க நேற்றுக் கைது செய்யப்பட்டார்.  

Read More

பஸ் கட்டணங்களையும் குறைக்க நடவடிக்கை

தனியார் பயணிகள் பஸ் உரிமையாளர் சங்க தலைவர் கெமுன விஜேரத்ன இதனை தெரிவித்துள்ளார். கட்டணங்கள், ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள அட்டவணைகளின் அடிப்படையில் குறைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 2013ஆம் ஆண்டு கட்டணங்கள் அதிகரிக்கப்பட்ட நிலையில் கடந்த வருடம் தனியார் பயணிகள் பஸ் கட்டணங்கள் குறைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

நான் அப்படி கூறவில்லை- சுப்பிரமணியன் சுவாமி தெரிவிப்பு

தமிழக மீனவர் படகுகளை விடுவிக்க வேண்டாம் என்று தாம் கூறவில்லை என  பா.ஜ.க.வின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். சுப்பிரமணியன் சுவாமி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இலங்கைக்கு தான் சென்று மகிந்த ராஜபக்சவை சந்தித்த போது, ‘தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்தால் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துங்கள், அவர்கள் தொழிலாளர்கள் அதனால் அவர்களை விடுவித்துவிடுங்கள், ஆனால் அவர்களது படகுகளின் உரிமையாளர்கள் பணக்காரர்கள் என்பதால் அவற்றை விடுவிக்க வேண்டாம் என்று சொன்னேன்….

Read More

முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயா அவர்களுக்கு!

-மனாப் அஹமத் றிசாத் , அக்கரைப்பற்று – இலங்கை போன்ற பல்லின மக்கள் வாழும் நாட்டில் குறு நில மன்னர்களாக வாழ்வதற்கு முஸ்லிங்களுக்கு என்ன தேவை இருக்கிறது. தற்காலிகமாக இரவோடிரவாக முஸ்லிங்களை பற்றி சிந்திக்காமல் இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்கள் தற்பொழுது சட்டரீதியாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. இப்பொழுது கிழக்கில் வாழும் தமிழ் முஸ்லிம் யாவரும் நலமாகத்தான் இருக்கிறார்கள். தமிழ் கூட்டமைப்பும், வடக்கு மாகாணசபை முதல்வராகிய நீங்களும்; வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைவதன் நோக்கம்…

Read More

அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம். ஜிப்ரி மக்கள் காங்கிரசில் இணைவு

பிரபல வானொலி, தொலைக்காட்சி அறிவிப்பாளரும், கல்விமானும் சிறந்த ஆய்வாளரும், அரசியல் விமர்சகருமான ஏ.ஆர்.எம்.ஜிப்ரி இன்று அகில இலங்கை மக்கள் காங்கிரசில் உத்தியோகப்பூர்வமாக இணைந்து கொண்டார். சாய்ந்தமருது, அல்/ஹிலால் மகாவித்தியாலயத்தில் நேற்று (03) இடம்பெற்ற, எழுத்தாளர் பீர்முகம்மத் எழுதிய “திறன்நோக்கு” என்ற நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே இந்த அறிவிப்பை அவர் பகிரங்கமாக விடுத்தார். அமைச்சர் றிஷாத் பதியுதீன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் உரையாற்றிய அவர், மர்ஹூம் அஷ்ரபின் பின்னர் முஸ்லிம் சமூகத்தை…

Read More

பான் கீ மூன் – அமைச்சர் றிஷாத் நாளை சந்திப்பு

-சுஐப் எம்.காசிம் – இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனை,  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் றிசாத் பதியுதீன் நாளை காலை (02/09/2016) கொழும்பில் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் அரசாங்கம் கொண்டுவரவுள்ள யாப்புச் சீர்திருத்தம், தேர்தல்முறை மாற்றம் மற்றும் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பான அதிகாரப் பகிர்வு ஆகியவற்றில், முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகள் குறித்தும், நிலைப்பாடுகள் தொடர்பிலும் ஐநா செயலாளர் நாயகம் பான்…

Read More