Headlines

உஷார் ரிப்போர்ட் : உங்கள் குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் புகைப்படங்கள் எடுக்கும் போது…!

மாயவரத்தான் கி ரமேஷ்குமார் இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா திரும்பிவிட்டார்கள். தற்போது கோடை விடுமுறைக்காக லண்டன் செல்ல எண்ணி, இலங்கை வழியாக பயணம் செய்திருக்கிறார்கள். திருச்சி விமான நிலையத்தில் பிரச்னை இல்லை.ஆனால் கொழும்பு விமான நிலையத்தில் அவரது இரண்டாவது மகளின் பாஸ்போர்ட்டினைப் பார்த்த விமான நிலைய அதிகாரிகள் அதில் புகைப்படத்தில் கன்னத்தில் வைத்திருந்த திருஷ்டிப் பொட்டினை மச்சம் என்று கருதி, அந்த மச்சம் இப்போது இல்லை. எனவே புகைப்படத்தில் இருக்கும் குழந்தையும், இங்கே…

Read More

நர்ஸாக மாறிய பூனை: நோயுற்ற பிராணிகளுக்கு ஆதரவாகவும் உதவியாகவும் இருக்கும் அதிசயம்

நோயுற்ற பிராணிகளுக்கு ஆதரவாகவும் அவற்றின் நோய் குணமாக உதவி செய்யும் அதிசய கருப்பு பூனை ஒன்று போலந்தில் உள்ளது. ராடேமேனேசா என்கிற அந்த கருப்பு பூனை போலந்தில் உள்ள ஒரு விலங்கு தங்குமிடத்தில் உள்ளது. இரண்டு மாத குட்டியாக இருக்கும் போது சுவாச பையில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக இந்த விலங்குகள் தங்குமிடத்திற்கு கொண்டுவரப்பட்டது. நோயிலிருந்து முழுமையாக குணமடைந்த பிறகு, அதற்கு நன்றி செலுத்தும் வகையில் ஒரு நர்ஸை போல செயல்பட தொடங்கியது அந்த பூனை. விலங்கு…

Read More

மூக்கில்லாமல் பிறந்த குழந்தையின் படத்தை தவறுதலாக நீக்கிவிட்டதாக ஒப்புக்கொண்டது பேஸ்புக்

அலபாமாவை சேர்ந்த டிமோத்தி எலி தாம்சன் என்ற மூக்கில்லாத குழந்தையின் புகைப்படத்தை தவறுதலாக நீக்கியதை பேஸ்புக் நிறுவனம் ஒப்புக்கொண்டது. தங்களது சமூக தரத்தையோ, விளம்பர கொள்கைகளையோ மீறியதாக அப்புகைப்படம் இல்லை என்று ஒப்புக்கொண்டுள்ள பேஸ்புக் நிறுவனம், அப்புகைப்படத்தை முதலில் ஆய்வு செய்தவர் தவறுதலாக ஆட்சேபித்ததால் அது அகற்றப்பட்டது. எனினும் புகைப்படத்தை வெளியிட்டவர் தரப்பில் ஆட்சேபம் எழுப்பப்பட்டதால் உடனடியாக தவறு சரிசெய்யப்பட்டு மீண்டும் அப்புகைப்படம் பேஸ்புக்கில் வெளியிடப்பட்டது என்று அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். முன்னதாக தனது மகனின்…

Read More

நேதாஜி மரணம் குறித்த மர்மங்களை வெளியிடலாமா? ஆய்வுக் குழுவை நியமித்தது இந்திய அரசாங்கம்

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மரணம் குறித்த மர்மங்களை வெளியிடலாமா என்று ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க மத்திய அரசு புதிய அதிகாரிகள் கொண்ட குழுவை நியமித்துள்ளது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மர்மங்களை வெளியிட வேண்டும் என்று நேதாஜியின் குடும்பத்தாரும் ஆர்வலர்களும் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர். இருப்பினும் பிரதமர் அலுவலகம் வெளி நாடுகளுடனான உறவு பாதிக்கப்படக் கூடும் என்று மறுத்து வந்தது. இந்நிலையில் ஜெர்மனில் நேதாஜியின் கொள்ளுப் பேரன் சூரியக் குமார் போஸ், பிரதமரை…

Read More

நேபாளத்தின் முன்னாள் பிரதமர் சூர்யா பஹடுர் தப்பா காலமானார்!

நேபாளத்தின் முன்னாள் பிரதமர் சூர்யா பஹடுர் தப்பா தனது 87 ஆவது வயதில் நேற்று (15) காலமானார். இவர் நேபாளத்தின் அரசியல் வாழ்வில் கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு மேல் இருந்தவராவார். அத்துடன் பிரதமர் பதவியில் சுமார் 05 முறைகள் பதவி வகித்துள்ளார். புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த  மார்ச் 29 ஆம் திகதி இந்தியாவின் ஜேகார்ன் மாநிலத்திலுள்ள மெடன்ரா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் அந்த வைத்தியசாலையிலேயே நேற்று (15) இவர் உயிரிழந்துள்ளார். ஆயினும்…

Read More

அப்பாவின் ஆபரேஷனுக்கு 46 லட்சம் நிதி திரட்டிக்கொடுத்த இன்டர்நெட்டின் செல்லக் குழந்தை

இன்டர்நெட் உபயோகிக்கும் அனைவருமே நிச்சயம் வாழ்வில் ஒருமுறையாவது வெற்றிக்குறி காட்டும் சம்மியின் புகைப்படத்தை பார்த்திருப்பார்கள். 2007-ம் ஆண்டு இன்டர்நெட்டில் வலம் வந்த ‘தி சக்சஸ் கிட்’ என்ற ‘மேமே’ வைரல் ஹிட்டானது. அந்த புகைப்படத்தில் இருந்த கொழு கொழு குழந்தை சம்மியை அனைவரும் ரசித்தார்கள். இந்த சக்சஸ் கிட்டின் அப்பா ஜஸ்டினுக்கு கடந்த மாதம் உடல் நலம் குன்றியது. மருத்துவர்கள் அவரது சிறுநீரகம் செயலிழந்திருப்பதாக தெரிவித்தனர். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலைமை உருவானது….

Read More

குழந்தைகளுக்காக சிறுநீரகத்தை விற்கும் தந்தை

இந்தியாவின் , குஜராத்தில் தந்தையொருவர் தனது குழந்தைகள் மூவரை குணப்படுத்தும் பொருட்டு , அவரது சிறுநீரகமொன்றை விற்பனை செய்ய முன்வந்துள்ளார். குறித்த தந்தையின் 2 பெண் குழந்தைகளும் , ஒரு ஆண் குழந்தையும் அதீத உடற்பருமனால் அவதிப்பட்டு வருகின்றனர். இவர்களைக் குணப்படுத்தும் பொருளாதார வசதியை குறித்த தந்தை கொண்டிருக்காமையாலேயே இம்முடிவை அவர் எடுத்துள்ளார். யோகித்தா ரமேஷ்பாய் நந்வானா (வயது 5 ), அனிஷா (வயது 3), ஹர்ஷ் (18 மாதங்கள்) ஆகியோரே இவ்வாறு அதீத எடையால் பாதிக்கப்பட்டுள்ளனர்….

Read More

எபோலா ஆட்கொல்லி நோய் தீவிரமடைந்து ஒரு வருடம்!:சர்வதேசம் கற்றுக் கொண்ட பாடங்கள்

கடந்த ஒரு வருடத்தில் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளை மையம் கொண்டு உலகில் தீவிரமடையத் தொடங்கிய எபோலா ஆட்கொல்லி நோயின் தாக்கத்துக்கு இதுவரை 25 000 பேர் உட்பட்டுள்ளதுடன் இதில் 10 000 இற்கும் அதிகமானவர்கள் பலியாகியும் உள்ளனர். ஆனால் உயிர் தப்பிய ஏனையவர்களின் வாழ்க்கையும் இன்னமும் ஊசல் நிலையில் இருப்பதுடன் சாதாரண நிலைக்குத் திரும்பவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவரை தடுப்பு மருந்தோ குணப் படுத்தும் மருந்தோ கண்டு பிடிக்கப் படாத எபோலா தொற்று நோயே நவீன உலகின்…

Read More

மகள் டாக்டர், மகன் விமானி, தந்தை ஆட்டோ டிரைவர்..!

– மது ராதா – ‘நான் ஆட்டோவில் ஏறினால் அந்த டிரைவர்களிடம் அதிகம் பேசுவதில்லை. சில நாட்களுக்கு முன் எனது தாயாரோடு கரூரில் ஒரு ஆட்டோவில் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த ஆட்டோவில் அவரது பிள்ளைகள் ஒருவர் மருத்துவராகவும் மற்றவர் விமானியாக வேலை செய்து வருவதாகவும் எழுதப்பட்டிருந்தது. இது எனக்கும் எனது தாயாருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. இதனை படித்த எனது தாயார் அந்த ஆட்டோ டிரைவரிடம் பேச்சுக் கொடுத்தார். எனது தாயார்: உங்களின் மகள் திருச்சி அரசு…

Read More

கியூபா பயங்கரவாத பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது

கியூபாவை பயங்கரவாத நாடுகள் பட்டியலில் இருந்து நீக்குவதாக  அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இந்த நேற்று இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். கியூபாவிற்றும் அமெரிக்காவுக்கும் இடையில் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக பகை நிலவி வந்தது. எனினும் கடந்த வாரம் அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெரி, கியூப உயர் மட்டத் தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார். அதனை தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கும் கியூப தலைவர் ராகுஸ் கெஸ்ரோவிற்கும் இடையிலான நேரடி சந்திப்பு…

Read More

ஜப்பானில் தாறுமாறாக ஓடிய விமானம்: 20 பயணிகள் காயம்

ஜப்பானில் ஓடுபாதையை தாண்டி தாறுமாறாக விமானம் ஓடியதால் ஏற்ப்பட்ட விபத்தில் அதில் பயணம் செய்த 20 பயணிகள் காயம் அடைந்தனர். தென் கொரியாவில் இருந்து ஜப்பானின் ஹிரோசோமா நகருக்கு சென்றது ஆசியானா நிறுவனத்தின் ஏர்பஸ் ஏ320 விமானம். விமானம் ஹிரோசோமா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஓடுபாதையை தாண்டி விமானம் சென்றதால் பயங்கர விபத்து ஏற்பட்டது. பயணிகள் மற்றும் 8 பணியாளர்கள் உட்பட அனைவரும் விமானத்தின் அவசர வழி மூலம் வெளியேறினார்கள். இந்த விபத்தில் யாறும்…

Read More

படகு கவிழ்ந்து 400 பேர் பலி: லிபியாவில் துயரம்

லிபியா அருகே படகு கவிழ்ந்ததில் 400 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.லிபியா பகுதியில் இருந்து புறப்பட்ட படகு ஒன்றில் சுமார் 540 பேர் வரை பயணம் செய்துள்ளனர். இத்தாலி நாட்டின் கடற்பகுதியில் படகு சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற இத்தாலி கப்பல் படை வீரர்கள் சுமார் 140 பேர்களை மட்டும் உயிருடன் மீட்டனர். விபத்தில் இறந்து போனவர்களின் 9 உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மாயமானோர் தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.மேலும் பலியானவர்களில் பெரும்பாலும்…

Read More