News
கட்டாரில் மைத்திரிபால, வெற்றி நிகழ்வுகள் (படங்கள்)
நடைபெற்று முடிந்த 07வது ஜனாதிபதித்தேர்தலில் புதிய ஜனநாயக கட்சியின் பொது வேட்பாளர் மைத்ரிபால ஸ்ரீசேன வெற்றி பெற்றதையடுத்து தோகா கத்தார்யில் இலங்கை சகோதரர் சந்தோசங்களை வெளிப்படுத்தினர்.
ஓமான் நாட்டிலும், மைத்திரி வெற்றியின் நிகழ்வுகள் (படங்கள் இணைப்பு)
Photos: Srilankan boys in Muscat,Oman. Celebration of victory!
எதிர்வரும் 14ஆம் திகதி பாப்பரசர் காலிமுகத்திடலுக்கு வருகை
அஸ்ரப் ஏ சமத் இலங்கைக்கு எதிர்வரும் 14ஆம் திகதி வருகைதர உள்ள பாப்பரசர் – போப் ஆண்டவர் பிராண்சிக்கு கொழும்பு காலிமுகத்திடலில் கத்தோலிக்க மக்களைத் தரிசிப்பதற்காக ஏற்கனவே மஹிந்த ராஜபக்சவின் ஆலோசனையில் மிகப் பிரமாண்டமானதொரு இரண்டு தரிசிப்புக்; கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. இத் திடலில் 50ஆயிரம் மக்களையே தரிசிக்க முடியும். இதற்காக பாரிய நிதி செலவளிக்கப்படுகின்றது. ஆனால் 8 இலட்சம் மக்கள் தரிசிப்பதற்காக வருவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் நேற்று சுதந்திர சதுககத்தில் ஜனாதிபதி மைத்திரி பதவியேற்புக்கு…
மஹிந்தவின் திட்டத்தை முறியடித்த இராணுவத் தளபதி!- ராஜித சேனாரத்ன
கொழும்பில் இன்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய, நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியெ ரத்தன தேர்ர் ஆகியோருடன் இணைந்து, நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார். கொழும்பில், இராணுவத்தினரை நிறுத்த வழங்கப்பட்ட உத்தரவை ஏற்க, இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்க மறுத்து விட்டார். அவசரகாலச்சட்டத்தின் மூலம், அதிகாரத்தை தக்க வைக்கும் திட்டத்தை முன்னைய அரசாங்கம் கொண்டிருந்தது. கடைசி நேரத்தில், உயர்மட்டத்தில், இருந்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை ஏற்க மறுத்ததன் மூலம், அரசாங்க அதிகாரிகள் அந்த…
ஜனாதிபதி தலதா மாளிகைக்கு விஜயம்! பிற்பகல் 2 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரை!
தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபடுவார். அத்துடன் மல்வத்து மற்றும் அஸ்கிரிய மாநாயக்க தேரர்களையும் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொள்வார். ஜனாதிபதியுடன் பொது எதிரணியின் கட்சித்தலைவர்களும் செல்லவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையின் 6 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள மைத்திரிபால சிறிசேன, பிற்பகல் 2 மணிக்கு தலதா மளிகையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணிக்கு சுதந்திர சதுக்கத்திலிருந்து கார் பவனியாக அத்தனகலவுக்கு ஜனாதிபதி புறப்படுவார். அங்கு, பண்டாரநாயக்கவின் நினைவுச் சின்னத்துக்கு அஞ்சலி…
வெறும் 6000 ரூபா!
இலங்கையின் ஆறாவது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவியேற்பு வைபவம் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றது. ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டார். நேற்றைய தினம் மாலை 6.30 மணிக்கு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் அவரது பதவியேற்பு வைபவம் இடம்பெற்றது. மிகவும் அமைதியான முறையில் மைத்திரிபால சிறிசேன தனது பதவியேற்பு வைபவத்தினை நடாத்தியிருந்தார். இதற்கான வைபவத்திற்காக 6000 ரூபா மட்டுமே செலவு செய்யப்பட்டதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே இந்த 6000…
மைத்திரி அமைச்சரவையில் ஜே.வி.பி., மு.கா., ரீ.என்.ஏ. இடம்பெறுவதில்லை என முடிவு!
அஸ்ரப் ஏ சமத் நாளை கண்டி தலாதா மாளிகையில் பி.பகல். 3.00 மணிக்கு பதவிப்பிரமாணம் செய்யும் அமைச்சரவையில் தமிழர் விடுதலைக் கூட்டணி, முஸ்லீம் காங்கிரஸ், ஜே.வி.பி இடம்பெறுவதில்லை என அக் கட்சிகள் தீர்மாணம் அரசுக்கு ஆதரவு ஆனால் அமைச்சர் பதவிகளை பெறுவதில்லை. முஸ்லீம் காங்கிரஸ் மைத்திரியின் 100 நாள் வேலைத்திட்டத்தில் ஆதரவு அளிப்பதே எமது நோக்கம், பதவிக்காகவும் நாம் ஒருபோதும் துணைபோகும் கட்சி அல்ல, அரசின் 100 நாள் வேளைத்திட்டத்தில் சொல்லியிருந்த சகல திட்டங்களுக்கும் நாம் ஆதரவளிப்பதாக…
நாட்டில் வாழும் சகல தமிழ் பேசும் மக்களிடத்திலும் அசாத் சாலி விடுக்கும் அவசர வேண்டுகோள்!
அஷ்ரப் ஏ சமத் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த தரப்பு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் வெற்றி கொண்டாட்டத்தை பயன்படுத்தி சிறுபான்மை மக்களை பெரும்பான்மை சமூகத்துடன் அல்லது ராணுவம் பாதுகாப்பு தரப்புடன் சண்டை மூட்டிவிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக இது தொடர்பாக பாதுகாப்ப்பு தரப்புக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் ஊடகங்களுக்கு வழங்கியுள்ள செய்தியிள் குறிப்பிட்டுள்ளார். வரும் தினங்களில் முஸ்லிம்கள் மற்றும் தமிழ் பேசும் மக்கள் மிக அவதனமாவும் நிதானமாகவும் செயற்படுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வடக்கின் புதிய ஆளுநராக எச்.எம்.ஜி.எஸ் பளிஹகாரவை நியமனம்
தமிழ் தேசிய கூட்டமைப்பு பொது எதிரணியிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடமாகாணத்துக்காக எச்.எம்.ஜி.எஸ் பளிஹகாரவை நியமித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு அவுஸ்திரேலியா வாழ்த்து
இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள மைத்திரிபால சிறிசேனவுக்கு அவுஸ்திரேலியா தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. அமைதியான, ஒழுங்கான ஜனாதிபதி தேர்தலை நடத்தி முடித்தமைக்காக இலங்கை மக்களுக்கும் குறிப்பாக தேர்தல் அதிகாரிகளுக்கும் தனது பாராட்டுக்களை தெரிவிப்பதாக, அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷப் (Julie Bishop) கூறியுள்ளார். புதிய ஜனாதிபதி, நல்லாட்சியை ஏற்படுத்துவது மட்டுமன்றி ஊழல் எதிர்ப்புக்காக தனது ஆணையை செயல்படுத்துவார் என்றும் அவுஸ்திரேலிய அரசாங்கம் விரும்புகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தேர்தல் முடிவுகளை ஏற்று அமைதியான முறையில் ஆட்சியை…
மைத்திரி அமைச்சரவை நாளை பதவியேற்பு(?)
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை நாளை ஞாயிற்றுக்கிழமை பதவியேற்கவுள்ளதாக தெரிகிறது. அமைச்சரவை அந்தஸ்துள்ள 25 அமைச்சர்கள், அமைச்சரவை அந்தஸ்தற்ற 10 அமைச்சர்கள் மற்றும் 25 பிரதியமைச்சர்கள் உள்ளிட்ட அமைச்சர்கள் குழுவே பதவியேற்கவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புதிதாக பதவியேற்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவோடு கலந்தாலோசித்து அமைச்சர்கள் குழுவை இறுதி முடிவு செய்யவார் என்று தெரிகிறது. இதனிடையே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்திலிருந்த முக்கிய அமைச்சர்கள்…
சர்வதிகார அரசுக்கெதிராக வாக்களித்த மக்ளுக்கு நன்றிகள்
எஸ்.அஸ்ரப்கான் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் இந்த நாட்டை இனவாதத்தின் கோரப்பிடிக்குள் தள்ளி ஒரு சர்வாதிகார ஆட்சியை நடாத்திய அரசைத் துாக்கி வீசுவதற்காக ஒன்றுபட்டு வாக்களித்த முஸ்லிம், தமிழ் சிறுபான்மை சமூகங்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காய் ஒன்றுபட்டு வாக்களித்த சிறுபான்மை மக்களுக்கு நன்றி தெரிவித்து கட்சி சார்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வரலாற்றில…
