News
அழுகிறது குழந்தை ; எரிகிறது நெருப்பு (கவிதை)
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் அழுகிறது குழந்தை எரிகிறது நெருப்பு கொதிக்கிறது நீர் சோற்றில் கை வைக்க சேற்றில் விளைந்த அரிசியினை அழும் குழந்தைக்கு உவர்ந்தளிப்பதாரோ? நீரினை ஆவியாக்கி பானையினை வெறுமையாக்கிட இந்த நெருப்பிற்குத் தான் எத்தனை பிரியம்? குழந்தையே! உன் அழுகையினை எப்போது நிறுத்துவாயோ? உனதுள்ளம் சாந்தியுற நீ-மனமாற அழு எனதுள்ளம் சாந்தியுற நீ-உன் அழுகையினை சிறிது நிறுத்து குழந்தையே! உன் கண்ணீர் துளிகள் வலிமையறியாது நீ-கண்ணீரைச் சிந்துகிறாய் அறிவாயோ குழந்தையே! உன் கண்ணீர் இறைவனின்…
பிரேமதாசவின் மகன் என்பதை நினைவில் வைத்திருந்த பிரதமா் மோடி
அஸ்ரப் ஏ சமத் இந்தியப் பிரதமா் நரேந்திர மோடி அவா்கள் இன்று ஜனாதிபதி அழுலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா. மற்றும் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவுடன் அமைச்சா்கள் சந்திப்பில் வீடமைப்பு சமுா்த்தி அமைச்சா் சஜி்த் பிரேமதாசாவை சந்தித்தாா். இச்சந்திப்பின்போது அமைச்சா் சஜித் இலங்கையில் மலையக, வட கிழக்கு மக்களுக்காக இந்திய வீடமைப்புத்திட்டங்களை அமைப்பது பற்றி வீடமைப்பு அமைச்சா் என்ற வகையில் பிரதமருக்கும் இந்திய அரசுக்கும் நன்றியைத் தெரிவித்தாா். அத்துடன் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் மகன் என்பதையும் இந்தியப்…
இந்தியாவுக்கு வரும் இலங்கையர்களுக்கு உடனடி விசா
இந்தியாவுக்கு வருகின்ற இலங்கை சுற்றுலா பயணிகளுக்கு உடனடி விசா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஏப்ரல் 14ஆம் திகதி முதல் அதற்கான அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தூதுக்குழுவினருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தூதுக்குழுவினருக்கும் இடையில் இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அமைச்சர் றிஷாத் – இலங்கைக்கான பெலாரஸ் தூதுவர் சந்திப்பு
இலங்கைக்கான பெலாரஸ் (BELARS) தூதுவருடன் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாத் ஏற்றுமதி அபிவிருத்தி அதிகாரசபையில் சந்தித்தார். இதில் இருதரப்பு வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை பெற்றுக்கொள்வதை மேற்கொள்ளுமாறு அமைச்சர் தூதுவரிடம் வேண்டிக்கொண்டார். துதூவர் கருத்துத்தெரிவிக்கையில் இலங்கையில் சிறந்த தரமான இறப்பர் இறிக்கின்றதால் இறப்பர் சார்ந்த முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதாகவும். இரசாயண பசளை வகைகளை உற்பத்தியில் முதலீடு செய்ய உதவுவதாகவும் தூதுவர் தெரிவித்தார்.
ஆடை உற்பத்தி கண்காட்சி அமைச்சர் றிஷாதினால் அங்குரார்ப்பணம்
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீனினால் 6 ஆவது தைத்த ஆடை உற்பத்தி கண்காட்சி அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. இக்கண்காட்சி மார்ச் 14 வரை விஐயராம மாவத்தை கொழும்பு 10 இல் உள்ள கண்காட்சி நிலையத்தில் நடைபெறும்.
மஹாபோதி சங்கத்துக்கு மோடி விஜயம்
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைகக்கு வருகைதந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மருதானையில் உள்ள மஹாபோதி சங்கத்துக்கு விஜயம் செய்தார்.
ரூபாவின் பெறுமதியை பலப்படுத்த இந்தியா உதவி
இலங்கை ரூபாவின் பெறுமதியை பலப்படுத்துவதற்காக 1.5பில்லியன் அமெரிக்க டொலர்களை கொடுத்து உதவுவதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இணக்கம் தெரிவித்துள்ளார்.
13ஆவது திருத்தத்தில் இலங்கை பக்கமே இந்தியா நிற்கும்: மோடி
இலங்கையின் புதிய சமாதான செயற்பாடுகள், இலங்கை தமிழர்களுக்கான சம அந்தஸ்து, 13ஆவது திருத்தம் மற்றும் அதனைவிடவும் மேலான விடங்களுக்காக இந்தியா, இலங்கையின் பக்கமே நிற்கும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இருதரப்பு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர், மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்பில் உரையாற்றுகையில், இலங்கை மற்றும் இந்திய மீனவர் பிரச்சினைகளுக்கு வாழ்வாதார மற்றும் மனிதாபிமானம் என்ற இரண்டு பரிமானங்கள் உள்ளன. இந்த பிரச்சினைக்கு…
மைத்திரி – மோடி சந்திப்பு; 4 முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து
மோடி, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்று வருகிறது. இரண்டு நாடுகளுக்கு இடையிலான முக்கிய விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இலங்கையின் முந்தைய அரசாங்கம், சீனா அரசாங்கத்துடன் நெருக்கமாக இருந்து வந்ததுடன் புதிய அரசாங்கம் இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளை பேணி வருகிறது. இலங்கை சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்று வருகிறது. இரண்டு நாடுகளுக்கு இடையிலான முக்கிய…
இந்தியப் பிரதமரின் வருகையை முன்னிட்டு சந்தோஷமாகவுள்ளேன் ஜனாதிபதி
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வருகையால் இந்தியாவிற்கும் இலங்கைக்குமிடையிலான உறவு வலுவடைந்துள்ளமையால் இன்று நான் மிகவும் சந்தோஷமாகவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து சந்தித்த போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், கடந்த 28 ஆண்டுளுக்கு பின்னர் இந்திய பிரதமர் ஒருவர் இலங்கை வந்துள்ளார். பௌத்தம் மற்றும் இந்து மதங்களால் இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையே…
செவனப்பிட்டியில் காத்தான்குடி வேன் குடைசாய்ந்ததது
ஏறாவூர் அபூ பயாஸ் காத்தான்குடி மொடன் ஜுவலர்ஸ் உரிமையாளர் அல்ஹாஜ் UL. அஹமத் மொஹைதீன் (65) அவர்கள் கொழும்பு ஆசிரி வைத்தியசாலையில் நேற்றிரவு வபாத்தானதால், அன்னாரது ஜனாசாவை ஏற்றிக்கொண்டு காத்தான்குடி நோக்கி வரும்போது அதனை பின்தொடர்ந்து வந்த வேன் செவனப்பிட்டியில் வைத்து இன்று அதிகாலை 03 .00 மணியளவில் தடம் புறண்டு விபத்துக்குள்ளானது. எனினும் இதனால் வேன் சேதமடைந்த போதிலும் எவரும் எதுவித காயங்களுமின்றி உயிர் தப்பினர். அல்ஹம்துலில்லாஹ்!
இரு தலைகளை கொண்ட மாடு ஏலத்தில் விற்பனை
அவுஸ்திரேலியாவில் வட குயீன்ஸ்லாந்தில் இரு தலைகளுடன் பிறந்த மாடொன்று 400 அமெரிக்க டொலர் விலைக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது. அந்த மாட்டின் இரண்டாவது முகத்தில் ஒரு கண்ணும் ஒரு பல்லும் செயற்படும் நாசித் துவாரங்களும் உள்ளன. பரம்பரை ரீதியான பாதிப்புக் காரணமாக இவ்வாறு மாறுபட்ட தோற் றத்தில் பிறந்த மேற்படி மாடு, இறைச்சி வெட்டும் நிலையமொன்றுக்கு விற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
