News
புனித போரில் முழு கவனம் செலுத்துவதர்காக தனது திருமணத்தையே நிறுத்திய சவூதி இராணுவ வீரர்!
நீங்கள் படத்தில் காணும் இராணுவ வீரர் சவுதி அரேபியாவை சார்ந்தவர் அவருக்கு திருமணத்திர்கு நாள் குறிக்க பட்டு திருமணத்திர்கான அழைப்புகளும் வழங்க பட்டு விட்ட நிலையில் தான் சவுதி அரசு ஆசிபத்துல் ஹஸ்மு என்ற போரை அறிவித்தது உடனடியாக அந்த வீரர் இது முக்கியத்துவம் வாயந்த போர் இந்து போரில் கலந்துகொண்டு அசத்திய வாதிகளை வீழ்த்துவதர்கு வாய்ப்பு கிடைத்தாலும் அல்லது அதில் கலந்து கொண்டு சத்தியத்தை நிலை நாட்டும் நோக்கில் வீர மரணம் அடைய நேரிட்டாலும் இரண்டுமே…
குவைத் வாழ் சகோதரர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி
பீர் மரையாக்கர், குவைத் (நெல்லை) குவைத்தில் சில மாதங்களுக்கு முன்பு ஒரு அவசர சட்டம் கொண்டு வர பட்டது அந்த சட்டத்தின் மூலம் புராஜெக்ட் விசாவில் வேலை பார்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தனாசில் பெற்று வெளியே வேலை பார்க்க தடை போடப்பட்டது விசா காலம் முடிந்து விட்டால் நேரடியாக ஊருக்கு தான் செல்ல வேண்டும் என்ற ஒரு பரிதாப நிலை இருந்தது மகிழ்ச்சியான தகவல் *********************** தற்சமயம் குவைத் அரசு வெளி நாட்டவரின் கஷ்ட நிலை…
19ஆவது சட்டத்திருத்தம்: உச்சநீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு
இலங்கை அரசியல் சாசனத்தின் 19ஆவது சட்டத் திருத்தத்தின் சில பிரிவுகளை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரத்தை மட்டுப்படுத்துவது, தேர்தல் நடைமுறையில் மாறுதல் கொண்டுவருவது உட்பட பல விஷயங்களை உள்ளடக்கிய அரசியல் சாசனத்தின் 19ஆவது திருத்ததை மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசு நாடாளுமன்றத்தில் சமர்பித்தது. . அமைச்சரவையின் தலைவராக பிரதமர் செயல்படுவது, அமைச்சர்களின் எண்ணிக்கையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை பிரதமருக்கு வழங்குவது போன்ற சில அம்சங்களுக்கு நாடாளுமன்ற ஒப்புதலுக்கு…
அஸ்கிரிய பீடாதிபதியின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி கௌரவம்
காலம்சென்ற அஸ்கிரிய பீடாதிபதி சங்கைக்குரிய ஸ்ரீ புத்தரக்கித்த தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (09) இறுதி மரியாதை செலுத்தினார். தேரரின் பூதவுடன் வைக்கப்பட்டுள்ள அஸ்கிரிய மகா விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி இறுதி கௌரவம் செலுத்தியதுடன் விகாரையிலுள்ள ஏனைய பிக்குமாருக்கும் மாணவ பிக்குகளுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தார்.
மன்னாரில் வடமாகாண முஸ்லிம் பிரஜைகள் குழு – அமைச்சர் றிஷாத் தலைமையில் தலைமைக் காரியாலயம் திறப்பு விழா
இந்த நாட்டில் யுத்தம் முடிவுற்று சமாதான சூழல் ஏற்பட்டதன் பின்னரும் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லீம்கள் தமது சொந்த நிலங்களில் மீள் குடியேறுவதில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். வடமாகாண முஸ்லீம்கள் எதிர்கொள்ளும் சவால்களை ஒருமித்த குரலில் வெளிப்படுத்தும் நோக்கில் மன்னார், முல்லைத்தீவு, வவுனியா கிளிநொச்சி, யாழ்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் உள்ள முஸ்லிம் உலமா பிரதிநிதிகளைக் கொண்டு இயங்கஉள்ள இவ்வமைப்பு இன்று 10-04-2015 மாலை மூன்று முப்பது மணி அளவில் அதன் பிரதான காரியாலய திறப்பு…
என்னை இனவாதியாக காண்பிக்கின்றவர்களே ! அது உண்மை என்றால் …3500 வீடுகளை தமிழ் மக்கள் எவ்வாறு பெற்றிருப்பார்கள் …
வவுனியாவிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா – வன்னி மாவட்டத்தில் வாழும் மக்களுக்கென கடந்த காலங்களில் 15 ஆயிரம் வீடுகள் வரை பல்வேறு நிறுவனங்கள் நிர்மாணித்துக்கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ள கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சரான றிசாத் பதியுதீன் இதில் அதிகமான வீடுகள் தமிழ் மக்களுக்கே வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். வவுனியா அல்-அரபா பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக்கட்டிடத் திறப்புவிழாவிலும்,வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்விலும் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். பாடசாலை அதிபர் எம்.புஹாரி தலைமையில் இடம் பெற்ற…
ஒரு சமூகமும் பிரிதோர் சமூகத்தை அடிமைபடுத்துவதை தவிர்க்க தேசிய ஒற்றுமைக்கான செயற்குழு
எந்த ஒரு சமூகமும் பிரிதோர் சமூகத்தை அடிமைபடுத்துவதை தவிர்க்க வேண்டும் என்பதனை உறுதிபடுத்தும் நோக்கில் தேசிய ஒற்றுமைக்கான செயற்குழு ஒன்றை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடிய அமைச்சரவையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட இது தொடர்பான பத்திரத்துக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இது தொடர்பில் அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பது குறித்து வெளியிடப்பட்டுள்ள குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் பொருளாதார, சமூக, கலாச்சார மற்றும் அரசியல் ஆகிய…
சிங்கள ராவய அமைப்பின் முக்கியஸ்தர்கள் 24 பேருக்கு அழைப்பாணை
கூரகல பள்ளிவாசலை தகர்த்து அந்த இடத்தில் புத்தர் சிலை ஒன்றை நிறுவும் நோக்கோடு அத்துமீறிய சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் உள்ளிட்ட 24 பேருக்கு பலாங்கொடை நீதிவான் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. நீதிமன்ற கட்டளையை உதாசீனம் செய்து கூரகலயில் வன்முறையை தூண்டும் விதமாக செயற்பட்டமை தொடர்பில் கல்தோட்டை பொலிஸார் பலாங்கொடை நீதிவான் நீதிமன்றின் மேலதிக நீதிவான் சுனில் ஜயசேனவிடம் முன்வைத்த அறிக்கைக்கு அமைவாகவே எதிர்வரும் 28ஆம் திகதி மன்றில் ஆஜராக அக்மீமன தயாரத்ன…
பூட்டான் பிரதமருடன் ஜனாதிபதி இன்று சந்திப்பு
இலங்கைக்கு வருகை தந்துள்ள பூட்டான் பிரதமர் ஷெரிங் டொப்கே இன்று வௌ்ளிக்கிழமை ஜனாதிபதி மைததிரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பூட்டான் பிரதமர் நேற்றுக்காலை இலங்கை வந்தடைந்தார். காலை 10 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பூட்டான் பிரதமரை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர வரவேற்றார். இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும்…
காவத்தை பெண் கொலை.. மகனின் அதிர்ச்சி வாக்குமூலம். (காதலுக்காக தாயை கொன்று உடைகளின்றி வீசிய பாதகன்)
இரத்தினபுரி, கஹவத்தை – கொட்டகெதனவில் மர்மமான முறையில் கடந்த சனியன்று நள்ளிரவுக்கு பின்னர் கொலை செய்யப்பட்டிருந்த 39 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயின் கொலை தொடர்பில் அவரது 18 வயதுடைய மகனை பொலிஸார் கைது செய்துள்ளனர். காவத்தை – கொட்டகெத்தென்ன பகுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளார். 18 வயதான குறித்த நபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது….
இந்தியாவின் தேர்தல் ஆணையாளராக, செய்யது நசீம் அகம்மது சைதி நியமனம்
இந்திய தலைமை தேர்தல் கமிஷனராக செய்யது நசீம் அகம்மது சைதி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமன உத்தரவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பிறப்பித்துள்ளார். இவர் வரும் ஏப்ரல் -19ம் தேதி பொறுப்பேற்கவுள்ளார். ஜனாதிபதி அலுவலக செய்திக்குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்திய தலைமை தேர்தல் கமிஷனராக இருந்து வரும் ஹரி சங்கர் பிரம்மா , வரும் 18ம் தேதி ஓய்வு பெறுகிறார். இந்த பொறுப்பில் ஜனாதிபதி நியமித்துள்ள செய்யது நசீம் உத்திரபிரதேசத்தை சேர்ந்தவர். 1976 ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்றவர்….
வவுனியா அரபா மகாவித்தியாலயத்தின் இடம் பெற்ற விளையாட்டு போட்டி
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான றிஷாத் பதியுதீன் அவர்கள் வவுனியா அரபா மகாவித்தியாலயத்தின் நேற்று (09) இடம் பெற்ற விளையாட்டு போட்டியில் பிரதம அதிதியாகக் கலநதுகொண்டபோது.
