News
கல்முனையை காப்பாற்றுவதற்காக, சாய்ந்தமருது கை கோர்த்துள்ளது: சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டு ஜெமீல் தெரிவிப்பு
சாய்ந்தமருது மக்கள் தமக்கான உள்ளுராட்சி சபையினைக் கோரி கல்முனை பிரதேசத்துடன் கடந்த காலங்களில் முரண்பட்டிருந்த போதும், தற்போதைய நிலையில் கல்முனையைக் காப்பாற்றுவதற்காக, முஸ்லிம்கள் என்கிற வகையில் கல்முனை மக்களுடன் சாய்ந்தமருது மக்கள் கைகோர்த்திருப்பதாக, கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், அகில இலக்கை மக்கள் காங்கிரசின் பிரதித் தலைவருமான ஏ.எம். ஜெமீல் தெரிவித்தார். இன ரீதியானதும், நிலத்தொடர்பற்றதுமான பிரதேச செயலகத்தை வழங்கக் கூடாது எனக் கோரி, கல்முனையில் முஸ்லிம் மக்கள் நடத்திவரும் சத்தியாக்கிரக நடவடிக்கையில், இன்று வெள்ளிக்கிழமை…
முன்னாள் மாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு புனரமைப்பு செய்யப்பட சாவற்கட்டு கிராமத்திற்கான 1.5 மில்லியன் பெறுமதியான கொங்கிரீட் விதியினை திறந்து வைத்தார்
முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் கம்பெரலிய திட்ட ஒதுக்கீட்டில் இருந்து ரூபாய் 1.5 மில்லியன் பெறுமதியில் அமைக்கப்பட்ட சாவற்கட்டு கிராமத்திற்கான கிராமத்தகத்திற்கான கொங்கிரீட் வீதி மக்கள் பாவனைக்கு வழங்கும் நிகழ்வு மன்னார் நகர சபை உறுப்பினர் வடிவுக்கரசி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது இந்நிகழ்விற்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் பிரதிநிதியாகவும் நிகழ்வின் பிரதம அதிதியாகவும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்கள் கலந்துகொண்டு புனரமைப்பு…
முன்னாள் மாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு மன்னார் சவுத்பார் கிராமத்திற்கான 1 மில்லியன் பெறுமதியான கொங்கிரீட் பாதையினை திறந்துவைத்தார்
முன்னால் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் கம்பெரேலிய வேலைத்திட்டத்தின் கீழ் ரூபாய் 1 மில்லியன் பெறுமதியில் அமைக்கப்பட்ட சவுத்பார் கிராமத்திற்கான கொங்கிரீட் வீதி மக்கள் பாவனைக்கு வழங்கும் நிகழ்வு மன்னார் நகர சபை உறுப்பினர் கலா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது இந்நிகழ்விற்கு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் பிரதிநிதியாகவும் நிகழ்வின் பிரதம அதிதியாகவும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்கள் கலந்து சிறப்பித்தார் வீதி திறப்புவிழா…
கல்முனை வடக்கு உப பிரதேச செயலகப் பிரச்சினையில் தலையிட்டு வியாழேந்திரன், கருணா போன்றவர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜியாகி விட்டனர் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி தெரிவித்தார்.
கல்முனை வடக்கு உப பிரதேச செயலகப் பிரச்சினையில் தலையிட்டு வியாழேந்திரன், கருணா போன்றவர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜியாகி விட்டனர் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் அமீர் அலி தெரிவித்தார். இது தொடர்பில் நாடாளுமன்றில் உரையாற்றிய அவர், கல்முனை வடக்கு உப பிரதேச செயலகப் பிரச்சினையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் மட்டுமே தீர்க்க முடியும். வேறு எந்தவொரு சக்தியாலும் அதனை மேற்கொள்ளமுடியாது. காவியுடை தரித்தவர் எல்லாம் இன்று ஐ.ஜி.பி.க்களாகி விட்டனர். இவர்கள்தான் இன்று அமைச்சர்களை பதவி…
அதுரலியே தமிழ்-முஸ்லிம் இனக்கலவரத்தை உருவாக்க முயற்சிக்கிறார் – பாராளுமன்றில் அப்துல்லா மஃறூப் எம்.பி
அதுரலியே தமிழ்-முஸ்லிம் இனக்கலவரத்தை உருவாக்க முயற்சிக்கிறார் – பாராளுமன்றில் அப்துல்லா மஃறூப் எம்.பி கிழக்கில் தமிழ் மக்களின் காணிகளை முஸ்லிம்கள் அபகரிப்பதாக அதுரலியே ரத்ன தேரர் கருத்துக்களை கூறி தமிழர்களை முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டிவிடும் சதிகளை முன்னெடுக்கின்றார் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் குறிப்பிட்டார். சிங்களவர்களை முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டிவிடும் முயற்சி தோல்வியடைந்த காரணத்தினால் இன்று தமிழர்களை முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டிவிருகின்றனர் என்றார். பாராளுமன்றத்தில் இன்று…
விமலின் மூளையை பரிசோதிக்கவும் –ரிஷாத் பாராளுமன்றத்தில் கோரிக்கை
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மூளையை பரிசோதிக்க வேண்டுமென்று முன்னாள் அமைச்சர்ரிஷாத் பதியுதீன் பாராளுமன்றத்தில் வேண்டுகோள் ஒன்றை விடுத்தார். பாராளுமன்றத்தில் இன்று (18) உரையாற்றிய அவர் சபைக்கு தலைமை தாங்கிய உறுப்பினரிடம் இந்தவேண்டுகோளை விடுத்தார். அவர் மேலும் கூறியதாவது , எனது தாயின் சகோதரர் ஒருவரின் மகள்தான் தெமடகொட தற்கொலை குண்டுதாரி என்று பாராளுமன்றஉறுப்பினர் விமல் வீரவன்ச, நான் சபையில் இல்லாத வேளை தெரிவித்திருக்கின்றார். “எனது தாய்க்கு சகோதரர் இல்லை , இது போன்ற பொய்யான பிரசாரங்களை…
வாக்களித்த மக்களின் நலனும், சமூக மேம்பாடுமே எமது நோக்கம்! அபிவிருத்தியால் இன்னும் மிளிரும் எமது பிரதேசம்!! – இஸ்மாயில் எம்.பி. சூளுரை
“திகாமடுல்ல மாவட்ட மக்கள் என்னை ஆதரித்து, அங்கீகரித்து கடந்த பராளுமன்றத் தேர்தலில் 33 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை அளித்தமையை என்றும் மறவாமல் இருக்கின்றேன்.” – இவ்வாறு திகாமடுல்ல மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் தெரிவித்தார். ‘ரண் மாவத்’ அபிவிருத்தி திட்டத்தினூடாக எமது பிரதேசத்திலுள்ள இரு பெரும் வீதிகளுக்கு காபட் இடும் வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்த பின்னர் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், சில மாதங்களுக்கு முன்னர்…
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் நிதி ஒதுக்கீட்டில் எருக்கலம்பிட்டி கிராமத்திற்கான விதிப்புனரமைப்பு பணிகள் ஆரம்பம்…
மன்னார் பிரதேசபை உறுப்பினர் மஹிஷா அவர்களின் வேண்டுகோளில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் ருக்கலம்பிட்டி கிராமத்திற்கான கொங்கிரீட் பாதை ,வேலைத்திட்டம் ஆரம்பித்துவைக்கப்பட்டது. மன்னார் பிரதேசபை தவிசாளர் எஸ்.எச்.எம் முஜாஹிர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு ஆரம்பித்துவைத்தார் இந்த நிகழ்வில் அதிபர் அஸ்மி மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஊர்மக்களும் கலந்துகொண்டனர்…
இலங்கை முஸ்லீம்கள் ஜம்யதுல் உலமாவின் வழிகாட்டலை மீறி எதிர்காலத்தில் எவரும் செயற்படுவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் சமகால அரசியல் நிலைப்பாடு தொடர்பாக மக்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டத்தில் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை முஸ்லீம்கள் அகில இலங்கை ஜம்யதுல் உலமாவின் வழிகாட்டலை மீறி எதிர்காலத்தில் எவரும் செயற்படுவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். சமகால அரசியல் தொடர்பாக பிரதேச மக்களுக்கு விளக்கம்; அளிக்கும் கூட்டம் (14.06.2016) மாலை வாழைச்சேனை அந் நூர் தேசிய பாடசாலை பிரதான மண்டபத்தில் எம்.எஸ்.கே.ரஹ்மான் தலைமையில் இடம் பெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றம் போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்….
மஞ்சன்தெடுவாய் பிரதேசத்தில் கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு வீதிகள் கையளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலி கலந்துகொண்டார்.
மஞ்சன்தெடுவாய் பிரதேசத்தில் கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ் 20லட்சம் நிதி ஒதுக்கீட்டின் மூலம் இரு வீதிகள் புணரமைக்கப்பட்டு மக்களின் பாவணைக்கு கையளிக்கும் நிகழ்வு 16.06.2019 இணைப்பாளர் றம்ழான் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டு திறந்து வைத்தார். இந்நிகழ்வில் காத்தான்குடிநகர சபை உறுப்பினர் ஜெளபர் ஹான், முன்னாள் நகரசபைஉறுப்பினர் மாஹிர்ஹாஜி, மத்திய குழு செயலாளர் சப்ரி, கொள்ளைபரப்புச் செயலாளர் முகைதீன் சாலி , ஜமால்தீன் ஹாஜி , மற்றும்…
முள்ளிப்பொத்தானை அல்_ஹிஜ்ரா மத்திய கல்லூரிக்கான பார்வையாளர் அரங்கு
திருகோணமலை மாவட்டம் தம்பலகம பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை அல்ஹிஜ்ரா மத்திய கல்லூரிக்கான பார்வையாளர் அரங்குக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இடம் பெற்றுள்ளது. குறித்த நிகழ்வானது திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் அவர்களினால் இன்று (15) அடிக்கல் நட்டு வைக்கப்பட்டது கம்பரெலிய வேலைத் திட்டத்தின் கீழ் சுமார் 15 இலட்சம் ரூபா செலவில் இப் பார்வையாளர் அரங்கு நிர்மாணிக்கப்படவுள்ளது இவ் நிகழ்வில் தம்பலகம பிரதேச சபை உறுப்பினர்களான தாலிப் அலி, ரெஜீன் உட்பட டாக்டர்…
கோறைப்பற்றுவில், 50 வீட்டுத்திட்டம் ஆரம்பித்துவைப்பு
மட்டக்களப்பு, கோறளைப் பற்று வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கேணிநகர் 50 செமடசெவண வீட்டு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று 14.06.2019 கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ஹைதர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன்னாள் இராஜாங்க அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தவிசாளருமான அமீர் அலி கலந்து கொண்டு அடிக்கல் நட்டார். இந்நிகழ்வில் பிரதேச சபை தவிசாளர் அஸ்மி, கிராம சேவை உத்யியோகத்தர் தேவேந்திரன், அபிவிருத்தி உத்தியோகத்தர், வீடமைப்பு…
