News
கால் நடை பண்ணையாளர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த அமைச்சர் அமீர் அலி உதவி
கால் நடை பண்ணையாளர்கள் தங்களது தொழிலை நவீன முறையில் பயன்படுத்துவதன் மூலம் அதிக வருமானங்களை ஈட்டிக் கொள்ளலாம் என்று கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் மில்கோ நிறுவனத்திற்கு பால் வழங்கும் கல்குடாத் தொகுதி பால் பண்ணையாளர்களுடனான சந்திப்பு ஒட்டமாவடி பிரதேச சபை மண்டபத்தில் செவ்வாய்கிழமை மாலை மில்கோ நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் கே.கனகராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு…
மன்னார் தாராபுரம் அல் மினா மஹா வித்தியாலத்தில் நிர்மாணிக்கப்பட்ட கட்டிடதிறப்புவிழாவில் பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாட் பதியுதீன்.
மன்னார் தாராபுரம் அல் மினா மஹா வித்தியாலத்தில் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக்கட்டிடம் மற்றும் சிற்றுண்டிச்சாலை ஆகியவற்றின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார். அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஜப்பான் நாட்டு அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட இப்பாடசாலை கட்டிடத் தொகுதி திறப்பு விழா அதிபர் சரீபுதீன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட நிறுவனத்தின் அதிகாரி நுஹ்மான், மாகாணசபை உறுப்பினர் ரிப்கான்…
கனியமணல் கூட்டுத்தாபன தொழிற்சங்கங்கள் அமைச்சர் ரிஷாட்டுடன் சந்திப்பு
புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபனத்தின் நான்கு தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனைச் சந்தித்து, கூட்டுத்தாபனத்தின் முன்னேற்றங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தினர். கடந்த அரசாங்க காலத்திலிருந்து நீண்டகாலமாக தற்காலிகமாக பணிபுரிந்த தொழிலாளர்களுக்கும், இந்த ஆட்சியில் தங்களால் தொழில் வழங்கப்பட்டவர்களுக்கும் நிரந்தர நியமனங்களை வழங்கியமைக்கு நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவிப்பதாக கூறினர். கட்சி, இன, மதபேதங்களுக்கப்பால் அமைச்சர் தமது பணிகளில் நியாயமாக நடந்துகொள்வது தமக்கு மகிழ்ச்சி தருவதாகவும், தொழிலாளர்களின் ஊதியத்தை அதிகரித்துத் தந்தமை…
உள்நாட்டலுவல்கள் அமைச்சின் “நிலமெவகர” ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய வேலைத்திட்டத்தினை மன்னார் முசலியில் ஆரம்பித்துவைத்த அமைச்சர் றிஷாட் பதியுதீன்.
உள்நாட்டலுவல்கள் அமைச்சின் “நிலமெவகர” ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய வேலைத்திட்டத்தினை மன்னார் முசலி பிரதேச செயலகத்தின் வழிகாட்டலுடன், முசலி தேசிய பாடசாலையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் ஆகியோர் இணைந்து அங்குரார்ப்பணம் செய்து வைத்தனர். முசலி பிரதேச செயலாளர் கே எஸ் வசந்தகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், வட மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன், உள்நாட்டலுவல்கள் அமைச்சின்…
வனஜீவராசிகளில் காட்டும் அக்கறையை மக்களில் காட்ட அதிகாரிகள் மறுக்கின்றார்கள். மறிச்சிக்கட்டியில் காமினி ஜயவிக்ரமவிடம் றிஷாத் தெரிவிப்பு.
வன ஜீவராசிகளின் பாதுகாப்பிலும் பராமரிப்பிலும் அதீத அக்கறை காட்டிவரும் அதிகாரிகள், ஜீவனோபாயப் போராட்டம் நடாத்திவரும் மக்களின் நலன்கள் குறித்த விடயங்களில் உணர்வற்றவர்களாக செயற்படுகின்றனர் என்று அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேராவிடம் அமைச்சர் றிஷாத் பதியுதீன்; தெரிவித்தார். மன்னார் மாவட்டத்துக்கு நேற்று (29.09.2017) விஜயம் செய்த அமைச்சர் ஜயவிக்ரம பெரேராவை முசலி பிரதேசத்துக்கு அழைத்துச் சென்ற அமைச்சர் றிஷாத், அங்குள்ள பாரம்பரிய கிராமங்களான கரடிக்குழி, மறிச்சுக்கட்டி, பாலைக்குழி போன்ற பிரதேசங்களில் வாழும் மக்களின் அவல நிலையை தெரியப்படுத்தினார். “மறிச்சுக்கட்டியில்…
உள்நாட்டலுவல்கள் அமைச்சின் “நிலமெவகர” ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்த அமைச்சர் றிஷாட் பதியுதீன்
உள்நாட்டலுவல்கள் அமைச்சின் “நிலமெவகர” ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய வேலைத்திட்டத்தினை இன்று (30) மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் வழிகாட்டலுடன், அடம்பன் மகாவித்தியாலயத்தில், உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜ்ர அபேவர்தன மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் ஆகியோர் இணைந்து அங்குரார்ப்பணம் செய்து வைத்தனர். மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண சுகாதார அமைச்சர் குணசீலன் மன்னார்…
மியன்மார் அகதிகளின் துன்பங்கள், தொண்ணூறுகளில் நாம் பட்ட வேதனைகளை மனக்கண்முன் கொண்டு வருகின்றது. மன்னாரில் அமைச்சர் றிஷாட்
இலங்கையில் தஞ்சமடைநது தவிக்கும் ; மியன்மார் அகதிகளை காட்டுமிராண்டித்தனமாக இனவாதிகள் வெளியேற்றும் காட்சியைப் பார்க்கும் போது, 1990 களில் நாம் பட்ட கஷ்டம், மனக்கண்முன் வந்து மேலும் வேதனைப்படுத்துவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் கரடிக்குளி அரசினர் முஸ்லிம் வித்தியாலயத்தில் ஜப்பானிய அரசின் நிதி உதவியுடன் யு.என்.ஹெபிடாட் நிறுவனத்தினால் அமைக்கப்பட்ட வகுப்பறைக்கட்டிடம் மற்றும் சிற்றுணடிச்சாலையை இன்று மாலை 29 திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் கலந்துகொண்டு…
அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு உலகமயமாக்கல் அதீத நன்மைகளை பெற்றுத்தருகின்றது. கொழும்பில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு
அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு, அதிகரித்த வாழ்க்கைத்தரத்தையும், வளத்தையும் உலகமயமாக்கல் கொண்டுவருவதாகவும், நிதி வளத்தை அதிகரிப்பதற்கு அது உதவுவதோடு பொருpயல் மற்றும் சமூக அடிப்படையில் விரும்பத்தக்க விடயமாக அதனை நாம் கருதமுடியும் என்றும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கொழும்பு சமுத்ராதேவி பாலிகா வித்தியாலயத்தின் வர்த்தக மாணவர்கள் ஏற்பாடு செய்த வர்த்தக தின விழா ‘உலகமயமாக்கல்’ என்ற கருப்பொருளில் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்ற போது, பிரதம விருந்தினராக கலந்து கொண்டு அமைச்சர் உரையாற்றினார். கல்லூரியின்…
கிரமத்துக்கு ஒரு கோடி என்னும் நிகழ்ச்சித்திட்டத்தில் பிரதம அதிதியாக மொஹமட் பாயிஸ்
தேசிய இளைஞர் சேவைகள் சபையின் கிரமத்துக்கு ஒரு கோடி என்னும் நிகழ்ச்சித்திட்டத்தில் கொழும்பு வடக்கு ரோயல் இளைஞர் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியின் ஆரம்ப நிகழ்வில் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளரும், மேல் மாகாணசபை உறுப்பினருமான மொஹமட் பாயிஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற போது….
பெரும்பான்மைக்கு கிடைக்காத அதிஷ்டம் அமைச்சர் றிசாட் மூலம் சிறுபான்மையினருக்கு…..
ஜப்பான் நாட்டு அரசாங்கத்தின் நிதி உதவியுடன் UN HABITED நிறுவனத்தின் அனுசரணையில் அமைச்சரின் வேண்டுகோளின் பேரில் முசலி மண்ணிற்கு அதி சிறந்த பாடசாலைகள் திறந்து வைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.. இலங்கை நாட்டிற்கான ஜப்பான் தூதுவராக பான்கிமூன் அவர்கள் பணியாற்றும் பொழுது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத்தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் நீண்ட நாள் முயட்சியில் அனைத்து வசதிகளையும் கொண்ட பாடசாலை எமது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது பல மில்லியன் பெறுமதியான இப்பாடசாலை கட்டிடங்கள் கொண்டச்சி மற்றும்…
மண் அகழப்படுவதை உடனடியாக நிறுத்தப்படவேண்டும் கோறளைப்பற்று மத்தி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் .எம். எஸ்.எஸ்.அமீர் அலி
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பாலைக்காடு குளத்தில் மண் அகழப்படுவதை உடனடியாக நிறுத்துமாறு பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கோறளைப்பற்று மத்தி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோரின் இணைத் தலைமையில் திங்கட்கிழமை (25.09.2017) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. பாலைக்காடு குளத்தில் மண் அகழப்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் மண் அகழ்வதற்கு வழங்கப்பட்ட இடத்தில் மண் அகழாமல் அதனை…
அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு நள்ளிரவு அமுலுக்கு வருகின்றது. சதொச அறிவிப்பு
அரிசி உட்பட 9 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை சதொச விற்பனை நிலையங்களில் இயன்றளவு குறைத்து விற்பனை செய்வதற்கு ஜனாதிபதி தலைமையிலான வாழ்க்கைச் செலவு உப குழு மேற்கொண்ட முடிவுக்கிணங்க அப்பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்பட்டு இன்று நள்ளிரவு (28) முதல் புதிய விலைகள் அமுலுக்கு வருவதாக சதொச நிறுவனத்தின் தலைவர் டி.எம்.கே.பி. தென்னக்கோன் தெரிவித்தார். நாட்டில் திடீரென ஏற்பட்ட அரிசித்தட்டுப்பாட்டினால் சந்தையில் அரிசியின் விலை திடீரென அதிகரிக்கப்பட்டது. இதனால் நாட்டில் பல பாகங்களிலும் பல எதிர்ப்புகள் வெளிவந்ததையடுத்து ஜனாதிபதியின்…
