News
வாகரையில் நண்டு வளர்ப்பு திட்டத்தை ஆரம்பித்துவைத்த பிரதியமைச்சர் அமீர் அலி
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேசத்தில் நண்டு நகரம் என்ற திட்டத்தில் நண்டு வளர்ப்பை ஊக்குவிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவிற்கு அமைய தேசிய உணவு உற்பத்திக்கான எழுச்சி வாரத்தை முன்னிட்டு மீனவர் புரட்சி தினம் ஓட்டமாவடி மீறாவோடை அமீர் அலி கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்- வாகரையில்…
புத்தளம் மாவட்டத்தில் கிராமசேவ உத்தியோகத்தர் காரியாலங்களை அமைக்கும் செயற்திட்டத்தின் ஆரம்பித்துவைத்தை நவவி எம்.பி
அரச வேலைத்திட்டங்களின் ஒரு பகுதியாக பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்களின் முயற்சியினால் புத்தளம் மாவட்டத்தில் பல கிராமசேவ உத்தியோக காரியாலங்களை அமைக்கும் செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக இன்று முசல்பிட்டி கிராமத்தில் கிராமசேவ உத்தியோக காரியாலய கட்டிடத்திட்கான அடிக்கல்நாட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்கள் கலந்துகொண்டதோடு,…
மகளீர் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முன்வரவேண்டும் பிரதியமைச்சர் அமீர் அலி
அரசியல் மாற்றம், குடும்ப மாற்றம், போதை மாற்றம், பிள்ளைகள் கல்வியில் வளர வேண்டும் என்ற மாற்றங்களை மகளீரை வைத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று நான் எதிர்பார்;க்கின்றேன் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட மகளீர் சுயதொழில் கூட்டுறவுச் சங்க பிரதிநிகளுடனான சந்திப்பு ஒட்டமாவடி பிரதேச சபை மண்டபத்தில் நேற்று நடைபெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்- மது பாவனையில் மட்டக்களப்பு…
றிஷாட் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ராஜித சாட்டையடி
வெளிநாடுகளிலிருந்து நிதியுதவியைப் பெற்று இலங்கையில் அமைக்கப்படும் வீடுகளுக்கு அனுமதிபெறத் தேவையில்லை என்றும் வீடுகள் அமைக்கப்படும் காணிகளுக்கு மாத்திரமே அனுமதி பெறப்பட வேண்டுமெனவும் அந்த வகையில் கைத்தொழில் வரத்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் நமது நாட்டில் அமைத்து வரும் வீடுகளுக்கும் எந்தவிதமான அனுமதியும் பெறத்தேவையில்லையென அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இன்று காலை கொழும்பில் இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டிலே, சிங்களப் பத்திரிகை ஒன்றின் ஊடகவியலாளர் ஒருவர் அமைச்சர் றிஷாட் பதியுதீன்…
மட்பாண்ட உற்பத்தி தொழிலார்களுக்கு உதவிக்கரம் நீட்டிய அமீர் அலி
கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மட்பாண்ட உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில் சக்கப்போர் வழங்கும் நிகழ்வு இன்று (11) ரதிவன்னண் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டு வாழ்வாதார உபகரணங்களை வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் பிரதேச செயலக உதவித் திட்டப்பணிப்பாளர் சசிகுமார் , பிரதி அமைச்சரின் இணைப்பாளர் கன்ணன் , நித்தியானந்தன், மகேந்திரன் மற்றும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.
நீண்ட நாள் கனவுகளை நிறைவேற்றினார் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்..
இத்தனை காலமும் கவனிப்பார் அற்று கிடந்த குளியாப்பிடி தொகுதியின் விசினவ கிராமத்தின் பொத்துகர-வாதாகொடுவ பாதையை அமைச்சர் றிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில் காபட் பாதையாக புனரமைக்கப்படவுள்ளது. இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குளியாப்பிடி தொகுதி முக்கியஸ்தர்கள் மற்றும் முன்னால் மாகாண சபை உருப்பினறும் லங்கா சதொசயின் பிரதித் தலைவருமாகிய நஸீர், முன்னால் குளியாப்பிடி பிரதேச சபை உறுப்பினர் இர்பான், குருவிகொட்டுவ பாயிஸ், நவாவி;ஊர் மக்களும் கலந்து கொண்டார்கள்.
ஜனாதிபதியின் “மீண்டும் நாம் எழுவோம்-களஞ்சியத்தை நிரப்புவோம்” விஷேட வேலைத்திட்டம்-பிரதம அதிதியாக பிரதியமைச்சர் அமீர் அலி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவிற்கமைய தேசிய உணவு உற்பத்திக்கான எழுச்சி “மீண்டும் நாம் எழுவோம்-களஞ்சியத்தை நிரப்புவோம்” எனும் தொனிப்பொருளிலான வேலைத்திட்டத்தில் நேற்று 10.10.2017ம் திகதி செவ்வாய்க்கிழமை தேசிய உணவு உற்பத்தி புரட்சி மீனவர் தினம் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது. இதனடிப்படையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் மீனவர் புரட்சி தினம் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் பிரதேச செயலக உதவித் திட்டப்பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத் தலைமையில் மீறாவோடை அமீர் அலி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் போது தியாவட்டவான் பிரதேசத்தில்…
இந்தியாவிலிருந்து முதலாவது தொகுதி அரிசி இலங்கைக்கு வந்தது.
இந்தியாவிலிருந்து 12500 மெற்றிக் தொன் பச்சை நாட்டு அரிசி, இன்று (10) கொழும்புதுறைமுகத்துக்கு வந்து சேந்துள்ளதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இலங்கையில் ஏற்பட்ட அரிசித்தட்டுப்பாட்டை அடுத்து அமைச்சரவையின் வாழ்க்கைச் செலவு உபகுழு மேற்கொண்ட முடிவுக்கமைய இலங்கை அரசாங்கம் இந்திய தனியார் துறையினரிடம் இருந்து 72000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கான உடன்படிக்கையொன்றை கைச்சாத்திட்டதையடுத்தே அதன் முதலாவது தொகுதி இன்று கொழும்புத் துறை முகத்துக்கு வந்து சேர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார். “அரிசித் தட்டுப்பாட்டை…
சீன, சிங்கப்பூர் உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்ட பின்னர் இலங்கையின் இறக்குமதியில் மற்றுமொரு பாய்ச்சல்
இலங்கையுடனான சீனாவினதும், சிங்கப்பூரினதும் சுதந்திரவர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்னர்; சுங்கத் தீர்வையற்ற கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்குக்கு குறைவில்லாத பொருட்களை இலங்கை இறக்குமதி செய்யமுடியுமென்று உலக வர்த்தக மையத்தின் பிராந்திய வர்த்தக உடன்படிக்கைகள் பிரிவின் தலைவர் டாக்டர். ரோகினி ஆச்சார்ய இவ்வாறு தெரிவித்தார். கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான வர்த்தக திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ‘உலக வர்த்தக மையமும், பிராந்திய வர்த்தக உடன்படிக்கைகளும்’ என்ற தலைப்பிலான தேசிய செயலமர்வில் உரையாற்றிய போதே…
உபயோகித்த தேங்காய் எண்ணெய்யை மீளநிரப்பி விற்பனை செய்த மொத்தவியாபார நிலையம் சுற்றிவளைப்பு.
கொழும்பு புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையம் ஒன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த உபயோகித்த தேங்காய் எண்ணெய் அடைக்கப்பட்டிருந்த 100பெரல்களையும், இரசாயனப் பொருட்களை அடைக்கும் 25கொள்கலன்களில் நிரப்பப்படவிருந்த தேங்காய் எண்ணெய் பெரல்களையும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் இன்று கைப்பற்றினர். தகவல் ஒன்றின் அடிப்படையில் அந்தப்பிரதேசத்தை சுற்றிவளைத்த அதிகாரசபை அதிகாரிகள் தேடுதல் நடவடிக்கையின் பின்;னர், இந்த சட்டவிரோத வியாபார நடவடிக்கையை கண்டுபிடித்தனர். பாவித்த தேங்காய் எண்ணெய், நுகர்வோரின் பாவனைக்கு வழங்காமல், வேறு பாவனைக்கே விற்கப்படுவதாக வர்த்தக நிலையத்தின் உரிமையாளர்…
வவுனியாவில் சிறுஆடைத்தொலைற்சாலை ஆசிரியர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கி வைப்பு
கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிஷாட் பதிதீன் அவர்களின் வழிகாட்டலின் பேரில் இளம் யுவதிகளுக்கான தொழில்வாய்ப்பைபெற்றுக் கொடுத்தல் வேலைத்திட்டத்திற்கு அமைவாக 6 மாத கால பயிற்சியுடன் சிறு ஆடைத்தொழிற்சாலை வவுனியா மாவட்ட தமிழ் பிரதேசங்களில் நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உரிய ஆசிரியர்களுக்கான நியமணக்கடிதங்களை அமைச்சரின் மக்கள் தொடர்பு அதிகாரி மொகைதீன் வழங்கி வைத்தார். வவுனியா மாவட்ட தமிழ் பிரதேச இணைப்பாளர் ஆனந்தன் தலைவமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிறியோன் பாஸ்டர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஜோர்ஜ் , நஷார்…
மக்கள் காங்கிரஸின் மகளிர்பிரிவின் ஏற்பாட்டில் அக்குரணையில் பெண்களுக்கான இலவச மருத்துவ முகாம்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மகளிர் பிரிவின் ஏற்பாட்டில் அக்குரணையில் பெண்களுக்கான இலவச உளவியல் மற்றும் மருத்துவ கருத்தரங்கு இடம்பெற்றது. நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் பெண்களுக்கான விழிப்புணர்வுச் செயலமர்வின் ஒரு பகுதியாகவே அக்குரணையில் இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக மகளிர் பிரிவின் தேசிய ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஹஸ்மியா தெரிவித்தார். வேலைக்குச் செல்லும் பெண்களும், வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து குடும்பச்சுமைகளையும் தாங்கிக்கொண்டிருக்கும் தாய்மார்களும் பல்வேறு மன உளைச்சல்களுக்கும், தாக்கங்களுக்கும் உள்ளாகிவருவதை கருத்திற்கொண்டே இவ்வாறான செயலமர்வு நடாத்தப்பட்டு வருவதாகவும், அவர்களுக்கு…
