News
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மகளிர் பிரிவினால் விதவைப் பெண்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு
மினுவாங்கொடை – கல்லொழுவை பிரதேசத்தில் வாழும் வருமானமற்ற ஏழை விதவைப் பெண்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கும் நிகழ்வு, (06) திங்கட்கிழமை மாலை, அ.இ.ம.கா. தேசிய மகளிர் அணித் தலைவி டொக்டர் ஹஸ்மியா உதுமாலெப்பையின் தலைமையில், அவரது இல்லத்தில் இடம்பெற்றது. அ.இ.ம.கா. கம்பஹா மாவட்ட மத்திய குழுத் தலைவரும், மினுவாங்கொடை தொகுதி அமைப்பாளரும், தேசிய மகளிர் அணித் தலைவியின் செயலாளருமான டொக்டர் எம்.எச்.எம். முனாஸிக் உள்ளிட்ட பிரமுகர்கள், நலன்விரும்பிகள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்து…
தன் கடமைக்கப்பால் சமூக சிந்தனையுடன் சேவை செய்தவர் மறைந்த அக்கறைப்பற்று அஹமட் லெப்பை-அனுதாபச்செய்தியில் பிரதியமைச்சர் அமீர் அலி
சிறந்த கல்விமானும் எனது நண்பருமாகிய அஹமட் லெப்பையின் திடீர் மரணச் செய்தி கேள்வியுற்று மிகவும் கவலையடைந்துள்ளேன் என்று கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்துள்ளார். அக்கறைப்பற்றைச் சேர்ந்த கல்விமான் அஹமட் லெப்பையின் மரணச் செய்தி தொடர்பாக வெளியிட்டுள்ள மரணச் செய்தியிலே மேல் குறிப்பிட்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது… மரணம் அடைந்த எனது நண்பர் அஹமட் லெப்பை மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளராக இருந்த காலத்தில் கல்விப் பொதுத் தராதர…
17 இலட்சம் தேங்காய்களை கொள்வனவு செய்து சதொச ஊடாக 65 ரூபாவிற்கு விற்பனை செய்ய நடவடிக்கை
வரும் வாரத்தில் நாடுபூராகவுமுள்ள 370 சதொச கிளைகளிலும் 12 இலட்சம் தேங்காய்களை 65 ரூபாவிற்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சதொச நிறுவனத் தலைவர் டி.எம்.கே.பி.தென்னக்கோன் தெரிவித்தார். இன்று (08) வொக்ஸ்வல் வீதியில் அமைந்துள்ள சதொசத் தலைமையக்கத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார். வரட்சி காரணமாக நாட்டில் ஏற்பட்ட தேங்காய் தட்டுப்பாட்டினால் தேங்காயின் விலை திடீரென அதிகரித்தது. இதனை கருத்திற் கொண்டு கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய…
புத்தளம் மாவட்டத்தில் வீதி அபிவிருத்திட்டங்களை ஆரம்பித்து வைத்த நவவி எம்.பி
புத்தளம், அக்கரைப்பற்று – பெருக்குவட்டான் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்களின் நிதி ஒதுக்கீட்டில், கல்பிட்டி பிரதேச அமைப்பாளர் ஆப்தீன் எஹிய அவர்களின் முயற்சியினால் வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்ட போது.
வடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினரான அலிக்கான் ஷரீப் பதவியேற்றார்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக வடக்கு மாகாண சபையில் அங்கம் வகித்த உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அண்மையில் பதவி விலகியநிலையில் இன்று அந்தக் கட்சிசார்பில் புதிய உறுப்பினரான அலிக்கான் ஷரீப் பதவியேற்றார். வடக்கு மாகாண சபையின் 109வது அமர்வு யாழ் கைதடியிலுள்ள பேரவைச்செயலகத்தில் இன்று(7) அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையகத்தால் நியமிக்கப்பட்டுள்ள புதிய உறுப்பினரான அலிக்கான் ஷரீப் அவைக்கு அழைக்கப்பட்டதுடன் அவர் தனது பதவிக்…
வாக்களித்த மக்களுக்கும், அமைச்சர் ரிஷாட்டிற்கும் நன்றி! வட மாகாண சபை உறுப்பினர் அலிகான் ஷரீப் தெரிவிப்பு.
நன்றி நவிலல் அன்புடையீர், கடந்த 01/10/2017 திகதி தொடக்கம் கௌரவ கைத்தொழில் மற்றும் வர்த்தக வணிபத்துறை அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் காங்கிரசின் தேசிய தலைவருமான அல் ஹாஜ் ரிஷாட் பதியுதீன் அவர்களின் சிபாரிசின் பேரில் வட மாகாண சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளேன் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். வட மாகாண சபையின் உறுப்பினராக நான் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதற்காக இரவு, பகலாக நீங்கள் தந்த அன்பிற்கும் அக்கறைக்கும் அயராத உழைப்பிற்கும் என்…
மக்கள் காங்கிரசின் மகளிர் பிரிவு அக்கரைப்பற்றிலும் கால் பதிக்கின்றது!!!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மகளிர் பிரிவுக் கிளைகள் அக்கரைப்பற்று முதலாம் குறிச்சி மற்றும் அக்கரைப்பற்றின் தமிழ்ப் பிரதேசமான ஆலையடிவேம்பு ஆகிய இடங்களில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மகளிர் பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஹஸ்மியா உதுமாலெப்பை தலைமையில் இடம்பெற்ற இந்த அங்குரார்ப்பண வைபவங்களில் நூற்றுக்கணக்கான தமிழ் மற்றும் முஸ்லிம் பெண்கள் பங்கேற்றிருந்தனர். அக்கரைப்பற்று முதலாம் குறிச்சியில் இடம்பெற்ற மகளிர் பிரிவுக் கிளை அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்ட பெண்கள், அக்கரைப்பற்றில் மக்கள் காங்கிரஸின்…
மாணவர்களை பாரட்டும் நிகழ்வில் பிரதம அதியாக மேல்மாகாணசபை உறுப்பினர் மொஹமட் பாயிஸ்.
மேல்மாகாணம் கம்பஹ மாவட்டத்தில் களணி பிரிவில் ஹுனுப்பிட்டிய சாஹிரா மகா வித்தியாளயத்தில் 2017 ஐந்தாம் ஆண்டு புலைமைப் பரீட்சையில் ஆகக்கூடிய புள்ளிகளைப் பெற்று சித்தி பெற்ற மற்றும் உயர்தரப்பரீட்சையில் சித்தி பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா வித்தியாளய மண்டபத்தில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான மொஹமட் பாயிஸ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். இந்தப்பாடாசாலை தொடர்ந்து வெற்றிகளையும்…
இரண்டு மாதத்திற்குள் 1300மில்…. ரூபா பெறுமதியான அரிசி இந்தியாவிலிருந்து இறக்குமதி
இந்தியாவிலிருந்து கடந்த இரண்டு மாத காலத்திற்குள் 1300மில்லியன் ரூபா பெறுமதியான அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வாழ்க்கைச் செலவுக்கான அமைச்சரவை உபகுழுவின் தீர்மானத்திற்கு அமைவாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பணிப்புரையின் பேரில் நேற்றுவரை (05.11.2017) 20ஆயிரம் மெற்றிக்தொன் அரிசி, இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அத்தொகை முழுவதும் சந்தைக்கு விநியோகத்திற்கென அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த நாட்டரிசியானது கிலோகிராம் 74ரூபாவுக்கு விற்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்த அவர் 25கிலோவிற்கு மேற்பட்ட…
முந்தல் பஸ் விபத்தில் காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் சென்று பார்வையிட்ட நவவி எம்.பி
முந்தல் பகுதியில் பஸ் விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்து புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து உடனடியாக புத்தளம் வைத்தியசாலைக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்கள் காயமடைந்தவர்களை பார்வையிடார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களது உடல்களை உடனடியாக உறவினர்களிடம் வழங்குவதற்கு தேவையான ஏற்பாடுகளையும் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் மேற்கொண்டார்.
திருகோணமலை மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்களை சந்தித்த அப்துல்லா மஹ்ரூப் எம் .பி
திருகோணமலை மாவட்ட உள்ளுராட்சிமன்ற முன்னால் தவிசாளர்கள் உறுப்பினர்களுக்கும் , எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தளில் போட்டியிட எதிர்பார்க்கும் கட்சியின் உறுப்பினர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் தலைமையில் , இன்று திருகோணமலை மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் காரியாலயத்தில் சந்திப்பு இடம்பெற்றது.
அப்துல்லா மஹ்ரூப் எம்.பி யின் முயற்சியால் வீதி புனரமைப்பு
கிண்ணியா பிரதேச செயலகபிரிவில் காக்கமுனை அப்துல் லத்திப் வீதி கொங்ரீட் வீதியாக கிண்ணியா பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் திரு. முனவ்வர் கான் அவர்களின் வேண்டுகோளின் அடிப்படையில் திருகோணமலை மாவட்ட அபிவிருத்திகுழு இணைத்தலைவரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளருமான பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் அவர்களின் முயற்சியில் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவர் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களின் பங்களிப்புடன் 10 இலட்சம் ரூபா நிதியில் புனரமைகபட்டு…
