Headlines

எஹட்டுமுல்ல இளைஞர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்ஸில் இணைவு.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அறிமுகம் மற்றும் வட்டார கிளை அமைக்கும் நிகழ்வும் குருநாகல் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களிலும் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. அந்த வகையில் பண்டுவஸ்நுவர தேர்தல் தொகுதி எஹட்டுமுல்ல கிராம மக்கள் மற்றும் இளைஞர்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்ஸில் இணைத்துக் கொள்ளும் நிகழ்வு நேற்று (17-02-2019) அ.இ.ம.கா குருநாகல் மாவட்டத்தலைவரும் சதொச பிரதி தலைவரும் முன்னால் மாகாணசபை உறுப்பினருமான எம்.என்.நஸீர் (MA) தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. அகில இலங்கை மக்கள்…

Read More

ஹோராப்பொல முஸ்லிம் வித்தியாலய நுழைவாயில் மற்றும் பெவில்லியன் திறந்து வைப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதித்தலைவரும்  அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இஷாக் ரஹுமானின் ஒத்துழைப்புடன் யுனைடட் விளையாட்டு கழகத்தின் வேண்டுகோளுக்கு அமைய அமைச்சர் றிஷாட் பதியுத்தீனின் நிதி ஒதுக்கீட்டில் கெக்கிராவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஹோராப்பொல முஸ்லிம் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள நுழைவாயில் மற்றும் பாடசாலை மைதானத்தில் அமைக்கப்பட்ட பெவில்லியன் என்பன பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள், பழைய மாணவர்கள் , ஊர்ப்பிரமுகர்கள்…

Read More

கந்தளாய் அக்போபுர ரஜமகா விகாரையின் விகாராதிபதி விமல தேரர் அவர்களை பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் அவர்கள் சந்தித்துள்ளார்.

கந்தளாய் அக்போபுர ரஜமகா விகாரையின் விகாராதிபதி விமல தேரர் அவர்களை துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் அவர்கள் சந்தித்துள்ளார். குறித்த சந்திப்பானது இன்று (16) விகாரையில் இடம் பெற்றது. பிரதேச அபிவிருத்தி தொடர்பில் விரிவான பேச்சுவார்த்தை இடம் பெற்றது. தங்களுக்கான சகல அபிவிருத்திக்கான ஒத்துழைப்புக்களையும் வழங்கவுள்ளதாக பிரதியமைச்சர் விகாராதிபதியிடம் தெரிவித்தார். இன மத பேதமற்ற நல்லிணக்க சந்திப்பாகவும் மேலும் இச் சந்திப்பு இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. குறித்த சந்திப்பில் கந்தளாய் பிரதேச…

Read More

மாற்றுத் திறனாளி மக்கீன் முகம்மட் அலிக்கு அமைச்சர் றிஷாட் பதியுதீன் மூலம் முச்சக்கர வண்டி வழங்கி கெளரவிப்பு!!!

தேசிய சுதந்திர தினத்தையொட்டி வவுனியாவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியான மக்கீன் முகம்மட் அலி சிங்கள,தமிழ்,முஸ்லிம் மக்களுக்கிடையில் சமூக ஒற்றுமையையும்,இன நல்லுறவையும் விலியுறுத்தியும், மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளுக்கும் குரல் கொடுத்தும் இலங்கை முழுவதும் தனது முச்சக்கர சைக்கிள் வண்டியில் பயணித்தார் 01.02.2019ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு யாழ்பாணத்தில் பயணத்தை நிறைவு செய்தார். இன்று(16) சனிக்கிழமை காலை 10.00மணிக்கு வவுனியா மண்ணை வந்தடைந்த அலிக்கு அகில இலங்கை மக்கள் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தகம், நீண்ட கால அகதிகளை மீள்குடியேற்றல், கூட்டுறவு…

Read More

பொய்களினால் மக்கள் செல்வாக்கை கட்டியெழுப்ப முயலும் பைசால் காசீம் – நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் தாஹீர் காட்டம்!

சுகாதார இரக அமைச்சர் பைசால் காசிம் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு முயற்சிக்கிறார். தன்னால் அபிவிருத்தி பணிகளை செய்ய முடியாது என்பதற்காக என் மீது பொய்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தி மக்களின் குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பித்து கொள்ள நினைக்கிறார். இவ்வாறு நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் தனது அபிவிருத்திகளுக்குத் தடைகளை ஏற்படுத்தி கொண்டு இருக்கிறார் என்று சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம் தெரிவித்துக்…

Read More

“முல்லைத்தீவு முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துக்கு தலா 20 பேர்ச் காணியையேனும் பெற்றுக்கொடுங்கள்” மீளாய்வு கூட்டத்தில் பிரதமரிடம் அமைச்சர் றிஷாட் அழுத்தம்

நாட்டில் அமைதி திரும்பி ஒன்பது ஆண்டுகளாகியுள்ள போதும், இடம்பெயர்ந்த முல்லைத்தீவு  மாவட்ட முஸ்லிம்கள், குடியிருக்க காணியின்றி அவதிப்படுவதாகவும் அவர்களுக்கு தலா 20 பேர்ச்   காணியையேனும்  ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்க பிரதமர்  நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும்  அமைச்சர்  ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தினார். முல்லைத்தீவு  மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம், மாவட்ட செயலகத்தில் பிரதமர் தலைமையில் இன்று (16) நடைபெற்ற போது அமைச்சர் இவ்வாறு வலியுறுத்தினார். “தமது சொந்த மாவட்டமான முல்லைத்தீவில் சுமார் 28 வருடங்களுக்கு முன்னர் குடியிருந்த இந்த…

Read More

மாற்றுத் திறனாளி மக்கீன் முகம்மட் அலிக்கு அமைச்சர் றிசாத்தால் முச்சக்கர வண்டி வழங்கி கெளரவிப்பு.

தேசிய சுதந்திர தினத்தையொட்டி வவுனியாவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியான மக்கீன் முகம்மட் அலி சிங்கள,தமிழ்,முஸ்லிம் மக்களுக்கிடையில் சமூக ஒற்றுமையையும்,இன நல்லுறவையும் விலியுறுத்தியும், மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளுக்கும் குரல் கொடுத்தும் இலங்கை முழுவதும் தனது முச்சக்கர சைக்கிள் வண்டியில் பயணித்தார் 01.02.2019ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு யாழ்பாணத்தில் பயணத்தை நிறைவு செய்தார். இன்று(16) சனிக்கிழமை காலை 10.00மணிக்கு வவுனியா மண்ணை வந்தடைந்த அலிக்கு அகில இலங்கை மக்கள் தலைவரும் கைத்தொழில், வர்த்தகம் மற்றும் நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி…

Read More

“வடக்கிலும் பாரிய அபிவிருத்தி திட்டங்கள்” தலைமன்னார்-இராமேஸ்வரம் கப்பல் சேவையும் மீள ஆரம்பிக்கப்படுமென பிரதமர் மன்னாரில் அறிவிப்பு!

தெற்கில் இடம்பெற்று வருவது போன்று வடக்கிலும் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பிக்கப்படுமெனவும்  அந்தவகையில் மன்னார் மாவட்டத்திலும்  சுற்றுலாத்துறை மேம்பாடு , திருமலைக்கான  அதிவேக நெடுஞ்சாலை ,தலைமன்னார் – இராமேஸ்வர கப்பல் சேவையை மீள ஆரம்பிப்பதன் ஊடாக பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை செயற்படுத்த உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.   மன்னார் மாவட்டத்தில் இவ்வருடம் 1300 வீடுகளை அமைப்பதோடு அடுத்த வருடம் மேலும் அதனை அதிகரிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.   அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மன்னார் மாவட்ட கிளையினால் ஏற்பாடு…

Read More

மன்னார் மாவட்டத்தின் பல்வேறு பிரச்சினைகள் பிரதமரின் தலைமையிலான மீளாய்வுக்கூட்டத்தில் ஆராய்வு

மன்னார் மாவட்டத்திலுள்ள  சிலாவத்துறை கடற்படை முகாமை அகற்றல் ,  முள்ளிக்குளம் கிராம மக்களின் பூர்வீக காணிகள் கடற்படையினரால் இன்னும் விடுவிக்கபடாமை மற்றும் வன பரிபாலன திணைக்களத்தினால் சுவீகரிக்கப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களின் காணிப்பிரச்சினை தீர்க்கப்படாமல் தொடர்ந்தும் இழுபறி நிலையிலேயே  இருந்து வருவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்தார். மன்னார் மாவட்ட செயலகத்தில் இன்று மாலை (15) பிரதமர் தலைமையில் இடம்பெற்ற “மாவட்ட அபிவிருத்தி தொடர்பான மீளாய்வு கூட்டத்தின்” போதே மக்கள் எதிர் கொள்ளும்  பல்வேறு…

Read More

“புத்தளத்தில் உருவெடுத்துள்ள குப்பை பிரச்சினைக்கு நீதி பெற்றுத்தாருங்கள்” பிரதமரிடம் அமைச்சர் ரிஷாட் மன்னார் கூட்டத்தில் கோரிக்கை !

புத்தளத்து குப்பை பிரச்சினை அந்த மக்களிடையே பாரிய பிரச்சினையாக உருவெடுத்து, தற்போது அந்த மாவட்டத்திலே கடையடைப்பு,ஹர்த்தால்,ஆர்ப்பாட்டங்கள் என்று  இடம்பெற்று வருகின்றன.நேற்றும் இன்றும் இந்த போராட்டங்கள் விஸ்வரூபம் எடுத்துள்ளன. பிரதமர் அவர்கள் இந்த விவகாரத்தில் உடன் தலையிட்டு அந்த மக்களுக்கு நியாயம் பெற்று கொடுக்க வேண்டுமென மன்னாரில் இன்று (15)  பிரதமர் பங்கேற்ற கூட்டமொன்றில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்  அவர்  முன்னிலையில்   வலியுறுத்தினார். இந்த பிரச்சினையை நீடிக்க விடாமல் அங்கு வாழுகின்ற மக்களின் பிரதிநிதிகளையும் முக்கியஸ்தர்களையும் பிரதமர் அழைத்து இந்த பிரச்சினையை…

Read More

புத்தளம் அறுவைக்காடு குப்பை திட்டடத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்ட பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப்!!!

புத்தளம் அறுவைக்காடு குப்பை திட்டத்துக்கு எதிராக இன்று (15) புத்தளம் நகரில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இடம் பெற்றது.இந்த போராட்ட களத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய அமைப்பாளரும் பிரதியமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் கலந்துகொண்டார் கிளீன் புத்தளம் எனும் தொனிப் பொருளில் முன்னெடுக்கப்பட்ட இக் கவனயீர்ப்பில் பல நூற்றுக்கணக்கான மக்கள் உட்பட அரசியல் பிரமுகர்களும் பங்கேற்றதூடன் கோசங்களை எழுப்பினர். புத்தளம் குப்பையல்ல உள்ளிட்ட இதனால் ஏற்படும் பாதகமான தாக்கங்கள் பற்றியும் கோசங்களை எழுப்பினர். கொழும்பு நகரில்…

Read More

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் இரண்டாம்கட்ட அபிவிருத்தி பணிகள் பிரதமர் தலைமையில் ஆரம்பம்.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் இரண்டாம் கட்ட அபிவிருத்தி பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு மற்றும் வைத்திய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் பிரதமர் தலைமையில் இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனும் முஸ்லிம் காங்கிரசின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமும் கலந்துகொண்டனர் இதில் அமைச்சர்களான ராஜித, வஜிர அபேவர்த்தன, ஹரிசன் பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் தமிழ் தேசியகூட்டமைப்பு எம் பி க்களான சுமந்திரன், சிறீதரன் உட்பட…

Read More