News
சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல்
டைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து அரசாங்கத்திற்கு ஆதரவாகவும் அரசாங்கத்திற்கு எதிராகவும் கூட்டம் இன்று கொழும்பில் இடம்பெறுகின்றது. நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை நீக்க கோரியும் இல்லையேல் பொது வேட்பாளரின் மூலம் அரசை கவிழ்ப்போம் என எச்சரித்து அதுரலியே ரத்ன தேரர் தலைமையில் ஒரு கூட்டமும் ஜனாதிபதியை ஆதரித்து விமல்வீரவன்ச தலைமையில் ஒரு கூட்டமும் இடம்பெறுகின்றது. நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை நீக்கக்கோரி எதிர்க்கட்சியின் பொது எதிரணியினர் இன்று கொழும்பில் கங்காராமை முத்தையா மைதானத்தில் எதிர்ப்பு பேரணிக்கூட்டம் நடத்தவுள்ளனர். அரசாங்க…
‘இஸ்லாமிய தேசத்தில் தங்கம் , வெள்ளியிலான தனது புதிய நாணயத்தை வெளியிடுகிறது ஐ.எஸ். அரசு
ஐ.எஸ்.’ அமைப்பினர் ஈராக் மற்றும் சிரியாவில் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றியுள்ளனர். அவற்றை ஒருங்கிணைத்து ‘இஸ்லாமிய தேசம்’ என்ற புதிய நாட்டை உருவாக்கியுள்ளனர். ‘அங்கு இஸ்லாமிய சட்டத்தை அமல்படுத்தி வருகின்றனர். தற்போது அவர்கள் தங்களுக்கென்று தனியாக செலவாணியை அதாவது ரூபாயை உருவாக்கியுள்ளனர். ஈராக்கின் மொசூல், சிரியாவின் நயன்வே மாகாணத்தின் பள்ளிகளில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. தங்களின் ரூபாய்க்கு ‘தினார்’, ‘திர்காம்’ என பெயரிட்டுள்ளனர். ‘தினார்’ நாணயம் சுத்த தங்கத்தினாலும், ‘திர்காம்’ நாணயம் வெள்ளியினாலும் தயாரிக்கப்படுகிறது. தங்க நாணயம் 4.3…
ரணில் – ஷுறா சபை சந்திப்பு
பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை சந்திக்கும் தேசிய ஷுறாசபையின் நிகழ்ச்சி நிரலின் ஓர் அங்கமாக, தேசிய ஷுறா சபைப் பிரதிநிதிகளுக்கும் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று, செவ்வாயன்று (11.11.2014) மாலை எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்றது. ஏதிர்க்கட்சித் தலைவரின் அழைப்பின் பேரில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகள், அக்கறைக்குரிய விடயங்கள் தொடர்பாக எதிர்க்;கட்சித் தலைவருக்கு விளக்கமளிக்கப்பட்டது. முஸ்லிம்களுக்கெதிரான இனவாத நடவடிக்கைகள், சகவாழ்வு – மீள்இணக்கம், கிழக்கில் நிலவும் காணிப்பிரச்சினைகள்,…
வெலிகம ஆற்றில் மூழ்கிய மாணவன் முஹம்மத் ரிமாஸ் ஜனாஸாவாக மீட்பு.
-Faseeh Weligama- நேற்று வெலிகம பகுதியில் நண்பர்களுடன் ஆற்றில் குளிக்கச் சென்ற போது மூழ்கிய மாணவன் முகம்மத் ரிமாஸ் நேற்று இரவு ஜனாஸாவாக மீட்கபப்ட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் நேற்று பகல் வேளை (11) எதிர்பாராதவிதமாக இவர் ஆற்றில் மூழ்கியதை தொடர்ந்து இவரின் நண்பர்கள் மற்றவர்களின் உதவியுடன் இவரை தேட முயற்சித்து முடியாமல் போய் ஊரின் அனைத்து தரப்பினரும் இணைந்து தேடி நேற்று இரவு வேளையில் ஜனாஸாவை மீட்டுள்ளனர். இன்று காலை…
எபோலா நோய்க்கு ஆளான நியூயார்க்கை சேர்ந்த டாக்டர் குணமடைந்தார். அமெரிக்க மருத்துவமனை சாதனை
எபோலா நோய் தாக்குதலுக்கு ஆளான நியூயார்க்கை சேர்ந்த டாக்டர், தீவிர சிகிச்சைக்கு பின் குணமடைந்தார். இதையடுத்து அவர் இன்று வீடு திரும்புகிறார். மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் பரவிவரும் எபோலா நோய், உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இந்த நோயால் இதுவரை 5,000 பேர் வரை உயிரிழந்துள்ளனர். 13,000க்கும் மேற்பட்டோர் இந்நோய் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. எபோலா பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நோயை தடுக்க…
100,000க்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் தமிழகத்தில்
100,000க்கும் மேற்பட்ட இலங்கை தமிழ் அகதிகள் தமிழ் நாட்டிலுள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலானவர்கள் பதிவுகள் இல்லாமல் தங்கியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. உள்நாட்டு யுத்தம் காரணமாக 1983 தொடக்கம் 2012ம் ஆண்டு காலப்பகுதி வரை, பல்வேறு கட்டங்களாக மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்தியாவுக்குள் நுழைந்ததாக, அந்நாட்டின் உள்நாட்டலுவல்கள் அமைச்சை மேற்கோள்காட்டி இந்திய ஊடகம் ஒன்று செய்தி வௌியிட்டுள்ளது. அவர்களில் 1995ம் ஆண்டு வரை 99,469 பேர் திருப்பியனுப்பப்பட்ட போது, சில அகதிகள் வேறு நாடுகளுக்கு தாங்களாகவே சென்று விட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது….
இலங்கையிலிருந்து இவ்வருடம் ஹஜ் சென்றவர்களின் கவனத்திற்கு..!
ஏ.எஸ்.எம்.ஜாவித் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களதில் பதிவுசெய்யப்பட்ட ஹஜ் முகவர் நிலையங்களினூடாக இவ்வருடம் (2014ஆம் ஆண்டு) ஹஜ் கடமைகளை மேற்கொண்டவர்கள் தாங்கள் பயணித்த முகவர்கள் தொடர்பான ஆலோசனைகள், கருத்துக்கள் அல்லது முறைப்பாடுகள் இருப்பின் அவை தொடர்பான விபரங்களை பதிவுத் தபால் மூலம் ‘பணிப்பாளர்’ முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், இலக்கம் 180, டீ.பி. ஜாயா மாவத்தை, கொழும்பு – 10 என்ற முகவரிக்கு 2014.11.30ம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு பணிப்பாளர் எம்.எச்.எம்.ஸமீல் கேட்டுக்கொள்கின்றார்.
காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் 2013 வருடாந்த பரிசளிப்பு விழா 11-11-2014 இன்று செவ்வாய்க்கிழமை காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை பரீட் மண்டபத்தில் இடம்பெற்றது. காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் அதிபர் யூ.எல்.ஏ.முபாறக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.எம்.நிஸாம் கலந்து கொண்டார். இதன் போது மேற்படி பாடசாலையில் கல்வி கற்று தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை ,கல்விப் பொதுத் தராதர…
பிரதமர் ஆத்திரம் – பாராளுமன்றத்திலிருந்தும் வெளிநடப்பு!
ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு பேரவையினரால் இலங்கைக்கு எதிராக விசாரணைகளை மேற் கொள்வதற்காக நியமிக்கப்பட்ட சர்வதேச விசாரணைக் குழுவை எதிர்த்து ஆளுந் தரப்பினரால் பாராளுமன்றத்தின் முன்வைக்கப்பட்ட பிரேரணை மீதான விவாதத்தில் தமது உரையை நிகழ்த்தப் போவதில்லை என்று தனது எதிர்ப்பை சபையில் வெளியிட்ட பிரத மர் டி.எம். ஜயரத்ன தனது ஆசனத்திலிருந்து வெளியேறிச் சென்றார். விவாதத்தில் தமக்குரிய நேரமானது தலைமை ஆசனத்தால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கப்பட்டு விட்டதாக ஆத்திரமடைந்தே பிரதமர் ஜயரத்ன இவ்வாறு சபையை விட்டு…
பல்டி அடித்தால் 50 மில்லியன் – முழு குடும்பத்திற்கும் ஐரோப்பாவில் பிரஜாவுரிமை
ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் எதிர்க்கட்சிகளில் இருந்து ஆளும் கட்சிக்கு மாகாண சபைகளின் உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கொழும்பில் 11-11-2014 நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த தகவல்களை வெளியிட்டார். இதன்முதல் கட்டமாக தம்மை 50 மில்லியன் ரூபாய்களுக்கு விலைக்கு வாங்க அரசாங்கம் முயற்சித்தாக மேல் மாகாண சபையின் ஜனநாயகக் கட்சி உறுப்பினரும் நடிகருமான நளின் பிரதீப் உடவல குற்றம் சுமத்தியுள்ளார். அத்துடன் தமது முழுக்குடும்பத்துக்கும் கனேடிய, அவுஸ்திரேலிய அல்லது நெதர்லாந்து பிரஜாவுரிமையை பெற்றுக்…
மஹிந்த மூன்றாவது முறையாகவும் தேர்தலில் போட்டியிட முடியும்
மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச போட்டியிடுவதில் எவ்விதத் தடையும் இல்லை என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு நேற்று நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டது. இதனை அடுத்து எதிர்வரும் ஜனவரி மாதத்தில் ஜனாதிபதி தேர்தல் நடாத்தப்படுவது உறுதியாகியுள்ளது. தேர்தலுக்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஒவ்வொரு மாவட்ட தேர்தல் உதவி ஆணையாளர்களுக்கும் தேர்தல் திணைக்களத்தினால் நேற்று அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. அனேகமாக ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் பாப்பரசரின் இலங்கை விஜயத்திற்கு முன்பாக தேர்தல் இடம்பெறலாம் என…
அரச உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கி வைக்கும் நிகழ்வு (photos)
ஏ.எச்.எம்.பூமுதீன் வாழ்வின் எழுச்சி திட்டத்தின் கீழ் அரச உத்தியோகத்தர்களுக்கு மாணிய அடிப்படையில் மோட்டார் சைக்கிள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (11) முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட அமைச்சர் றிஷாத் பதியுதீன் அரச உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்கி வைப்பதை படத்தில் காணலாம்.
