Headlines

பெரியமடு மஹா வித்தியாலயத்தில் நவோதய கட்டிடம் திறப்பு

இன்று  எமக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சதிகளையும்,சவால்களையும் முகம் கொடுக்கும் துணிவை இறைவன் கொடுத்துள்ளான் என தெரிவித்துள்ள கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் அரசியலை மக்களின் விமோசனத்திற்காக பயன்படுத்தாமல் தனிப்பட்ட நோக்கங்களுக்காக செயற்படுத்துகின்ற போது அது மக்களின் முன்னேற்றத்திற்கு பெரும் பின்னடைவாகும் என்றும் கூறினார். மன்னார் மாவட்டத்தின் மடு கல்வி வலயத்திற்குட்பட்ட பெரியமடு மஹா வித்தியாலயத்தில் 90 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட நவோதய கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார். மடு…

Read More

முசலி பிரதேச பரிசளிப்பு விழா

மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச விளையாட்டு விழாவில் வெற்றி பெற்ற கழகங்களுக்கான பரிசளிப்பு விழா செவ்வாய்க்கிழமை முசலி தேசிய பாடசாலையில் இடம் பெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்ட வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அழைத்துவரப்படுவதையும்,முசலி பிரதேச சபை தவிசாளர் தேசமான்ய யஹ்யான்,வடமாகாண இளைஞர் சேவைகள் மன்ற பணிப்பாளர் எம்.முனவ்வர் ஆகியோர் அமர்ந்திருப்பதயும்,வெற்றி பெற்ற அணிக்கு வெற்றிக் கிண்ணத்தினை மாகாண சபை உறுப்பினர் வழங்கி வைப்பதையும் படத்தில் காணலாம்.

Read More

நீதிமன்றில் மயங்கி விழுந்த வித்தியாவின் அண்ணன்!

யாழ்.ஊர்காவல்துறை நீதிமன்றில் இன்று நடைபெற்ற வித்தியா கொலை வழக்கு விசாரணையில் சாட்சியமளித்த அவரது அண்ணனான நிசாந்தன் மயக்கமடைந்த நிலையில் ஊர்காவல்த்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஊர்காவல்துறை வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வித்தியாவின் படுகொலைக்குப் பின்னர் அவரது குடும்பத்தினர் உளவியல் ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அதன் காரணமாகவே இன்று நீதிமன்றத்தில் வித்தியாவின் அண்ணன் மயங்கி விழுந்துள்ளதாக அவர்களது உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Read More

வித்தியா படுகொலை – பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரணை (photos)

வித்தியாவின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் 9 பேரையும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் 30 நாட்களுக்கு  தடுத்து வைத்து விசாரிக்க ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக இந்த உத்தரவினை ஜனாதிபதி பிறப்பித்துள்ளார். மேற்படி உத்தரவிற்கமைய இன்றிலிருந்து 30 நாட்களுக்கு பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் குறித்த சந்தேக நபர்களை விசாரிக்க மன்று அனுமதியளித்தது. இதனையடுத்து இன்றையதினமே யாழ்ப்பாண சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த சந்தேக நபர்கள் 9 பேரையும் விசாரணைக்காக…

Read More

யாழிலும் கையெழுத்து வேட்டை

– பாறுக் ஷிஹான்- யாழில்  இன்று வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் கௌரவமானதாக இடம் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் 3 ஜும்மா பள்ளிவாசலின்  முன்பாக அமைந்துள்ள விசேட செட்டின் கீழ் மக்கள் தமது கையொப்பங்களை இட்டனர். மறிச்சுகட்டி தொடர்பில்  மக்களுக்கு புதிய கதைகளை பெரும் பான்மையினர் கூறுகின்றனர்.ஆனால் வில்பத்து அமைந்திருப்பது புத்தளம் எல்லையில்ஆனால் மீள்குடியேற்றம் இடம் பெறுவது மன்னார் மறிச்சுக்கட்டி மக்கள் வாழ்ந்த பாரம்பரிய மண்ணில் என்பதை உறக்கச் சொல்வோம். ஜனாதிபதியே…இந்த வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை துரிதமாக…

Read More

ஜனாதிபதியே, வடக்கு முஸ்லிம்களின் மீள்குடி யேற்றத்தை துரிதமாக மேற்கொள்ளுங்கள்

– இர்ஷாத் றஹ்மத்துல்லா – வந்தாரை வாழ வைத்த ஊர் புத்தளம் 25 வருடங்களாக வடக்கு மக்கள் இரண்டரக் கலந்த புத்தளம் மண்ணில் இன்று வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் கௌரவமானதாக இடம் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் புத்தளம் பெரிய  பள்ளிக்கு முன்பாக அமைந்துள்ள 1400 மினாரா கோபுரத்திற்கு கீழ் அமைக்கப்பட்டிருந்து விசேட செட்டின் கீழ் புத்தளம் மக்கள் தமது கையொப்பங்களை இட்டனர். மறிச்சுகட்டி தொடர்பில் புத்தளம் மக்களுக்கு புதிய கதைகளை பெரும் பான்மையினர் கூறுகின்றனர்.ஆனால்…

Read More

சம்மாந்துறையில் மக்கள் ஆர்வத்துடன் கையொப்பம்

– நூர் – மறிச்சிகட்டி மக்களின் குடியேற்றத்தை சட்டவிரோதமானதாக கொண்டு அவர்களை அந்த இடத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என பெரும்பான்மை இன சில அமைப்புக்களும் சில ஊடகங்களும் மேற்கொள்ளும் செயலை கண்டித்தும் அந்த பிரதேசத்தில் வாழும் முஸ்லிம் உறவுகலுக்கு ஆதரவு தெரிவித்தும் கடந்த வாரம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீனால் ஆரம்பித்து வைக்கப்பட்ட நாடு பூராகவும் 2 லட்சம் கையெழுத்து பெரும் இந்த செயற்திட்டம் இன்று நாடு பூராகவும்…

Read More

திருகோணமலையில் கையெழுத்து இடும் நடவடிக்கை துரிதம்

– அபூ அஸ்ஜத் – மன்னார் மறிச்சுக்கட்டி பிரதேசத்தில் முஸ்லிம் மக்கள் மீள்குடியேறுவதை தடுக்கும் வகையில் முஸ்லிம்கள் தொடர்பில் அபாண்டங்களை சுமத்தும் பௌத்த கடும் போக்கு சிங்கள அமைப்புக்களின் செயலணி கணடடித்தும்,ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேர்மையான முறையில் வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை துரித மாக மேற்கொள்ளய கோறும் வகையில் நாடு தழுவிய முறையில் 2 இலட்சம் கையொப்பங்கள் பெரும் வேலைத்திட்டத்திற்கமைவாக கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை ,கிண்ணியா,மூதுார் பிரதேசங்களிலும் மக்கள் தமது கையொப்பங்களை இட்டு வடபுல முஸ்லிம்களுக்கு ஆதரவு…

Read More

ஏறாவூரில் கையெழுத்துக்கள் பதிவு

பாத்திமா ஷா்மிலா மன்னார் முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சர்ச்சையினை அடுத்து தடைப்பட்டுள்ள வட மாகாண அகதி முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தினை வலியுறுத்தி இரண்டு இலட்சம் கையெழுத்துக்களைச் சேகரிக்கும் நடவடிக்கையின் இரண்டாவது கட்டம் வெள்ளிக்கிழமை  தொழுகையைத் தொடர்ந்து இடம்பெற்றது. வெள்ளிக்கிழமை 12.06.2015 பகல் 1.30 மணிக்கு இந்தக் கையெழுத்துச் சேகரிப்பு நாடெங்கிலும் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் முஹைதீன் ஜும்மாப் பள்ளிவாசலில் இடம்பெற்ற தொழுகை பிரசங்கத்தை நிகழ்த்திய ஏறாவூர் ஜம்மிய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி ஏ.டபிள்யூ.எம். ஹாரிஸ் கால்நூற்றாண்டு கடந்தும்…

Read More

மருதானை ஸாஹிரா பள்ளியில் இடம் பெற்ற கையெழுத்து வேட்டை (படங்கள் இணைப்பு)

இன்று வெள்ளிக்கிழமை (12-05-2015) முஸ்லிம்களின் வாழ்விடங்களை பறிக்கும் இனவாத சதியை முறியடித்து  மீள் குடியேற்ற உரிமையை உறுதிப்படுத்த கையெழுத்து  வேட்டை ஆரம்பமானது. இது தொடர்ந்து சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் குறிப்பிட்ட பள்ளிவாசல் மஹல்லாக்களை மையப்படுத்தி ஆரம்பிக்கப்பட இருக்கின்றது

Read More

தடைகளை தகர்த்தெறிவோம் : ஜூம்ஆவுக்குப் பின் தயாராகுவோம்

ஏ.எச்.எம் பூமுதீன் வடமாகாண  முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு தடையாக உள்ள அத்தனை சதி முயற்சிகளையும் தகர்த்தெறிய இன்று(12) ஜூம்ஆவுக்குப் பின் முழு முஸ்லிம்களும் தயாராகி வருவதாக தெரியவருகின்றது. ஜூம்ஆ தொழுகைக்கு பின் தத்தமது கையெழுத்துக்களை பதிவு செய்து வடக்கு முஸ்லிம்கள் எதிர்நோக்கும் மீள்குடியேற்ற தடைகளை தகர்த்தெறிய புறப்படுமாறு விடுத்த வேண்டுகோளை அடுத்தே இவ்வாறு முஸ்லிம்கள் ஒன்றுபட்டு தயாராகி வருகின்றனர் ஹலால் ,ஹபாயா மற்றும் பள்ளிகளின் மீதான தாக்குதல்களின் போது முஸ்லிம் சமுகம் அடைந்த உணர்ச்சிபூர்வமான சூழ்நிலைகளை போன்று வடமாகாண…

Read More

கையெழுத்திட்டு நன்மையை பெற்றுக்கொள்ளுங்கள் –  றிஷாத் பதியுதீன்

வட மாகாண முஸ்லிம்  மக்களின் மீள்குடியேற்றம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அவர்கள் சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும். அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும். என்ற கோரிக்கைகளை முன்வைத்து நாடுபூராக உள்ள ஜூம்மாப்பள்ளி வாயில்களில் வைக்கப்பட்டுள்ள கையெழுத்து சீட்டில் உங்கள் கையெழுத்தை வைத்து நீங்களும் நன்மையை பெற்றுக்கொள்ளுங்கள். எமது உரிமைக்காய் என்றும் போராடுபவர்களாகவும் தன்மானமுள்ள முஸ்லிம்களாகவும் இருக்க அல்லாஹ் என்றும் துணை இருப்பானாக! –  றிஷாத் பதியுதீன்

Read More