Main News
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மூலம் ஓட்டமாவடி ஹிஜ்ரா வித்தியாலய காணி கொள்வனவிற்கு நிதி ஒதுக்கீடு!!!
ஒட்டமாவடி ஹிஜ்ரா வித்தியாலய காணி கொள்வனவிற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி யின் தேசிய தலைவரும் கைத்தொழில் வர்த்தக மற்றும் மீள்குடியேற்றம் அமைச்சர் றிஷாட்பதியுத்தீன் அவர்களிடம் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி கேட்டு கொண்டதற்கு இணங்க பாடசாலை காணிக்கான நிதியினை கையளிக்கும் நிகழ்வு 14.02.2019 அதிபர் திருமதி சைனம்பு தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டு ரூபா 500000 லட்சம்…
கந்தளாய் அக்போபுர ரஜமகா விகாரையின் விகாராதிபதி விமல தேரர் அவர்களை பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் அவர்கள் சந்தித்துள்ளார்.
கந்தளாய் அக்போபுர ரஜமகா விகாரையின் விகாராதிபதி விமல தேரர் அவர்களை துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் அவர்கள் சந்தித்துள்ளார். குறித்த சந்திப்பானது இன்று (16) விகாரையில் இடம் பெற்றது. பிரதேச அபிவிருத்தி தொடர்பில் விரிவான பேச்சுவார்த்தை இடம் பெற்றது. தங்களுக்கான சகல அபிவிருத்திக்கான ஒத்துழைப்புக்களையும் வழங்கவுள்ளதாக பிரதியமைச்சர் விகாராதிபதியிடம் தெரிவித்தார். இன மத பேதமற்ற நல்லிணக்க சந்திப்பாகவும் மேலும் இச் சந்திப்பு இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. குறித்த சந்திப்பில் கந்தளாய் பிரதேச…
மாற்றுத் திறனாளி மக்கீன் முகம்மட் அலிக்கு அமைச்சர் றிஷாட் பதியுதீன் மூலம் முச்சக்கர வண்டி வழங்கி கெளரவிப்பு!!!
தேசிய சுதந்திர தினத்தையொட்டி வவுனியாவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியான மக்கீன் முகம்மட் அலி சிங்கள,தமிழ்,முஸ்லிம் மக்களுக்கிடையில் சமூக ஒற்றுமையையும்,இன நல்லுறவையும் விலியுறுத்தியும், மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளுக்கும் குரல் கொடுத்தும் இலங்கை முழுவதும் தனது முச்சக்கர சைக்கிள் வண்டியில் பயணித்தார் 01.02.2019ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு யாழ்பாணத்தில் பயணத்தை நிறைவு செய்தார். இன்று(16) சனிக்கிழமை காலை 10.00மணிக்கு வவுனியா மண்ணை வந்தடைந்த அலிக்கு அகில இலங்கை மக்கள் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தகம், நீண்ட கால அகதிகளை மீள்குடியேற்றல், கூட்டுறவு…
பொய்களினால் மக்கள் செல்வாக்கை கட்டியெழுப்ப முயலும் பைசால் காசீம் – நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் தாஹீர் காட்டம்!
சுகாதார இரக அமைச்சர் பைசால் காசிம் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு முயற்சிக்கிறார். தன்னால் அபிவிருத்தி பணிகளை செய்ய முடியாது என்பதற்காக என் மீது பொய்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தி மக்களின் குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பித்து கொள்ள நினைக்கிறார். இவ்வாறு நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் தனது அபிவிருத்திகளுக்குத் தடைகளை ஏற்படுத்தி கொண்டு இருக்கிறார் என்று சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம் தெரிவித்துக்…
“புத்தளத்தில் உருவெடுத்துள்ள குப்பை பிரச்சினைக்கு நீதி பெற்றுத்தாருங்கள்” பிரதமரிடம் அமைச்சர் ரிஷாட் மன்னார் கூட்டத்தில் கோரிக்கை !
புத்தளத்து குப்பை பிரச்சினை அந்த மக்களிடையே பாரிய பிரச்சினையாக உருவெடுத்து, தற்போது அந்த மாவட்டத்திலே கடையடைப்பு,ஹர்த்தால்,ஆர்ப்பாட்டங்கள் என்று இடம்பெற்று வருகின்றன.நேற்றும் இன்றும் இந்த போராட்டங்கள் விஸ்வரூபம் எடுத்துள்ளன. பிரதமர் அவர்கள் இந்த விவகாரத்தில் உடன் தலையிட்டு அந்த மக்களுக்கு நியாயம் பெற்று கொடுக்க வேண்டுமென மன்னாரில் இன்று (15) பிரதமர் பங்கேற்ற கூட்டமொன்றில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர் முன்னிலையில் வலியுறுத்தினார். இந்த பிரச்சினையை நீடிக்க விடாமல் அங்கு வாழுகின்ற மக்களின் பிரதிநிதிகளையும் முக்கியஸ்தர்களையும் பிரதமர் அழைத்து இந்த பிரச்சினையை…
புத்தளம் அறுவைக்காடு குப்பை திட்டடத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்ட பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப்!!!
புத்தளம் அறுவைக்காடு குப்பை திட்டத்துக்கு எதிராக இன்று (15) புத்தளம் நகரில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இடம் பெற்றது.இந்த போராட்ட களத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய அமைப்பாளரும் பிரதியமைச்சருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் கலந்துகொண்டார் கிளீன் புத்தளம் எனும் தொனிப் பொருளில் முன்னெடுக்கப்பட்ட இக் கவனயீர்ப்பில் பல நூற்றுக்கணக்கான மக்கள் உட்பட அரசியல் பிரமுகர்களும் பங்கேற்றதூடன் கோசங்களை எழுப்பினர். புத்தளம் குப்பையல்ல உள்ளிட்ட இதனால் ஏற்படும் பாதகமான தாக்கங்கள் பற்றியும் கோசங்களை எழுப்பினர். கொழும்பு நகரில்…
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் இரண்டாம்கட்ட அபிவிருத்தி பணிகள் பிரதமர் தலைமையில் ஆரம்பம்.
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் இரண்டாம் கட்ட அபிவிருத்தி பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு மற்றும் வைத்திய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் பிரதமர் தலைமையில் இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனும் முஸ்லிம் காங்கிரசின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமும் கலந்துகொண்டனர் இதில் அமைச்சர்களான ராஜித, வஜிர அபேவர்த்தன, ஹரிசன் பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் தமிழ் தேசியகூட்டமைப்பு எம் பி க்களான சுமந்திரன், சிறீதரன் உட்பட…
யாழ் நகரில் நுண்கடனால் பாதிப்படைந்தவர்களுக்கு விமோசனம்!!!
நுண் கடன் மூலம் பாதிப்படைந்த குடும்பங்களை அக்கடன் சுமையிலிருந்து விடுவிப்பதற்கான சான்றிதழ்களை வழங்கும் நிகழ்வு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அதிதிகளாக அமைச்சர்களான மங்கள சமரவீர ரிஷாட் பதியுதீன், அகில விராஜ், அர்ஜுண ரணதுங்க, பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன். மற்றும் அரச உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்… -ஊடகப்பிரிவு-
ஓட்டமாவடி பிரதேச அபிவிருத்தி குழ கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி பங்கேற்பு..
ஓட்டமாவடி கோட்ட கல்வி அலுவலக எல்லைக்குட்பட்ட பாடசாலைகளின் மாணவர்கள் பாடசாலை நேரங்களில் பாடசாலையை விட்டு வெளிச்செல்வதை பாடசாலை நிருவாகம் கட்டுப்படுத்த வேண்டும் என்று பிரதி அமைச்சர் அமீர் அலி தெரிவித்தார். ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் 2019ம் ஆண்டுக்கான பிரதேச அபிவிருத்தி குழுவின் முதலாவது கூட்டம் இன்று (வியாழக்கிழமை) 14.02.2019 பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் அதன் இணைத்தலைவர்களான இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்எஸ்.அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரன் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் கல்குடா தொகுதி அமைப்பாளர் எஸ்.ரீ.எம்.புர்ஹான்…
பிரதமர் தலைமையிலான குழுவினர் காங்கேசன் துறை துறை முகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டனர்!!!
துறை முக அபிவிருத்தி தொடர்பில் ஆராய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சர்கள் அடங்கிய குழுவினர் இன்று (14) வியாழக் கிழமை காங்கேசன் துறை துறை முகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டனர். காங்கேசன் துறை துறை துறை முகத்தை அபிவிருத்திக்கு இட்டுச் செல்லும் நோக்கில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் ,துறை முகங்கள் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க, துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் . ஆகியோர்களின்…
மட்டக்குளி சேர் ராசிக் மகளிர் கல்லூரியில் மூன்று மாடிக்கட்டிட திறப்புவிழா!
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மேல் மாகாண சபை உறுப்பினர் ஏ.ஜே.எம் . பாயிஸின் வேண்டுகோளிற்கிணங்க முதலமைச்சரின் நிதியில் மட்டக்குளியில் அமைந்துள்ள சேர் ராசிக் பரீட் முஸ்லிம் மகளிர் கல்லூரியில் மூன்று மாடிகளில் அமைக்கப்பட்டுள்ள எம். எச். எம்.அஷ்ரப் ஞாபகார்த்த கட்டிடத்தின் திறப்பு விழா இன்று காலை (14) அதிபர் நூர் நளீபா சலீம் தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் சிறப்பதிதிகளாக மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய, முஜிபுர் ரஹ்மான் எம்.பி , மேல்…
இராஜாங்க அமைச்சர் அமீர் அலியின் நிதி ஒதுக்கீட்டில் பாடசாலைகளுக்கு உபகாரங்கள் வழங்கிவைப்பு…
பண்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஒட்டமாவடி ஷரிப் அலி வித்தியாலயத்திற்கும் பிறைந்துறைச்சேனை சாதுலியா வித்தியாலயத்திற்கும் தளபாடம் மற்றும் ஒலிபெருக்கி சாதனங்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.இந்நிகழ்வில் பிரதம அதிதியாக விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதாரஇராஜாங்க அமைச்சர் அமீர் அலிகலந்து கொண்டு வழங்கி வைத்தார். பிரதியமைச்சர் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் இரு பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்…..
