Headlines

வில்பத்தையும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனையும் தொடர்புபடுத்தி ஏன் மீண்டும் மீண்டும் துரத்துகின்றீர்கள்? இராஜாங்க அமைச்சர் மஹ்ரூப் வலியுறுத்து !

வில்பத்து விவகாரத்தையும் அமைச்சர் ரிஷாட்டையும் தொடர்பு படுத்தி மீண்டும் மீண்டும் ஏன் குற்றம் சுமத்தி கொண்டு இருக்கின்றீர்கள் . அந்த பிரதேசத்திற்கு சென்று உண்மை நிலையை கண்டறிந்து வந்த  இராஜாங்க அமைச்சர் அஜித் மானப்பெரும பல விடயங்களை தெளிவு படுத்தி இருப்பதாக பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, வில்பத்து வன சரணாலயம் அனுராதபுர,புத்தளம் மாவட்டத்திற்கு சொந்தமானது. முசலி பிரதேசம் மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ளது. வில்பத்தின்  எல்லைக்கு மிக…

Read More

வில்பத்துவுக்கு வெளியிலேயே முஸ்லிம்கள் மீள்குடியேற்றம் ஓய்வுபெற்ற புவியியற் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நெளபல் தெரிவிப்பு!!!

முஸ்லிம் குடி­யேற்­றங்கள் வில்­பத்து வன எல்­லைக்கு வெளி­யி­லேயே இடம்­பெற்­றுள்­ளன. அத்­து­மீ­றிய குடி­யேற்­றங்கள் எதுவும் இடம்­பெ­ற­வில்லை என தெரி­வித்­துள்ள ஓய்­வு­பெற்ற புவி­யி­யற்­துறை சிரேஷ்ட விரி­வு­ரை­யா­ளரும், முன்னாள் மாகாண சபை தேர்தல் தொகுதி எல்லை நிர்­ணய ஆணைக்­கு­ழுவின் உறுப்­பி­ன­ரு­மான ஏ.எஸ்.எம்.நௌபல், கடந்த 30 வருட கால­மாக வில்­பத்து கிழக்கு மற்றும் தெற்கு பகு­தி­களில் பாரி­ய­ளவில் காட­ழிப்­புகள் இடம்­பெற்­றுள்­ளன. இது குறித்து சுற்­றா­டல்­துறை அமைச்­ச­ரான ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கண்­டு­கொள்­வ­தில்லை எனவும் குற்றம் சாட்­டி­யுள்ளார். அத்­துடன், காட­ழிப்­பு­களும் வன ஆக்­கி­ர­மிப்பும் மன்னார்…

Read More

அமைச்சர்களில் அதிஷ்டம் வாய்ந்த அமைச்சராக றிஷாட் பதியுதீன் திகழ்கிறார். எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும புகழாரம் !!!

அமைச்சரவைக்குள் மிகவும் அதிர்ஷ்டம் வாய்ந்த ஒருவராக அமைச்சர் ரிசாட் பதியுதீன் இருக்கின்றார் என எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.  சில நாட்களுக்கு முன்னர் அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு அவர் வகித்த அமைச்சு பதவிக்கு மேலதிகமாக தொழிற் பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது. இது தவறான முன்மாதிரியே. இதேவேளை தற்போதைய அமைச்சரவையில் மிகவும் அதிர்ஷ்டமான அமைச்சர்…

Read More

மக்கள் காங்கிரஸின் வழிகாட்டலில் கூட்டுறவு இளைஞர் , வலுவூட்டலுக்கான பதிவு ஆரம்பம்!

“கோப்யேஸ் ” கூட்டுறவு இளைஞர் வலுவூட்டல் தாபனத்தினூடாக அங்கத்தவர் பதிவை உறுதிப்படுத்தும் நிகழ்வு கண்டி பதியுதீன் மஹ்மூத் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. கண்டி மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அமைப்பாளரும் காரியவள கூட்டுத்தாபனத்தின் தலைவரும் முன்னாள்  மாகாண சபை உறுப்பினருமான அம்ஜாட்  மற்றும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களின் கண்டி மாவட்ட இணைப்பாளர் றியாஸ் இஸ்ஸத்தீன் ஆகியோரின் அயராத முயற்சியால் கண்டி மாவட்டத்தில் இந் நிகழ்வு இரண்டாவது தடவையாகவும் சிறப்பாக நடந்து முடிந்தது. கண்டி மாவட்ட அகில இலங்கை…

Read More

இனமொன்றின் மீள் இருப்பை மறுக்கும் கடும்போக்கு வாதம்!

பருவ காலம் போன்று வில்பத்து விவகாரமும் வேளைக்கு வந்து போவதால் மீண்டும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பெயர் அரசியல் பரப்பில் அனல் பறக்கிறது. இதனால் அவரது வேகம் தணியுமெனச் சில எதிரிகள் எதிர்பார்க்கின்றனர். சாகத்துணிந்தவனுக்கு தூக்கு மேடை ஒரு பஞ்சு மெத்தையாயிற்று. அமைச்சர் ரிஷாதுக்கு வில்பத்து ஒரு தூக்கு மேடையாக வந்தாலும் அவர் சளைக்கப் போவதில்லை. 2012 ஆம் ஆண்டிலிருந்து அடிக்கடி அவர் எதிர் கொள்ளும் சவாலும் இதுதான்.மக்கள் காங்கிரஸின் அரசியலை அடியோடு வீழத்த அவிழ்க்கப்படும் இந்த…

Read More

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்திற்கான கட்டிட திறப்பு விழா நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் S.M.M இஸ்மாயில் கலந்துகொண்டார்..

“அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” எனும் கருத்திட்டத்தின் அடிப்படையில் நாடுபூராகவும் பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட்டு இன்று பௌதீக அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்படுகிறது. சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்திற்கான கட்டிட திறப்பு விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர். S.M.M இஸ்மாயில் அவர்கள் தெரிவிப்பு. உலகில் அநேகமான நாடுகளின் அவர்களுடைய மொத்த தேசிய உற்பத்தியில் கல்விக்கு 6% ஒதுக்கீடு செய்யப்படுவதனை காணமுடிகிறது. அதுவே யுனெஸ்கோ ஐக்கிய ஸ்தாணங்களின் இலக்காகவும் உள்ளது. அதே போன்றுதான் அண்மைக்காலங்களில் எமது நாட்டில் ஐக்கிய தேசிய…

Read More

ஹம்பாந்தோட்டையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் பிரதமர் தலைமையில் அடிக்கல் நாட்டு நிகழ்வு!!!

சில்வர் பார்க் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் சீமெந்து தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு ஹம்பாந்தோட்டை மிறிஜ்ஜாவில முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் இடம்பெற்ற போது பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க (24) கலந்து கொண்டார். ஓமான் நாட்டின் எரிசக்தி அமைச்சர் டாக்டர் மொகம்மட்   ஹமத் அல் ரூஹ்மி விஷேட அதிதியாக கலந்து கொண்ட இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், கைத்தொழில், வர்த்தகம், நீண்ட கால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, திறன்…

Read More

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாவடிப்பள்ளி இளைஞரணி ஒன்று கூடல்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளரும், சிரேஷ்ட ஊடகவியலாளரும், சட்டத்தரணியுமான முஷர்ரப் முதுநபீன் அவர்கள் இன்று (2019-03-23) மாவடிப்பள்ளியில் இடம்பெற்ற அ.இ.ம.காங்கிரஸின் இளைஞர் ஒன்று கூடலில் கலந்து சிறப்பித்ததுடன், மாவடிப்பள்ளி கமு/அல் அஸ்ரப் மகா வித்தியாலயத்திற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அங்கு கடந்த வாரம் ஊருக்குள் உட்புகுந்த காட்டு யானை பாடசாலை மதில்களை தாக்கிய சேதங்களைப் பார்வையிட்டதுடன், பாடசாலையில் நிலவும் தளபாடப் பற்றாக்குறை, மற்றும் ஏனைய குறைபாடுகள் தொடர்பாக பாடசாலை அதிபர்…

Read More

ஆவணங்கள் துரிதமாக பதிவு செய்யும் ஒருநாள் வேலைத்திட்ட அங்குராப்பண நிகழ்வு மன்னாரிலும் இடம்பெற்றது.

ஆவணங்கள் துரிதமாக பதிவு செய்யும் ஒருநாள் வேலைத்திட்ட அங்குராப்பண நிகழ்வு மன்னார் மாவட்ட செயலகத்திலும் இடம்பெற்றது. ஐனாதிபதிஇ பிரதமர் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி உள்ளக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் வஜிர அபேவர்த்தன திடசங்கற்பத்திற்கமைய நேற்று சனிக்கிழமை (16.03.2019) நாடு பூராகவும் இவ் நிகழ்வு நடைபெற்றபொழுது மன்னார் மாவட்டத்திலும் இவ் நிகழ்வு இடம்பெற்றது. மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இவ் நிகழ்வில் அமைச்சர் றிசாட் பதியுதீயின் பிரதிநிதியாக முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் அமைச்சர் றிசாட்டின்…

Read More

”பாராளுமன்ற தெரிவுக்குழு அமைத்து வில்பத்து புரளிகளுக்கு முடிவுகட்டுங்கள், ரிஷாத் பாராளுமன்றில் கோரிக்கை”   ஊடகங்கள் மோசமான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக சபையில் குற்றச்சாட்டு :

வில்பத்துவில் ஓரங்குல நிலத்தையேனும் நானோ அல்லது நான் சார்ந்த சமூகமோ அழித்திருந்தால் எந்தத் தண்டனையையும் ஏற்பதற்கு தயாரெனவும் இந்த பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுவின் அறிக்கையை வெளியிடச் செய்ய சபாநாயகர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, இதன் உண்மையை நிலையை மக்களுக்கு தெளிவு படுத்த உதவ வேண்டுமென அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பாராளுமன்றில் இன்று (22) தெரிவித்தார். மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸ்ஸநாயக்கவின் வாய் மூல வினா ஒன்றிற்கு பதிலளிக்கையில், தற்போது மீண்டும் பூதாகரப்படுத்தப்படும் வில்பத்து விவகாரம்…

Read More

அரச ஹஜ் குழு உறுப்பினர்களை அமைச்சர் நியமிப்பது ஏற்கத்தக்கதல்ல சட்ட வரைபை திருத்த வலியுறுத்து

அரச ஹஜ் குழு­வுக்கு நிய­மிக்­கப்­படும் 9 உறுப்­பி­னர்­களில் 7 பேர் முஸ்லிம் சமய விவ­கார அமைச்­ச­ரினால் நிய­மிக்­கப்­ப­டு­வார்கள் என்ற ஹஜ் சட்ட வரைபு திருத்­தி­ய­மைக்­கப்­ப­ட­வேண்டும். ஹஜ் குழு­வுக்கு 7 பேரே நிய­மிக்­கப்­ப­ட­வேண்டும். 7 பேரில் இரு­வரே அமைச்­ச­ரினால் நிய­மிக்­கப்­பட வேண்டும் என்ற திருத்தம் நேற்று முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களால் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டது. ஹஜ் சட்ட வரைவு தொடர்பில் ஆராயும் கலந்­து­ரை­யாடல் நேற்று மாலை பாரா­ளு­மன்ற கட்­ட­டத்­தொ­கு­தியில் இடம்­பெற்­றது. அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர்…

Read More

வில்பத்து தொடர்பாக அமைச்சர் ரிஷாட் பதியுதீனை தொடர்பு படுத்தி ஊடகங்கள் போலிப் பிரச்சாரம் அரசாங்கம் நடவடிக்கையொடுக்க வேண்டும் – முன்னால் வடமேல் மாகாணசபை உறுப்பினர் என்.எம்.நஸீர்

வில்பத்து தொடர்பில் சிங்கள மக்களுக்கு பரப்பட்டுள்ள தவறான கருத்துக்களை நீக்கி, அவர்களுக்கு உண்மை நிலைகளை தெளிவுபடுத்த வேண்டிய ஊடகங்கள் இன்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்தி மக்களை தூண்டிவிடும் வேலையை செய்கின்றது அரசாங்கம் இதற்க்கு வெகுவிரைவில் நடவடிக்கையெடுக்க வேண்டும் என முன்னால் வடமேல் மாகாணசபை உறுப்பினரும் சதொச பிரதி தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குருநாகல் மாவட்டத்தலைவருமான என்.எம். நஸீர் (MA) தெரிவித்தார். அன்மையில் பிங்கிரிய தேர்தல் தொகுதி கிணியம பிரதேசத்தில்…

Read More