Headlines

அம்பாறையில் பல்வேறு வேலைத்திட்டங்கள் மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு!

அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு வேலைத்திட்டங்களை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று 01.12.17 பிரதமர் கெளரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பங்கு பற்றுதலுடன் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார அமைச்சர் ஹரிசன், ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயாகமகே, கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் அமீர் அலி,  பிரதி அமைச்சர் அனோமா கமகே மற்றும் அரச உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்ட விசேட பொருளாதார மத்திய நிலையம், அம்பாறை பஸ்  நிலையம் ஆகியன…

Read More

“தெதுறு ஓயா திட்டத்தை” புத்தளம் மாவட்டத்துக்கு விரிவுபடுத்துவதற்காக எமது நன்றிகள்… நவவி எம்.பி!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினரும், மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான எம்.எச்.எம். நவவி (22) பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை… குருநாகல் மாவட்டத்திலிருந்து புத்தளம் மாவட்டத்திற்கு “தெதுறு ஓயா திட்டத்தை” விரிவுபடுத்துவதற்காக நீர்வழங்கல் மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் காமினி விஜித் விஜித முனி சொய்சாவிற்கு நான் நன்றி கூற வேண்டும். 2016 ஜூலையில் எதிர்பார்த்த மழை பெய்யாததால் எமது மாவட்ட மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக தேங்காய், நெல் மற்றும் முந்திரி போன்ற…

Read More

க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

கொழும்பு மாவட்டத்தில்  க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின்  பெறுபேற்றை அதிகரிக்கும் வகையில், கொழும்பு மாவட்ட அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட பிரத்தியேக வகுப்புக்களில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மேல்மாகாண சபை உறுப்பினர் ஏ.ஜே.எம்.பாயிஸ் கௌரவ அதிதியாகப் பங்கேற்றார். கொழும்பு தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் அண்மையில்இ டம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் கொழும்பு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஏ.எம். ஹக்கீம் உட்பட…

Read More

வாழைச்சேனை கடதாசி ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை… அமைச்சர் ரிஷாட் உறுதியளிப்பு!

வாழைச்சேனை கடதாசி ஆலையை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இன்று மாலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், உயர்மட்டக் கூட்டம் ஒன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இன்று (29/11/ 2017) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வாழைச்சேனை கடதாசி ஆலையை மீளத் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரன் விடுத்த வேண்டுகோளை அடுத்தே அமைச்சர் ரிஷாத் இவ்வாறு தெரிவித்தார்.

Read More

“மக்களை தவறாக திசை திருப்புகின்றார் சார்ள்ஸ் எம்.பி” பாராளுமன்றத்தில் அமைச்சர் ரிஷாட்..

  சதொச நிறுவனத்தை தாம் பொறுப்பேற்க முன்னர் 2014 ஆம் ஆண்டு அரிசி இறக்குமதியில் மோசடி இடம்பெற்றுள்ளதாக, எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு, சதொச நிறுவனத்தின் தற்போதைய தலைவர் மற்றும் நிறுவன உயரதிகாரிகள் பூரண ஒத்துழைப்பை வழங்கி வருவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இந்த விசாரணைக்குத் தேவையான தரவுகளை உள்ளக கணக்காய்வு பிரிவு வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். 2018 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு – செலவு திட்டத்தின், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின்…

Read More

பால் சேகரிக்கும் நிலையத் திறப்பு விழா!!!

திருகோணமலை மாவட்ட ஈச்சிலம்பற்று பிரதேச செயலகப் பிரிவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள, பால்சேகரிக்கும் நிலையத் திறப்பு விழா அண்மையில் (26) இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான அமீர் அலி மற்றும் மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் ஆகியோர் இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாகப் பங்கேற்றனர். பிராந்திய முகாமையாளர் க. கணகராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பால் பண்ணையாளர்களின் தொழில் முன்னேற்றத்துக்கான ஊக்குவிப்புத் தொகையும் வழங்கப்பட்டது. இந்த விழாவில் பொது முகாமையாளர் பெர்ணான்டோ, பிரதேச…

Read More

அமைச்சர் ரிஷாட்டின் முயற்சியில்  சீன அரசின் நிதி ஒதுக்கீட்டில் பாடசாலைக் கட்டிடம்!!!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் முயற்சியினால், சீன அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் மன்னார், தாராபுரம் துருக்கி சிட்டி கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட 02 மாடி பாடசாலைக் கட்டிடம் இன்று (28/ 11/2017) உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் இணைப்பாளர் முஜாஹிரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதிகளாக அமைச்சரின் பிரதிநிதியாக முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான றிப்கான் பதியுதீன் மற்றும் இலங்கைக்கான சீன…

Read More

‘விஜயாபிமானி’ பாராட்டு விழா!

வடமேல் மாகாண தொழில் முயற்சியாளர்களை பாராட்டும் ‘விஜயாபிமானி’ பாராட்டு விழா, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில்,   குருணாகல்  மாகாண சபை கேட்போர்கூடத்தில் (24) அன்று இடம்பெற்ற போது, ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். வடமேல் மாகாண பொருளாதாரத்திற்கு நேரடிப் பங்களிப்புகளை வழங்கும் தொழில் முயற்சியாளர்களை பாராட்டி, அவர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் வடமேல் மாகாண சபையின் வழிகாட்டலில், வடமேல் மாகாண விவசாய சேவைகள்…

Read More

அமைச்சர் ரிஷாட்டின் உத்தரவின் பேரில் ஹிங்குரானை சீனித் தொழிற்சாலைக்காக சுவீகரிக்கப்பட்ட நெற்காணிகளுக்கான இழப்பீடு..

ஹிங்குரானை சீனித் தொழிற்சாலைக்காக சுமார் 30 வருடங்களுக்கு முன்னர், சுவீகரிக்கப்பட்ட 319 ஏக்கர் நெற்காணியின் இழப்பீடு, பாதிக்கப்பட்ட கல்முனையைச் சேர்ந்த 35 பேருக்கு இதுவரை வழங்கப்படாமை தொடர்பில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின், பாராளுமன்ற விவகாரப் பணிப்பாளர் ஏ.ஆர்.எம். ஜிப்ரியின் ஊடாக, அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கவனத்துக்குக்  கொண்டுவரப்பட்டது. இதனடிப்படையில் அமைச்சர் ரிஷாட்டின் உத்தரவுக்கு அமைய, அமைச்சின் மேலதிக செயலாளர் உள்ளிட்ட குழுவினர் நேற்று (25) சம்மாந்துறைக்கு விஜயம்…

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில் தையல் பயிற்சி நிலையத் திறப்பு மற்றும் தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட, ஒந்தாச்சிமடம் பிரதேச யுவதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் அமீர் அலியினால் தையல் பயிற்சி நிலையம் (24) திறந்து வைக்கப்பட்டது. பிரதி அமைச்சரின் மகளிர் இணைப்பாளர் மீனா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கிராமிய பொருளாதார அமைச்சின் 6,50,000 ரூபா நிதி ஒதுக்கீட்டின் மூலம் 16 யுவதிகளுக்கு தையல் இயந்திரங்களும் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் களுவாஞ்சிக்குடி…

Read More

கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கல்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் அவர்களினால் கிழக்கு மாகாணத்திலுள்ள 1119 பட்டதாரிகளுக்கு, ஆசிரியர் நியமனங்கள்  திருகோணமலையில் இன்று (25/11/2017) வழங்கி வைக்கப்பட்டன. கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உரையாற்றிய மக்கள் காங்கிரஸின் பா.உ  அப்துல்லா மஹ்ரூப், அண்மையில் நடைபெற்ற ஆசிரியர் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து, அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நேர்முகப் பரீட்சையில் தோற்றிய அனைத்து பட்டதாரிகளுக்கும் நியமனங்களை வழங்குமாறும், 35 தொடக்கம் 45 வயதுக்குட்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கி, அவர்களுக்கான நியமனங்களை…

Read More

வவுனியா புதிய சாளம்பைக்குளம் வீதி புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் நிதியொதுக்கீட்டில், வவுனியா, புதிய சாளம்பைக்குளம் வீதியை கொங்ரீட் பாதையாக புனரமைப்பதற்கான  ஆரம்பகட்ட வேலைகளை,  அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான முத்து முஹம்மட் மற்றும் அப்துல் பாரி ஆகியோர் இன்று (24/ 11/ 2017) ஆரம்பித்து வைத்தனர்.

Read More