Headlines

இரு பல்கலை மாணவர்கள் மரணம் – விசாரணை சீ.ஐ.டி வசம்

கொழும்பு – கண்டி வீதியின், இபுல்கொட பிரதேசத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட தரப்பினரால் இந்த மரணம் கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்கக்கோனால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. 2012ம் ஆண்டு செப்டம்பர் 27ம் திகதி கொழும்பு – கண்டி வீதியின் இபுல்கோட பிரதேசத்தில் மோட்டார்…

Read More

எம்பிலிபிடிய சம்பவம் : ஏ.எஸ்.பி தொடர்ந்தும் விளக்கமறியலில்

எம்பிலிப்பிட்டிய முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் டபிள்யு.டி.சி. தர்மரத்ன மார்ச் 2ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். எம்பிலிபிட்டிய மேலதிக நீதவான் பிரசன்ன பெர்ணான்டோ, இன்று உத்தரவிட்டார். எம்பிலிப்பிட்டியவில் அண்மையில் இடம்பெற்ற சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் கொல்லப்பட்டார். குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு வாக்கு மூலம் அளிக்கச் சென்றிருந்த நிலையிலேயே முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

அநுராதபுரத்தை மீண்டும் தலைநகராக்க வேண்டும்

அநுராதபுரத்தை மீண்டும் இலங்கையின்  தலைநகரமாக்க வேண்டும் என அரசியலமைப்பு மறுசீரமைப்பு குழுவிடம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு மறுசீரமைப்பு குழு இன்று காலை அநுராதபுரம் மாவட்ட செயலகத்தில் கூடிய பொதுமக்களின் கருத்துக்களை பெற்று வருகிறது. குழுவின் தலைவர் லால் விஜேநாயக்க உறுப்பினர்களான சுனில் ஜயரத்ன, தெனிய ஹூருல்லே, நதீகா தமயந்தி ஆகியோர் பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டு வருகின்றனர். அரசியலமைப்பு மறுசீரமைப்பு குழுவின் முதலில் கருத்துக்களையும் யோசனைகளையும் முன்வைத்த ஓய்வுபெற்ற அரச ஊழியர்களின் ஒன்றின் உறுப்பினர் பியதாச பத்திரண, அரச…

Read More

பேராதனைப் பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் இன்று (17) எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். பல்கலைக்கழகத்தின் மிருக வைத்திய பீடம் கடந்த 20 தினங்களுக்கு மேல் இயங்காத நிலையில் இருப்பதாகவும் அதற்கு தமது எதிர்ப்பைத் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மிருக வைத்திய பிரிவு மாணவர்கள் ‘தெய்யொத் தன்னனே’ (கடவுளுக்கும் தெரியாது) என்ற நாடகத்தை பல்கலைக்கழகத்தின் அனுமதியின்றி திறந்த வெளிநாடக அரங்கில் அரங்கேற்றியதும் அதன் மூலம் பெறப்பட்ட பணம் தொடர்பாகவும் ஏற்பட்ட சர்ச்சையே இவ்வாறு மிருக வைத்திய பீடம் ஸ்தம்பிதம்அடையக் காரணமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது….

Read More

தொலைபேசிக் கட்டணங்கள், திடீரென உயர்வு

சில தொலைபேசி இணைப்பு நிறுவனங்கள் செக்கனுக்கு 0.03 சத அதிகரிப்புடன் நிமிடத்துக்கு 1 ரூபா 80 சதமாக கட்டணத்தை அதிகரித்துள்ளது. சில தொலைபேசி இணைப்பு நிறுவனங்கள் 1 ரூபா 50 சதமாக ஒரு நிமிடத்துக்கான கட்டணத்தை அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்புடன் ஒரு தொலைபேசி பாவனையாளன் பல்வேறு வரிகளுடன் சேர்த்து 1 ரூபா 94 சதத்தை கட்டணமாக செலுத்த வேண்டும். இருப்பினும், ஏற்கனவே காணப்பட்ட பக்கேஜ் இணைப்புக்கான கட்டணம் இதுவரை அதிகரிக்கப்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், ஒரே தொலைபேசி இணைப்பு…

Read More

பொலிஸ் வேடத்தில் பணம் கொள்ளை!

இருவேறு சம்பவங்களில் 8 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸார் என்று தங்களை கூறிக்கொண்டு வந்த இருவர், மீன் வியாபாரியை அச்சுறுத்தி அவரிடமிருந்து 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை அபகரித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் இன்று அதிகாலை கொஸ்கமவில் இடம்பெற்றுள்ளது. இதேவேளை, ரத்கமவில் உள்ள மதுபானசாலையொன்றுக்கு நேற்று(16) இரவு மோட்டார் சைக்கிளில் வந்திருந்த இருவர், மதுபான சாலையின் முகாமையாளருக்கு கத்தியை காண்பித்து அச்சுறுத்தி 5 இலட்சம் ரூபாய் அவரிடமிருந்து பணத்தை…

Read More

காஞ்சாவுடன் யாத்திரை சென்ற பிக்குகள் கைது

– க.கிஷாந்தன் – காவி உடை அணியாமல் சாதாரண உடையில் காஞ்சாவுடன் சிவனொளிபாதமலைக்கு யாத்திரை மேற்கொண்ட அநுராதபுரத்தை சேர்ந்த 5 பௌத்த பிக்குகளை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர். அநுராதபுரம் சந்தலாங்காவ பிரதேசத்திலிருந்து சிவனொளிபாதமலைக்கு  யாத்திரைகளாக காவி உடை அணியாமல் சாதாரண உடையில் வந்த 5 பௌத்த பிக்குகளில் ஒரு பிக்குயிடமிருந்து கஞ்சா போதைபொருள் பக்கட்கள் ஹட்டன் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. நேற்று (17) இரவு 11 மணியளவில் ஹட்டன் குடாகம பகுதியில் ரோந்து கடமையில் ஈடுப்பட்டிருந்த ஹட்டன்…

Read More

வேலையில்லா பட்டதாரிகள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

வேலையில்லா பட்டதாரிகள் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர். கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்ட பேரணி, பிரதமர் அலுவலகத்தை நோக்கி பயணிப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். அரசாங்கம் ஆட்சிக்கு வரும் போது வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புக்களை பெற்றுத் தருவதாக உறுதியளித்திருந்த போதிலும், இன்று வரை அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை என ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நாட்டில் தற்போது 32000 வேலைவாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் அதனை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள்…

Read More

பலப்பிட்டிய நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி பிரயோகம்; ஒருவர் பலி!

பலப்பிட்டிய நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இன்று (16) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சந்தேக நபரொருவர் பலியானதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

Read More

இலங்கையின் தங்கப் பதக்க எண்ணிக்கை போதாது

– நெவில் அன்­தனி – இந்­தி­யாவின் குவா­ஹாட்­டி­யிலும் ஷில்­லொங்­கிலும் நடை­பெற்ற 12ஆவது தெற்­கா­சிய விளை­யாட்டு விழாவில் இலங்கை வென்­றெ­டுத்த 25 தங்கப் பதக்­கங்கள் போது­மா­னது என்றோ பெரு­மைப்­ப­டக்­கூ­டி­ய­தென்றோ கூற­மு­டி­யாது என விளை­யாட்டு விழா­வி­லி­ருந்து நாடு திரும்­பிய தேசிய ஒலிம்பிக் குழுத் தலைவர் ஹேம­சிறி பெர்­னாண்டோ தெரி­வித்தார். அவ­ருடன் தொலை­பே­சியில் தொடர்­பு­கொண்டு இவ் விளை­யாட்டு விழாவில் இலங்­கையின் பெறு­பே­று­ பற்றி கேட்­ட­போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார். ‘‘இற்­றைக்கு கால் நூற்­றாண்­டுக்கு முன்னர் கொழும்பில் நடை­பெற்ற ஐந்­தா­வது தெற்­கா­சிய விளை­யாட்டு…

Read More

உணவு விசமானதால் 20 மாணவர்கள் வைத்தியசாலையில்

காலை உணவு விசமானதால்  20 மாணவர்கள் மினுவங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று(15) காலை பலபோவ கனிஷ்ட வித்தியாலயத்தில் வழங்கப்பட்ட காலை உணவே இவ்வாறு விசமடைந்ததாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. 8 மற்றும் 9 வயதான மாணவர்கள் காலை உணவை உட்கொண்ட பின் அவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டதால் , அவர்கள் மினுவாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Read More

உடுவே தம்மாலோக்கதேரரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பணிப்பு

உடுவே தம்மாலோக்கதேரரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர், குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். சட்டவிரோதமான முறையில் யானைக் குட்டியொன்றை தம்வசம் வைத்திருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தம்மாலோக்க தேரரை கைது செய்வதற்கு முன்னதாக அவரிடம் வாக்கு மூலமொன்றை பெற்றுக்கொள்ளுமாறு சட்டமா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார். உடுவே தம்மாலோக்க தேரரை கைது செய்வதற்கான போதியளவு ஆதாரங்கள் காணப்படுவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read More