Headlines

வகுப்பு தடையை நீக்கக் கோரி கிழக்கு பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

– ஏ.எம். றிகாஸ் – கிழக்குப் பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த 27 மாண­வர்­க­ளுக்கு விதிக்­கப்­பட்­டுள்ள வகுப்­புத்­த­டையை உட­ன­டி­யாக நீக்­கு­மாறு கோரி கிழக்குப் பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் நேற்று ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர். மட்­டக்­க­ளப்பு -வந்­தா­று­மூலை வளா­கத்­துக்கு முன்­பாக இந்த ஆர்ப்­பாட்டம் இடம்பெற்றது.

Read More

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்ய வேண்டும் – அமீர் அலி

-நாச்சியாதீவு பர்வீன் – வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்ய வேண்டும். தற்போது இலங்கையில் சமாதானச்சூழல் நிலவுகின்றது. பல்வேறு தொழிற்துறைகளுக்கான கேள்வியும் சாதகமான காலநிலையும் ஏற்பட்டுள்ளது. இந்தச் சாதகமான சந்தர்ப்பத்தை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். அதன் மூலம் இலங்கையில் பொருளாதார அபிவிருத்தியில் முன்னேற்றமடைவதோடு, வேலைவாய்ப்புப் பிரச்சினையும் கணிசமானளவு தீர்க்க முடியுமென கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ். அமீர் அலி கூறினார். நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய வேலைவாய்ப்பு நெருக்கடி பற்றி கேட்ட…

Read More

மருதமுனையில் மாபெரும் இரத்ததான முகாம்

மனிதம் பேணும் மகாத்தான பணிக்கு என்ற தொனிப் பொருளில் ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் மருதமுனை கிளை நடாத்தும் மாபெரும் இரத்தான முகாம் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை(14-08-2016)காலை 9.00மணிமுதல் மாலை 3.30மணிவரை மருதமுனை மசூர் மொளலானா வீதியில் உள்ள ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் மருதமுனை கிளை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் மருதமுனை கிளை உறுப்பினர்களின் அணுசரணையில் நடைபெறவுள்ள இந்த இரத்ததான நிகழ்வில் கல்முனை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிக்குப் பொறுப்பான டொக்டர்கள் மற்றும் தாதி உத்தியோகத்தர்கள்…

Read More

ஒலுவில் கடலரிப்புக்குத் தீர்வுபெற அர்ஜுன தலைமையில் அமைச்சரவை உபகுழு

ஒலுவில் கடலரிப்புக்கு அவசரமாக, தற்காலிகத்  தீர்வொன்றைக் காணும் வகையிலும், பின்னர் நிரந்தர நிலையான தீர்வொன்றை பெற்றுக்கொள்ளும் வகையிலும் அமைச்சரவை உபகுழு ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார். அமைச்சரவை கூட்டம் இன்று காலை (09/08/2016) இடம்பெற்றபோது இந்த முடிவு எடுக்கப்பட்டது. துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இந்தக் குழுவில், மீன்பிடித் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர, கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன், நகர திட்டமிடல், நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம்…

Read More

கிழக்கை வடக்குடன் இணைக்கக்கூடாது; கிழக்கு முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் சம்மேளம்

கிழக்கு முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் சம்மேளனத்தின் மாநாடு, சம்மேளனத்தின் தலைவர் மௌலவி இசட்.எம்.நதீர் தலைமையில் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை அஸாத்பிளாசா மண்டபத்தில் நேற்று (7) நடைபெற்றது. இதன்போது,  உத்தேச அரசியல் யாப்பு சீர்திருத்தத்தில் முஸ்லிம்களின் அபிலாஷைகளை உறுதிப்படுத்தல். நிலைமாறு கால புனரமைப்பு செயற்பாட்டில் முஸ்லிம்களின் நிலை தொடர்பான விடயம், எதிர்கால தேசிய வேலைத்திட்டங்களில் முஸ்லிம்கள் இணைந்து ஒற்றுமையுடன் செயற்பட வேண்டிய அவசியம் போன்றவை ஆராயப்பட்டு வலியுறுத்தப்பட்டன. இதேவேளை, எக்காரணத்துக்காகவும் கிழக்கு மாகாணத்தை வடக்கு மாகாணத்துடன் இணைக்கக்கூடாது என்ற…

Read More

விக்னேஸ்வ‌ர‌னிற்கு உல‌மா க‌ட்சி கண்டனம்!

முஸ்லிம் ம‌க்க‌ளுக்கு நிர்வாக‌ அல‌கொன்றை த‌ந்து விட்டு வ‌ட‌க்கையும் கிழ‌க்கையும் இணைக்க‌ வேண்டும் என்ற‌ வ‌ட‌மாகாண‌ ச‌பை விக்னேஸ்வ‌ர‌னின் பேச்சை உல‌மா க‌ட்சி வ‌ன்மையாக‌ க‌ண்டிக்கிற‌து. விக்னேஸ்வ‌ர‌ன் அவ‌ர்க‌ள் வ‌ட‌ மாகாண‌ச‌பை முத‌ல்வ‌ரே த‌விர‌ அவ‌ர் கிழ‌க்குக்குரிய‌வ‌ர் அல்ல‌. அத‌னால் அவ‌ர் வ‌ட‌க்கின் அபிவிருத்தி ப‌ற்றி பேச‌ வேண்டுமே த‌விர‌ கிழ‌க்கை இணைக்கும் பேச்சை தொட‌ர்வ‌தை அவ‌ர் நிறுத்த‌ வேண்டும். முஸ்லிம்க‌ளுக்கு இணைந்த‌ வ‌ட‌க்கு கிழ‌க்கில் ஒரு நிர்வாக‌ அல‌கு என்ப‌து மிட்டாயை கொடுத்து க‌ண்க‌ளைப்ப‌றிக்கும் முய‌ற்சியாகும்….

Read More

முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயா அவர்களுக்கு!

-மனாப் அஹமத் றிசாத் , அக்கரைப்பற்று – இலங்கை போன்ற பல்லின மக்கள் வாழும் நாட்டில் குறு நில மன்னர்களாக வாழ்வதற்கு முஸ்லிங்களுக்கு என்ன தேவை இருக்கிறது. தற்காலிகமாக இரவோடிரவாக முஸ்லிங்களை பற்றி சிந்திக்காமல் இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்கள் தற்பொழுது சட்டரீதியாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. இப்பொழுது கிழக்கில் வாழும் தமிழ் முஸ்லிம் யாவரும் நலமாகத்தான் இருக்கிறார்கள். தமிழ் கூட்டமைப்பும், வடக்கு மாகாணசபை முதல்வராகிய நீங்களும்; வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைவதன் நோக்கம்…

Read More

கரையோரப் பாதுகாப்புப் பிரதிப்பணிப்பாளர் ஒலுவில் விரைவு

ஒலுவில் கடலரிப்புப் பிரதேசத்துக்கு றிசாத் பதியுதீனின் வேண்டுகோளை ஏற்று இன்று காலை (07/08/2016) விஜயம் செய்திருந்த கரையோரப் பாதுகாப்புத் திணைக்கள பிரதிப்பணிப்பாளர் பிரபாத், பாதிக்கப்பட்ட இடங்களைச் சுற்றிப் பார்வையிட்ட பின்னர். ஒலுவில் ஜும்ஆ பள்ளியில் பள்ளிவாசல் தலைவர் மற்றும் தர்மகர்த்தாக்கள், ஊர் பொதுமக்களை சந்தித்து அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தார். ஒலுவில் கடலரிப்பு தொடர்பில் றிசாத் பதியுதீன் பலமுறை தன்னை சந்தித்துப் பேச்சு நடத்தியதாகவும், இந்தக் கடலரிப்புப் பிரதேசத்துக்கு தற்காலிக பாதுகாப்புச் சுவர் ஒன்றை அவசரமாக அமைக்கும் நோக்கிலேயே…

Read More

ஒலுவில் அணைக்கட்டுக்கு துறைமுக அதிகார சபை ஒப்புதல்

-சுஐப் எம்.காசிம் – ஒலுவில் கடலரிப்புக்கு நிரந்தரத் தீர்வை காண்பதற்கு ஏதுவாக, உடனடியாக அந்தக் கிராமத்தைப் பாதுகாக்கும் வகையில் மண் அணைக்கட்டு ஒன்றை அமைப்பதற்கான நிதியைப் பெற்றுக்கொள்ள, முன்கூட்டிய ஒப்புதலை ( Pending Approval) துறைமுக அதிகார பணிப்பாளர் சபை வழங்கியுள்ளதாக, அதிகார சபையின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். எதிர்வரும் 11 ஆம் 12 ஆம் திகதிகளில் ஒலுவில் கடலரிப்புப் பிரதேசத்துக்கு விஜயம் செய்யவுள்ள துறைமுக அதிகார சபையின் நிபுணர்களும், கரையோர முகாமைத்துவ திணைக்களத்தின் உயரதிகாரிகளும் அந்தப்…

Read More

அமைச்சர் றிஷாத் வேண்டுகோளை ஏற்று ஒலுவில் கடலரிப்புக்கு தீர்வைப் பெற்றுத்தர துறைமுக அதிகார சபை நடவடிக்கை

-சுஐப் எம் காசிம் – ஒலுவில் கரையோரப் பிரதேசத்தில் ஏற்பட்டு வரும் பாரிய கடலரிப்பை தடுக்கும் வகையிலான தீர்வொன்றை ஏற்படுத்துவதற்காக இலங்கை துறைமுக அதிகார சபையின் உயர் அதிகாரிகள், நிபுணர்கள் மற்றும் கரையோரம் பேணல், கரையோர மூல வள முகாமைத் திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் பி கே பிரபாத் சந்திர கீர்த்தி ஆகியோரும் எதிர்வரும் 11, 12ஆம் திகதிகளில் ஒலுவில் கடலரிப்பு பிரதேசத்திற்கு விஜயம் செய்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர். அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும், இலங்கை துறைமுக அதிகார…

Read More

நீங்கள் உங்களை நேசிக்கின்ற ஜனாதிபதியை பெற்றுள்ளீர்கள்; பிரதியமைச்சர் அமீர் அலி

-நாச்சியாதீவு பர்வீன் – நீங்கள் அதிஸ்டசாலிகள் உங்களை நேசிக்கின்ற ஜனாதிபதியை பெற்றுள்ளீர்கள். இந்த நாட்டு மக்களையும், இந்த மாவட்டத்து மக்களையும் வெகுவாக நேசிக்கின்ற ஒரு விவசாய மகன் அவர், இந்தப்பிரதேசத்தில் விவசாயத்துறையை முன்னேற்றும் பல வேலைத்திட்டங்கள் எதிர் காலத்தில் கெளரவ ஜனாதிபதி அவர்களின் தலைமையில் இடம் பெற உள்ளன. அந்த வகையில் கெளரவ ஜனாதிபதி மைத்திரபால சிரிசேனவிக்கு நன்றியுடைய மக்களாக நீங்கள் இருக்க வேண்டும். ஏனெனில் இந்த மண்ணையும் மக்களையும் நேசிக்கின்ற உயர்ந்த உள்ளம் அவரிடம் இருக்கிறது…

Read More

தலாவையில் நீர் சுத்திகரிப்பு இயந்திர நிலையம்

சிறுநீரக நோயை கட்டுப்படுத்தும் வகையில் இலங்கை கடற்படை, மேற்கொள்ளும் சமூகசேவை நிகழ்ச்சியில் ஒரு அங்கமாக தலாவை மகா வித்தியாலத்தில் நிறுவிய “ரிவேர்ஸ் ஒச்மொசிஸ்” நீர் சுத்திகரிப்பு இயந்திர நிலையம் அண்மையில் (29) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன, ஒன்லைன் தொழிநுட்பம் மூலம் கலந்து கொண்டார். கடற்படை தளபதியின் ஒரு எண்ணக்கருவில், கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் அதன் நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்ப திறனைக் கொண்டு இந்நீர் சுத்திகரிப்பு…

Read More